Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இடைப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக, தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்துள் ளது.

Featured Replies

gallerye_005201865_1713567.jpg

 

  • gallerye_222235781_1713567.jpg

 

இடைப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக, தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்துள் ளது. மன்னார்குடி கும்பலின் பினாமி ஆட்சிக்கு உதவியதால், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் மீது எரிச்சல் அடைந்துள்ள மக்கள், அவர்களை தொகுதிக்குள் வர விடாமல் தடுக்கப் போவ தாக, ஆவேசமாக கூறியுள்ளனர்.

பொது மக்களின் வெறுப்பை தங்களுக்கு சாதகமாக்க, தி.மு.க.,வும் வியூகம் அமைத்து வருகிறது.

 

Tamil_News_large_171356720170219005847_318_219.jpg

சொத்து குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்றா லும், கட்சியும், ஆட்சியும் தன் குடும்பத்தினரை விட்டு போய் விடக்கூடாது என, சசிகலா முடிவு செய்தார். அதனால், சிறை செல்வதற்கு முன், தன் அக்கா மகன் தினகரனை, அ.தி.மு.க., துணை பொதுச்செயலராக அறிவித்தார்.

தன் விசுவாசியான, இடைப்பாடி பழனிசாமியை முதல்வராக்கி, அவர் மூலம் பினாமி ஆட்சியை, சிறையில் இருந்தபடி நடத்த முடிவு செய்தார். அதற்காக, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், கூவத்துார் சொகுசு விடுதியில் அடைத்து வைக்கப்பட்டனர்.

அவர்கள் எல்லோரும், அமைச்சர்களின் கார் களில் நேற்று சட்டசபைக்கு அழைத்து வரப் பட்டனர். அவர்கள் மனம் மாறி, அரசுக்கு எதிராக ஓட்டளிக்க மாட்டார்களா என, மக்கள்

எதிர்பார்த்தனர். ஆனால், 122 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவுடன், இடைப்பாடி பழனிசாமி அரசு வெற்றி பெற்றது. இத்தகவல் வெளியானதும் தமிழகம் முழுவதும், இடைப்பாடி அரசுக்கு எதிராக போராட்டம் வெடித்தது.

சசிகலா குடும்பத்தின் பினாமி ஆட்சிக்கு உதவிய, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் மீது பொதுமக்கள் கடும் எரிச்சல் அடைந்துள்ளனர். தங்கள் எதிர்ப்பை காட்ட, தொகுதியில் உள்ள, எம்.எல்.ஏ.,க்கள் அலுவலகம் முன், முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.

அவர்கள் தொகுதிக்குள் நுழைந்தால் கடும் எதிர்ப்பு தெரிவிக்கவும், முடிவு செய்துள்ளனர். அதன் வெளிப்பாடாக, சமூக வலைதளங்களில் ஆவேச கருத்துக்கள் வலம் வருகின்றன.

'மொத்த தமிழகத்தையும், நம்மிடம் வாங்கிய ஓட்டுகளையும், மதுவுக்கும்,பணத்திற்கும், மாபியா கும்பலிடம் விற்று, ஜனநாயகத்திற்கு சாவு மணி அடித்தவர்களை நல்லபடியாக வரவேற்க தயாராகுங்கள் மக்களே!' என, சமூக வலைதளங்களில், இளைஞர்கள் அறைகூவல் விடுத்து வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் இதுவரை இல்லாத அளவிற்கு, இடைப்பாடி அரசு மீது மக்களுக்கு வெறுப்புணர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால், மன்னார்குடி கும்பலிடம் விலை போன, எம்.எல்.ஏ.,க்கள், தொகுதி பக்கம் தலை காட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதை தங்களுக்கு சாதகமாக்க, தி.மு.க., வியூகம் வகுத்து வருகிறது. சென்னை, மெரினா கடற்கரையில் நேற்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு கைதான, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின், 'பொதுமக்களை திரட்டி,

 

போராட்டத்தை தொடருவோம்' என, அறிவித்துள்ளார்.
 

நம்பிக்கை ஓட்டு எப்படி?


நம்பிக்கை ஓட்டெடுப்பு துவங்கும் முன், சபாநாயகர் தனபால் கூறியதாவது:

குரல் ஓட்டெடுப்பு மற்றும் எண்ணிக் கழிக்கும் முறை என, இரு விதங்களில் நம்பிக்கை தீர்மானத்தின் முடிவை நிர்ணயிக்கலாம். நான், எண்ணிக் கழிக்கும் நடைமுறைப்படி ஓட்டெ டுப்பு நடத்தவுள்ளேன். சட்டசபை, இருக்கை வசதிக்கேற்ப, ஆறு பகுதிகளாக பிரிக்கப்பட்டு உள்ளது.ஒவ்வொரு பகுதி வாரியாக ஓட்டெடுப்பு நடக்கும்.

தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிப்பவர், முதலில் எழுந்து நிற்க வேண்டும். பின், அதற்கு எதிர்ப்பு தெரிவிப்போர் எழுந்திருக்க வேண்டும். இறுதியாக, நடுநிலை வகிப்போர், ஓட்டு போட வேண்டும். ஓட்டெடுப்பு நடக்கும் முன், அனைத்து வாயில் கதவுகளும் மூடப்படும். சட்டசபை செயலர், மூன்று முறை மணி அடித்ததும் ஓட்டெடுப்பு துவங்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

பின், முதல் பகுதியில் இருந்து ஓட்டெடுப்பு துவங்கியது. சபாநாயகர், 'தீர்மானத்திற்கு ஆதரவானோர் எழுந்து நிற்கவும்' என்றதும், முதல்வர் உட்பட, 19 பேர் எழுந்து நின்றனர். அவர்களது, பெயர்களை ஒன்றன் பின் ஒன்றாக, சட்டசபை செயலர் ஜமாலுதீன் படித்தார். பெயர் அறிவிக்கப்பட்ட உறுப்பினர்கள், ஒவ்வொரு வராக இருக்கையில் அமர்ந்தனர்.

இதே முறையில், முதல் பகுதியில் இருந்த நட்ராஜ், செம்மலை ஆகிய இருவர் மட்டும் தீர்மானத்திற்கு எதிர்த்து ஓட்டு போட்டனர். இரண்டாம் பகுதியில் இருந்த, 46 பேரில், ஆறுகுட்டி, சரவணன், மனோகரன் மற்றும் மாணிக்கம் என நான்கு பேர், எதிர்த்து ஓட்டு போட்டனர். மூன்றாம் பகுதியில், 51 உறுப் பினர்களில், ஓ.பன்னீர்செல்வம், பாண்டிய ராஜன், எஸ்.பி.சண்முகநாதன், சின்ராஜ் ஆகிய நான்கு பேரும்; நான்காம் பகுதியில் இருந்த, 15 பேரில், பெண் உறுப்பினர் மனோரஞ்சிதம் மட்டும் தீர்மானத்திற்கு எதிராக ஓட்டு போட் டனர். தி.மு.க., உறுப்பினர்கள் வெளியேற்றப் பட்ட தால், 5, 6 பகுதிகளில் ஓட்டெடுப்பு நடக்கவில்லை.

முடிவில், தீர்மானத்திற்கு ஆதரவாக, 122 பேரும், எதிராக, 11 பேரும் ஓட்டு போட்டனர்; நடுநிலை ஓட்டு யாரும் போடவில்லை.
- நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1713567

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.