Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“ஆட்சியைப் பிடிக்க சசி குடும்பம் நடத்திய சதிகள்!”

Featured Replies

“ஆட்சியைப் பிடிக்க சசி குடும்பம் நடத்திய சதிகள்!”

அதிர்ச்சி கிளப்பும் அட்வகேட் ஜோதி

 

‘‘அக்கா கோட்டைக்குக் கிளம்பி விட்டீர்களா... மதியம் சாப்பிட என்ன வேண்டும்’’ என ஜெயலலிதா விடம் கேட்ட சசிகலா, கோட்டையிலேயே உட்கார நினைத்தார். அதற்காக நடந்தவை அக்மார்க் அக்கப்போர்கள். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பால் அந்தக் கனவு தவிடுபொடியாகிவிட்டது. ‘‘அதிகாரத்தில் அமர வேண்டும் என்கிற சசிகலா குடும்பத்தின் சதித்திட்டம் பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்டது’’ என்கிறார் ஜெயலலிதாவின் முன்னாள் வழக்கறிஞர் என்.ஜோதி. அவரிடம் பேசினோம்.

p26aaa.jpg

‘‘1991-ல் ஜெயலலிதா ஆட்சியில் அமர்ந்தபோதுதான், அரசுக்குச் சொந்தமான டான்சி நிலத்தை அவர் பங்குதாரராக உள்ள நிறுவனம் வாங்கியது. ‘அரசுக்குச் சொந்தமான நிலத்தை முதல்வரே வாங்கினால் அது அவருக்குச் சிக்கலை ஏற்படுத்தும்’ என்பது நடராசனுக்குத் தெரியும். டான்சி நிலத்தை வாங்கியதில் நடராசனின் சதித் திட்டமும் புதைந்துகிடந்தது. முதல்வர் பதவியைக் கைப்பற்ற நடந்த முதல் சதி இது.  ‘டான்சியால் ஜெயலலிதாவின் பதவிக்கு ஆபத்து வரும். நாற்காலியில் அமரலாம்’ எனக் கணக்குப் போட்டார் நடராசன். டான்சி தொடர்பான டாக்குமென்ட்டுகள் எல்லாம் சுப்பிரமணியன் சுவாமியின் கைக்கு எப்படி போயின என்பது தெரியவில்லை. ஆனாலும், நடராசனின் கனவு பலிக்கவில்லை. காலப்போக்கில் நடராசனுக்கும் ஜெயலலிதாவுக்கும் பிரச்னை ஏற்பட்டது. அதே சுப்பிரமணியன் சுவாமிதான் இப்போது ‘சசிகலா முதல்வர் ஆக வேண்டும்’ என கவர்னர் வித்யாசாகர் ராவைப் போய் பார்க்கிறார். ‘பதவிப் பிரமாணம் செய்துவைக்கவில்லை என்றால் வழக்குப் போடுவேன்’ என்கிறார்.

அடுத்து, 2-வது சதித் திட்டம். சுதாகரனை வளர்ப்பு மகனாக்கி ‘ஜெயலலிதாவின் வாரிசு’ என்ற நிலையை ஏற்படுத்தி அரசியலைக் கைப்பற்ற நினைத்தார்கள். சட்டப்படி அந்த தத்து எடுப்பு செல்லாது எனத் தெரிந்தும், ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனாக சுதாகரனை ஆக்கினார்கள். உலகமே வியக்கும் அளவுக்கு அவருக்குத் திருமணத்தையும் நடத்தினார்கள். பட்டு உடைகளைப் படாடோபமாக அணிந்து வலம் வந்தார் சுதாகரன். அதே பாணியில்தான் ஜெயலலிதாவைப்போல மேக்அப் போட்டு வெளியே வருகிறார் சசிகலா. அப்போலோவில் ஜெயலலிதா இருந்தபோது வாய் திறக்காத சசிகலாதான், முதல்வர் பதவிக்காகப் பத்திரிகையாளர்களிடம் பேட்டி அளிக்கிறார். வளர்ப்பு மகன் மீதே கஞ்சா வழக்கு போட்டார் ஜெயலலிதா. சித்தியும் வளர்ப்புத் தாயும் சிறையில் இருந்தபோது, தான் முதல்வர் ஆக வேண்டும் என்பதற்காக ‘சின்ன எம்.ஜி.ஆர் சுதாகரன் மன்றம்’ வைத்து யாகங்கள் எல்லாம் நடத்தினார். ஆனால், அவரால் தலையெடுக்க முடியவில்லை.

p26a.jpg 

அடுத்து டி.டி.வி.தினகரன் மூலம் மூன்றாவது சதியைத் தீட்டினார்கள். தினகரனை அரசியலுக்குக் கொண்டுவந்து கட்சியின் பொருளாளர் ஆக்கினார்கள். 1999 நாடாளுமன்றத் தேர்தலில் பெரியகுளம் எம்.பி ஆக்கப்பட்டார் தினகரன். 2004 எம்.பி தேர்தலில் தோல்வி அடைந்தார். இருந்தாலும் ராஜ்யசபா எம்.பி-யாக நியமித்தார்கள். சொத்துக் குவிப்பு வழக்கு கர்நாடகாவில் நடந்து கொண்டிருந்தபோது, ‘லண்டனில்  ஹோட்டல் ஒன்றை தினகரன் வாங்கினார்’ எனப் புது வழக்கு ஒன்றைத் தனியாகப் போட்டார்கள். ‘சொத்துக் குவிப்பு வழக்கினுடைய புலன் விசாரணையின் தொடர்ச்சிதான் இது. தனியாக ஹோட்டல் வழக்கு போடக் கூடாது. இரண்டு வழக்குகளையும் ஒன்றாகதான் நடத்த வேண்டும்’ என ஜெயலலிதா மற்றும் சசிகலா ஒப்புதலுடன் நீதிமன்றத்தில் மனு போட்டேன். இதில் சட்ட சூட்சுமம் உண்டு. இப்படி இரண்டு வழக்குகளையும் சேர்த்தாலோ, வழக்கில் புதிதாக ஒன்றை இணைத்தாலோ மீண்டும் ஆரம்பத்தில் இருந்து வழக்கை விசாரிக்க வேண்டும். பரமபதம் தாயம் ஒன்றில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். சொத்துக் குவிப்பு வழக்கில் 272 சாட்சிகள் விசாரிக்கப்பட்டிருந்தனர். வழக்கை ஒன்றாகச் சேர்த்தால் மீண்டும் அந்த சாட்சிகளை விசாரிக்க நேரிடும். லண்டன் வழக்கில் இருக்கிற சாட்சிகள் எல்லாம் வெளிநாட்டில் இருக்கிறார்கள். அவர்கள் அவ்வளவு சீக்கிரம் இந்தியா வந்து சாட்சி சொல்ல மாட்டார்கள். அதனால், இந்த மனுவை தாக்கல் செய்தேன். இதை தினகரன் விரும்பவில்லை. தன் மீதான வழக்கை சொத்துக் குவிப்பு வழக்கில் சொருகிவிட்டால், தனக்கு எதிர்காலத்தில் சிக்கல் வரும் என நினைத்தார் தினகரன். அதனால், என் மீது தினகரனுக்குத் தீராத கோபம். ஜெயலலிதாவுக்கு உதவிகரமாக இருக்கும் என்பதற்காக இந்த ஏற்பாட்டை செய்தேன். இது தினகரனுக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை.

p26.jpg

சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா ஜெயிலுக்குப் போனதற்கே தினகரன்தான் காரணம். லண்டன் ஹோட்டல் வழக்கை இணைத்தால் என்னை கொலை செய்துவிடுவதாக தினகரன் மிரட்டினார். அசிங்கமான வார்த்தைகளால் திட்டினார். அதன்பிறகு ஜெயலலிதாவிடம் இருந்து நான் விலகிவிட்டேன். பிறகு, தினகரனை பொருளாளர் பதவியில் இருந்து ஜெயலலிதா நீக்கினார். அதன்பிறகு போயஸ் கார்டன் பக்கமே தினகரன் தலைவைத்துப் படுக்க முடியவில்லை. அந்த தினகரன், ஜெயலலிதா இறந்தபிறகுதான் போயஸ் கார்டனில் நுழைந்தார். ஆட்சி அமைக்க உரிமை கோர கவர்னரை சசிகலா சந்தித்தபோது உடன் சென்றவர் தினகரன். ஜெயலலிதாவால் விரட்டியடிக்கப்பட்ட தினகரனைத்தான் சசிகலா கவர்னரைப் பார்க்க அழைத்துப் போகிறார். பொதுவாழ்க்கைக்கும் இவருக்கும் என்ன சம்பந்தம்? இப்போது தினகரனை மீண்டும் கட்சியில் சேர்த்து, அதேநாளில்  துணைப் பொதுச் செயலாளராகவும் ஆக்கிவிட்டார்கள். ஜெயலலிதாவுக்குத் தண்டனை கிடைக்க வேண்டும் எனச் செயல்பட்ட தினகரனுடன் சசிகலா கைகோத்துக் கொள்வது பதவி வெறியால்தான்! கவர்னரை சந்திக்கும்போது மூத்த அமைச்சர்கள் ஓரத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள். சசிகலாவும் தினகரனும்தான் கவர்னரிடம் பேசுகிறார்கள். அரசியல் சகாக்களை சசிகலா அழைத்து செல்லவில்லை. அக்கா மகனைத்தான் அழைத்துப் போனார். ‘குடும்ப ஆட்சிதான் நடத்துவோம்’ என்கிறார் நடராசன். அதை அப்பட்டமாகவே செய்கிறார்கள். இப்படித்தான் அவர்கள் ஆட்சிக்கு வந்தாலும் நடக்கும். பல வழக்குகளில் ஜெயிலுக்குப் போனவர் சசிகலா. இப்போது சொத்துக் குவிப்பு வழக்கில், சிறைக்குள் தள்ளப்பட்டிருக்கிறார். தினகரன் மீது தொடரப்பட்ட அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் 28 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. சுதாகரன் மீது கஞ்சா வழக்கு போடப்பட்டது. லெக்சஸ் கார் வழக்கில் நடராசனும் பாஸ்கரனும் ஜாமீனில் இருக்கிறார்கள். சொத்துக் குவிப்பு வழக்கில் இளவரசி தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறார். திருமணத்துக்கு முன்பே பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு அதிபதி ஆகியிருக்கிறார் இளவரசியின் மகன் விவேக்.

இப்படிப்பட்டவர்கள் பின்னணியில் ஆட்சி நடந்தால் அது ஆட்சியாகவா இருக்கும். மக்களாட்சியின் மாண்பு என்னாவது? முதல்வர் பதவியின் வருவாய் மட்டுமே இவர்கள் கண்ணில் தெரிகிறது. அந்தப் பதவியின் கடமைகள் தெரியாதா? ஜெயலலிதா இருக்கும் வரையில் அவரைவைத்து ஆதாயம் பார்த்தவர்கள், இப்போது அவரைப் புதைத்துவிட்டு அதன் மீது ஆட்சியையும் கைப்பற்றத் துடிக்கிறார்கள். மந்திரியாக இருந்தாலும்கூட சசிகலாவைப் பார்த்துவிட முடியாது. ஆனால், சசிகலாவே எம்.எல்.ஏ-க்களைப் பார்க்க கூவத்தூர் நோக்கி வருகிறார் என்றால், பதவிக்காக எவ்வளவு உயரத்தில் இருந்தும் இவர்கள் இறங்கி வருவார்கள்’’ என்றார் ஜோதி.

http://www.vikatan.com/juniorvikatan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.