Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேரவை செயலாளரிடம் விளக்கம் கேட்டுள்ளார் ஆளுநர்

Featured Replies

பேரவை செயலாளரிடம் விளக்கம் கேட்டுள்ளார் ஆளுநர்

சட்டசபையில் நேற்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றிருந்தார். இதையடுத்து, சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், தாங்கள் தாக்கப்பட்டதாக ஆளுநரிடம் எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் புகார் அளித்திருந்தார், அதேபோல், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வமும் வாக்கெடுப்பு தொடர்பாக ஆளுநரிடம் புகார் அளித்திருந்தார்.

Vidhyasagar rao

இந்நிலையில், இதுதொடர்பாக பேரவை செயலாளர் ஜமாலுதீன், விளக்க அறிக்கை தாக்கல் செய்ய ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டுள்ளார். இதற்கான விளக்க அறிக்கையை விரைவில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் அந்த உத்தரவில் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

http://www.vikatan.com/news/tamilnadu/81346-tn-assembly-incident-governor-asking-report-from-assembly-secratary.html

  • தொடங்கியவர்

சட்டசபையில் நடந்தது என்ன?: ஆளுநரிடம் அறிக்கை அளித்தார் பேரவை செயலாளர்

 

தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது நடந்த சம்பவங்கள் குறித்து ஆளுநரிடம் சட்டப்பேரவை செயலாளர் ஜமாலுதீன் அறிக்கை அளித்துள்ளார்.

 
 
சட்டசபையில் நடந்தது என்ன?: ஆளுநரிடம் அறிக்கை அளித்தார் பேரவை செயலாளர்
 
சென்னை:

தமிழக சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சனிக்கிழமையன்று அரசின் மீது நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது ரகசிய வாக்கெடுப்பு கோரி தி.மு.க. உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகரின் மைக் உடைக்கப்பட்டது. மேஜை தள்ளிவிடப்பட்டது. இருக்கைகள் சேதப்படுத்தப்பட்டன. இதன் காரணமாக தி.மு.க. உறுப்பினர்களை குண்டுக்கட்டாக வெளியேற்றிவிட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்தார்.

CE81EB53-CA6E-4414-B782-8BBA74BEFF7A_L_s

சபையில் இருந்து வெளியேற்றப்பட்டதும், ஸ்டாலின் தலைமையில் சில எம்.எல்.ஏ.க்கள் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து சட்டசபையில் நடந்த நிகழ்வுகள் குறித்து கோரிக்கை மனு அளித்தனர். முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து பேசினார். அப்போது, சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது நடந்த சம்பவம் குறித்து கவர்னரிடம் ஓ.பன்னீர்செல்வம் விளக்கியதாக கூறப்படுகிறது.

4F9A1D5B-04FD-43BE-A34A-7E909FE4ED5C_L_s

இந்நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, சட்டசபையில் நடந்தது என்ன என்று செயலரிடம் ஆளுநர் வித்யாசாகர் ராவ் அறிக்கை கேட்டுள்ளார். அதன்படி, சட்டப்பேரவை செயலாளர் ஜமாலுதீன் இன்று ஆளுநர் அலுவலத்தில் அறிக்கை வழங்கி உள்ளார். அதில், நம்பிக்கை தீர்மானத்திற்காக கூட்டப்பட்ட சிறப்பு சட்டசபை கூட்டத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை நடந்த சம்பவங்கள் மற்றும் விரும்பத்தகாத நிகழ்வுகள் தொடர்பாக விளக்கியுள்ளார்.

இந்த விளக்க அறிக்கை மற்றும் எதிரணியினரின் புகார் ஆகியவற்றின் அடிப்படையில், ஆளுநர் தனது முடிவை விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/02/20152021/1069396/What-happened-in-assembly-assembly-secretary-presented.vpf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.