Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஒட்டுப்புல்

Featured Replies

ஒட்டுப்புல்

தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள இடைப்பாடி பழனிசாமி எங்கே சென்றாலும்,
அ.தி.மு.க., துணை பொதுச்செயலர், ஒட்டுப்புல் போல் ஒட்டிக் கொள்வதால், கட்சியினர், கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். நேற்று கவர்னரை சந்தித்த போதும்,அவர் உடன் இருந்ததால், முக்கிய நிர்வாகிகளும் விரக்தி அடைந்துள்ளனர்.

 

Tamil_News_large_171411020170219231655_318_219.jpg

அ.தி.மு.க., பொதுச்செயலராக இருந்த ஜெயலலிதா, தன்னுடன் இருந்த, சசிகலா, அவரது சொந்தங்களான டி.டி.வி.தினகரன், டாக்டர் வெங்கடேஷ் உள்ளிட்ட, 18 பேரை, 2011ல், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கினார். 'சதிகாரர்கள், துரோகிகள்' என, முத்திரை குத்தி, வீட்டை விட்டும் விரட்டினார்.

மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்த பின், சசிகலாவை மட்டும், கட்சியில் சேர்த்துக் கொண்டார். மற்ற யாரையும், கட்சியில் சேர்க்கவில்லை. டிசம்பர் 5ல், ஜெ., மறைந்த பின், கட்சியிலும், ஆட்சியிலும், சசியின்

மன்னார்குடி கும்பலின் ஆதிக்கம் துவங்கி விட்டது.

கடும் அதிருப்தி: ஜெயலலிதா மறைந்து, தற்காலிக பொதுச்செய லரான சசிகலா, ஜெயலலிதாவால் நீக்கப்பட்ட தினகரன், டாக்டர் வெங்கடேசையும் கட்சியில் சேர்த்தார். கட்சி யில் சேர்த்த அடுத்த நாளே, தினகரனுக்கு கட்சி யில், துணை பொதுச்செய லர் பதவியை சசிகலா வழங்கினார். இதற்கு, தொண்டர்கள் மட்டுமல்ல, முக்கிய நிர்வாகிகளும் கடும் அதிருப்தியில்உள்ளனர்.

கட்சியின், சட்டசபை குழு தலைவராக தேர் வான, சசிகலா, முதல்வராக பதவியேற்கும் படி, கவர்னரை சந்தித்த போது, அவருடன், தினகரனும் உடன் சென்றார்.சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, சசிகலா சிறை சென்றதால், அ.தி.மு.க., சட்டசபைக்குழு தலை வராக, இடைப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப் பட்டார்.அவர், தன் தலைமையில் ஆட்சி அமைக்க, அனுமதி கோரி, கவர்னரை சந்தித்த போதும், தினகரன் உடன் சென்றார். பெங்களூரு சிறைக்கு செல்லும் முன், சசிகலா, ஜெ., நினை விடம் சென்று, சபதம் ஏற்றார். அப்போதும், தினகரன் அவருடன் பங்கேற்றார்.

நேற்று முன்தினம், முதல்வர், சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்த பின், ஜெ., நினை விடம் சென்ற போதும், அவருடன் ஒட்டிக் கொண்டார்.சட்டசபையில், நம்பிக்கை ஓட்டெப் பில் வெற்றி பெற்ற பின், நேற்று மரியாதை

 

நிமித்தமாக, கவர்னர் வித்யாசாகர் ராவை, முதல்வர் இடைப்பாடி பழனிசாமியும், முக்கிய அமைச்சர்களும் சந்தித்தனர். அப்போதும் முதல்வருக்கு அடுத்ததாக, தினகரன் அமர்ந்திருந்தார்.

இப்படி, முதல்வர் இடைப்பாடி பழனிசாமி செல்லும் இடங்களுக்கு எல்லாம், 'ஒட்டுப்புல்' போல், தினகரன் ஒட்டிக் கொள்வதால், கட்சியி னர் அதிருப்தி அடைந்து உள்ளனர். முக்கிய நிர்வாகிகளும், கடும் விரக்தியில் உள்ளனர்.
 

பின்னடைவு


இது குறித்து நிர்வாகி ஒருவர் கூறுகையில், 'ஆட்சி என் தலைமையில் தான் நடக்கிறது; இடைப்பாடி பழனிசாமி, எங்களின், 'பினாமி' தான் என, காட்டும் வகையில், தினகரன் செயல்படுகிறார். இது, கட்சியில், யாருக்கும் பிடிக்கவில்லை. அதைப்பற்றி கவலைப் படாமல் தினகரன் செயல்படுவது, கட்சிக்கும், ஆட்சிக்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்' என்றார். இத்தனை ஆண்டுகள் எங்கிருந்தார் என்பதே தெரியாமல், வழக்கு விசாரணை களின் போது மட்டும் நீதிமன்றங்களில் காட்சி யளித்த தினகரன், இப்போது முதல்வருடன் ஒட்டிக் கொண்டுள்ளது, அவருக்கும் பிடிக்கவில்லை;

கட்சியின் முக்கிய பிரமுகர்களுக்கும் பிடிக்கவில்லை எனவும், கூறப்படுகிறது. இதனால், கட்சி மேலும் வலுவிழக்கும் என, கவலை தெரிவிக்கின்றனர், விசுவாசிகள்.
- நமது நிருபர் -

 

http://www.dinamalar.com/

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.