Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு எதிராக ஐகோர்ட்டில் தி.மு.க., முறையீடு

Featured Replies

 

 

 

 
Tamil_News_large_1714700_318_219.jpg
 
நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு எதிராக ஐகோர்ட்டில் தி.மு.க., முறையீடு

 

 

 

சென்னை : சட்டசபையில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தி முதல்வராக இடைப்பாடி வெற்றி பெற்றதாக அறிவித்ததை செல்லாது என அறிவிக்கக் கோரி ஐகோர்ட்டில் திமுக முறையீடு செய்துள்ளது.

 

அவசரவழக்கு :

சட்டசபையில் இருந்து திமுக எம்.எல்.ஏ.,க்கள் வெளியேற்றப்பட்டது, சட்டசபைக்குள் போலீசார் முறைகேடாக நுழைந்தது ஆகியவை தொடர்பாகவும் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இதனை மனுவாக தாக்கல் செய்தால், அவசர வழக்காக எடுத்து நாளை விசாரிக்கிறோம் என திமுக.,வின் முறையீட்டை கேட்ட ஐகோர்ட் நீதிபதிகள், தெரிவித்துள்ளனர்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1714700

  • தொடங்கியவர்

நம்பிக்கை வாக்கெடுப்பு வெற்றிக்கு எதிர்ப்பு: திமுக மனுவை அவசர வழக்காக ஏற்றது உயர் நீதிமன்றம்

 
high_court1_2450408f.jpg
 
 
 

நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கு நாளை அவசர வழக்காக விசாரிக்கப்படும் என உயர் நீதிமன்ற அமர்வு உறுதியளித்துள்ளது.

திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.சண்முகசுந்தரம் உயர் நீதிமன்றத்தில் இன்று (திங்கள்கிழமை) இதுதொடர்பாக பொறுப்பு நீதிபதி ரமேஷ், நீதிபதி ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வு முன் முறையீடு செய்தார்.

அந்த மனுவில், "கடந்த 18-ம் தேதி சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு சட்டவிரோதமானது. அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூவத்தூரில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். அவர்களை சிறைக் கைதிகளைப் போல் பேரவைக்கு அழைத்து வந்தனர். அவர்கள் யாரும் மனசாட்சிப்படி வாக்களிக்கவில்லை. கட்டாயத்தின் பேரிலேயே வாக்களித்திருக்கின்றனர்.

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் நிர்பந்தப்படுத்தப்பட்டிருந்ததாலேயே, ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்தினோம்.

ஆனால், எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை சபாநாயகர் நிராகரித்துவிட்டார். திட்டமிட்டே எதிர்க்கட்சிகளை வெளியேற்றிவிட்டு நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தியிருக்கிறார். இது ஜனநாயக மரபு அல்ல. இந்த வாக்கெடுப்பை மக்களும் நிராகரிக்கிறார்கள்.

இது தொடர்பாக ஆளுநரிடமும் முறையிட்டிருக்கிறோம். எனவே, இந்த அரசை கலைத்துவிட்டு மீண்டும் பேரவையில் வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும். இந்த முறை ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும்" எனக் கோரப்பட்டிருக்கிறது.

மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் நாளை காலை இந்த வழக்கு அவசர வழக்காக முதலில் விசாரிக்கப்படும் எனத் தெரிவித்தனர்.

நடந்தது என்ன?

பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக கடந்த 18-ம் தேதி தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டது. அந்தக் கூட்டத்தில் முதல்வர் கொண்டுவந்த நம்பிக்கை தீர்மானத்தின் மீது ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகளான திமுக, காங்கிரஸும் எதிரணியாக செயல்பட்ட ஓபிஎஸ் தரப்பும் வலியுறுத்தியது. ஆனால், சபாநாயகர் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற திமுகவின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனைத் தொடர்ந்து அவையில் கடும் அமளி ஏற்பட்டது. மைக் உடைப்பு, மேஜை உடைப்பு, சட்டை கிழிப்பு போன்ற சம்பவங்கள் நடந்தன.

இந்நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக முறையீடு செய்துள்ளது.

http://tamil.thehindu.com/tamilnadu/நம்பிக்கை-வாக்கெடுப்பு-வெற்றிக்கு-எதிர்ப்பு-திமுக-மனுவை-அவசர-வழக்காக-ஏற்றது-உயர்-நீதிமன்றம்/article9551250.ece?homepage=true

  • தொடங்கியவர்
gallerye_000833526_1714854.jpg

சென்னை:முதல்வர் இடைப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பு விவகாரத்தில், சபாநாயகர் முடிவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், தி.மு.க., வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு, இன்று அவசரமாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் படுவதால், சட்டசபையில் நிறைவேறிய நம்பிக்கை தீர்மானம் ரத்தாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

 

Tamil_News_large_1714854_318_219.jpg

இதுதொடர்பாக, தி.மு.க., செயல் தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு:

ஜெயலலிதா மறைவுக்கு பின், முதல்வர் பதவிக்கு பன்னீர்செல்வம் தேர்வு செய்யப்பட்டார். அ.தி.மு.க., தற்காலிக பொதுச்செயலராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த சசிகலா, சட்டசபை, அ.தி.மு.க., தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து, முதல்வர் பதவியிலிருந்து பன்னீர்செல்வம், ராஜினாமா செய்தார்.
 

சசிக்கு தண்டனை


பின் அவர், தன்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா கடிதம் பெறப்பட்டதாக, பகிரங்கமாக புகார் தெரிவித்தார். ஆட்சி அமைக்க அழைக்கும் படி, கவர்னரிடம் சசிகலா உரிமை கோரினார். அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும், காஞ்சிபுரம் மாவட்டம், கூவத்துாரில் உள்ள ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டனர்.

இந்நிலையில், சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சசிகலாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால், பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார். அதனால், அவருக்கு தகுதியிழப்பு ஏற்பட்டது.அதனால், சட்டசபை அ.தி.மு.க., தலைவராக, பழனிசாமியை தேர்ந்தெடுத்து, ஆட்சி அமைக்க உரிமை கோரப்பட்டது. முதல்வராக, பிப்., 16ல், பழனிசாமி பதவியேற்றார். 15 நாட்களுக்குள், சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி, அவகாசம் வழங்கப்பட்டது.
ஆனால், 18ம் தேதியே, சட்டசபையின் சிறப்பு கூட்டம்,காலை, 11:௦௦ மணிக்கு துவங்கியது. சென்னை, காமராஜர் சாலையில், என் கார் நிறுத்தப்பட்டு சோதனையிடப்பட்டது. இதனால், சட்டசபையை நோக்கி நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.சட்டசபை துவங்கியதும், ரகசிய ஓட்டெடுப்பு நடத்தும்படி, தி.மு.க., மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்களும், பன்னீர்செல்வமும் கோரிக்கை விடுத்தனர்.
'எம்.எல்.ஏ.,க்களை சட்டவிரோத காவலில் வைத்ததால், அவர்கள் சுதந்திரமாக ஓட்டளிக்க வேண்டும் என்றால் ரகசிய ஓட்டெடுப்பு ஒன்றே வழி' என, வலியுறுத்தப்பட்டது; அதை, சபாநாயகர் மறுத்தார். சட்டசபையை, பிற்பகல், 1:00 மணிக்கு தள்ளி வைத்தார். ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளவிடாமல் தடுக்கும் வகையில், போலீஸ் படையினர் அங்கு வந்தனர். பகல், 1:00 மணிக்கு சட்டசபை துவங்கியதும், தி.மு.க., உறுப்பினர்களை வெளியே அனுப்பும்படி, சபை காவலர்கள் மற்றும் சபை காவலர்கள் சீருடையில் இருந்த போலீசாருக்கு, சபாநாயகர் உத்தரவிட்டார்.

 

 

சட்டை கிழிப்பு


பின், சபையை, 3:00 மணிக்கு தள்ளிவைத்தார். சபாநாயகரின் உத்தரவை சாதகமாக எடுத்து, கூடுதல் போலீஸ் ஆணையர் சேஷசாயி தலைமையில், எங்கள் கட்சி எம்.எல்.ஏ.,க்களை, போலீசார் தாக்கினர். அப்போது, சபையில் சபாநாயகர் இல்லை.சபை விதிகளை பின்பற்றாமல், என்னையும் வெளியேற்றினர். போலீசார், முரட்டுத்தனமாக அணுகினர்; என் சட்டை கிழிக்கப்பட்டது. கடைசியில், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் அனைவரையும் வெளியேற்றினர். சபாநாயகர் செயல்பட்டதை கண்டித்து, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.
 

தடை விதிக்க வேண்டும்


கவர்னரை சந்தித்து முறையிட்டோம். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இல்லாமல், முதல்வர் பழனிசாமி கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடந்தது. முதல்வருக்கு ஆதரவாக, 122 ஓட்டுகளும், எதிராக, 11 ஓட்டுகளும் விழுந்ததாக அறிவிக்கப்பட்டது. சபாநாயகரின் இந்த அறிவிப்பு, சட்டவிரோதமானது; சபை விதிகளை மீறியது.
எனவே, நம்பிக்கை தீர்மானத்தின் மீதான முடிவுக்கு தடை விதிக்க வேண்டும்; முதல்வர் என்ற முறையில் கொள்கை முடிவெடுக்க, பழனிசாமிக்கு தடை விதிக்க வேண்டும். கவர்னரின் செயலர், தலைமை செயலர், தேர்தல் ஆணைய அதிகாரி மேற்பார்வையில் மீண்டும் ரகசிய நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும்; சபாநாயகரின் முடிவு செல்லாது என உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

நேற்று காலையில், தற்காலிக தலைமை நீதிபதி ஹுலுவாடி ரமேஷ், நீதிபதி மகாதேவன் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜராகி, இந்த மனுவை அவசரமாக விசாரிக்க கோரினார். அதற்கு, நீதிபதிகள், 'மனு தாக்கல் செய்யுங்கள்; நாளை விசாரிக்கிறோம்' என்றனர்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1714854

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.