Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோலியை, இந்தியாவை எப்படி சமாளிக்கவிருக்கிறது ஆஸ்திரேலியா..? #IndVsAus #AustraliaSketch #VikatanExclusive

Featured Replies

கோலியை, இந்தியாவை எப்படி சமாளிக்கவிருக்கிறது ஆஸ்திரேலியா..? #IndVsAus #AustraliaSketch #VikatanExclusive

இந்தியாவுக்குச் சுற்றுப் பயணம் வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி,  நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் வரும் 23-ம் தேதி புனேவில் தொடங்குகிறது. ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில், நான்கு பிரதான சுழற்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளனர். கடந்த சில மாதங்களாக அந்த அணி ‛அவுட் ஆஃப் ஃபார்ம்’ல் உள்ளது. கடைசியாக, ஆசிய நாடுகளில் பங்கேற்ற ஒன்பது டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்தது. இதுவே அணியில் கணிசமான மாற்றம் செய்யக் காரணம். 

இந்தியா, ஆஸ்திரேலியா தவிர்த்து, சர்வதேச கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த தொடர் குறித்து, பிரபலங்கள் என்ன சொல்கிறார்கள்?

மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர்:

சச்சின் டெண்டுல்கர் - இந்தியா

“ஆஸ்திரேலிய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் படுதோல்வியைச் சந்தித்தாலும், பாகிஸ்தானுக்கு எதிராக கடும் ஆதிக்கம் செலுத்தியது. எனவே, ஆஸ்திரேலியாவை எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. எதிரணியின் திறமையை எப்போதும் குறைத்து மதிப்பிடக்கூடாது.  ஆஸ்திரேலிய அணி வலுவானதாக இருந்தாலும், இந்திய சூழ்நிலையில் அவர்கள் விளையாடுவது சிரமம்தான். இந்தக் கருத்தை ஆஸ்திரேலிய வீரர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர். இந்திய அணிக்குக் கிடைத்துள்ள சிறந்த பாராட்டாகவே இதைக் கருதுகிறேன்.

எதிரணியின் திறமைக்கு ஏற்ப, இந்திய அணி தயாராகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆஸ்திரேலிய அணியைக் கையாள்வது எப்போதுமே கடினம். இருந்தாலும், இந்திய அணியின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது.'’

ஆஸ்திரேலியா அணியின் வெற்றிக் கேப்டன் - ரிக்கி பாண்டிங்

''ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் திணறும். ஏனென்றால், முன்பைவிட தங்களுக்குச் சாதகமாகவே ‘பிட்ச்‘களை இந்தியா அமைக்கும். இலங்கைத் தொடரில் நடந்ததைப் பார்க்கும்போது, ஒவ்வொருமுறையும் துணைக்கண்டங்களுக்குச் செல்லும் போதெல்லாம், முதல் நாளில் இருந்தே பந்துகள் கடுமையாக ‘ஸ்பின்’ ஆகி திரும்புவதைப் பார்க்க முடிகிறது. எனவே இலங்கைத் தொடர் போல அல்லாமல், இந்தியாவில் கொஞ்சம் கூடுதலாகப் போராடிவிட்டு தோற்றால், அதைவிடப் பெரிய முன்னேற்றம் ஒன்றுமில்லை. ஆஸ்திரேலிய அணிக்கு இது கற்றுக்கொள்ளும் கட்டம்.  ஆஸ்திரேலிய பாணியில் ஆடுவதிலிருந்து இந்தியாவின் சூழ்நிலைக்கு ஏற்ப, வீரர்கள் தங்களை மாற்றிக்கொள்ளவேண்டும்.

ஆஸ்திரேலியா''ஒருநாள் ஆட்டங்களில், 27 சதங்கள் அடித்திருக்கும் கோலி, மூன்று ஃபார்மட்டுக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். என்றாலும், அவரது பேட்டிங்கின் தரம் மேலும்மேலும் கூடிக் கொண்டே இருக்கிறது. மங்கவில்லை. இருப்பினும் சச்சின், லாரா, காலிஸ் ஆகியோருடன் ஒப்பிடும் அளவுக்கு விராட் வளரவில்லை. அந்த ஜாம்பவான்கள் 100 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் நிலைத்து நின்று ஆடியவர்கள். கோலி இன்னும் பாதி கிணறு கூட தாண்டவில்லை. கோலி அவர்களுக்கு இணையான புகழைப் பெற, இன்னும் சில காலம் ஆகும்.

கோலியைப் பொறுத்தவரை, சவால் என்று வந்து விட்டால், தன்னுடைய ‘கம்ஃபர்ட் ஸோனை’ விட்டு வெளியே வந்துவிடுவார். ஆக்ரோஷமடைவது அவருக்கு நல்லதாக இருக்கலாம். சில வேளைகளில் எதிரணியினருக்கு அது ப்ளஸ்ஸாக அமைந்து விடும். அவர் என்னைப்போன்ற குணாதிசியம் கொண்டவர். மனதில் நினைப்பதை வெளியில் தெரிவித்து விடும் ஒரு கேரக்டர். நான் இந்தியாவில் விளையாடும்போது ஒன்றைக் கற்றுக் கொண்டேன். அது, இந்திய அணி களத்தில் உருவாக்கிக் கொள்ளும் டீம் ஸ்பிரிட்தான். இந்த உத்வேகத்தைத் தடுத்து நிறுத்தும் அணியினால் மட்டுமே இந்தியாவில் வெற்றிபெற முடியும். ஆஸ்திரேலியாவும் அதற்கு விதிவிலக்கு அல்ல. 

கோலியைக் கட்டுப்படுத்த எதிரணியினர் செய்ய வேண்டியது ஒன்றுதான். அவர் `டிரைவ்’ அடிக்கும் இடங்களில், ஃபீல்டர்களை நிறுத்தி, வேறு இடங்களில் அவரை ரன் எடுக்கப் பணிக்க வேண்டும். ரன் எடுக்க நீண்ட நேரம் ஆடும்போது, நிச்சயம் தவறான ஷாட் ஆடி, விக்கெட்டை இழப்பார்.’’

ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் -  ஸ்டீவ் ஸ்மித் 

'இந்தியா சிறந்த அணி என்பதால், கண்டிப்பாக இந்தத் தொடர் எங்களுக்குச் சவாலாக இருக்கும். இது நிச்சயம் எங்களுக்கு நல்ல அனுபவமாக இருக்கும். ஆஸ்திரேலிய வீரர்கள், இந்திய சூழ்நிலைக்கு ஏற்ப விரைவில் தங்களைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.  ஆஸ்திரேலியா

விராட் கோலி அருமையான வீரர். இந்திய அணியை அவர் சிறப்பாக வழி நடத்துகிறார். களத்திலும் அவர் ஆக்ரோஷமாகச் செயல்படுகிறார். இதனால் அவரைக் கொஞ்சம் கோபப்படுத்திப் பார்க்க வேண்டும். அவரது விக்கெட்டைக் கைப்பற்ற, நாங்கள் அவரைப்போலவே செயல்பட வேண்டும். அவரை அவுட்டாக்கினாலே இந்திய அணி தடுமாற வாய்ப்புள்ளது. 

எங்கள் மூத்த வீரர்கள் இலங்கையில் சரிவர செயல்படவில்லை. அதனால் முடிவுகள் சாதகமாக அமையவில்லை. இந்தமுறை துவக்கத்தில் இருந்தே டேவிட் வார்னர் வித்தியாசமாக ஆட வேண்டும். பொதுவாக, அடித்து ஆடுபவர்களை நான் கட்டுப்படுத்துவதில்லை. வார்னர் அத்தகைய வீரர்தான். அவர் சதம் அடிப்பதோடு நிற்காமல் 200, 300 என முன்னேறவேண்டும். அதாவது இங்கிலாந்துக்கு எதிராக, கருண் நாயர் அடித்தது போல...  இத்தகைய பெரிய ஸ்கோர்கள்தான் அணியை தலைநிமிரச் செய்யும். எனவே நாங்கள் மிகுந்த ஆவலுடன் இந்தத் தொடரில் பெரிய ஸ்கோர்களை நோக்கிச் செல்லப் போகிறோம்; நிச்சயமாகப் பின்வாங்கப்போவதில்லை. 

வெற்றிதான் முதல் இலக்கு.  இருப்பினும் தோல்வியை விட ‘டிரா’ நல்ல முடிவுதான்.  தோல்வியைத் தவிர்க்க முடியாத சமயத்தில் மட்டுமே ‘டிரா’ செய்ய முயற்சிக்க வேண்டும். இந்த முயற்சியை கடந்த தொடர்களில் செய்யத்தவறி விட்டோம். இந்தமுறை அதைச் சரிசெய்வோம்.’’

ஆஸ்திரேலியா அணியின் ஆல்ரவுண்டர் -  கிளன் மேக்ஸ்வேல்

ஆஸ்திரேலியா

“இந்தத் தொடர் சவாலாக இருக்கும். ஆஸ்திரேலிய வீரர்கள், எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் என்பதை, கோலியிடம் இருந்துதான் கற்றுக்கொள்ள வேண்டும்.  அஷ்வின், ஜடேஜா போன்ற உலகத்தரமான இந்திய ஸ்பின்னர்கள், எங்கள் பேட்ஸ்மென்களுக்குச் சவால் அளிப்பார்கள். தர்மசலாவில் டி-20 ஸ்பின் பெளலிங் எடுபடும். பொதுவாக, சிறிய பவுண்டரிகள் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும். அதன்படி பார்த்தால் பெங்களூரு நல்ல பிட்ச். எங்களுக்கு அதுபோன்ற  பிட்ச்கள் தொடர்ந்து கிடைக்கும் என்றே நினைக்கிறேன்.'' 

மிஸ்டர் கிரிக்கெட் - மைக் ஹஸ்ஸி

ஆஸ்திரேலியா

'இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில், ஆஸ்திரேலிய அணி வீரர்கள் விராட் கோலியிடம் வம்பு செய்யாமல் இருப்பதே நல்லது. அப்படி செய்வது அவருக்கு மிகவும் பிடிக்கும் என்பதுடன், நிச்சயம் அவரை இன்னும் வீறு கொண்டு ஆடவைக்கும். எனவே வார்த்தைத் தாக்குதலில் கவனம் செலுத்தி, ஆட்டத்தில் கோட்டை விடுவது நல்லதல்ல. கோலி இப்போது மிகுந்த தன்னம்பிக்கையுடன் காணப்படுகிறார். இந்திய சூழ்நிலைகளில் அவர் அதிகம் புரிதலுடையவராக இருக்கிறார். எனவே அவரை விரைவாக வீழ்த்த வேண்டும் என்பதில் ஆஸ்திரேலியா குறியாக இருக்க வேண்டும். ஏனெனில் அவர் களத்தில் செட்டில் ஆகிவிட்டார் என்றால், சுலபமாக அதிக ரன்களைக் குவித்துவிடுவார்.

எங்களிடம் தெளிவான திட்டங்கள் உள்ளன. அதைக் கடைபிடிக்கவே முயற்சி செய்வோம். முக்கியமாக, நாம் நம் திறமைகளுக்கு மதிப்பளித்து அதனைக் களத்தில் ஈடுபடுத்துவதே சிறந்தது. போட்டி முடிவில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ, அந்த அணிதான் களத்தில் தங்களது திறமைகளை பெரிய அளவில் வெளிப்படுத்திய அணியாகும்' என ஆஸ்திரேலிய வீரர்களை எச்சரித்திருக்கிறார் முன்னாள் ஆஸி மற்றும் சிஎஸ்கே அணி வீரர்! 

ஆஸ்திரேலியா அணியின் பயிற்சியாளர் - டேரன் லெமென்

ஆஸ்திரேலியா

“விராட் கோலி எங்களுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருப்பார். கடந்த சில நாட்களாக அவரது ஆட்டத்தை வீடியோவில் போட்டுப் பார்த்தோம். அவரை எப்படி விரைவில் அவுட்டாக்குவது என யோசித்தோம். இன்னும் அதற்கான வழியை கண்டுபிடிக்க முடியவில்லை.  

இந்தியாவில் இங்கிலாந்து அணி சிறப்பாக ஆடியதாகவே கருதுகிறேன். அப்படி இருந்தும் அந்த தொடரில் இங்கிலாந்து அணி 4-0 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்தது. எனவே இந்தத் தொடரில் ஆஸ்திரேலிய வீரர்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். இந்தத் தொடரில் வெற்றிபெற வேண்டுமானால் அதிக ரன்களைக் குவிக்க ஒவ்வொரு ஆஸ்திரேலிய வீரரும் முயல வேண்டும்.  பிட்ச்சின் தன்மையைப் பொறுத்தே அணித் தேர்வு அமையும். 

நான்கில், மூன்று மைதானங்களில் இப்போதுதான் முதன்முறையாக டெஸ்ட் போட்டிகள் நடக்க உள்ளன. இங்கே நீண்ட நேரம் பேட் செய்வது முக்கியம். `இந்தியாவில் நீண்ட நேரம் இங்கிலாந்து அணியால் பேட் செய்ய முடியவில்லை’ என, அலஸ்டர் குக் சொன்னது கவனிக்கத்தக்கது. இங்கிலாந்து அணி ஓரளவுக்குத் தேவையான ரன்களையே எடுத்தது. ஆனால், அதிக ஓவர்களை ஆடவில்லை. ஆஸ்திரேலியாவுக்கும் இதுதான் சவால். 150க்கும் அதிகமான ஓவர்களை ஆடும்போதுதான், ஸ்கோரை அதிகப்படுத்த முடியும். இளம் வீரர்கள் இதைப் புரிந்து செயல்பட வேண்டும்.“

இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் - கெவின் பீட்டர்சன்

ஆஸ்திரேலியா

“சுழற்பந்து வீச்சில் சிறப்பாக விளையாட, விரைவாக கற்றுக்கொள்ளுங்கள். சுழற்பந்தை உங்களால் எதிர்கொள்ள முடியாவிட்டால், தயவுசெய்து இந்தியா செல்ல வேண்டாம். எப்படி இருந்தாலும், நீங்கள் இந்தியா சென்ற பிறகு, அங்கு வலைப் பயிற்சியில் ஈடுபடுவீர்கள்; இது வழக்கமான நடைமுறைதான். ஆனால் அதனை நீங்கள் ஆஸ்திரேலியாவிலேயே செய்ய முடியும். என்னிடம் கேட்டிருந்தால், சுழற்பந்து வீச்சில் எப்படி விளையாட வேண்டும் என்பது குறித்து என்னால் ஆஸ்திரேலியாவிலேயே பயிற்சி அளித்திருக்க முடியும். சுழற்பந்து வீச்சில் முறையாக விளையாடுவதற்கு, சுழலுக்குச் சாதகமான ஆடுகளம்தான் தேவை என்றில்லை. மேலும் அதில்தான் பயிற்சி பெற வேண்டும் என்பதும் அவசியம் இல்லை. 

நீங்கள் எந்த வகையிலான ஆடுகளத்திலும் அசத்தலாம். அது நாம் கால் நகர்வுகளை எப்படி மேற்கொள்கிறோம் என்பதை பொறுத்துதான் இருக்கிறது. காலை முன்னால் கொண்டு சென்று, ஒருபோதும் பேட் செய்யக் கூடாது. பந்துக்காக காத்திருந்து பேட் செய்வதே சிறந்தது. எந்த இடத்தில் பந்து பிட்ச் ஆகிறது என்பதைச் சரியாகக் கணித்து விளையாட வேண்டும். 150 கி.மீ வேகத்தில் வீசப்படும் பந்துகளில் சிறப்பாகச் செயல்படும் உங்களால், வெறும் 80 கி.மீ வேகத்தில் வீசப்படும் பந்துகளுக்கு எதிராக சிறந்த திறனை வெளிப்படுத்துவது ஏன் கடினமாக இருக்கிறது?’’

ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் பவுலர் - மிட்செல் ஜான்ஸன்

ஆஸ்திரேலியா

“பந்துகள் திரும்புவதற்கு ஏற்ப இந்திய பிட்ச்கள் அமைக்கப்பட்டிருக்கும். பலம்வாய்ந்த தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து போன்ற அணிகள் இந்தியாவில் தொடரை இழந்துள்ளன. எனவே ஆஸ்திரேலிய அணி  2 அல்லது 3 ஸ்பின்னர்களுடன் களமிறங்குமா எனத் தெரியவில்லை. ஆனால் இந்தமுறை வித்தியாசமான ஆஸ்திரேலியாவை எதிர்பார்க்கலாம் என்பது மட்டும் உறுதி. எங்களிடமிருந்து சிறப்பான போட்டியை, உலகின் தலைசிறந்த டெஸ்ட் அணியான இந்திய அணி எதிர்பார்க்கலாம். இந்தியாவில் நாம் எதிர்கொள்வது அங்குள்ள பிட்ச் உள்ளிட்ட சூழ்நிலைகளைத்தான்; இதனால் அங்கே தரமான ஸ்பின்னர்களைக் களமிறக்குவதுதான் சிறந்தது. நம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் மைதானம் சாதகமாக இருக்கும்.’’

ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் -  இயான் சாப்பல்

''இந்தியாவில் ஆஸ்திரேலிய அணிக்கு ஏதாவது வாய்ப்புகள் உண்டானால், அது டேவிட் வார்னர் பேட்டிங்கினால் மட்டுமே சாத்தியமாகும். ஏனென்றால் இலங்கை மற்றும் இந்தியாவில், வார்னர் 26 ரன்களுக்கும் கீழ் சராசரி வைத்திருந்தாலும், அவர் அதிரடி ஆட்டம் ஆடும்போது, அவரையொட்டி மற்ற வீரர்களும் சிறப்பாக ஆட முடியும். இது இந்திய ஸ்பின்னர்களை யோசிக்க வைப்பதுடன், அவர்கள் தவறு செய்யவும் சாத்தியம் இருக்கிறது. அப்போது நிச்சயம் இந்திய ஸ்பின்னர்களை ஆக்ரோஷமாக அடித்து ஆடுவதையே வார்னர் விரும்புவார். இதுபோன்ற தாக்குதல் ஆட்டத்தை, இந்திய பவுலர்கள் தங்களது சொந்த மண்ணில் அதிகம் சந்தித்ததில்லை'' என்றார்.

ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன் டேவிட் வார்னர்

ஆஸ்திரேலியா

''இந்தியப் பயணத்திற்காக, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் எனக்கு ஓய்வு அளித்ததற்கு நன்றி. இந்தியாவில் கிரிக்கெட் ஆடுவதைப் பற்றித் திட்டமிடுவதற்கு முன்பாக, வீரர்கள் தங்களை உடல் மற்றும் மன ரீதியாக நன்கு தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இந்தியாவில் வெயில் அதிகம். உஷ்ணத்தையும் சமாளிக்க வேண்டும். நமக்கு இந்த சூழல் சகஜமாகும்வரை போராட வேண்டும்” 


ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் பவுலர் - ஜெஃப் லாசன்

ஆஸ்திரேலியா

'''இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்த, ஆஸ்திரேலியாவுக்கு என்ன தேவை என்பதில் தேர்வுக்குழுவினர் சொதப்பி உள்ளனர்.  மாறாக, தொடரை வெல்வதற்கு என்ன செய்ய வேண்டுமோ, அதை இந்தியா சரியாகச் செய்திருக்கிறது. ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சில்தான், முழுக்கவனத்தையும் செலுத்த வேண்டும். ஹாசில்வுட், மிட்செல் ஸ்டார்க் என்று நம்மிடம் உலகத்தரமான பவுலர்கள் உள்ளனர். இவர்களால் எங்கு வேண்டுமானாலும் சிறப்பாகப் பந்துவீச முடியும். 

தங்களுக்கு சாதகமாக ஸ்பின் ஆகும் பிட்ச்களை அமைப்பது அவர்கள் உரிமை. அங்கு அஷ்வின், ஜடேஜா போன்றோரை அடித்து ஆடவே முடியாது. இந்தியாவை அதன் சொந்த மன்ணில் வீழ்த்த, ஆஸ்திரேலியாவின் வழிமுறைதான் சரிப்பட்டு வருமே தவிர இந்திய முறைகள் சரிப்படாது. அதிகளவில் சுழற்பந்து வீச்சாளர்களைத் தேர்வு செய்யக் கூடாது. 2004-ல் கிளென் மெக்ராத், ஜேசன் கில்லெஸ்பி, மைக்கேல் காஸ்பரோவிச் போன்ற வேகப்பந்து வீச்சாளர்களால்தான், இந்தியாவில் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரை வென்றது. சுழல் ஜாம்பவன் ஷேன் வார்னே கூட அப்போது திணறினார் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்’' 

ஆஸ்திரேலியா அணியின் பேட்ஸ்மேன் - உஸ்மான் கவாஜா

ஆஸ்திரேலியா''2013-ம் ஆண்டில் நடைபெற்ற இந்திய டெஸ்ட் தொடர், எங்களுக்கு மிகவும் கடினமானதாக அமைந்தது. நாங்கள் அனைத்து ஆட்டங்களிலும் தோல்வியை சந்தித்திருந்தோம் என்பதுடன், நாங்கள் நினைத்தபடி எதுவும் எங்கள் வழியில் நடைபெறவில்லை. தற்போது நாங்கள் முற்றிலுமாக மாறுபட்ட அணியாக உள்ளோம்.

அஷ்வின், ஜடேஜா பந்துவீச்சு வீடியோவை எல்லோருமே பார்த்து வருகிறோம். இதில் ஒருசில வீரர்கள், அதிகமுறை அந்த வீடியோக்களைப் பார்க்கின்றனர். கிரிக்கெட் என்பது நவீன விளையாட்டாக மாறிவிட்டதால், இப்போது அனைவருக்கும் அனைத்தும் தெரிகிறது. இது ஆட்டத்தின் ஒரு அங்கமே.'’ 

http://www.vikatan.com/news/sports/81515-how-australia-going-to-manage-kohli-and-india---australia-series.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.