Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எதிர்ப்பைச் சமாளிக்க அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வின் பிரியாணி பிளான்! -கலகலத்த நிர்வாகிகள்

Featured Replies

எதிர்ப்பைச் சமாளிக்க அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வின் பிரியாணி பிளான்! -கலகலத்த நிர்வாகிகள்

Priyani_long_17140.jpg

திருவள்ளூர் மாவட்டத்தில்  அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஒருவர், எதிர்ப்பு தெரிவித்த நிர்வாகிகளுக்கு பிரியாணி விருந்து கொடுத்து அசத்தி உள்ளார். அப்போது தீபாவின் ஆதரவாளருக்கு எப்படி பிரியாணி கொடுக்கலாம் என்று நிர்வாகிகளுக்கு இடையே குடுமிப்பிடி சண்டை நடந்துள்ளது. 

சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபித்து முதல்வர் பதவியைத் தக்க வைத்துக் கொண்டார் எடப்பாடி பழனிசாமி. கூவத்தூர் ரிசார்ட்டில் தங்கி இருந்த சசிகலா அணி எம்.எல்.ஏ.க்களுக்கு தொகுதியில் கடும் சவால்கள் காத்திருக்கின்றன. தொகுதிக்குச் சென்ற சசிகலா அணி எம்.எல்.ஏ.களுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்த எம்.எல்.ஏ.க்களுக்கு பொதுமக்கள் அமோக வரவேற்பு அளித்து வருகின்றனர். 

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள எம்.எல்.ஏ. அலுவலகத்தை கடந்த சில தினங்களுக்கு முன்பு பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அந்த எம்.எல்.ஏ.க்கு இந்தத் தகவல் தெரிந்ததும் எம்.எல்.ஏ. அலுவலகம் செல்லவில்லை. தொகுதியில் உள்ள கட்சி நிர்வாகிகளிடம் சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ. மீது அதிருப்தி நிலவியது. இதனால் கட்சியினரை சமரசப்படுத்த அந்த எம்.எல்.ஏ. அதிரடியாக ஒரு முடிவை எடுத்தார். எதிர்ப்பு தெரிவித்த நிர்வாகிகளுக்கு பிரியாணி விருந்து வைத்து அசத்தியுள்ளார்.

இதுகுறித்து பிரியாணி விருந்தில் பங்கேற்ற அ.தி.மு.க. நிர்வாகி ஒருவர் கூறுகையில், "தொகுதியில் எம்.எல்.ஏ.வுக்கு கட்சியிலேயே எதிர்ப்பு கிளம்பிய தகவல் தெரியவந்ததும் எங்களுடன் ஆலோசனை நடத்தினார். கூவத்தூரில் எம்.எல்.ஏ. தங்கியதும் அவரைக் காணவில்லை என்று போஸ்டர் அடித்து ஒட்டினர். இதனால் தொகுதிக்குள் சென்றால் நிச்சயம் பிரச்னை ஏற்படும் என்று கருதினார். கட்சியில் உள்ள எதிர்ப்பை முதலில் சமாளித்துவிட்டு அடுத்து பொதுமக்களிடம் உண்மையைச் சொல்லலாம் என்று முடிவு செய்தார். 
இதற்காக தொகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தை வாடகைக்கு எடுத்து கட்சி நிர்வாகிகளுக்கு பிரியாணி விருந்து கொடுக்க முடிவு செய்தார். இந்தத் தகவலை பி.ஏ. மூலம் எஸ்.எம்.எஸ், வாட்ஸ்அப் மூலம் தெரிவித்தார். அதிருப்தியில் இருந்த நிர்வாகிகள் இன்று காலை திருமண மண்டபத்துக்கு வந்தனர். அங்கு எம்.எல்.ஏ. தன்னுடைய பரிவாரங்களுடன் கம்பீரமாக வாசலில் நின்று அனைவரையும் வரவேற்றார்.

ஜெயலலிதா பிறந்தநாள் ஆலோசனைக் கூட்டம் என்ற பெயரில் சிறிது நேரம் கட்சி நிலவரம் விவாதிக்கப்பட்டது. அடுத்து, அனைவருக்கும் 'சரக்கு' சைடு டிஷ்வுடன் விநியோகிக்கப்பட்டது. சரக்குப் பார்த்த பல நிர்வாகிகளும், தொண்டர்களும் வாயடைத்துப் போய்விட்டனர். எம்.எல்.ஏ.விடம் வாக்குவாதம் செய்ய வந்த நிர்வாகிகள் கூட சரக்கைப் பார்த்ததும் அமைதியாகிவிட்டனர். அடுத்து சுடச்சுட, பிரியாணி விருந்தும் நடந்தது. அதில் பங்கேற்ற நிர்வாகிகளும், தொண்டர்களும் குஷியாகி விட்டனர். ரகசியமாக இந்த விருந்து முடியும் நிலையில் பிரியாணிக்காக இரண்டு நிர்வாகிகள் போட்ட தகராறு அனைத்தையும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துவிட்டது" என்றார்.

நடந்த சம்பவத்தை அப்படியே விவரித்தார் இன்னொரு நிர்வாகி ஒருவர். "எம்.எல்.ஏ.வை தப்பா நினைச்சிட்டோம். நமக்கு இப்படியொரு விருந்து கொடுப்பாருன்னு கனவுல கூட நினைச்சிப் பார்க்கல என்று ஒன்றிய நிர்வாகி சொல்ல... அதை ஆமோதித்தார் வட்டக் கழகச் செயலாளர்.  பக்கத்தில் சிக்கன் லெக்பீஸை சாப்பிட்டுக்கொண்டே சொன்னார் வார்டு கழக நிர்வாகி, 'நம்மளேயே இப்படி கவனித்தா... தலைவர (எம்.எல்.ஏ.) எப்படி ரிசாட்டில கவனிச்சிருப்பாங்க. சில 'சி' க்கள் தலைமையிலிருந்து கொடுத்திருக்காங்கய்யா' என்றார் வட்டக் கழக நிர்வாகி. 'அதுஎல்லாம் சும்மா கதை விடுறாங்க. பதவிய காப்பத்த எல்லோரும் ஓட்டு போட்டாங்கன்னு சொல்றாங்க'  என்றார் கட்சியின் அணி நிர்வாகி  'அப்படின்னா இல்ல,  வாங்கின ஆளே சொல்லிட்டாங்க' என்றார் ஒன்றிய நிர்வாகி.

இப்படி விவாதம் நடந்து கொண்டு இருக்க... திடீரென திருமண மண்டப கிச்சனில் இரண்டு நிர்வாகிகள் கட்டிப்புரண்டு சண்டை போட்ட சப்தம் கேட்டு மற்ற நிர்வாகிகள் அங்கு விரைந்தனர். 'என்னய்யா பிரச்னை' என்று ஒன்றிய நிர்வாகி இரண்டு பேரிடம் விசாரித்தார். அப்போது, கட்சியின் எம்.ஜி.ஆர். இளைஞரணி நிர்வாகி, 'ஒன்றியம் இவரு தீபா ஆளு.... இங்கு நோட்டம் பார்க்க வந்திருக்காரு. இவருக்கு எப்படி பிரியாணி கொடுக்கலாம்' என்று கத்தினார். 'நான்னா..... தீபா ஆளு, நீதான் தி.நகர்ல அந்தம்மா வீட்டு முன்னால காத்துக்கிடந்த... இப்ப வந்து இப்படி சொல்ற, ஏன் எம்.எல்.ஏ. கூட அசிங்கமா திட்டின' என்று சொன்னார் ஜெ. பேரவை நிர்வாகி.  

எம்.ஜி.ஆர்., ஜெ. பேரவை நிர்வாகிகளை சமரசப்படுத்திப் பிரச்னையை முடித்து வைத்தார் ஒன்றியக் கழக நிர்வாகி. இந்த விவகாரத்தால் விருந்து விவகாரமும் வெளியில் தெரிந்துவிட்டது. இந்த தகவல் எம்.எல்.ஏ. காதுக்கு எட்டியதும் மண்டபத்திலிருந்து காரில் எஸ்கேப் ஆகி விட்டாராம். இந்த கூட்டத்தில் பெண்கள் யாரும் பங்கேற்கவில்லையாம். மேலும், கூட்டத்தின் முடிவில் பங்கேற்றவர்களுக்கு கவர் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த கவருக்குள் காந்தி தாத்தா சிரித்தாராம். 

http://www.vikatan.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.