Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சசிகலாவை சந்திக்க அனுமதி மறுப்பு! ஏமாற்றத்துடன் திரும்பிய அமைச்சர்கள்

Featured Replies

சசிகலாவை சந்திக்க அனுமதி மறுப்பு! ஏமாற்றத்துடன் திரும்பிய அமைச்சர்கள்

jail_3_16322.jpg

பெங்களூரு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதால் ஏமாற்றத்துடன் அமைச்சர்களும், அதிமுக மகளிர் அணியினரும் சென்னை திரும்பினர்.

சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா மற்றும் இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூரு தனி நீதிமன்றம் நான்கு ஆண்டு சிறைத்தண்டனையும், தலா பத்துக் கோடி ரூபாய் அபராதமும் விதித்தது. இதையடுத்து, சசிகலா உள்பட மூன்று பேரும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி, மூன்று பேரையும் விடுதலை செய்தார்.

jail_2_16563.jpg

இந்தத் தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் அண்மையில் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், பெங்களூரு தனி நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தது. இதையடுத்து, மூன்று பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.

jail_16167.jpg

ஒரு வாரத்துக்கு மேல் சிறையில் இருக்கும் சசிகலாவை, அதிமுக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று சந்தித்து பேசினார். இந்தநிலையில், அமைச்சர்கள் செங்கோட்டையன், செல்லூர் ராஜு, திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் மகளிர் அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, கோகுல இந்திரா மற்றும் நடிகை சி.ஆர்.சரஸ்வதி ஆகியோர் இன்று பெங்களூரு சென்றனர். சிறைக்குள் செல்ல அனுமதி பெற காலதாமதம் ஏற்பட்டதை அடுத்து பெங்களூரு கிங்சந்திராவில் கீஸ் ஹோட்டலில் அமைச்சர்கள் தங்கியிருந்தனர். ஆனால், மகளிர் அணியினர் சிறை வளாகத்திலேயே இருந்தனர்.

சுமார் இரண்டரை மணி நேரம் காத்திருப்புக்கு பின்னர், சசிகலாவை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், அமைச்சர்களும், மகளிர் அணியினரும் சென்னை திரும்பினர்.

http://www.vikatan.com/news/tamilnadu/81545-admk-ministers-were-not-permitted-to-visit-sasikala-in-bangalore-prison.html

  • தொடங்கியவர்
gallerye_235442636_1715643.jpg

 

 

 

 

 

spaceplay / pause

qunload | stop

ffullscreen

shift + slower / faster

volume

mmute

seek

 . seek to previous

126 seek to 10%, 20% … 60%

 

சசிகலா அடைக்கப்பட்டுள்ள சிறை முன், அவரால் பதவி பெற்ற, அ.தி.மு.க.,வினர்,
தவம் கிடக்க துவங்கி உள்ளனர்.

 

Tamil_News_large_1715643_318_219.jpg

சசிகலாவை சந்திக்க, நேற்று, சிறை நிர்வாகம் அனுமதி மறுத்ததால், காத்திருந்த அமைச்சர் கள் ஏமாற்றமடைந்தனர். சசிகலாவை சந்திப்ப தற்காக, அமைச்சர்கள் உள்ளிட்ட, அ.தி.மு.க., வினர், இப்படி பெங்களூரு சிறை வாசலில் மணிக்கணக்கில் காத்து கிடப்பதால், தமிழகத் தில், அரசு நிர்வாகம் முடங்குவதாக, நடுநிலை யாளர்கள் எரிச்சலடைந்து உள்ளனர்.

சொத்து குவிப்பு வழக்கில், சிறை தண்டனை பெற்ற, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர், பெங்களூரு அடுத்த, பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
சசிகலாவை காண்பதற்காக, அவரால் பதவி

பெற்ற அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், வந்தபடி உள்ளனர். அனுமதி கிடைக்காததால், சிறை வாசலில் தவம் கிடக்கின்றனர்.

சசிகலாவை பார்க்காவிட்டால், பதவி பறிபோய் விடுமோ என்ற அச்சத்தினால், காத்து கிடக் கின்ற னர்.அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், செல்லுார் ராஜு ஆகியோர், நேற்று பிற்பகல், 2:00 மணிக்கு, பரப்பன அக்ரஹாரா சிறைக்கு வந்தனர்; அவர்களை, போலீசார் உள்ளே விட மறுத்தனர்.

திட்டவட்டம்


செங்கோட்டையன் கார் டிரைவர், ''இவர்களை யார் என்று நினைத்தீர்கள்; தமிழகத்தின், 'கேபினட்' அமைச்சர்கள்,'' எனக்கூறி, வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். அதை கேட்ட போலீசார், எரிச்சலுடன், 'இங்கு என்ன அமைச்சரவைக் கூட்டமா நடக்கிறது?' எனக் கேட்டதுடன், 'உள்ளே அனுமதிக்க முடியாது' என,திட்டவட்ட மாக தெரிவித்தனர்.

இந்த வாக்குவாதம், 10 நிமிடம் நீடித்தது. இறுதி வரை, போலீசார் அனு மதி அளிக்காததால், அமைச்சர்கள் ஏமாற்றத்து டன், தாங்கள்

 

தங்கி யிருந்த ஓட்டலுக்கு திரும்பினர். பின், கர்நாடக போலீசார், அந்த ஓட்டலுக்கு சென்று, செங்கோட்டையன் கார் டிரைவரிடம் விசாரித் தனர். 'போலீசையே மிரட்டுகிறாயா... எச்சரிக்கையாக இருக்கவும்' என்றனர்.

இதற்கிடையில், சசிகலாவை பார்ப்பதற்காக, கோகுல இந்திரா, வளர்மதி ,சி.ஆர்.சரஸ்வதி ஆகியோரும், நேற்று சிறைக்கு வந்தனர். அவர்கள் வருகை குறித்து, சிறை ஊழியர்கள், சசிகலாவிடம் தெரிவித்தனர். அவர், 'நான் அவர்களை பார்க்க விரும்ப வில்லை' என, கூறியுள்ளார். அந்த தகவலை, மூன்று பேரிட மும் தெரிவித்தனர். அதனால், கவலை அடைந்த மூவரும், அங்கேயே நின்று கொண்டிருந்தனர்.

ஆபாச பேச்சு:


அப்போது, கோகுல இந்திராவுக்கு மொபைல் போனில் அழைப்பு வந்தது. அவர், போனை வளர்மதியிடம் கொடுத்தார்.அவர், போனில் பேசிய நபரை, ஆபாச வார்த்தை களால் திட்டி தீர்த்து விட்டு, போனை, 'கட்' செய் தார். பின், மூன்று பேரும் அங்கிருந்து புறப்பட்ட னர்.

நீண்ட இழுபறிக்கு பின், புதிய அரசு அமைந்துள் ளது. அடுத்து பட்ஜெட் தயாரிப்பு வேலைகளை துவக்க வேண்டும். ஆனால், அரசு பணிகளை கவனிக்காமல், அமைச்சர்கள், சசிகலாவை காண சிறை வாசலில் தவம் கிடப்பது, நடுநிலை யாளர் களிடம் கடும் எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.
 

சசிகலாவுக்கு சொகுசு அறை!


சாதாரண தண்டனை கைதிகளாக இருந்தாலும், பாதுகாப்பு கருதி, சசிகலா, இளவரசி இருவரும், தனி அறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். பாதுகாப்புக்கு, மகளிர் போலீசார் நியமிக்க பட்டு உள்ளனர். சுதாகரன், ஆண்கள் பிரிவில் வைக்க பட்டு உள்ளார்.

பாதுகாப்புக்கு, சிறப்பு போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர். சாதாரண அறையில் இருந்த சசிகலா, இளவரசிக்கு, நேற்று, 'ஏ கிளாஸ்' எனப்படும், சொகுசு அறை கொடுக்கப்பட்டது.

இந்த அறையில், 'டிவி' இருக்கும்; தலா, ஒரு கட்டில், ஒரு மெத்தை, தலா இரண்டு பெட்ஷீட், ஒரு தலையணை வழங்கப்படும்; படிப்பதற்கு, இரண்டு நாளிதழ்கள் கொடுக்கப்படும்; வெளி யிலிருந்து உணவு வகைகள்,பழங்கள் கொண்டு செல்லவும், அனுமதி வழங்கப்படும்.ஆண்கள் பிரிவில், மற்ற கைதிகளுடன் அடைக்கப் பட்டுள்ள சுதாகரனுக்கு, இது போன்ற எந்த வசதியும் செய்து தரப்படவில்லை.

- நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1715643

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.