Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூவத்தூர் கும்மாளம்!

Featured Replies

கூவத்தூர் கும்மாளம்!

விதிமீறிய போலீஸ்... வதைக்கப்பட்ட மாணவர்கள்... மலையாகக் குவிந்த மதுபாட்டில்கள்...

 

ல்லிக்கட்டுக் காக பல லட்சம் பேர் திரண்ட மெரினா கடற்கரையில் சேர்ந்த குப்பையில், ஒரே ஒரு காலி மதுபாட்டில்கூட இல்லை. ஆனால், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-க்கள் ‘ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்காக’ தங்கியிருந்த கூவத்தூர் கோல்டன் பே ரிசார்ட்ஸில், மூட்டை மூட்டையாக காலி மது பாட்டில்களை குப்பை களிலிருந்து அகற்றினார்கள்.  

p18b.jpg

கூவத்தூரில் இத்தனை நாட்களாக ஓய்வெடுத்துக் கொண்டிருந்த தமிழக அரசு, மீண்டும் சென்னைக்கு வந்துவிட்டது. பூட்டியக் கதவுகளுக்குப் பின்னால், அடியாட்கள் கடுங்காவல் இருந்த காம்பவுண்ட் சுவர்களுக்குப் பின்னால்  என, அங்கு நடந்த  சமாச்சாரங்கள் ஒவ்வொன்றாக வெளியில் வருகின்றன இப்போது! உச்ச நீதிமன்றத் தீர்ப்பு சசிகலாவுக்கு எதிராக வந்ததும், ரிசார்ட்ஸில் சோகம் பரவியது. சசிகலா அங்கிருந்து கிளம்பும் முன், ‘‘நம்ம ஆட்சிதான் வரும். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. தீவிரமாகச் செயல்படுங்க. இனிமேல் நம்ம அரசியலே வேற மாதிரி இருக்கணும்” எனச் சொல்லிவிட்டுச் சென்றார்.  

p12b1.jpgஎடப்பாடி பழனிசாமியை பதவியேற்க கவர்னர் அழைத்ததும் காட்சிகள் மாறின. அவர் பதவியேற்று ரிசார்ட்ஸுக்கு வந்தபோது, அவரது வாகன அணிவகுப்புடன் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமியும் வந்திருந்தார். பொதுவாக, முதல்வர் வெளியூர் சென்று, அரசு விருந்தினர் மாளிகையில் தங்கும்போது, அங்கு போலீஸார் அணிவகுப்பு மரியாதை தருவார்கள். தனியார் இடங்களில் தங்கும்போது இப்படி வழங்குவதில்லை. ஆனால், இந்த விதியை மீறி கூவத்தூரில் பழனிசாமிக்கு அணிவகுப்பு மரியாதை தந்தது போலீஸ். எடப்பாடி பழனிசாமி முதல்வராகப் பதவியேற்றதும் கொண்டாட்டம் அதிகமாக இருக்கும் என மீடியாவினர் காத்திருந்தனர். ஆனால், ‘‘கடுமையா விமர்சனம் இருக்குது... சின்னம்மா சிறையில் இருக்காங்க... சட்டசபையிலே பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நிலையில இருக்கோம். அதனால எந்தக் கொண்டாட்டமும் வேணாம்’’ என சீனியர்கள் உத்தரவிட, வாங்கி வைத்த பட்டாசுகள் வெடிக்கப்படவில்லை.

அ.தி.மு.க நிர்வாகி ஒருவரிடம் பேசினோம், “ரிசார்ட்ஸுக்கு வந்தவுடன் ஆரம்பத்தில், எம்.எல்.ஏ-க்களுக்கு பணம் கொடுக்கப் போவதாகப் பேசிக்கொண்டார்கள். ஒரு குறிப்பிட்டத் தொகை சொல்லப்பட்டது. பின்னர், அந்தத் தொகை உயர்ந்தது. ‘அந்தந்த ஏரியா அமைச்சர்கள் மூலம் இது வழங்கப்படும்’ எனச் சொல்லப்பட்டது. ‘அமைச்சர்கள் எடுத்துக் கொள்வார்கள். கொடுக்க மாட்டார்கள்’ எனச் சிலர் மனக்கசப்பு அடைந்தனர். நிலைமைக் கட்டுக்குள் வரவில்லை. அப்போது சசிகலாவே இது சம்பந்தமாக சில வாக்குறுதிகள் கொடுத்தார். இடையில் தீர்ப்பு வந்து, சட்டமன்றக் கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, சில எம்.எல்.ஏ-க்கள் முகத்தில் தெளிவில்லை. ‘ஏற்கெனவே சில எம்.எல்.ஏ-க்கள் ஓ.பி.எஸ் பக்கம் செல்கிறார்கள். இந்த எண்ணிக்கை அதிகமாகி, சட்டசபையில் வாக்கெடுப்பின்போது கவிழ்த்துவிடுவார்களோ’ என்ற அச்சம் ஏற்பட்டது. பிறகு, எம்.எல்.ஏ-க்களுக்கு பெரிய தொகை தருவதாக வாக்குறுதி தரப்பட்டது. ‘மொத்தமாக இப்போது தரப்படாது. எல்லாம் சுபமாக முடிந்ததும், குறிப்பிட்ட இடைவெளியில் சரியாக வந்து சேர்ந்துவிடும்’ எனச் சொல்லியிருக் கிறார்கள். ஆரம்பத் தவணை தந்தாயிற்று” என்றார் அவர்.

p18.jpg

சட்டசபை வாக்கெடுப்புக்கு முந்தின இரவு, ‘சட்டசபையில் எப்படி நடந்துகொள்ள வேண்டும்’ என மூன்று மணி நேரத்துக்கும் மேலாக எம்.எல்.ஏ-க்களுக்கு வகுப்பு எடுக்கப்பட்டது. அ.தி.மு.க கொறடா ராஜேந்திரன், ராஜ்ய சபா எம்.பி நவநீதகிருஷ்ணன் உள்ளிட்டோர் விளக்கிப் பேசினார்கள். டி.டி.வி.தினகரன் கடைசியாகத்தான் உள்ளே வந்தார். “என்ன நடந்தாலும் சட்டசபையில் அமைதியாக இருக்க வேண்டும். யாரும் விதிமுறைகளை மீறி நடந்துகொள்ளக் கூடாது. கட்சி மாறி வாக்களித்தால், உங்கள் எம்.எல்.ஏ பதவிதான் பறிபோகும். இப்போது ஆட்சியமைக்க முடியாவிட்டால், பிறகு எப்போதுமே நமது ஆட்சி வராது. சின்னம்மா விரைவில் வெளியே வந்துவிடுவார். அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கின்றன’’ எனச் சொல்லப்பட்டது.

p18a.jpg

அதிகாலை நான்கு மணிக்கே ரிசார்ட்ஸில் அலாரம் அலறியடித்தது. அங்கிருந்த அ.தி.மு.க-வினர்,  எம்.எல்.ஏ-க்களை வழியனுப்ப ஆட்களைத் தயார் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அதற்காக, வாயலூரிலிருந்த அரசுப் பள்ளி மாணவர் விடுதிக்குச் சென்ற அவர்கள், ‘‘எம்.எல்.ஏ-க்களை வழியனுப்ப மாணவர்களை அனுப்புங்க’’ என விடுதி நிர்வாகி தேவகுமாரிடம் கேட்டுள்ளனர். அவர் மறுத்தார். அதற்கு அ.தி.மு.க-வினர், “எங்க ஆட்சிதான் வரும்; உங்கள்மீது கிரிமினல் புகார் வரும்; நிர்வாக ரீதியான பிரச்னைகள் வரும்; தேவையில்லாம அரசைப் பகைச்சிக்காதீங்க” என மிரட்டினர். வேறு வழியின்றி  60 மாணவ மாணவிகளை அவசரமாக எழுப்பி, விடியற்காலையில் சில்லென தண்ணீரை ஊற்றிக் குளிக்கவைத்து ரெடி செய்து, அழைத்து வந்தனர். இரட்டை இலை சின்னத்தைக் கையில் ஏந்தியவாறு அவர்களை ரிசார்ட்ஸ் வாசலில் நிறுத்தினர். இதைப் பார்த்த மூத்த நிர்வாகி ஒருவர் பதறிவிட்டார். “மீடியாவினர் கண்ணில் பட்டால் பிரச்னை ஆகிவிடும். ஏற்கெனவே இருக்கிற பிரச்னைகள் போதாதா? உடனே அவர்களைக் கிளம்பச் சொல்லுங்கள்” எனத் திருப்பியனுப்பினார்.

அமைச்சர்கள் ஒவ்வொருவரும் தங்கள் காரில் மூன்று, நான்கு எம்.எல்.ஏ-க்களை ஏற்றிக் கொண்டனர். அமைச்சர்களுக்கான போலீஸ் பாதுகாப்பு வாகனங்களும் உடன் சென்றன. காலை எட்டேகால் மணிக்கெல்லாம் ரிசார்ட்ஸை விட்டு அனைவரும் வெளியே சென்றுவிட்டனர். பாதுகாப்புக்கு இருந்த ஒன்றிரண்டு போலீஸாரும் மதியம் ஒரு மணிக்குக் கிளம்பிவிட்டார்கள். அதன்பிறகு, ‘பராமரிப்புப் பணிக்காக ரிசார்ட்ஸ் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது’ என வாயிலில் எழுதி ஒட்டினர், ரிசார்ட்ஸ் நிர்வாகத்தினர். மெயின் கேட்டை இழுத்து மூடிய செக்யூரிட்டி ஒருவர், ‘‘அப்பாடா... இப்பதான் நிம்மதியா இருக்கு! இனி, அவங்களை இந்தப் பக்கம் அனுமதிக்கக்கூடாது’’ என்றார்.

பல தொகுதி மக்களின் மனநிலையும் அதேதான்!

  http://www.vikatan.com/juniorvikata

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.