Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சேகர் ரெட்டி... எடப்பாடி... ஊழல் டீலிங்! - ‘அறப்போர்’ அதிரடி!

Featured Replies

சேகர் ரெட்டி... எடப்பாடி... ஊழல் டீலிங்! - ‘அறப்போர்’ அதிரடி!

 

சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறைத்தண்டனைப் பெற்ற சூழலில், அ.தி.மு.க-வின் சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார், எடப்பாடி பழனிசாமி. அவர் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்ததாக அறிவிக்கப்பட்ட சூழலில், அவர்மீது அதிரடி ஊழல் புகார் ஒன்று பரபரப்பாக வலம் வரத் தொடங்கியுள்ளது.

p16.jpg

கான்ட்ராக்டர் சேகர் ரெட்டி கைது செய்யப்பட்டவுடன், அப்போது தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகன ராவ், ஊழல் குற்றச்சாட்டில் சிக்கினார். இதைத் தொடர்ந்து ராவுக்குப் பின்னணியில் இருந்து செயல்பட்டவர்கள் பற்றி தகவல் வெளியானது. அதோடு, சேகர் ரெட்டிக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இருந்த தொடர்பு உள்ளிட்ட விவகாரங்கள் அப்போது சலசலப்புக்கு உள்ளாகின.

இந்த நிலையில், தற்போது எடப்பாடி பழனிசாமிக்கும் சேகர் ரெட்டிக்கும் தொடர்பு இருப்பதாக, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது அறப்போர் இயக்கம். ‘சாதாரண குடும்பத்தில் பிறந்த எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தின் முதலமைச்சராக பதவி ஏற்றிருப்பது மிகப் பெரிய விஷயம்’ எனத் தொடங்குகிறது, அந்த வீடியோ. தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்தபோது அவருக்கும் சேகர் ரெட்டிக்குமானத் தொடர்பையும் அது விவரிக்கிறது.

p16a.jpg‘சேகர் ரெட்டியின் வீட்டில் கைப்பற்றப்பட்ட 174 கோடி ரூபாய் பணமும், 127 கிலோ தங்கமும் முக்கியப் புள்ளிகளின் பணமாகக்கூட இருக்கலாம்’ என அப்போது சந்தேகம் எழுந்தது என்கிறது வீடியோ. ஜெ.எஸ்.ஆர். இன்ஃப்ரா புராஜெக்ட்ஸ் ப்ரைவேட் லிமிடெட், வி டாப் இன்ஃப்ராடெக் ப்ரைவேட் லிமிடெட், ஸ்ரீபாலாஜி டோல்வேஸ் (மதுரை) ப்ரைவேட் லிமிடெட் உள்ளிட்ட ஒன்பது நிறுவனங்களுக்கு பங்குதாரராக சேகர் ரெட்டி உள்ளார். இதில் ஸ்ரீபாலாஜி டோல்வேஸ் ப்ரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் சுப்ரமணியம் பழனிசாமி என்பவர் பங்குதாரராக உள்ளார். இந்த சுப்ரமணியம் பழனிசாமி மகள் திவ்யாவைத்தான் எடப்பாடி பழனிசாமி, தன் மகனுக்கு மணமுடித்து வைத்துள்ளார். இதனால், இவர்கள் இருவரும் சம்பந்தி உறவு முறையில் நெருங்கியவர்கள் ஆகிறார்கள்’ என்று அந்த வீடியோவில் சொல்லப்பட்டுள்ளது.

மேலும், எடப்பாடி பழனிசாமி பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்தபோது, சேகர் ரெட்டிக்கு மணல் எடுப்பதற்கான ஒப்பந்தம் கொடுக்கிறார். அவ்வாறு ஒப்பந்தம் பெறும் சேகர் ரெட்டியின் நிறுவனத்தில் பங்குதாரராக இருப்பவர்தான் சுப்ரமணியம் பழனிசாமி. அப்படிப் பார்த்தால், ‘எடப்பாடி பழனிசாமி தன்னுடைய உறவினருக்கு ஆதரவாகச் செயல் பட்டாரா? இதன் மூலம் அந்த நிறுவனங்களுக்கு ஏதேனும் ஆதாயம் அவரால் கிடைத்ததா?’ என்ற கேள்விகளையும் முன் வைக்கிறது அந்த வீடியோ.

இது மற்றொரு தகவலையும் வெளியிட்டுள்ளது. சமீபத்திய பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது 5.7 கோடி ரூபாய்க்கு, புதிய ரூபாய் நோட்டுகளை மாற்றிய வழக்கில் சந்திரகாந்த் ராமலிங்கம் என்பவரை சி.பி.ஐ கைதுசெய்தது. இவர், எடப்பாடி பழனிசாமி மகனுடைய சகலை ஆவார். ‘சேகர் ரெட்டி மற்றும் சந்திரகாந்த் இருவரும் வைத்துள்ள பணத்துக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் என்ன தொடர்பு என்பது குறித்து வருமானவரித் துறையும் சி.பி.ஐ-யும் விசாரித்து வருவதாக’ அந்த வீடியோ முடிவடைகிறது.

p16b.jpg

இதுகுறித்து அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் வெங்கடேசனிடம் பேசினோம். ‘‘எடப்பாடி பழனிசாமி அமைச்சராக இருந்தபோது சேகர் ரெட்டிக்கு, அவர் மணல் கான்ட்ராக்ட்டுகளை வழங்கியிருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. சேகர் ரெட்டி சட்டவிரோதமாக மணல் அள்ளுவதற்குப் பதவியில் இருந்தவர்கள் துணைபோயிருக்கிறார்கள். அதுகுறித்த தகவலைத் திரட்டிக்கொண்டிருக்கிறோம். வருமானவரித் துறையிடம் கணக்குக் காட்டாமல் சட்ட விரோதமாக வருமானம் ஈட்டியுள்ளார் சேகர் ரெட்டி. கணக்குக் காட்டப்படாமல், சேகர் ரெட்டியிடம் இருக்கும் பணம் யாருடையது? இந்தப் பணத்தில் முக்கியப் புள்ளிகளுக்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தெல்லாம் விரிவாக விசாரணை நடத்த வேண்டும். ஒரு பக்கம் பொதுப்பணித் துறை அமைச்சராக எடப்பாடி பழனிசாமி இருந்திருக்கிறார். மற்றொரு புறம் சேகர் ரெட்டியின் நிறுவனத்தில் அவருடைய சம்பந்தி பங்குதாரராக உள்ளார். இந்த இரண்டு விஷயங்களிலும் பல உண்மைகள் மறைந்திருக்கக் கூடும் என்று நினைக்கிறோம். எனவே, சி.பி.ஐ விரைவில்  எடப்பாடி மீதான விசாரணையைத் தீவிரப்படுத்தும் என்று நம்புகிறோம்’’ என்றார். 

எடப்பாடிக்கு இனி ஏழரையைக் கூட்டப்போவது அரசியல் எதிரிகளா, அல்லது ஊழல் நண்பனா? காலம்தான் தீர்மானிக்கும்.
 

http://www.vikatan.com/juniorvikatan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.