Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சசிகலாவுக்கு பக்கத்து அறை 'சயனைடு' மல்லிகா, வேறு சிறைக்கு ஏன் மாற்றப்பட்டார்?

Featured Replies

சசிகலாவுக்கு பக்கத்து அறை 'சயனைடு' மல்லிகா, வேறு சிறைக்கு ஏன் மாற்றப்பட்டார்?

 

சசிகலா, சயனைடு மல்லிகா நட்பு

சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா அடைக்கப்பட்டுள்ளார். இதே சிறையில்தான் 'சயனைடு ' மல்லிகா என்ற பெண் கொலையாளியும் அடைக்கப்பட்டிருந்தார்.   பரப்பன அக்ரஹாரா சிறையில் முதல் நாள் சசிகலா அடைக்கப்பட்டபோது, அடுத்த அறையில் சயனைடு மல்லிகா இருந்தார். 

சயனைடு கலந்த தண்ணீரைக் கொடுத்து பெண்களைக் கொலை செய்து நகைகளை அபேஸ் செய்வது மல்லிகாவின் ஸ்டைல். இதனால் மல்லிகா என்ற பெயருடன் 'சயனைடு' ஒட்டிக் கொண்டது. கடந்த 1999-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு வரை 6 பெண்களை 'சயனைடு' மல்லிகா கொன்றுள்ளார். பணக்காரப் பெண்களைக் குறி வைத்துப் பழகி, அவர்களைக் கொலை செய்வார். கடந்த 2008-ம் ஆண்டு மல்லிகா போலீசாரிடம் பிடிபட்டார். நாட்டிலேயே  தொடர்ச்சியான கொலையில் ஈடுபட்டுப் பிடிபட்ட முதல் பெண் கொலையாளி (சீரியல் கில்லர்) இவர்தான். முதலில் இவருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. பின்னர் அது ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. 

கடந்த முறை சசிகலா-ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டபோதும் மல்லிகா சிறையில்தான் இருந்தார். அப்போது ஜெயலலிதாவைச் சந்திக்க சயனைடு மல்லிகா ஆசைப்பட்டார். ஆனால், சிறைத்துறை அதிகாரிகள் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டனர். இந்த நிலையில், சசிகலா மீண்டும் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். இந்த முறை, சசிகலாவுக்கும் சயனைடு மல்லிகாவுக்கும் நல்ல நட்பு உருவாகியுள்ளது. இருவரும் சிறையில்  அடிக்கடி  பேசிக் கொண்டிருந்துள்ளனர். உணவு வேளையில்கூட சசிகலாவை சயனைடு மல்லிகா கியூவில் நிற்க அனுமதிப்பது இல்லை. சசிகலாவுக்குத் தேவையான உணவு, காபி போன்றவற்றை அவருக்குப் பதிலாக தானே கியூவில் நின்று வாங்கி கொடுப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.  

சயனைடு மல்லிகா

இதனைக் கண்ட சிறை அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து, சயனைடு மல்லிகாவை வேறு சிறைக்கு மாற்ற சிறை அதிகாரிகள் முடிவெடுத்தனர். அந்த முடிவும் அதிரடியாக எடுக்கப்பட்டது. பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து ஒரே நாள் இரவில் சயனைடு மல்லிகா வேறு சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். சிறை மாற்றம் குறித்து,சயனைடு மல்லிகாவுக்கு எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை. சத்தமில்லாமல் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து சயனைடு மல்லிகா அப்புறப்படுத்தப்பட்டுள்ளார். 

அண்மையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘சசிலாவை தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும்’ எனக் கோரியிருந்தார். ’பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்குப் பாதுகாப்பில்லை’ எனவும் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். ஆனால், 'சயனைடு’ மல்லிகா மாற்றப்பட்டதற்கும் தமிழக முதல்வரின் கோரிக்கைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என சிறை வட்டாரங்கள் கூறுகின்றன.

இப்போது சசிகலா அடைக்கப்பட்டிருக்கும் அறையில், முன்பு கொலைக் குற்றத்தில் ஈடுபட்ட பெண் வழக்கறிஞர் சுபா நாராயணன் என்பவர்  ஒரு வருடத்துக்கும் மேலாக அடைக்கப்பட்டிருந்தார். சுபா நாராயணன் தனது ஆண் தோழர்களுடன் இணைந்து வருங்காலக் கணவரைக் கொலை செய்த வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டிருந்தார். அவரை வேறு அறைக்கு மாற்றிவிட்டு, அந்த அறையை சசிகலாவுக்கு ஒதுக்கியிருக்கிறார்கள்.

தற்போது  பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து மல்லிகாவும் வேறு சிறைக்கு மாற்றப்பட்டுள்ளதால், சிறை ஊழியர்கள் நிம்மதி அடைந்துள்ளனராம். அவர் பெலகாவியில் உள்ள சிறைக்கு மாட்டப்பட்டிருக்கிறார்.

http://www.vikatan.com/news/tamilnadu/81682-serial-killer-cyanide-mallika-shifted-out-from-bangalore-jail.html

  • தொடங்கியவர்

பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா? - சயனைடு மல்லிகா பெல்காம் சிறைக்கு மாற்றம்

 

 
 
 
சயனைடு மல்லிகா
சயனைடு மல்லிகா
 
 

பெங்களூரு சிறையில் அடைக்கப் பட்டுள்ள அதிமுக பொதுச்செய லாளர் சசிகலாவுக்கு அச்சுறுத் தலாக இருந்ததாக கூறப்படும் சயனைடு மல்லிகா பெல்காம் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு வில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் கொலை வழக்கில் கைதான பிரபல சீரியல் கில்லர் ‘சயனைடு மல்லிகா' சசிகலாவின் பக்கத்து அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார். அவர் சசிகலாவுடன் பேசுவதற்கு முயற்சித்ததாக கூறப்படுகிறது. அவரால் சசிகலாவின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்றும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதையடுத்து சசிகலாவின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, சயனைடு மல்லிகாவை பெல்காமில் உள்ள இண்டல்கா சிறைக்கு கர்நாடக சிறைத்துறை மாற்றியுள்ளது.

இந்தியாவின் முதல் பெண் ‘சீரியல் கில்லரான’ சயனைடு மல்லிகாவின் இயற்பெயர் கெம்பம்மா (52). பெங்களூருவில் உள்ள கலாசிபாளையத்தைச் சேர்ந்தவர். தான் நடத்திய சீட்டு கம்பெனி தொழிலில் நஷ்டம் ஏற் பட்டதால் கணவரை விட்டு பிரிந் துள்ளார். மேலும் முதலீட்டாளர் களுக்குப் பயந்து கோயில்களில் தஞ்சமடைந்து மறைந்து வாழ்ந் துள்ளார்.

ஒரு கட்டத்தில் சாமியார் போல காவி உடை அணிந்து வலம் வந்த மல்லிகாவுக்கு அதிக அளவில் பெண் பக்தர்கள் திரண்டுள்ளனர். அதில் பணக்கார பெண்களை குறிவைத்த மல்லிகா அவர்களுடன் நெருக்கமாக பழகி, வீடு வரை சென்றுள்ளார். அங்கு சிறப்பு பூஜை என்ற பெயரில் நீரில் சயனைடு மாத்திரைகளைக் கலந்து கொடுத்து பக்தர்களைக் கொலை செய்துள்ளார். பின்னர் அந்த வீட்டில் இருந்த நகை, பணம் ஆகிய வற்றையும் கொள்ளையடித்து விட்டு, தனது இடத்தை வேறு கோயிலுக்கு மாற்றி விடுவார்.

இப்படி சயனைடு கலந்து கொடுத்து பெங்களூருவில் மட்டும் 6 பெண்களை அவர் கொலை செய்து நகை, பணத்தைக் கொள்ளையடித்துள்ளார்.

கடைசியாக பீனியா பகுதியில் மல்லிகா என்ற பெயரில் அறிமுக மாகி ஒரு பெண்ணைக் கொலை செய்துள்ளார். இதன்பிறகே இவருக்கு ‘சயனைடு மல்லிகா’ என்ற பெயர் வந்தது. 2006-ல் போலீஸாரிடம் சிக்கிய மல்லிகா வுக்கு 2010-ல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்ததால் 2012-ல் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. அதன்பின் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.

ஜெயலலிதாவின் ரசிகை

கடந்த 2014-ம் ஆண்டு ஜெயலலிதா பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டபோது, சயனைடு மல்லிகா அவரைச் சந்திக்க விரும்பியுள்ளார். தான் ஜெயலலிதாவின் தீவிர ரசிகை என சிறைத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்து, அவரைச் சந்திக்க பல்வேறு முயற்சிகளை எடுத்துள் ளார். ஆனால் கடைசி வரை ஜெயலலிதாவைச் சந்திக்க முடியவில்லை.

தற்போது சசிகலா பக்கத்து அறையில் அடைக்கப்பட்டதால், அவரைச் சந்திக்க சயனைடு மல்லிகா விரும்பியுள்ளார். குறிப்பாக சசிகலா உணவு சாப்பிட வரும்போது, அவருக்கு தேவையான உணவை சயனைடு மல்லிகா வாங்கி கொடுத்துள்ளார். மேலும் சசிகலாவுடன் நெருங்கி பழகவும் சந்தர்ப்பம் தேடியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சிறைத்துறை அதிகாரிகள் சசிகலா வின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, மல்லிகாவை பெல்காம் சிறைக்கு மாற்றியுள்ளனர்.

http://tamil.thehindu.com/india/பரப்பன-அக்ரஹாரா-சிறையில்-சசிகலா-பாதுகாப்புக்கு-அச்சுறுத்தலா-சயனைடு-மல்லிகா-பெல்காம்-சிறைக்கு-மாற்றம்/article9556561.ece?homepage=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.