Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'கைதி'க்கு கட்சியினர் மத்தியில் கடும் எதிர்ப்பு : ஜெ., பிறந்த நாள் பேனரில் சசி படத்துக்கு 'தடா'

Featured Replies

'கைதி'க்கு கட்சியினர் மத்தியில் கடும் எதிர்ப்பு :
ஜெ., பிறந்த நாள் பேனரில் சசி படத்துக்கு 'தடா'
 
 
 

பெங்களூரு சிறை கைதி சசிகலாவுக்கு, அ.தி.மு.க.,வினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தொண்டர்களை திருப்திபடுத் தும் வகையில், ஜெ., பிறந்த நாள் பேனர்களில், சசிகலா படமின்றி, அச்சிடப்பட்டுள்ளது.

 

Tamil_News_large_171710420170223231044_318_219.jpg

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவை அடுத்து, அ.தி.மு.க., பொது செயலர் பதவியை சசிகலா கைப்பற்றினார். இதற்கு, கட்சியில் மட்டுமின்றி, பொதுமக்கள் மத்தியிலும் கடும் எதிர்ப்பு அதிகரித்தது. குறிப்பாக, பெண்கள், ஜெயலலிதாவின் மரணத்துடன் சசிகலாவை ஒப்பிட்டு பேசத் துவங்கினர்.
 

'சதி'கலா


இந்நிலையில், சொத்து குவிப்பு வழக்கில், சசிகலாவுக்கு, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டு, பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார். ஆயினும், பன்னீர்செல்வத்தை முதல்வர் பதவிக்கு வர விடாமல் தடுத்ததோடு, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களை கூவத்துாரில் அடைத்து வைத்து, தங்களது ஆதரவாளர், இடைப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியதால், சசிகலா மீதான அதிருப்தி அதிகரித்தது.

இதனால், தொகுதிக்குள் வரும் எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்களுக்கு, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சேலத்தில், இடைப் பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் நடத்திய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், சசிகலா வுக்கு பகிரங்கமாக எதிர்ப்பு கிளம்பியது. இந் நிலையில், இன்று சேலத்தில், ஜெயலலிதா வின் பிறந்த நாளை முன்னிட்டு, பேரணி, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடக்கிறது.

பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில், எம்.எல்.ஏ.,க்கள், மண்டல, பகுதி செயலர்கள் பெயரில், நகரில் பல இடங்களில், பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
 

கொந்தளிப்பு


இந்த பேனர்களில், சசிகலா படம் தவிர்க்கப் பட்டுள்ளதோடு, எம்.ஜி.ஆர்., அண்ணாதுரை படங்கள் சிறியதாகவும், ஜெயலலிதா, முதல் வர் இடைப்பாடி பழனிசாமி படங்கள் பெரிய அளவிலும் இடம் பெற்றுள்ளன. இடைப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களின் இந்த அதிரடி நடவடிக்கையால், ஆடிப்போன சசிகலா ஆதரவாளர்கள், கொந்தளிக்கின்றனர்.
 

சசி பெயர் தவிர்ப்பு


திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை, எம்.எல்.ஏ.,க்கள், தங்கள் ஆதரவை இடைப் பாடிக்கு தெரிவித்தாலும், அடிமட்டத் தொண்டர் களும், வார்டு கிளை நிர்வாகிகளும் சசிகலாவின் தலைமைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

முன்னாள் முதல்வர் ஜெ.,யின், 69வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. நேற்று முன் தினம் நடத்தப்பட்ட, விழா ஆலோசனை கூட்டத்தில், சசிகலாவுக்கு இருந்த எதிர்ப்பை கண்டு, மாவட்ட செயலர் தரப்பினர் கடும் அதிர்ச்சிஅடைந்தனர்.

இந்நிலையில், ஜெ., பிறந்த நாளை முன்னிட்டு, மாநகர் மாவட்ட கட்சி சார்பில் வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனர்களில், சசிகலா பெயர் மட்டும் கிழிக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த நிர்வாகிகள், சசிகலா பெயரில்லாமல், எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெ., படங்களுடன் மட்டுமே பேனர்களை வைத்துள்ளனர்.

'விளம்பரங்களில் சசிகலாவை தவிர்த்த மாவட்ட செயலர் உள்ளிட்ட நிர்வாகிகள், விரைவில் சசிகலா தலைமையை புறக்கணித்து, பன்னீர்செல்வம் பக்கம் வருவர் என நம்பிக்கை உள்ளதாக, பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்தனர்.
 

கெஞ்சும் அமைச்சர்


ஜெயலலிதா பிறந்த நாள், இன்று கொண்டாடப் படுகிறது. கரூரில் அவரின் பிறந்த நாளை பிரம்மாண்டமாக கொண்டாட, தீபா, பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.இதை, முறியடிக்கும் வகையில், கரூர் மாவட்ட, அ.தி.மு.க., செயலர் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வார்டு, பஞ்சாயத்து தோறும் பணம் கொடுத்து, ஜெ., பிறந்த நாளை கொண்டாட, கெஞ்சி வருகிறார்.
 

இது குறித்து, அ.தி.மு.க.,வினர் கூறியதாவது:


மாவட்டம் முழுவதும், ஜெ., பிறந்த நாளை, அ.தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கொண்டாடி வந்தனர். ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் உற்சாகம் குறையாமல்
கொண்டாடினர்.

தீபா, பன்னீர்செல்வம் ஆதர வாளர்கள், ஜெ., பிறந்த நாளை சிறப்புடன் கொண்டாட ஏற்பாடுகள் செய்துள்ளனர். ஆனால், கைதி சசிகலா தரப்பு, அ.தி.மு.க.,வினர் ஜெ., பிறந்த நாளை கொண்டாட ஆர்வம் காட்டவில்லை. இதையறிந்த அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது தரப்பினர் கலக்கமடைந்தனர்.

இதையடுத்து, இரண்டு நகராட்சி, 11 பேரூராட்சி களில் உள்ள, 233 வார்டுகள், எட்டு ஊராட்சி ஒன்றியத்தின், 157 பஞ்சாயத்துகளுக்கு தலா, 5,000 ரூபாய் பணம் வழங்கப்பட்டுள்ளது. இந்த பணத்தை வைத்து, ஜெ., பிறந்த நாளை

சிறப்புடன் கொண்டாட அமைச்சர் தரப்பினர் கெஞ்சி வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
 

ஓ.பி.எஸ்., பேனர்கள் கிழிப்பு


சசிகலா குடும்பத்தினர் பிடியில் இருந்து கட்சியை மீட்கும் முயற்சியாக, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், ஜெ.,யின் அண்ணன் மகள் தீபா இருவரும், சுற்று பயணம் தொடங்க போவதாக அறிவித்துள்ளனர்.இதற்காக, தமிழகம் முழுவதும் சசிகலாவின் எதிர்ப்பாளர்கள், பன்னீர்செல்வம் மற்றும் தீபாவிற்கு ஆதரவாக பிளக்ஸ் பேனர், போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர்.

தஞ்சாவூரில், ஓ.பி.எஸ்., தீபா பேரவையினர் வைத்துள்ள பேனர்களை, இரவில் சசிகலா ஆதர வாளர்கள் கிழித்துள்ளனர்.மேலும், தஞ்சாவூர் முழுவதும் சசிகலாவிற்கு ஆதரவு இருப்பது போல, போலியாக பேனர்களை வைத்தும், பொது மக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.
 

தீபா பேரவை நிர்வாகி ஒருவர் கூறியதாவது:


சசிகலாவின் சொந்த ஊர் தஞ்சாவூர் என்பதால், சசிகலாவின் உறவினர்கள், ஆதரவாளர்கள், மறைமுகமாக தங்களது அராஜகத்தை தொடங்கி விட்டனர். தற்போது, எங்கள் பேரவை சார்பிலும், ஓ.பி.எஸ்.,சுக்கு ஆதரவாகவும் வைக்கப்பட்ட பேனர்களை, சசிகலா ஆதரவாளர்கள் சிலர் கிழித்து விட்டனர். ஆனால் போலீஸ் தரப்பில், மர்ம நபர்கள் கிழித்துள்ளதாக, வழக்கு பதிவு செய்கின்றனர். இவ்வாறு அவர்கூறினார்.
 

'பல்டி' ரெட்டி


ஓசூர் நகராட்சி தலைவராகவும், ஒன்றிய செயலராக வும் இருந்த பாலகிருஷ்ண ரெட்டி, தம்பிதுரையின் செல்வாக்கை பயன்படுத்தி, ஓசூர் தொகுதியில், 'சீட்' பெற்று வெற்றி பெற்றார்.முதலில் அறிவிக்கப்பட்ட அமைச்சரவையில் இடம் கிடைக்காத நிலையில், அமைச்சரவை விரிவாக்கத்தில், கால்நடை பராமரிப்பு துறை அமைச்சராக, ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டார்.

'ஜெயலலிதாவின் உண்மை விசுவாசி' எனக் கூறி வந்த அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி, ஜெயலலிதா மறைவுக்கு பின், சசிகலா பொது செயலராக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், முதல் ஆளாக ஆதரவு தெரிவித்தார்.ஓசூர் தொகுதியில் உள்ள முனுசாமி ஆதரவாளர்கள் மூலம், எம்.எல்.ஏ.,வாக வெற்றி பெற்ற பாலகிருஷ்ண ரெட்டி, சசிகலாவிற்கு ஆதரவு தெரிவித்தது, பன்னீர்செல்வம் மற்றும் தீபா ஆதரவாளர்களுக்கு பிடிக்கவில்லை.

அமைச்சர் பதவியை தக்க வைக்க, சசிகலா அணியில் பாலகிருஷ்ண ரெட்டி சேர்ந்து விட்டதாக, 'வாட்ஸ் ஆப்' மூலம் பொதுமக்கள், அவரை வறுத்தெடுத்தனர்.இந்நிலையில், இடைப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக, அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி ஓட்டளித்ததால், எதிர்ப்பு மேலும் அதிகரித்தது. இதனால் தான், 18ம் தேதி இரவு ஓசூர் வந்த அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி, மக்கள் எதிர்ப்புக்கு பயந்து, மறுநாள் காலை, அ.தி.மு.க., அலுவலகத்திற்கு வரவில்லை. அரசு சைரன் காரை கூட பயன்படுத்த வில்லை.
 

கறுப்பு கொடி


பாலகிருஷ்ண ரெட்டி எங்கு இருக்கிறார் என, கட்சி தொண்டர்களுக்கு கூட தெரியவில்லை. நேற்று மதியம், 2:00 மணிக்கு, ஓசூர் - பாகலுார் சாலையில் உள்ள ஒன்றிய, அ.தி.மு.க., அலுவலகம் மற்றும் ஓசூர் தாலுகா அலுவலகம் அருகே உள்ள, எம்.எல்.ஏ., அலுவலகத்தில், பாலகிருஷ்ண ரெட்டியின் எதிர்ப்பாளர்கள், கறுப்பு கொடியை கட்டி பரபரப்பை ஏற்படுத்தினர்.

அமைச்சரின் ஆதரவாளர்கள், உடனடியாக கறுப்பு கொடிகளை அகற்றினர். ஓசூர் தொகுதியில் பாலகிருஷ்ண ரெட்டிக்கு எதிர்ப்பு வலுத்து வருவ தால், அவரது தரப்பினர் கவலையில் உள்ளனர். கறுப்பு கொடி கட்டியவர்கள் குறித்து, ஓசூர் ஹட்கோ போலீசார் விசாரித்து வருகின்றனர்.கர்நாடக சிறை 'இன்சார்ஜ்'ஓசூர் நகர, தி.மு.க., செயலர் மாதேஸ்வரன் கூறியதாவது:

ஓசூர் தொகுதி, எம்.எல்.ஏ.,வும், அமைச்சருமான பாலகிருஷ்ண ரெட்டியை தொகுதி பக்கமே பார்க்க முடியவில்லை. அவர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் முகாமிட்டுள்ளார். அங்கு சசிகலாவிற்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க, சிறை துறை அதிகாரிகளை சரிக்கட்டும் பணியில் ஈடுபட்டு உள்ளார். ஆனால், தொகுதி பக்கம் வந்து மக்களை சந்திக்கவில்லை.

ஓசூர் தொகுதியில், தண்ணீர் பிரச்னை, யானைகளால் பயிர்கள் சேதம், சாலை வசதி இன்மை, அரசு கலை கல்லுாரி திறக்கப்படாதது என பல்வேறு பிரச்னைகள் உள்ளன. இதையெல்லாம் கண்டு கொள்ளாமல், தமிழக அமைச்சரான இவர், கர்நாடக சிறைக்கு, 'இன்சார்ஜ்' போல செயல்பட்டு வருகிறார். மக்கள் வெறுக்கும் அமைச்சராக பாலகிருஷ்ண ரெட்டி உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
 

'படம் காட்ட' எதிர்ப்பு


தர்மபுரி மாவட்ட, தி.மு.க., செயலரும், எம்.எல்.ஏ., வுமான தடங்கம் சுப்பிரமணி கூறியதாவது:
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, சிறை சென்றுள்ள சசிகலாவுக்கு, அதிகாரிகள் முக்கியத் துவம் அளிக்கின்றனர். தர்மபுரி உட்பட தமிழகம் முழுவதும் உள்ள கலெக்டர் அலுவல கங்களில், ஜெயலலிதாவின் இறுதிச் சடங்கில், சசிகலா இருப்பது போன்ற காட்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து, ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

ஜெயலலிதாவின் மரணம் குறித்து சந்தேகம் எழுந் துள்ள நிலையில், சிறையில் உள்ள குற்ற வாளி சசிகலாவுக்கு,முக்கியத்துவம் அளிக்கும் வகையில், அவர் உள்ள காட்சிகள், கலெக்டர் அலுவலகத்தில் ஒளிபரப்புவது கண்டிக்கத்தக்கது.

சசிகலா கும்பலின் கையில் சிக்கியுள்ள தற்போதைய ஆட்சியின் படி, இந்திய ஆட்சி பணி யில் உள்ள அதிகாரிகள் செயல்பட்டால், பின் விளைவுகளை சட்டப்படி சந்திக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
 

பா.ம.க., முன்னாள், எம்.பி., செந்தில் கூறியதாவது:


சொத்து குவிப்பு வழக்கில் மறைந்த முதல்வர்

 

ஜெயலலிதா மற்றும் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரை குற்றவாளிகளாக, உச்ச நீதி மன்றம் அறிவித்துள்ளது.ஜெயலலிதா மறைந்த போதும், அவரும் குற்றவாளியாக உள்ள நிலையில், அரசு அலுவலகங்களில் உள்ள அவரது படம் மற்றும் அவரது பெயரில் செயல் படுத்தப்படும் திட்டங்களை எதிர்த்து, வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

ஆனால், தர்மபுரி உட்பட தமிழகத்தில் உள்ள அனைத்து கலெக்டர் அலுவலகங்களிலும், குற்றவாளி சசிகலாவுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் படம் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதை தடுக்க, மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை திரும்ப பெரும் சட்டத்தை இந்தியாவில் கொண்டு வரவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
 

துரத்தும் மக்கள்


வேலுார் மாவட்டம், கே.வி.குப்பம் சட்டசபை தொகுதி, வேப்பனேரி ஊராட்சி அரசு மேல் நிலைப்பள்ளியில், இலவச சைக்கிள் வழங்கும் விழா, நேற்று காலை, 10:30 மணிக்கு நடந்தது. அ.தி.மு.க.,- - எம்.எல்.ஏ., லோகநாதன் சைக்கிள் களை வழங்கினார்.பின் அவர், கே.வி.குப்பம் வழியாக குடியாத்தம் செல்ல திட்டமிட்டி ருந்தார். இதையறிந்த ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் சரவணன், தீபா பேரவை யினர் மற்றும் பொதுமக்கள், 100க்கும் மேற் பட்டோர், எம்.எல்.ஏ.,வுக்கு கறுப்புக் கொடி காட்ட காத்திருந்தனர்.

காலை, 11:30 மணிக்கு, அந்த வழியாக வந்த, எம்.எல்.ஏ., லோகநாதன், தகவல் அறிந்து அதிர்ச்சி அடைந்தார். பின், வந்த வழியாகவே திரும்பி, காட்பாடிக்கு சென்று விட்டார். இதை யறிந்த தீபா பேரவையினர் மற்றும் பொது மக்கள், எம்.எல்.ஏ.,வை கண்டித்து, சாலை மறியல் நடத்தினர்.
 

இது குறித்து, அவர்கள் கூறியதாவது:


தொகுதி பக்கமே, எம்.எல்.ஏ., வருவதில்லை. கோடை காலம் தொடங்கும் நிலையில், இப்போதே குடிநீர் பிரச்னை தலைவிரித்தாடு கிறது. சாலைகள் குண்டும், குழியுமாக இருக்கின்றன. இதையெல்லாம் கண்டும், காணாமல் இருந்து வருகிறார்.

மேலும், ஜெ., அடையாளம் காட்டிய பன்னீர் செல்வத்தை ஆதரிக்காமல், சசிகலா கும்பலின் எடுபிடியான இடைப்பாடி பழனிசாமிக்கு, நம்பிக்கை ஓட்டெடுப்பில் ஆதரவு தெரிவித் திருக்கிறார். எனவே, அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து, கறுப்புக் கொடி காட்ட முயன்றோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

நேற்று முன் தினமே, இலவச சைக்கிள் வழங்கும் விழாவில், எம்.எல்.ஏ., லோகநாதன் பங்கேற்பதாக இருந்தது. 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள், எம்.எல்.ஏ.,வுக்கு கறுப்புக் கொடி காட்ட திரண்டிருந்தனர். தகவல் அறிந்த லோகநாதன், விழாவில் பங்கேற்காமல், பாதி வழியிலேயே திரும்பியது குறிப்பிடத்தக்கது. இப்படி, கே.வி.குப்பம் தொகுதி முழுவதும், பொதுமக்கள் இடையே நாளுக்கு நாள் எதிர்ப்பு வலுத்து வருகிறது. இதனால், என்ன செய்வது என்று தெரியாமல், லோகநாதன் புலம்பிக் கொண்டிருப்பதாக, அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
 

அமைச்சர் 'ஆப்சென்ட்'


சசிகலா தரப்பிற்கு ஆதரவாக செயல்பட்ட, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் மீது, அக்கட்சியின் தொண்டர்கள் மட்டுமன்றி, பொதுமக்களும் கடும் அதிருப்தியில் உள்ளனர். தொகுதிக்கு வரும், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களுக்கு, அக்கட்சியினரும், பொதுமக்களும் பல்வேறு வகையில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால், எம்.எல்.ஏ.,க்கள் பலர், பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து வருகின்றனர்.

கடலுார் தொகுதி, எம்.எல்.ஏ.,வும், கடலுார் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., செயலருமான, அமைச்சர் சம்பத், தொகுதிக்கு வருவதை தவிர்த்து வருகிறார். எம்.எல்.ஏ.,க்கள் பாண்டியன், கலைச்செல்வன் ஆகியோர், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உலா வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும், ஜெ., பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாடு வது தொடர்பாக, மாவட்ட, அ.தி.மு.க., சார்பில், ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். இந்த கூட்டம் நேற்று கடலுாரில் நடப்பதாக இருந்தது. கூட்டத்திற்கு, மாவட்ட செயலரான அமைச்சர் சம்பத் வர திட்டமிட்டு இருந்தார்.

இதை அறிந்த, ஓ.பி.எஸ்., மற்றும் தீபா ஆதர வாளர்கள், கடலுாருக்கு அமைச்சர் வந்தால், கறுப்புக் கொடி காட்ட திட்டமிட்டனர். இதற் கிடையே, முன்னாள், எம்.எல்.ஏ.,வும், மாவட்ட அவை தலைவருமான அய்யப்பன், பன்னீர் செல்வம் அணியில் இருப்பதால், இவருடன், வடக்கு ஒன்றிய, அ.தி.மு.க.,வில் இருந்து ஏராளமானோர் நேற்று, ஓ.பி.எஸ்., அணிக்கு சென்று விட்டனர். இதனால், கடலுாரில் அமைச்சர் அணியில் சறுக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுபோன்ற சூழலில், அமைச்சர் சம்பத் நேற்று கடலுார் வரவில்லை; இதனால், ஆலோசனைக் கூட்டமும் நடத்தப்படவில்லை. சுற்றுலா மாளிகைக்கு அமைச்சர் வருவார் என, எதிர்ப்பை தெரிவிக்க காத்திருந்த இளைஞர்கள், ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1717104

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.