Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெ.தீபா பேரவை தலைமை அலுவலகம் திறப்பு: கொடி, நிர்வாகிகள் இன்று மாலை அறிவிப்பு

Featured Replies

ஜெ.தீபா பேரவை தலைமை அலுவலகம் திறப்பு: கொடி, நிர்வாகிகள் இன்று மாலை அறிவிப்பு

 

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா தனது அரசியல் பிரவேசத்தின் முதல் கட்டமாக தீபா பேரவையின் தலைமை அலுவலகத்தை இன்று காலை திறந்து வைத்தார். இதையடுத்து, இப்பேரவையின் கொடி, நிர்வாகிகள் தொடர்பான அடுத்தக்கட்ட அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 
 
ஜெ.தீபா பேரவை தலைமை அலுவலகம் திறப்பு: கொடி, நிர்வாகிகள் இன்று மாலை அறிவிப்பு
 
சென்னை:

ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அவரது அண்ணன் மகள் ஜெ.தீபாவை அரசியலுக்கு வரும்படி அ.தி.மு.க. தொண்டர்கள் வற்புறுத்தி வந்தனர்.

தினமும் நூற்றுக்கணக்கான அ.தி.மு.க. தொண்டர்கள் தியாகராயநகர் சிவஞானம் தெருவில் உள்ள தீபா வீட்டுக்கு சென்று ஆதரவு தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

தொண்டர்களின் கருத்துக்களை கேட்டறிந்த தீபா, ஜெயலலிதா பிறந்த நாளான இன்று (24-ந்தேதி) முக்கிய முடிவை வெளியிடுவேன் என்று அறிவித்தார். இதையொட்டி இன்று காலை முதலே தீபா வீடு முன்பு ஏராளமான அ.தி.மு.க. தொண்டர்கள் வந்து குவிந்தனர்.

வீட்டின் முன்பு அமைக்கப்பட்டிருந்த சிறிய மேடையில் சர்வ மத பிரார்த்தனை மற்றும் பாடல் நிகழ்ச்சிகள் நடந்தன.

தீபா, தனது வீட்டின் ஒரு பகுதியை கட்சி அலுவலகமாக மாற்றியுள்ளார். இந்த புதிய அலுவலக திறப்பு விழா இன்று காலை 6 மணிக்கு நடந்தது.
 
F90A109E-F8D0-4F7A-B05E-A665640C7C28_L_s


வைதீக முறைப்படி புரோகிதர்கள் யாகம் வளர்த்து பூஜை மற்றும் சிறப்பு வழிபாடுகள் செய்தனர். இதைத் தொடர்ந்து புதிய கட்சி அலுவலகத்தை ரிப்பன் வெட்டி தீபா திறந்து வைத்தார். பிறகு அலுவலகத்துக்குள் அவர் சென்று குத்து விளக்கு ஏற்றி வைத்தார்.

இதில் கோவை முன்னாள் எம்.எல்.ஏ. மலரவன், விழுப்புரம் சீனிவாசன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அதன் பிறகு மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்கு தீபா சென்றார். அங்கு அவர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

பிறகு மதுரவாயலில் உள்ள குழந்தைகள் காப்பகம் சென்றார். அங்கு ஆதரவற்ற குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கினார்.
 
2D68FA5F-2B09-46EB-B978-AAD6C79590DD_L_s
மதுரவாயலில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் ஜெயலலிதா பிறந்தநாளை தீபா கேக் வெட்டி கொண்டாடினார்.

மதியம் 12 மணிக்கு, தனது வீடு முன்பு அன்னதானத்தைத் தொடங்கிவைக்கிறார். இன்று மாலை 5 மணிக்கு ‘‘ஜெ.தீபா பேரவை’’ என்ற அமைப்பை அதிகாரப்பூர்வமாக முறைப்படி அறிவிக்கிறார்.

இந்த புதிய அமைப்பின் மாநில நிர்வாகிகள் பட்டியலையும் அப்போது தீபா வெளியிட உள்ளார்.

பேரவையின் புதிய கொடியையும் அவர் அறிமுகம் செய்து வைக்க உள்ளார். இந்த கொடி அ.தி.மு.க.வின் கருப்பு, சிவப்பு, வெள்ளை வண்ணத்தில் நடுவில் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் படங்கள் பொறிக்கப்பட்டு இருக்கும்.

ஜெ.தீபா பேரவை தொடங்குவதை முன்னிட்டு சென்னை தவிர வெளி மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான அ.தி.மு.க. தொண்டர்கள் வந்திருந்தனர்.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/02/24110727/1070146/J-Deepa-peravai-head-office-opening.vpf

  • தொடங்கியவர்

ஜெயலலிதா சமாதியில் தீபா! தலைவணங்கி மரியாதை

2_10041.jpg

ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அவரது சமாதியில், தீபா மலர்தூவி மரியாதைசெலுத்தினார்.

ஜெயலலிதா மறைந்ததைத் தொடர்ந்து, அ.தி.மு.க மூன்று அணிகளாகப் பிரிந்து, சசிகலா தலைமையிலும், பன்னீர்செல்வம் தலைமையிலும், தீபா தலைமையிலும் அ.தி.மு.க உருவாகியுள்ளது. மூன்று அணிகளிலும் உள்ள அ.தி.மு.க.வினர், இன்று ஜெயலலிதா பிறந்தநாள் விழாவைக் கொண்டாடிவருகின்றனர்.

3_10266.jpg

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, இன்று காலை சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கு வந்தார். அங்கு, ஜெயலலிதா சமாதியின் மேல் மலர்களைத் தூவி மரியாதைசெலுத்தினார். பின்னர், தலைகுனிந்து வணங்கினார். தீபாவுடன்  அ.தி.மு.க.வினர் ஏராளமானோர் மெரினாவுக்கு வந்திருந்தனர்.

http://www.vikatan.com/news/tamilnadu/81874-deepa-pays-homage-in-jayalalithaa-memorial.html

 

 

 

'என் தம்பி தீபக்கை யாரோ இயக்குகிறார்கள்'! தீபா

1_11377.jpg

சசிகலா, எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டவர்களை பற்றிய உண்மைகள் விரைவில் அனைவருக்கும் தெரியவரும் என்று கூறிய ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, ’என் தம்பி தீபக்கை பின்னணியில் இருந்து யாரோ இயக்குகிறார்கள் என் குற்றம்சாட்டினார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 69வது பிறந்த நாளை முன்னிட்டு மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதியில் மலர்தூவி தீபா அஞ்சலி செலுத்தினார். பின்னர் தனியார் செய்தி சேனலுக்கு பேட்டியளித்த தீபா, ’என் தம்பி தீபக்கை பின்னணியில் இருந்து யாரோ இயக்குகிறார்கள். ஜெயலலிதா சொத்துக்களை நான் எதிர்பார்க்கவில்லை. என் அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை இன்று மாலை வெளியிடுவேன். இனி வரும் அனைத்து தேர்தலிலும் நான் போட்டியிடுவேன். சசிகலா, எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டவர்களை பற்றிய உண்மைகள் விரைவில் அனைவருக்கும் தெரியவரும்’ என்றார்.

 

http://www.vikatan.com/news/tamilnadu/81877-someone-operating-my-brother-deepak-says-deepa.html

 

  • தொடங்கியவர்

ஆர்.கே.நகரில் போட்டியிடுவேன்... அரசியல் அமைப்பை துவங்கினார் தீபா

தீபா

'விகடனில் சில மாதங்களுக்கு முன்னரே சொன்னது போல 'எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை' என்ற அமைப்பை தொடங்கியுள்ளதாக ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா அறிவித்துள்ளார்.

தீபா தியாகராய நகரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "ஜெயலலிதா பிறந்தநாளில், எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற அமைப்பை துவங்கியுள்ளோம்.   ஜெயலலிதா பிறந்தநாளில் அமைப்பை துவங்குவதில் பெருமைப்படுகிறேன். இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுப்போம். ஜெயலலிதாவின் அரசியல் வாரிசாக பணியை தொடர்வேன். 

கழகப் பொருளாளராக நான் நியமிக்கப்பட்டுள்ளேன். மக்கள் விரும்பியதால் அரசிலுக்கு வந்துள்ளேன். மக்களின் கருத்தை கேட்டு முடிவு எடுப்போம்.

deepaflag1_18154.jpg

எனக்கு ஆதரவளித்த தொண்டர்கள், மக்களுக்கு நன்றி. என்னை நம்பி வந்தவர்ளை கைவிட மாட்டேன். ஜெயலலிதா ஆட்சி தொடர வேண்டும் என்பதே என் விருப்பம். அவர் விட்டு சென்ற பணிகளை தொடர்வேன். தீபக்கின் நிலை தெளிவற்ற நிலையில் உள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவேன்.  தமிழகம் தற்போது துரோகிகளின் பிடியில் உள்ளது " என்றார்.

மேலும், அமைப்பின் கொடியையும் அவர் அறிமுகப்படுத்தினார். 

சில மாதங்களுக்கு முன்னரே விகடனில் சொன்னது போல ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார் தீபா. 

படங்கள்:  தே. அசோக்குமார்

 

ENGLISH OVERVIEW

Deepa announces her party name as MGR Amma Deepa Peravai

http://www.vikatan.com/news/tamilnadu/81935-deepa-announces-her-party-name-as-mgr-amma-deepa-peravai.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.