Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலி

Featured Replies


துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலி
 

article_1488170113-120.jpgவிளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் கோஷ்டியின் தலைவர் என்று கூறப்படும் சமயங் என்றழைக்கப்படும் அருண உதயசாந்த பத்திரமீது, துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில், அவரும் அந்த பஸ்ஸில் ஏற்றிச்செல்லப்பட்ட கைதிகளில் ஐவரும் பலியாகியுள்ளனர்.

சிறைச்சாலையில் இருந்து நீதிமன்றத்துக்கு, சிறைச்சாலை பஸ்ஸில் ஏற்றிச்சென்றபோதே, அவர்கள் மீது களுத்துறை பிரதேசத்தில் வைத்து  துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் காயமடைந்த இன்னும் சிலர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று சிறைச்சாலைகள் பேச்சாளர் உபுல் தெனிய தெரிவித்தார்.

- See more at: http://www.tamilmirror.lk/192220/த-ப-ப-க-க-ச-ச-ட-ட-ல-ப-ர-பல-#sthash.w3uWwkgw.dpuf
  • தொடங்கியவர்

Update : சிறைச்சாலை பஸ் மீது துப்பாக்கிப் பிரயோகம் : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

 

 

களுத்துறை பகுதியில்  சிறைச்சாலை பஸ் மீது மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஏழாக அதிகரித்துள்ளது.

prisoners-bus-sri-lanka.jpg

காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறைச்சாலை அதிகாரியொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக இருந்த நிலையில், தற்போது குறித்த எண்ணிக்கை ஏழாக உயர்வடைந்துள்ளது.

...........................................................................................................................

 

களுத்துறை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் பாதாள உலகக் குழு உறுப்பினர் சமயான் உட்பட 6 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், சிலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று (27) காலை இடம்பெற்றுள்ளது.

கெப் வண்டியில் பயணித்த அடையாளந்தெரியாத சிலர் சிறைச்சாலை வாகனத்தின் மீது மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்திலேயே இவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களில் சிறைச்சாலை அதிகாரி ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காயமடைந்தவர்கள் நாகொட வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

http://www.virakesari.lk/article/17130

  • தொடங்கியவர்

களுத்துறை துப்பாக்கி சூடு சம்பவம் : காரணம் வெளியானது : 'யார் பட்டாசு கொளுத்துகிறார்கள் என பார்த்த போது அலறல் சத்தம் கேட்டது" : நேரில் கண்டவர்கள் சாட்சி

 

 

களுத்துறை பகுதியில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் பாதாள குழு நபர் ஒருவர் உட்பட 7 பேர் பலியானதுடன் பலர் படுகாயமடைந்துள்ளனர். நீண்ட நாட்களாக இரு பாதாள குழுக்கள் இடையே நிலவி வந்த பகையே இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்துக்கு காரணம் என முதல்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.Shooting-at-prison-bus-kills-seven-in-Ka

களுத்துறை சிறைச்சாலையிலிருந்து இன்று காலை 8.30 மணியளவில் கைதிகளை நீதிமன்றுக்கு அழைத்துச் செல்லும் போது, சிறைச்சாலையிலிருந்து 500 மீற்றர் தூரத்தில் வைத்து கெப்ரக வாகனத்தில் வந்த இனந்தெரியாத நபர்கள் சிறைச்சாலை பஸ் மீது சரமாரியாக துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளர்.

சம்வபத்தில் பாதாள உலக குழு நபர்  அருன உதேயசாந்த பத்திரன மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளான எஸ். சன்னிகம மற்றும் எஸ்.ஆர் விஜயரத்ன ஆகியோர் உட்பட ஏழு பேர் உயிரிழந்தனர்.Shooting-at-prison-bus-kills-seven-in-Ka

சம்பவத்தில் படுகாயமடைந்த ஏனையவர்கள் களுத்துறை நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.Shooting-at-prison-bus-kills-seven-in-Ka

மேலும் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தால் அருகில் இருந்த வீடுகளின் மீதும் துப்பாக்கி ரவைகள் பாயந்து வீடுகள் சேதமடைந்துள்ளன.

சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் விபரிக்கையில், 

  '8.30 மணியளவில் நானும் எனது மகளும் வீட்டின் முன் அறையில் அமர்ந்நதிருந்த போது பட்டாசு கொளுத்து போன்று சத்தம் கேட்டது.

இப் பகுதியில் திருமண வைபவம் ஒன்றும் இல்லை. எனினும் யார் பட்டாசு கொளுத்துகின்றார்கள் என சென்று பார்த்தேன். இதன்போது சிறைச்சாலை பஸ் உள்ளே இருந்து அபாய குரல் கேட்டது.

உடனடியாக நானும் மகளும் வீட்டின் பின்புறமாக பாய்ந்து சென்றோம். இதன்போது எனது அம்மாவின் வீட்டின் கூரை மீது ஏதோ ஒன்று விழுந்து புகை கிளம்புவதை அவதானித்தேன்.

ஏதோ அசம்பவாவிதம் இடம்பெறுகின்றது என எண்ணிக்கொண்டேன். வீட்டின் சுவர் மற்றும் கூரை மீது துப்பாக்கி ரவைகள் பாய்ந்துள்ளன' என்றார்.Shooting-at-prison-bus-kills-seven-in-Ka

சம்பவம் தொடர்பில் நபர் ஒருவர் கூறுகையில்,

'நான் எனது மகனை பாடசாலைக்கு அழைத்துச் செல்ல ஆயத்தமான போது மழை பெய்து கொண்டிருந்தது. நான் வீட்டிலிருந்து அவதானித்த போது வீதியில் சிறைச்சாலை பஸ் சென்றது. இதன்போது சில நிமிடங்களில் பஸ் சென்ற இடத்தில் பட்டாசு வெடிப்பது போன்று சத்தம் கேட்டது.

பட்டாசு வெடிப்பதற்கு சாத்தியம் இல்லை என அம்மாவிடம் கூறும் போதே ஒரு தோட்டா எமது வீட்டின் சுவரை துளைத்தது. உடனடியாக நான் எனது மகனை தூக்கி கொண்டு  வீட்டினுள் சென்று கதவை பூட்டிக்கொண்டேன்.

இதன் பின்னர் யன்னல் மீதும் தோட்டா ஒன்று துளைத்தது' என்றார்.

 சம்பவம் தொடர்பில் களுத்துறை விசேட பொலிஸ் குழுகள் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

http://www.virakesari.lk/article/17135

  • தொடங்கியவர்

களுத்துறை சம்பவம் : முழு பொறுப்பையும் பொலிஸாரே ஏற்க வேண்டும் : டி.எம்.சுவாமிநாதன்

களுத்துறை சிறைச்சாலை பஸ் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 7 பேர் கொல்லப்பட்டு, 5 பேர் காயமடைந்த சம்பவம் தொடர்பான முழு பொறுப்பையும் பொலிஸாரே ஏற்க வேண்டும் என சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.Shooting-at-prison-bus-kills-seven-in-Ka

பாதாள உலக குழு நபர்களை நீதிமன்றுக்கு அழைத்துச் செல்லும் போதுமான பாதுகாப்பு வழங்குவது பொலிஸாரின் கடமையாகும். எனினும் அதனை தவறவிட்டுள்ளனர்.

சிறைச்சாலை அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளை எடுத்திருந்த போதிலும் தாக்குதலை அவர்களால் தடுக்க முடியவில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

களுத்துறை சிறைச்சாலையில் இருந்து கடுவலை நீதவான் நீதிமன்றத்திற்கு பாதாள உலகத் தலைவர் ஒருவர் உட்பட கைதிகளை அழைத்துச் செல்லும் போது சிறைச்சாலையில் இருந்து 500 மீற்றர் தூரத்தில் வைத்து இனந்தெரியாத நபர்களால் பஸ் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது பாதாள உலக குழு தலைவர், இரு பொலிஸார் உட்பட 7 பேர் பலியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/17142

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.