Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை நீதித்துறை வரலாற்றில் 2 ஆவது தமிழ் பிரதம நீதியரசர் ஸ்ரீபவன் நாளை ஓய்வு பெறுகிறார்.!

Featured Replies

இலங்கை நீதித்துறை வரலாற்றில் 2 ஆவது தமிழ் பிரதம நீதியரசர் ஸ்ரீபவன் நாளை ஓய்வு பெறுகிறார்.!

 

 

(எம்.எப்.எம்.பஸீர்)

vira.jpg

பிர­தம நீதி­ய­ரசர் கே.ஸ்ரீபவன் நாளை 28 ஆம் திக­தி­யுடன் ஓய்­வு­பெ­ற­வுள்ளார். இலங்­கையின் 44 ஆவது பிர­தம நீதி­ய­ர­ச­ராக கடந்த 2015 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 30 ஆம் திகதி முதல் கட­மை­யாற்­றிய நிலை­யி­லேயே கே.ஸ்ரீபவன் நாளை ஓய்­வு­பெ­ற­வுள்ளார். இது தொடர்பில் அவர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கும் அறி­வித்­துள்ளார்.

இந் நிலையில் இலங்­கையின் 45 ஆவது பிர­தம நீதி­ய­ர­சரை தெரிவு செய்யும் நட­வ­டிக்­கை­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் கொடுக்­கப்­பட்­டுள்­ளன. ஜனா­தி­ப­தி­யினால் பரிந்­து­ரைக்­க­ப்படும் நபர்­களில் ஒரு­வரை அர­சி­ய­ல­மைப்பு சபையின் நிறை­வேற்று குழு தெரிவு செய்து ஜனா­தி­ப­திக்கு அறி­வித்து அதற்­கான அனு­ம­தியைப் பெற்­றுக்­கொண்ட பின்னர் புதிய பிர­தம நீதி­ய­ர­ச­ருக்­கான நிய­மனம் வழங்­கப்­ப­ட­வுள்­ளது.

எவ்­வா­றா­யினும் பிர­தம நீதி­ய­ரசர் கே.ஸ்ரீபவன் ஓய்­வு­பெற்ற பின்னர் உயர் நீதி­மன்றில் உள்ள சிரேஷ்­டத்­து­வத்தில் கூடிய ஒருவர் அடுத்த பிர­தம நீதி­ய­ர­ச­ராக நிய­மிக்­கப்­ப­டு­வ­தற்­கான வாய்ப்­புக்கள் அதிகம் உள்­ளன. 1952 ஆம் ஆண்டு பெப்­ர­வரி மாதம் 29 ஆம் திகதி பிறந்த பிர­தம நீதி­ய­ரசர் கே ஸ்ரீபவன் நாளைய தினத்­துடன் 65 வய­தினை பூர்த்தி செய்யும் நிலையில் ஓய்வு பெற­வுள்ளார். யாழ்.இந்துக் கல்­லூ­ரியின் பழைய மாண­வ­ரான பிர­தம நீதி­ய­ரசர் கே.ஸ்ரீபவன் 1974 ஆம் ஆண்டு இலங்கை சட்டக் கல்­லூ­ரிக்கு தெரி­வானார். 1976 ஆம் ஆண்டு சட்டக் கல்­லூ­ரியில் இருந்து சட்­டத்­த­ர­ணி­யாக வெளி­யே­றிய அவர் 1977 ஆம் ஆண்டு ஆகஸ்ட்  மாதம் 23 ஆம் திகதி சட்­டத்­த­ர­ணி­யாக பதவிப் பிர­மாணம் செய்­து­கொண்டார். 1978 ஆம் ஆண்டு பெப்­ர­வரி மாதம் 13 ஆம் திகதி பதில் அரச சட்­ட­வ­ா­தி­யாக சட்ட மா அதிபர் திணைக்­க­ளத்தில் இணைந்த அவர்  1979 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் முதலாம் திகதி அரச சட்­ட­வா­தி­யாக பதவி உயர்த்­தப்­பட்டார். பின்னர் 1989 ஆம் ஆண்டு  மார்ச் மாதம் 3 ஆம் திகதி சிரேஷ்ட அரச சட்­ட­வா­தி­யாக கே.ஸ்ரீபவன் நிய­மிக்­கப்­பட்டார்.

1996 ஆம்  ஆண்டு பெப்­ர­வரி மாதம் 24 ஆம் திகதி பிரதி சொலி­சிட்டர் ஜென­ர­லாக பதவி   உயர்த்­தப்­பட்ட கே.ஸ்ரீபவன், 2002 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி   மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றின் நீதி­ப­தி­யாக நிய­மனம் பெற்றார். 2007 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5 ஆம் திகதி மேன் முறை­யீட்டு நீதி­மன்றின் தலைமை நீதி­ப­தி­யாக நிய­மனம் பெற்ற அவர், 2008 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27 ஆம் திகதி நீதி­ய­ரசர் நிஹால் ஜய­சிங்­கவின் ஓய்வை அடுத்து உயர் நீதி­மன்ற நீதி­ய­ர­ச­ராக நிய­மிக்­கப்­பட்டார். அது முதல் மூன்று முறை பதில் பிரதம நீதியரசராக கடமையாற்றியுள்ள கே.ஸ்ரீபவன்  43 ஆவது பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கவின் ஓய்வையடுத்து 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30 ஆம் திகதி பிரதம நீதியரசராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டார்.

http://www.virakesari.lk/article/17134

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, நவீனன் said:

யாழ்.இந்துக் கல்­லூ­ரியின் பழைய மாண­வ­ரான பிர­தம நீதி­ய­ரசர் கே.ஸ்ரீபவன் 1974 ஆம் ஆண்டு இலங்கை சட்டக் கல்­லூ­ரிக்கு தெரி­வானார். 1976 ஆம் ஆண்டு சட்டக் கல்­லூ­ரியில் இருந்து சட்­டத்­த­ர­ணி­யாக வெளி­யே­றிய அவர் 1977 ஆம் ஆண்டு ஆகஸ்ட்  மாதம் 23 ஆம் திகதி சட்­டத்­த­ர­ணி­யாக பதவிப் பிர­மாணம் செய்­து­கொண்டார். 1978 ஆம் ஆண்டு பெப்­ர­வரி மாதம் 13 ஆம் திகதி பதில் அரச சட்­ட­வ­ா­தி­யாக சட்ட மா அதிபர் திணைக்­க­ளத்தில் இணைந்த அவர்  1979 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் முதலாம் திகதி அரச சட்­ட­வா­தி­யாக பதவி உயர்த்­தப்­பட்டார். பின்னர் 1989 ஆம் ஆண்டு  மார்ச் மாதம் 3 ஆம் திகதி சிரேஷ்ட அரச சட்­ட­வா­தி­யாக கே.ஸ்ரீபவன் நிய­மிக்­கப்­பட்டார்.

1996 ஆம்  ஆண்டு பெப்­ர­வரி மாதம் 24 ஆம் திகதி பிரதி சொலி­சிட்டர் ஜென­ர­லாக பதவி   உயர்த்­தப்­பட்ட கே.ஸ்ரீபவன், 2002 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி   மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றின் நீதி­ப­தி­யாக நிய­மனம் பெற்றார்

யாழ்ப்பாணத்து சிங்கம்டா...:unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.