Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

1 பந்தில் 6 ஓட்டம் அடித்த பொல்லார்டு : அந்தரத்தில் பறந்து கேட்ச் பிடித்து அசத்திய சங்ககாரா!

Featured Replies

1 பந்தில் 6 ஓட்டம் அடித்த பொல்லார்டு : அந்தரத்தில் பறந்து கேட்ச் பிடித்து அசத்திய சங்ககாரா!

 பிஎஸ்எல் பிரீமியர் லீக் போட்டியில் கடைசி ஓவரின் கடைசி பந்தில் கிரன் பொல்லார்டு சிக்ஸர் அடித்து கராச்சி கிங்ஸ் அணிக்கு திரில் வெற்றிக்கு வழிவகுத்தார்.

பிஎஸ்எல் பிரிமியர் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 18 வது ஆட்டத்தில் கராச்சி கிங்ஸ் அணியும், லாகூர் குவலாண்டர்ஸ் அணியும் மோதின. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய லாகூர் குவலாண்டர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 வது ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 155 ஓட்டங்கள் எடுத்து அசத்தியது.

லாகூர் குவலாண்டர்ஸ் அணி சார்பில் அதிகபட்சமாக பிராண்டன் மெக்குல்லம் 31 ஓட்டங்களும், மொகமத்ரிஷ்வான் 32 ஓட்டங்களும் எடுத்தனர்.

கராச்சி கிங்ஸ் அணி சார்பில் சோயிப் மாலிக் மற்றும் உஷ்மா மிர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினர்.

இதைத் தொடர்ந்து வெற்றி இலக்கை எட்டுவதற்கு இரண்டாவது துடுப்பெடுத்தாடிய கராச்சி கிங்ஸ் அணிக்கு துவக்க வீரர் பாபர் அசாம் 49 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார், அடுத்து வந்த வீரர்கள் அனைவரும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க கராச்சி கிங்ஸ் அணியின் தோல்வி உறுதி என்று கூறப்பட்டது.

ஆனால் அதிரடி ஆட்டக்காரரான கிரன் போல்லார்டு ஆட்டத்தை தலை கீழாக மாற்றி விட்டார். ஒரு புறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், தன்னுடைய அதிரடியை காட்டி அணியின் எண்ணிக்கை சீரான இடைவெளியில் உயர்த்தினார்.

இதனால் கடை ஓவரில் ஆட்டம் சூடுபிடிக்க ஆரம்பித்தது. கடைசி இரண்டு பந்தில் அணியின் வெற்றிக்கு 10 ஓட்டங்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரின் ஐந்தாவது பந்தை யாமின் வீச, இதை எதிர் கொண்ட பொல்லார்டு சிக்ஸர் அடிக்க, கடைசி பந்துக்கு நான்கு ஓட்டங்கள் தேவைப்பட்டது.

இதில் யார் வெற்றி பெறப்போகிறார்கள் என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்க, கடைசி பந்தை எதிர்கொண்ட பொல்லார்டு மீண்டும் சிக்ஸர் அடித்து வெற்றி பெற வைக்க மைதனாத்தில் ரசிகர்களின் ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

கடைசி வரை களத்தில் நின்று ஆடிய பொல்லார்டு 20 பந்தில் 45 ஓட்டங்கள் எடுத்து கராச்சி கிங்ஸ் அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

மேலும் இப்போட்டியின் முதல் ஓவரில் அமிர் வீச, இதை எதிர் கொண்ட டெல் போர்ட் லெக் திசையில அடித்து ஆட, பந்தானது கீப்பருக்கு சற்று விலகிச் செல்ல, கீப்பராக நின்ற சங்ககாரா யாரும் எதிர்பாராதவிதமாக அந்தரத்தில் பறந்து கேட்ச் பிடித்து அசத்தினார்.

625.0.560.320.500.400.194.800.668.160.90.jpg

 

 

 

 

http://news.lankasri.com

 

  • தொடங்கியவர்

17 பந்தில் 44 ரன்கள் குவித்த கெய்ல்: பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது கராச்சி கிங்ஸ்

பதிவு: பிப்ரவரி 27, 2017 18:56

 
 

பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 லீக் தொடரில் கெய்ல் 17 பந்தில் 44 ரன்கள் குவித்ததன் மூலம் கராச்சி கிங்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

 
 
 
 
17 பந்தில் 44 ரன்கள் குவித்த கெய்ல்: பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது கராச்சி கிங்ஸ்
 
பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் இஸ்லாமாபாத் - கராச்சி கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் வெற்றி பெற்றால்தான் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற நிலையில் கராச்சி கிங்ஸ் அணி களம் இறங்கியது.

கராச்சி கிங்ஸ் அணி டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி இஸ்லாமாபாத் அணியின் ஸ்மித், டக்கெட் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். டக்கெட் 16 ரன்னில் அவுட்டாக, ஸ்மித் 49 ரன்கள் சேர்த்தார். நிர்ணயிக்கப்பட்ட 15 ஓவரில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் சேர்த்தது.

CB9CD954-1F5C-40CD-BB21-5E6805E128D8_L_s

பின்னர் 124 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கராச்சி கிங்ஸ் அணியின் பாபர் ஆசம், கிறிஸ் கெய்ல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். கெய்ல் அதிரடி காட்ட, பாபர் நிதானமாக விளையாடினார். கெய்ல் 17 பந்தில் 2 பவுண்டரி, 5 சிக்சருடன் 44 ரன்கள் குவித்தார். பாபர் 27 பந்தில் 22 ரன்கள் சேர்த்தார். பொல்லார்டு 13 பந்தில் 20 ரன்கள் சேர்க்க, ஒரு பந்து மீதமுள்ள நிலையில் 4 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது கராச்சி அணி. இந்த வெற்றியின் மூலம் கராச்சி கிங்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

16869111-97DF-4972-BE8C-547E1C791097_L_s

28-ந்தேதி (நாளை) நடைபெறும் முதல் குவாலிபையர் சுற்றில் பெஷாவர் ஷல்மி - குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் மோதுகின்றன. மார்ச் 1-ந்தேதி நடக்கும் 2-வது குவாலிபையரில் இஸ்லாமாபாத் யுனைடெட் - கராச்சி கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

முதல் குவாலிபையரில் தோற்கும் அணியும், 2-வது குவாலிபையரில் வெற்றிபெறும் அணியும் மோதும் 3-வது குவாலிபையர் மார்ச் 3-ந்தேதி நடக்கிறது.

இறுதிப் போட்டி மார்ச் 5-ந்தேதி நடக்கிறது. இந்த போட்டி லாகூரில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/02/27185621/1070824/Gayle-blitz-seals-Karachi-playoffs-berth-Lahore-dumped.vpf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.