Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர் முற்றுப்புள்ளி இல்லை!- ஈழத்திலிருந்து மற்றுமொரு ஆவணம்

Featured Replies

போர் முற்றுப்புள்ளி இல்லை!- ஈழத்திலிருந்து மற்றுமொரு ஆவணம்

ஈழப் போர் முடிந்ததற்கு பிறகான வாழ்வைப் பேசும் முற்றுப்புள்ளியா

மே 2009,  இனப்போரும் படுகொலைகளும்  எங்கேயோ தூர தேசத்தில் நிகழ்ந்து வருவதைப் பற்றி மட்டுமே செய்தியாகப் படித்த வந்த தமிழக மக்களுக்கு தங்கள் அருகிலேயே ஈழத்தில் அப்பாவிப் பொதுமக்கள் உடைமையும் உயிரும் துண்டாடப்பட்டு உரிமைக்கான போர் முடிவுக்கு வந்த மாதம், அங்கே இலங்கையில் மக்கள் சிந்திய ரத்தம் கடல்வழியே தமிழகக் கறைகளை அடைந்து பல்லாயிரக்கணக்கான மக்களை இந்த இனப்படுகொலைக்கு எதிராகக் குரல் கொடுக்க செய்தது. போருக்கு பிறகு சூறையாடப்பட்ட அந்த மக்களின் நிலங்களை திருப்பித் தருவதாக அரசு அறிவித்தது ஆனால் இராணுவ ஆக்கிரமிப்புகள் இன்றளவும் அந்த பகுதியில் தொடர்ந்தபடிதான் இருக்கிறது. மேலும் சிங்கள மக்களின் குடியேற்றமும் ரகசியமாக அந்த பகுதிகளில் நடந்தேறி வருவதாகக் கூறப்படுகிறது.

போர் முடிவுக்கு வந்து எட்டு வருடங்கள் ஆகிவிட்ட சூழலில் தனக்கான நீதி கிடைக்கும் என்கிற நம்பிக்கையுடன் மக்கள் இருப்பதை “முற்றுப்புள்ளியா?” என்கிற தனது கதையின் மூலம் படமாக்கியுள்ளார் இயக்குனர் ஷெரின். கதை போருக்குப் பிறகான மக்களது மனநிலையை படமாக்கியுள்ளது. போரின் முடிவை பல்வேறு தரப்பினரும் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதில் தொடங்குகிறது கதை. போர் முடிந்தது என்று அறிவிப்பு வந்த நாளன்று, ஒரு பக்கம் பட்டாசுச் சத்தம் கேட்கிறது மறுபக்கம் கண்ணீர் விசும்பல்கள்.அது வரை போர் பற்றி மௌனத்துடன் இருந்த உலக நாடுகள் போருக்கு எதிராகக் குரல் கொடுக்கின்றன. ஏதேதோ திசைகளில் பிரிந்து செல்கிறார்கள் நெருக்கமானவர்கள். பாதுகாப்பான பகுதிகளுக்கு தஞ்சம் புகுந்தவர்கள் பாதுகாப்பற்ற பகுதிகளில் இருக்கும் தங்கள் உறவுகள் எப்படி இருப்பார்கள், இருக்கிறார்களா? என்கிற பல கேள்விகளுடனே வாழ்வினை கழிக்கிறார்கள். சுந்தரி (எ) ஆதிரை அப்படியான பாத்திரம்தான். தன் இரண்டு பிள்ளைகள், வயிற்றில் ஒரு பிள்ளையென்று போருக்கு பாதுகாவலாக கணவனை விட்டுவிட்டு வன்னியிலிருந்து பாதுகாப்பான பகுதிக்கு செல்லுகிறாள். போரில் இறந்தவர்களின் உடல் மருத்துவமனை எங்கும் கிடக்க அதற்கிடையேவே குழந்தையும் பிறக்கிறது. போர் முடிந்தது என்கிற அறிவிப்பும் வருகிறது. ஆனால் அதற்குப் பிறகுதான் அவளது தனிப்போர் தொடங்குகிறது. போர் முடிந்தாலும் கணவனைப் பற்றிய தகவல் எதுவும் கிடைக்காத சூழலில் வெள்ளைத்தாள் போல அவளது வாழ்க்கையை எவ்வித ஊன்றுகோலும் இல்லாமல் மீண்டும் தொடங்குகிறது, சமூகம் பிள்ளைகளின் கேள்விகள் என அனைத்தையும் கடந்து அவள் வாழ்க்கையை எப்படிச் சந்திக்கிறாள் என்பதை படம் காண்பிக்கிறது. இப்படியான பெண்களைச் சந்திப்பது இயல்புதான் என்றாலும் போர்ச் சூழலில் இது போன்ற பெண்கள் உண்மையாகவே வாழ்கிறார்கள், இது அவர்களது உண்மைக் கதை என்பதுதான் இதில் இருக்கும் கூடுதல் வலிமை. ஆதிரை போன்று வெவ்வேறு சூழலில் வேறு வேறான கதாப்பாத்திரங்கள் திரை முழுக்க வருகிறது, தன் நிலங்கள் மொத்தத்தையும் இராணுவத்திடம் இழக்கும் ஒருவன், தன் தாயுடன் தனியே காடுகளில் வாழும் சிறுமி என விரவிக்கிடக்கிறார்கள் கதையெங்கும். சினிமாவின் சட்டதிட்டங்கள் எதற்கும் உட்படாமல் மிகைப்படுத்தலின்றி இயல்பாக வலியை வலியாகவே பதிவு செய்திருக்கிறார் படத்தின் இயக்குநர் ஷெரின் சேவியர்.

செய்தி ஊடகங்களால் மக்களிடம் வெளியே தெரியும் காயங்களைத்தான் காட்டமுடிந்தது. அவர்கள் இன்றளவும் சந்தித்து வரும் வலிகள் வேறானது. அதைதான் உண்மைச் சம்பவத்தை சொல்லும் தனது கதை வழியாக பதிவு செய்திருப்பதாகக் கூறுகிறார் ஷெரின். எனக்கு சினிமா வேண்டும் என்று செல்பவர்களுக்கு படம் நிச்சயம் ஏமாற்றமாக இருக்கும் ஆனால் உரிமைப்போர் பற்றிய நீட்சியான ஆவணங்களில் நிச்சயம் ’முற்றுப்புள்ளியா?’ திரைப்படத்தின் பங்கும் இருக்கும்.

http://www.vikatan.com/news/world/82285-muttrupulliya-a-story-on-the-pains-and-sufferings-of-eelam-people-after-war.html

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

முற்றுப்புள்ளி அல்ல... முடியாத துயரம்! - ஈரம் கசியும் ஈழத் திரைப்படம்

 

‘2009-க்குப் பிறகு ஈழம் எந்த நிலையில் இருக்கிறது... உடலியல் ரீதியாக மட்டுமல்லாமல் உளவியல் அடிப்படையிலும் அந்த மக்கள் எப்படியெல்லாம் பாதிக்கப் பட்டுள்ளார்கள்’ என்பதை ‘முற்றுப்புள்ளியா?’ என்கிற ஈழப் போர் குறித்தான சமீபத்திய திரைப்படம் பதிவு செய்துள்ளது. இந்தப் படத்தின் இயக்குநர் ஷெரின் சேவியர். இவர், மனிதநேய செயற்பாடுகளுக்காக பிரான்ஸின் உயரிய ‘செவாலியே’ விருதைப் பெற்ற முதல் இலங்கைப் பெண்மணியும்கூட. ஷெரின் அளித்த பேட்டியிலிருந்து...

p28a.jpg

‘‘ஈழப் போர் தொடர்பான பல புத்தகங்கள், திரைப்படங்கள் வந்தபடி இருக்கின்றன. ‘முற்றுப்புள்ளியா?’ திரைப்படம் எடுக்கப்பட, தனிப்பட்ட காரணம் ஏதேனும் உள்ளதா?’’

‘‘நான் 1987-ல் இலங்கையிலிருந்து திருச்சிக்கு வந்தவள். போராளிகளுக்கு வக்கீலாக என் அப்பா செயல்பட்டு வந்ததால், நாங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுக்கொண்டிருந்தோம். இலங்கைக்கு இடையிடையே சென்றுவந்தபடி இருந்தேன்.

2007-ல் போர் தீவிர நிலையை அடைந்த காலகட்டத்தில் அங்குதான் இருந்தேன். நான் தமிழ்ப் பெண் என்றாலும், ஒரு சர்வதேச மனித உரிமை ஆர்வலராக அவர்கள் என்னை அங்கே அனுமதித்திருந்தார்கள். சர்வதேச நீதிமன்றங்கள் குற்றங்களாக வரையறுத்திருந்த அத்தனை விஷயங்களும் அங்கே அரங்கேறின. மனித உரிமை ஆர்வலராக இருந்தும் எங்கள் கைகள் கட்டப்பட்டிருந்தன. சிலசமயம் எங்கள் மீதும் தாக்குதல் நடந்தது. இதை எப்படியேனும் ஆவணப்படுத்த வேண்டும் என்ற முயற்சிதான்... ‘முற்றுப்புள்ளியா?”

‘‘போரினால், தனிப்பட்ட முறையில் உங்களுக்கு என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்பட்டன?’’

‘’மனிதநேய செயற்பாட்டாளர் என்பதால், சர்வதேச அளவில் பல நாடுகளில் நான் களப்பணியில் ஈடுபட்டிருக்கிறேன். ஆனால், நான் பிறந்த  மண்ணில்  என்னால்  செயல்படமுடியவில்லை. 2008-ம் ஆண்டு செப்டம்பர் 16-ம் தேதி மையப்பகுதியான வன்னியிலிருந்து மனிதநேய ஆர்வலர்கள் அத்தனை பேரும் ராணுவத்தினரால் கூண்டோடு வெளியேற்றப்பட்டோம். தவறு நடக்கப் போகிறது என்று தெரிந்திருந்தது. ஆனால், எங்களால் அங்கே ஒன்றும் செய்யமுடியவில்லை.’’

‘‘போர் பற்றிய படைப்புகள் கமர்ஷியல் ஆகிவிட்டதாக நினைக்கிறீர்களா?’’

‘‘போர் பற்றி மீண்டும் மீண்டும் நினைவுபடுத்த இத்தகைய ஆவணங்கள் தேவை. அவற்றை கமர்ஷியல் என ஒட்டுமொத்தமாகப் புறம்தள்ள முடியாது. அதைப் பற்றி வெளிவரும் புத்தகங்கள், திரைப்படங்கள் என அனைத்துமே ஏதோ ஒரு விதத்தில் அங்கிருக்கும் மக்களுக்கு உதவியபடிதான் இருக்கின்றன. ஆனால், சிலசமயம் கலை என்கிற போக்கில் அது மிகைப்படுத்தப்படுகிறது. வன்னியில் இருந்த அனைத்துப் பெண்களுமே பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டார்கள் என்று ஒரு செய்தி வெளியானதைப் பார்த்தேன். பெண்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. சொல்ல முடியாத வகையில், உடல் ரீதியான துன்புறுத்தல்களை சிலருக்கு ராணுவம் கொடுத்தது. ஆனால், அனைத்துப் பெண்களுமே பாதிக்கப்பட்டார்கள் என்பது போன்ற செய்திகள் மிகவும் அக்கறையற்றதாக இருந்தன. இது, அந்த மக்களை உளவியல் ரீதியாக அனைத்து வகையிலுமே பாதித்தது. இதுபோன்ற தவறுகள் தவிர்க்கப்பட்டிருக்கலாம்.’’

p28.jpg

‘‘போர் நிறுத்த ஒப்பந்தம் செய்ததுதான் எல்லா பிரச்னைக்கும் காரணம் எனத் திரைப்படத்தில் கூறியிருந்தீர்களே?’’

‘‘அங்கே இருக்கும் மக்கள் அப்படித்தான் நினைத்தார்கள். அதுவரை வலுவாக அவர்களைப் பாதுகாத்து வந்த அமைப்பும் அதன் பிறகுதான் பிரச்னைகளை அதிகம் சந்திக்கத் தொடங்கியதாக அவர்கள் எண்ணுகிறார்கள்.’’

‘‘படத்தில் வரும் ஆதிரை பாத்திரம் பற்றி?’’

‘‘போர் முடிவதற்குச் சில காலம் முன்புதான் ஆதிரையைச் சந்தித்தேன். ஆனால், ஆதிரைக்கு இருக்கும் மனவலிமையில் இரண்டு சதவிகிதம்கூட நம்மில் பலருக்கு இல்லை. தற்போது ஆசிரியையாக ஒரு பள்ளியில் பணியாற்றிக்கொண்டிருக்கிறார். மூன்று பிள்ளைகளைத் தனியாளாகத்தான் வளர்த்துக்கொண்டிருக்கிறார். போர்க் காலத்தில் காணாமல் போன தன் கணவர் மீண்டும் வருவார் என்கிற நம்பிக்கை இன்றும் அவரிடம் இருக்கிறது. யாழ்ப்பாண சர்வதேச திரை விழாவில், இந்தப் படத்தை அவருக்குக் காண்பித்தேன். ‘நீங்கள் என் கதாபாத்திரத்தை சாகாவரம் பெற்றதாக்கிவிட்டீர்கள். நானே இறந்தாலும் என் கதாபாத்திரம் வழியாக என் கணவர் வருவார் என்கிற நம்பிக்கையுடன் நான் இருக்க முடியும்’ என்று படத்தைப் பார்த்து முடித்ததும் கூறினார். ஆதிரை, அங்கே வசிக்கும் பெரும்பாலான மக்களைப் பிரதிபலிப்பவர்.’’

‘‘அங்கே தற்போதைய சூழல் என்ன?’’

‘‘ஆட்சிமாற்றம் ஏற்பட்ட பிறகு அங்கே சூழல் கொஞ்சம் மாறி இருக்கிறது. ஆனால், தொடக்கத்தில் நுழைந்த ராணுவம் இன்றளவும் எண்ணிக்கையில் குறையவில்லை. மூச்சுவிடுகிறோம். ஆனால், விடிவு எப்போது என்பதுதான் இன்னும் தெரியவில்லை.’’

http://www.vikatan.com/juniorvikatan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.