Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

10 ஆயிரம் பாதுகாப்பு படையினருக்கு மத்தியில் பாக். சுப்பர் லீக் கிண்ணத்தை வென்றது பேஸ்வர் சல்மி (கணொளி இணைப்பு)

Featured Replies

10 ஆயிரம் பாதுகாப்பு படையினருக்கு மத்தியில் பாக். சுப்பர் லீக் கிண்ணத்தை வென்றது பேஸ்வர் சல்மி (கணொளி இணைப்பு)

 

 

 

பாகிஸ்தான் சுப்பர் லீக் போட்டியின் நேற்றைய இறுதிப் போட்டியில் வெற்றிபெற்ற பேஸ்வர் சல்மி அணி இந்த ஆண்டுக்கான செம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.

 

 

இந்த போட்டியில் பேஸ்வர் சல்மி அணியை எதிர்த்தாடிய குவேட்ட கிலாடியேட்டர்ஸ் அணி 58 ஓட்டங்களால் படுதோல்வியடைந்தது.

பாகிஸ்தான் சுப்பர் லீக்கின் லீக் போட்டிகள் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெற்ற நிலையில், இறுதிப் போட்டி பாகிஸ்தானின் லாஹுர் நகரில் இடம்பெற்றது.

கடந்த 2009 ஆண்டு இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது பாகிஸ்தானில் தீவிரவாதிகள் தாக்குதல் மேற்கொண்டிருந்தனர்.

இதையடுத்து வெளிநாட்டு வீரர்கள் பாகிஸ்தானில் விளையாட மறுப்பு தெரிவித்ததுடன்,  கடந்த 8 வருடங்களாக போட்டிகள் நடைபெறவில்லை.

இந்நிலையில் பல்வேறு முயற்சிகளின் பின்னர் சிம்பாப்வே ஒரு தொடரில் பங்கேற்றது. இதன் பிறகு தற்போது பாக். சுப்பர் லீக் நேற்று கோலகலமாக இடம்பெற்றது.

259749.jpg

சுமார் 10 ஆயிரம் பாதுகாப்பு படையினரும், பாதுகாப்பு விமானங்களுக்கு மைதானத்தை வட்டமிட்டன.

பார்வையாளர்கள் 5 அடுக்கு பாதுகாப்பு நிலைகளை தாண்டியே மைதானத்துக்கு உள்வாங்கப்பட்டனர்.

இவ்வாறான பாதுகாப்புடன் பாக். சுப்பர் லீக்கை எந்தவித குறைபாடுகளும் இன்றி பாகிஸ்தான் கிரிக்கெட் நடத்தி முடித்துள்ளது.

259756.jpg

இந்நிலையில் இறுதிப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பேஸ்வர் சல்மி அணி 148 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பேஸ்வர் சல்மி அணி சார்பாக கம்ரன் அக்மல் 40 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய குவேட்டா கிலாடியேட்டர்ஸ் 16.3 ஓவர்களில் 90 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.

259759.jpg

போட்டியின் சிறப்பாட்டக்காரராக டெரன் சமி தெரவுசெய்யப்பட்டதுடன், தொடர் ஆட்டநாயகனாக கம்ரன் அக்மல் தெரிவுசெய்யப்பட்டார்.

259761.jpg

259763.jpg

259764.jpg

259774.jpg

259776.jpg

259777.jpg

259788.jpg

259797.jpg

259802.jpg

unnamed__6_.jpg

http://www.virakesari.lk/article/17423

  • தொடங்கியவர்

செயின்ட் லூசியாவில் விளையாடிய உணர்வை தந்தது: லாகூர் போட்டி குறித்து டேரன் சமி கருத்து

பதிவு: மார்ச் 06, 2017 20:06

 
 

லாகூரில் விளையாடிய போது தனது சொந்த ஊரான செயின்ட் லூசியாவில் விளையாடிய உணர்வு ஏற்பட்டதாக டேரன் சமி கூறியுள்ளார்.

 
 
 
 
செயின்ட் லூசியாவில் விளையாடிய உணர்வை தந்தது: லாகூர் போட்டி குறித்து டேரன் சமி கருத்து
 
இலங்கை அணி கடந்த 2009-ம் ஆண்டு பாகிஸ்தான் மண்ணில் சுற்றுப் பயணம் செய்து விளையாடும்போது, இலங்கை வீரர்கள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதனால் இலங்கை அணி தொடரை ரத்து செய்து சொந்த நாடு திரும்பியது.

அதன்பின் பாகிஸ்தான் சென்று விளையாட அனைத்து நாடுகளும் தயக்கம் காட்டின. இதனால் பாகிஸ்தான் அணி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளான துபாய், ஷார்ஜா மற்றும் அபுதாபி ஆகியவற்றை சொந்த மைதானமாக கொண்டு விளையாடி வருகிறது.

சொந்த நாடான பாகிஸ்தானில் மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்த முயற்சி எடுத்து வருகிறது. இதற்கு முதல்படியாக பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் இறுதிப் போட்டியை லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் நடத்த முடிவு செய்தது.

அதன்படி நேற்று பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் இறுதிப் போட்டி லாகூரில் நடைபெற்றது. பெஷாவர் ஷல்மி - குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் மோதின. இரண்டு அணிகள் சார்பில் 9 வெளிநாட்டு வீரர்கள் லாகூர் சென்றிருந்தனர்.

F9C93551-8478-431E-8C2B-D680BA67B7A3_L_s

பெஷாவர் அணியில் டேரன் சமி, மார்லோன் சாமுவேல்ஸ், இங்கிலாந்தின் ஜோர்டான் மற்றும் டேவிட் மேலன் ஆகியோர் இடம்பிடித்திருந்தனர். குவெட்டா அணியில் முன்னணி வீரர்களான கெவின் பீட்டர்சன், தைமல் மில்ஸ், ரசவ், லூக் ரைட், நாதன் மெக்கல்லம் போன்றோர் போட்டியை புறக்கணித்தனர். ஆனால், வங்காள தேசத்தின் அனாமுல் ஹக்யூ, தென்ஆப்பிரிக்காவின் மோர்னே வான் வைக், ஜிம்பாப்வேயின் சீன் எர்வின், வெஸ்ட் இண்டீசின் ரயாத் எம்ரிட் ஆகியோர் இடம்பிடித்திருந்தனர்.

66EA48EB-42A3-409E-9C22-C94B5EF766AD_L_s

இந்நிலையில், லாகூரில் விளையாடியது தனது சொந்த ஊரான செயினிட் லூசியாவில் விளையாடிய உணர்வை ஏற்படுத்தியது என்ற பெஷாவர் அணி கேப்டன் டேரன் சமி கூறியுள்ளார்.

மேலும் லாகூரில் நடைபெற்ற இறுதிப் போட்டி குறித்து சமி கூறுகையில் ‘‘எனக்கு இந்த இறுதிப் போட்டி என்பது வழக்கமான போட்டி என்பதை விட உயர்வானது. சாதாரணமாக இருந்த என்னை பெஷாவர் அணியின் கேப்டனாக உயர அப்ரிடி காரணமாக இருந்தார். எங்களுடைய ஒரே நோக்கம் மீண்டும் பாகிஸ்தான் ரசிகர்கள் முகத்தில் சிரிப்பை கொண்டு வர வேண்டும் என்பதுதான். ஆகவே, இன்று (நேற்று) லாகூர் மற்றும் பெஷாவரில் நாங்கள் அதிக மகிழ்ச்சியை கொடுத்துள்ளோம் என்று உணர்கிறேன். இது மிகவும் சிறப்பான நாள்.

456D99A5-EBE0-4C2A-A4BF-5E19F143FF54_L_s

நீங்கள் ஒரு இடத்திற்குச் செல்லாதபோது, இந்த இடம் குறித்து ஏற்கனவே சந்தேகம் இருக்கத்தான் செய்யும். நீங்கள் மாறுபட்ட கோணம் மற்றும் கருத்துக்களை பெறுவீர்கள். ஆனால் பெஷாவர் அணியின் உரிமையாளர் ஜாவேத் அப்ரிடி, ஷாகித் அப்ரிடி ஆகியோருடன் பேசிய பின்னர், அவர்கள் அளி்த்த ஊக்கம் இங்கே வரச் செய்வதற்கான முடிவை எடுக்க வைத்தது. நல்ல விஷயத்திற்காக லாகூர் வந்துள்ளதால், அனைத்து வீரர்களும் இந்த முடிவை எடுத்திருக்க வேண்டும்.

நான் லாகூரில் மிகவும் மகிழ்ச்சியாக விளையாடினேன். பாகிஸ்தான் மீண்டும் கிரிக்கெட் போட்டி நடக்க இது சரியான திசை என்ற நம்பிக்கை உள்ளது. இங்கே விளையாடியது செயின்ட் லூசியா, இந்தியா மற்றும் வெளிநாடுகளில் விளையாடிய உணர்வு ஏற்பட்டது என்பதை என்னால் சொல்ல முடியும்” என்றார்.

http://www.maalaimalar.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.