Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பதில் தலைவரை கோரி கூட்டு எதிரணி குழப்பம் ஆளும்தரப்பு வெளிநடப்பு

Featured Replies

பதில் தலைவரை கோரி கூட்டு எதிரணி குழப்பம் ஆளும்தரப்பு வெளிநடப்பு

parli3-9e710c75b709f42e19ce9ab6ddf8dad1f97a8fbb.jpg

 

21 ஆம் திகதி வரை சபை ஒத்­தி­வைப்பு; கூட்டு எதிரணி வெற்றிகோஷம்

(ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்)

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷ­வுக்கு ஆத­ர­வான கூட்டு எதி­ர­ணி­யினர் தமது அணிக்கு பதில் தலை­வரை நிய­மிக்கக் கோரி வாதப் ­பி­ர­தி ­வா­தங்­களை முன்­வைத்து கோஷங்­களை தொடர்ச்­சி­யாக வெளியிட்டு குழப்பம் விளைவித்தமைக்கு எதிர்ப்பு வெளியிட்ட ஆளும் தரப்­பினர் நேற்று சபை­யி­லி­ருந்து வெளிந­டப்பு செய்­தனர்.

இதன்­ கா­ர­ண­மாக எதிர்­வரும் 21 ஆம் திகதி பிற்­பகல் ஒரு மணி வரையில் சபை நட­வ­டிக்­கைகள் அனைத்தும் ஒத்­தி­வைக்­கப்­ப­டு­வ­தாக சபா­நா­யகர் கரு ஜெய­சூரிய அறி­வித்தார். பாரா­ளு­மன்ற வர­லாற்றில் முதற்­த­ட­வை­யா­கவும் தேசிய அர­சாங்­கத்தின் ஆட்­சிக்­கா­லத்தில் முதற்­த­ட­வை­யா­கவும் ஆளும் தரப்பு வௌிந­டப்பு செய்­தது. இத­னை­ய­டுத்து கூட்டு எதி­ர­ணியின் உறுப்­பி­னர்கள் எமது போராட்டம் வெற்றி, வெற்றி, எமது போராட்டம் வாழ்க வாழ்க என கோச­மிட்­ட­வாறு சபை­யி­லி­ருந்து வௌியே­றிச்­சென்­றனர். 

பாரா­ளு­மன்றம் நேற்று வௌ்ளிக்­கி­ழமை காலை 10.30க்கு சாபா­ந­யகர் கரு ஜெய­சூ­ரிய தலை­மையில் கூடி­யது. சபா­நா­யகர் அறி­விப்பு, வாய்­மூல விடைக்­கான கேள்வி நேரம், மனுக்­களை சமர்ப்­பித்தல், கட்­சித்­த­லை­வர்­க­ளுக்­கான விசேட கேள்வி நேரம், அமைச்­ச­ரவை அறி­விப்பு ஆகி­ய­வற்­றைத்­தொ­டர்ந்து கூட்டு எதி­ர­ணி­யி­னரின் கருத்­துக்­களை முன்­வைப்­ப­தற்­கான அனு­ம­தியை சபா­நா­யகர் வழங்­கினார்.

இத­னை­ய­டுத்து ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் கூட்டு எதி­ரணி ஆத­ர­வா­ள­ரான பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சமல் ராஜ­பக்ஷ நியா­யப்­பா­டு­களை முன்­வைக்­க­லானார். அவர் கூறு­கையில், பாரா­ளு­மன்­றத்தில் உத்­தி­யோ­க­புர்வ எதிர்க்­கட்­சியை விடவும் கூட்டு எதி­ர­ணி­யி­னரின் பிர­தி­நி­தித்­துவம் அதி­க­மாகும். கூட்டு எதி­ர­ணியில் பல கட்­சிகள் உள்­ளன. நான் சுதந்­திரக் கட்­சியை பிர­நி­நி­தித்­து­வப்­ப­டுத்­து­கின்றேன். எனினும் சுதந்­திரக் கட்சி ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் இணைந்து ஆட்சி அமைக்க இணக்கம் தெரி­வித்­தது. இத­னை­ய­டுத்து கூட்டு எதி­ரி­ணி­யினர் இதற்கு இணக்கம் தெரி­விக்­க­வில்லை. அவர்­க­ளுக்கும் ஒரு கொள்கை ஒன்று உள்­ளது.  

எனவே கூட்டு எதி­ர­ணி­யினர் உரி­மைக்கு மதிப்­ப­ளித்து அவர்­களை சுயா­தீ­ன­மாக செயற்­பட இட­ம­ளிக்க வேண்டும். இரண்டு நாட்­க­ளான பாரா­ளு­மன்ற நட­வ­டிக்­கைகள் பெரும் குழப்­ப­க­ர­மாக உள்­ளது. இந்த நிலைமை தொடர்ந்து சென்றால் பிழை­யான முன்­னு­தா­ரணம் நாட்­டிற்கு காண்­பிக்­கப்­பட்­டு­விடும்.

அர­சாங்­கத்­துடன் இணை­வ­தற்கு இவர்­கள(கூட்டு எதி­ர­ணி­யினர்) விரும்­பில்லை. இவ்­வா­றான நிலைமை தொடர்ந்து சென்றால் சபை நட­வ­டிக்­கை­களை சுமு­க­மாக முன் கொண்டு செல்ல முடி­யாது போகும் என்றார்.

சபா­நா­யகர் கரு ஜெய­சூ­ரி­யவின் பதில்

உங்­க­ளு­டைய விடயம் புரி­கின்­றது. இது தொடர்­பாக என்னால் எதுவும் செய்ய முடி­யாது. உங்­க­ளது கூற்­றுக்கு நானும் இணக்கம் தெரி­விக்­கின்றேன். எனினும் இது கட்­சிக்குள் காணப்­படும் குழப்­ப­மாகும். இது தொடர்­பாக ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி­யுடன் நான் பேசினேன்.

எனினும் அதற்கு ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி பாரா­ளு­மன்ற குழு தலைவர் நிமல் சிறி­பால டி சில்வா அனு­மதி வழங்­க­வில்லை. எனக்கு கட்­சியின் உள்­ளகப் பிரச்­சி­னை­களை தீர்க்க முடி­யாது. அதில் தலை­யிடும் அதி­கா­ரமும் இல்லை. இந்த விட­யத்­திற்­காக காலத்தை வீண­டிக்க முடி­யாது. இதனை எதிர்­வரும் நாட்­களில் பேச்­சு­வார்த்தை மூலம் தீரத்­துக்­கொள்வோம் என்றார்.

டலஸ் அழ­கப்­பெ­ரும எம்.பி.யின் தர்க்கம்

சபா­நா­யகர் அவர்­களே நீங்கள் மிகவும் நேர்­மை­யா­னவர். 48 இலட்சம் மக்கள் பிர­தி­நி­தித்­து­வத்தின் கருத்­துக்கள் இங்கே முன்­வைக்­கப்­பட வேண்டும். தினேஷ் குண­வர்­தன இல்­லாத கார­ணத்­தினால் ஊட­க­வி­ய­லாளர் மாநா­டொன்றை நடத்­து­வ­தற்கு கூட எமக்கு அறை­களை பெற்­றுக்­கொள்ள முடி­யாமல் உள்­ளது.

அதற்கும் தினேஷ் குண­வர்­த­னவின் கையொப்பம் கோரப்­ப­டு­கின்­றது. நாட்டில் பல்­வேறு பிரச்­சி­னைகள் உள்­ளன. குறிப்­பாக உள்­ளுா­ராட்சி மன்ற தேர்தல் தொடர்ந்தும் தாம­த­மாக்­கப்­ப­டு­கின்­றது. மறு­புறம் ஜெனி­வாவில் அமைச்சர் மங்­கள சம­ர­வீர புதிய அர­சி­ய­ல­மைப்பை சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு நடத்­து­மாறு கோரு­கின்றார்.

இந்த பிரச்­சி­னை­களை எதிர்க்­கட்­சிகள் பேசு­வ­தாக இல்லை. ஆகவே இதற்கு முடி­வுக்­கட்ட வேண்டும். மக்­களின் பிர­தி­நி­தித்­து­வ­த­திற்கு மதி­ப­ளிக்க வேண்டும். ஐக்­கிய தேசியக் கட்சி உப தலை­வ­ராக நீங்கள் இருக்­கலாம். ஆனாலும் தற்­போது நீங்கள் சபா­நா­யகர் அனைத்து பிரி­நி­தி­களின் பாது­காப்­ப­தற்கு நீங்கள் தயா­ராக இருக்க வேண்டும். இந்த பிரச்­சி­னைக்கு நீங்கள் தான் தீர்வு தர வேண்டும்.  

சபையில் உள்­ள­வர்­களின் பேச்­சுக்கு நீங்கள் அடிப்­ப­ணிய தேவை­யில்லை. வேறு தரப்­பி­னரின் ஆலோ­ச­னை­க­ளுக்கு உங்­க­ளுக்கு தேவை­யில்லை. இதுவெ எனது தர்க்­க­மாகும் என்றார்.

சபா­நா­யகர் கரு ஜெய­சு­ரிய மீண்டும் பதில்

நான் மன­சாட்­யு­டனே செயற்­ப­டு­கின்றேன். நான் ஐக்­கிய தேசியக் கட்­சியில் எந்­த­வொரு பத­வி­க­ளையும் வகிப்­ப­தில்லை. இந்த விட­யத்தை எனக்கு தீர்க்க முடி­யாது. கட்சி பிரச்­சி­னை­யாகும். என்னால் முடிந்­த­ளவு உங்­க­ளுக்­கான அதி­கா­ரங்­களை பெற்­றுக்­கொ­டுத்­துள்ளேன். ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி அனு­மதி வழங்­கினால் தான் முடி­வினை எடுக்க முடியும் என்றார்.

மீண்டும் எழுந்த டலஸ் எம்.பி

சபா­நா­யகர் அவர்­களே உங்­க­ளுக்கு நாட்டில் பெரும் மதிப்பு உள்­ளது. எனினும் அந்த நாமத்தை இல்­லாமல் செய்து விட வேண்டாம். மக்­களின் பிர­தி­நி­தித்­து­வத்­திற்கு மதிப்­ப­ளிக்­கா­விட்டால் பாரிய விளை­வு­களை சந்­திக்க நேரிடும். இந்த அர­சியல் கலா­சா­ரத்தை ஏற்­ப­டுத்­தி­யவர் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வு­மவர். ஆகவே இந்த காலா­சா­ரத்தின் பின்­ன­ணியால் தான் நாம் கூட்டு எதி­ர­ணி­யா­கி­யுள்ளோம் என்றார்.

கெஹ­லிய ரம்­புக்­வெல்ல எம்.பி

சபா­நா­யகர் அவர்­களே எமக்கு எதிர்க்­கட்சி ஆச­னத்தில் அமர்­வ­தற்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவே அனு­மதி வழங்­கினார். அத­னா­லேயே நாம் எதிர்க்­கட்சி ஆச­னத்தில் அமர்ந்தோம். ஆனால் ஜனா­தி­பதி தீர்­மா­னத்­திற்கு உட்­பட்ட வகையில் எம்மால் சுதந்­தி­ர­மாக செயற்­பட முடி­யா­துள்ள எனக் கூறிக்­கொண்­டி­ருக்­கையில் சபையில் ஆளும் தரப்­பினர் கூச்­சல்­களை எழுப்ப ஆரம்­பித்­தனர். பதி­லுக்கு எதிர்த்­த­ரப்­பி­னரும் கூச்­சல்­களை எழுப்ப ஆரம்­பித்­தனர்.

சபை முதல்­வரின் ஆதங்கம்

இதன்­போது எழுந்த சபை முதல்­வரும் அமைச்­ச­ரு­மான லக்ஷ்மன் கிரி­யெல்ல, தயவு செய்து சபா­நா­யகர் அவர்­களே இது தொடர்­பாக உங்­க­ளுக்கு தீர்­மா­னத்தை ஏற்­க­னவே அறி­வித்து விட்­டீர்கள். சபை நட­வ­டிக்­கை­க­ளுக்கு நேரம் போதாது. பிர­தான பணி­க­ளுக்குச் செல்ல வேண்­டி­யுள்­ளது. தயவு செய்து பிர­தான பணி­க­ளுக்குச் செல்­லுங்கள் இவர்­க­ளுக்கு வழங்­கிய காலம் போதும் என்றார்.

கூட்டு எதி­ர­ணி­யினர் கூச்சல்

கூட்டு எதி­ரணி எம்.பிக்கள் அனை­வரும் எழுந்து பெரும் கோசங்கள் எழுப்பி சபை நட­வ­டிக்­கை­க­ளுக்கு இடை­யுறு விளை­வித்த வண்­ண­மி­ருந்­தனர்.

சபா­நா­ய­கரின் நியாப்­ப­டுத்தல்

இதன்­போது சபையை அமை­தி­யாக இருக்­கு­மாறு அறி­வு­றுத்­திய சபா­நா­யகர் கரு ஜெய­சூ­ரிய விமல் வீர­வன்ஸ எம்.பிக்கு நான் இந்த வாரத்தில் சந்­தர்ப்பம் அளிப்­ப­தாக வாக்­கு­றதி அளித்தேன். அதன் பின்னர் முன்னாள் சபா­நா­யகர் சமல் ராஜ­ப­க்ஷவும் கூட்டு எதி­ர­ணி­யி­னரின் பிரச்­சினை தொடர்­பாக இன்று(நேற்று) காலையில் என்­னுடன் பேசினார். ஆகவே அவர்­களின் கருத்­துக்­களை முன்­வைப்­ப­தற்கு அனு­ம­தி­ய­ளிப்­ப­தாக வாக்­கு­றதி அளித்­தி­ருக்­கின்றேன்.

ரம்­புக்­வெல உறுப்­பி­னரின் உரையை சுரக்­க­மாக முடித்­து­கொள்ளும் படி கேட்­டுக்­கொள்­வ­தோடு இன்­னமும் ஐந்து நிமி­டத்தில் இந்த விட­யத்தை முடித்­துக்­கொண்டு பிர­தான விட­யத்­திற்கு செல்வோம் என்றார்.

விடாப்­பி­டி­யாக நின்ற சபை முதல்வர்

மீண்டும் எழுந்த சபை முதல்­வரும் அமைச்­ச­ரு­மான லக்ஷ்மன் கிரி­யெல்ல, எந்த நாளும் காலையில் இரண்டு மணி­நேரம் இவர்­க­ளுக்கு ஒதுக்க முடி­யாது. நீங்கள் இவர்­க­ளுக்கு பேசு­வ­தற்கு அனு­மதி வழங்­கி­யது பெரும் தவ­றாகும். சபா­நா­யகர் அவர்­களே நீங்கள் எங்­களுக் பேசு­வ­தற்கு இட­ம­ளிக்­காமல் அவர்­க­ளுக்கே பேசு­வ­தற்கு இட­ம­ளிக்­கீ­றீர்கள். இவர்­க­ளுக்கு நேரம் வழங்க வேண்டாம்.

இரண்டு மணி­நேரம் இவர்­க­ளுக்க ஒவ்­வொரு நாளும் வழங்­கினால் ஏனைய விட­யங்­களை நாங்கள் எவ்­வாறு நடத்­து­வது என்றார்.

சூடு­பி­டித்­தது சபை

இவ்­வாறு கூறி­ய­வுடன் கூட்டு எதி­ர­ணி­யினர் கடு­மை­யான கூச்­சல்­களை வௌிப்­ப­டுத்­தி­னார்கள். ஆளம் தரப்­பி­னரும் கூச்­சல்­களை வௌிப்­ப­டுத்­தி­னார்கள். இதனால் சபையில் அமை­தி­யின்மை ஏற்­பட்­ட­தோடு இரு­த­ரப்பு உறுப்­பி­னர்­களும் எழுந்து பரஸ்­பர கருத்­துக்­களை வௌியிட ஆரம்­பி­த­தனர். கைகளை காட்டி வாக்­கு­வா­தங்­க­ளிலும் ஈடு­பட்­டனர்.

இந்த நிலைமை தொடர்ந்தும் நீடித்­தது. சுபா­நா­யகர் அமை­தியைப் பேணு­மாறு கோரிய போதும் அவரின் அறி­வு­றுத்­தலை தாண்டி உறப்­பி­னர்கள் கேச­மெ­ழுப்­பி­னார்கள். சபையில் அமை­தி­யின்மை நீடித்­தது. இச்­ச­ம­யத்தில் சபை நட­வ­டிக்­கை­களில் இருந்து அரச தரப்பின் முக்­கிய பிர­தி­நி­தி­க­ளான சபை­மு­தல்­வரும் அமைச்சருமான லக்ஷமன் கிரியெல்ல, ஆளும் தரப்பு பிரதமகொரடாவும் அமைச்சருமான கயந்த கருணாதிலக்க ஆகியோர் வௌியேறவும் அதனைத்தொடர்ந்து ஏனைய உறுப்பினர்கள் வௌியேறினார்கள்.  

இதனையடுத்து சபாநாயகர் கரு ஜெயசுரிய எதிர்வரும் 21 ஆம் திகதி பிற்பகல் ஒரு மணிவரையில் சபை ஒத்திவைக்கப்படுவதாக முற்பகல் 11.50இற்கு தனது ஏக தீர்மானத்தின் பிரகாரம் அறிவித்தார். அந்த நேரத்தில் கூட்டு எதிரணி எம்.பிக்கள் பெரும் கோசமிட்டு எமது போராட்டம் வெற்றி, வெற்றி, எமது போராட்டம் வாழ்க வாழ்க என கோசமிட்டனர்.  

சபை நடவடிக்கை நிறைவுற்றதாக கூறப்பட்ட பின்னரும் சபையில் உறுப்பினர்கள் ஆங்காங்கே இருந்த சமயத்தில் மீண்டும் சபைக்கு லக்ஷமன் கிரியெல்ல வந்தபோது கெஹலிய ரம்புக்வெல்ல, விமல் வீரவன்ச ஆகியோர் கோசமிட்டனர். மேலும் கெஹலிய எம்.பி வரலாற்றில் மதற்தடவையாக அரசாங்கத் தரப்பு வௌியேறியுள்ளது என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவினை பார்த்துக் கூறியபோது புன்னகைததவாறே அவர் மீண்டும் வௌியேறியமை குறிப்பிடத்தக்கது. 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-03-11#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.