Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அநுரா, மங்கள, ஷ்ரீபதி கொழும்பில் முக்கிய சந்திப்பு

Featured Replies

அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தயாராவதில் தீவிரம்

அமைச்சரவையிலிருந்து பதவி நீக்கப்பட்ட ஷ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மூன்று சிரேஷ்ட உறுப்பினர்களான அநுரா பண்டாரநாயக்கா, மங்கள சமரவீர, ஷ்ரீபதி சூரியாராச்சி ஆகிய மூவரும் கொழும்பில் நேற்று திங்கட்கிழமை முக்கிய சந்திப்பினை நடத்தியுள்ளனர்.

இவர்கள் மூவரையும் மீண்டும் அமைச்சரவையில் இணைத்துக் கொள்வதற்கு கட்சியின் சிரேஷ்ட தலைவர்களும் கட்சிக்கு ஆதரவான வர்த்தகப் பிரமுகர்களும் தீவிரமாக முயற்சிகளை மேற்கொண்டுள்ள அதேவேளை, இந்த மூவரும் கடும் எதிர்ப்பு மனோநிலையில் இருப்பதையே அவர்கள் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளன. அமைச்சரவையிலிருந்துதான் நீக்கப்பட்டமை குறித்து தான் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் `இந்த கோமாளிகளின் கூத்துக்கு' வெளியே இருப்பதாகவும் அநுரா பண்டாரநாயக்க தெரிவித்ததாக ஊடகங்கள் குறிப்பிட்டிருந்தன.

இதேவேளை, தன்மீது ஜனாதிபதி சுமத்தியுள்ள பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கும் பதிலளிக்கும் விதத்தில் மங்கள சமரவீர இன்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதிக்கு நீண்டதொரு விளக்கக் கடிதத்தை அனுப்பவுள்ளதாக மங்கள சமரவீரவின் நெருங்கிய வட்டாரங்கள் நேற்றுத் திங்கட்கிழமை தெரிவித்தன.

இந்த மூவரதும் அமைச்சுப் பதவிகளை பறித்த பின், ஷ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு கூட்டத்தை கடந்த சனிக்கிழமை கூட்டிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, அதில் மங்கள சமவீரவின் நடவடிக்கைகள் குறித்து கடும் விசனம் தெரிவித்திருந்தார்.

அத்துடன், இவர்களை அமைச்சுப் பதவியிலிருந்து விலக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்ட காரணத்தையும் தெளிவுபடுத்தி தனது தீர்மானத்துக்கு செயற்குழு உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவையும் பெற்றிருந்தார்.

இந்த நிலையில் சிங்கப்பூரிலிருந்து நேற்று முன்தினம் நாடு திரும்பிய மங்கள சமரவீர, நேற்றுக்காலை அநுரா பண்டாரநாயக்காவையும் ஷ்ரீபதி சூரியாராச்சி உட்பட ஒவ்வெருவரதும் நெருங்கிய சகாக்களை கொழும்பில் சந்தித்தார்.

கொழும்பில் மிகவும் இரகசியமானதொரு இடத்தில் நேற்றுக் காலை இந்த முக்கிய சந்திப்பு இடம்பெற்றதாக தெரியவருகிறது.

நண்பகலுக்குப் பின்னரும் இந்தச் சந்திப்பு நடைபெற்றதாகவும் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தச் சந்திப்பு குறித்து மிகவும் இரகசியமாக வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

தங்களது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து இவர்கள் விரிவாக ஆராய்ந்ததாகவும் தங்களை மீண்டும் அமைச்சரவையில் சேர்க்க மேற்கொள்ளப்படும் முயற்சிகள் குறித்தும் ஆராய்ந்ததாகவும் இவர்களுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

சுதந்திரக் கட்சியில் தொடர்ந்தும் இருப்பதெனவும் எனினும், தற்போதைய சமரச முயற்சிகளை ஏற்காது அமைச்சுப் பதவிகளை மீண்டும் பொறுப்பேற்காது செயற்படுவதெனவும் இவர்கள் ஆலோசித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக, இவர்கள் தொடர்ந்தும் சந்திப்புக்களை நடத்தி தீர்மானங்களை எடுக்க உத்தேசித்துள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேநேரம், நேற்று இரவு நாடு திரும்புவாரென எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவையும் இவர்கள் சந்திக்கவுள்ளதாகவும் பெரும்பாலும் இந்தச் சந்திப்பு இன்று நடைபெறலாமென்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

பதவி நீக்கப்பட்ட இந்த மூவரையும் மீண்டும் அமைச்சரவையில் சேர்க்க ஜனாதிபதி சில நிபந்தனைகளை விதித்துள்ளதாகவும் அதன்படியே, அவர்களை சேர்த்துக் கொள்வதா அல்லது இல்லையா என்பதை ஜனாதிபதி தீர்மானிப்பாரெனவும் கூறப்படுகிறது.

ஜனாதிபதியின் இந்தக் கருத்துக்களுடன் சில முக்கிய அமைச்சர்களும் முக்கிய வர்த்தகப் புள்ளிகளும் ஜனாதிபதிக்கு நெருக்கமான சிலரும் நேற்று முன்தினம் அநுரா பண்டாரநாயக்காவை சந்தித்து பேசியதாகவும் மங்கள சமரவீரவுடனும் இவர்கள் சந்திக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் தங்களது அடுத்த நடவடிக்கை குறித்து இந்த மூவரும் இன்று செவ்வாய்க்கிழமை செய்தியாளர் மாநாடொன்றை கூட்டி அறிவிக்கவிருந்தனர். எனினும், இந்த செய்தியாளர் சந்திப்பு வியாழக்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சில முக்கிய சந்திப்புக்களின் பின்னர் தெளிவான முடிவொன்றை எடுப்பதற்காகவே இந்த செய்தியாளர் மாநாடு ஒத்திவைக்கப்பட்டதாகவும் இவர்களது சகாக்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையில் ஜனாதிபதிக்கு மங்கள சமரவீர இன்று அனுப்பவுள்ள நீண்ட கடிதத்தில் கடந்த கால நிலைமைகள், இனப்பிரச்சினை தீர்வு, கொழும்பு உட்பட நாட்டில் இடம்பெறும் ஆட்கடத்தல்கள், படுகொலைகள் குறித்தும், பலஸ்தீனிய விவகாரம் தொடர்பான வாக்கெடுப்பு குறித்து ஜனாதிபதி தெரிவித்த குற்றச்சாட்டு குறித்தும் விரிவாக பதிலளிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

http://www.thinakkural.com/news/2007/2/13/...s_page21307.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.