Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிக்கல் ! சசிகலாவின்பதவியை அங்கீகரிப்பதில்... ஆணையத்துக்கு வரவில்லை 'வானகரம்' ஆர்.கே.நகரில் சி்ன்னம் 'அரோகரா?'

Featured Replies

சிக்கல் !
சசிகலாவின்பதவியை அங்கீகரிப்பதில்...
ஆணையத்துக்கு வரவில்லை 'வானகரம்'
ஆர்.கே.நகரில் சி்ன்னம் 'அரோகரா?'
 
 
 

வானகரம் பொதுக்குழு கூட்ட தீர்மான நகல் ரூபத்தில், இன்னொரு சோதனை மேகம், சசிகலா அணிக்கு எதிராக சூழத் துவங்கியுள்ள தால், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில், இந்த அணி சார்பில் போட்டியிடும் நபருக்கு, இரட்டை இல்லை சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம் என, தகவல் வெளியாகி உள்ளது.

 

Tamil_News_large_1728392_318_219.jpg

அ.தி.மு.க., பொதுச் செயலராக இருந்த ஜெயலலிதா மரணத்திற்கு பின், சென்னை வானகரத்தில், அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில், அந்தக் கூட்டத்தில் பங்கேற்காத, ஜெ.,வின் தோழியான சசிகலா, தற்காலிக பொதுச் செயலராக தேர்வு செய்யப்பட்டார்.
 

கோரிக்கை


இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட ராஜ்யசபா, எம்.பி.,யான சசிகலா புஷ்பா, தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தார். அதில், 'கட்சியின் சட்ட விதிகளின் படி, சசிகலாவை தற்காலிக பொதுச் செயலராக தேர்வு செய்தது செல்லாது. எனவே, அவரது தேர்வை ரத்து செய்ய வேண்டும்' என, கோரியிருந்தார்.

இதன்பின், சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி துாக்கிய பன்னீர்செல்வம் அணி சார்பிலும், தேர்தல் ஆணையத்திடம் புகார் தரப்பட்டது. இந்த புகார் தொடர்பாக, சசிகலாவிடம் கேட்கப் பட்ட விளக்கத்திற்கு, சம்பந்தமே இல்லாமல் தினகரன் பதில் சொல்ல, தேர்தல் ஆணையம் கடுப்பானது. மீண்டும் ஒரு நோட்டீசை, பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு அனுப்பி, மார்ச், ௧௦க்குள் பதில் தர வேண்டும் என, தெரிவித்தது. அதை ஏற்ற சசிகலா தரப்பினர், தேர்தல் ஆணையத்தின் நோட்டீசுக்கு, கடந்த வெள்ளியன்று பதில் அளித்துள்ளனர்.

பன்னீர்செல்வம் அணியினர் புகாரில் முக்கிய மாக எழுப்பப்பட்டுள்ள கேள்வி, 'சசிகலாவை தற்காலிக பொதுச் செயலராக நியமனம்

செய்தது சரியா?' என்பதே. அதற்கு தேர்தல் ஆணையம் விடை சொல்லும் முன், ஆர்.கே.நகர் தொகுதியில், இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டது. அதனால், இடைத் தேர்தலில், அ.தி.மு.க., வின் இரட்டை இலை சின்னம், சசிகலா அணிக்கு கிடைக்குமா அல்லது பன்னீர் அணிக்கு கிடைக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அதேநேரத்தில், தேர்தல் ஆணையமோ, 'பொதுச் செயலர் நியமனம் சரியா; இரட்டை இலை சின்னம் யாருக்கு' என்ற கேள்விகளுக்கு முன்னதாக, தாங்கள்எழுப்பிய மற்றொரு கேள்விக்கு, சசிகலா விடமிருந்து பதில் வரவில்லையே என, கூறி வருகிறது.
 

பதில் இல்லை


அதாவது, வானகரத்தில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில், சசிகலாவை தற்காலிக பொதுச்செய லராக தேர்வு செய்தது தொடர்பான தீர்மானங்கள் அனைத்தும், தேர்தல் ஆணையத் திற்கு அனுப்பி வைக்கப்பட்டன; ஆனால், அவை எல்லாம் தமிழில் இருந்தன. அதற்குப் பதிலாக, பொதுக்குழு முடிவுகள் மற்றும் தீர்மானங்களை, ஆங்கிலத்தில் அனுப்பி வைக்கும்படி, சசிகலா தரப்புக்கு, தேர்தல் ஆணையத்தில் இருந்து கடிதம் அனுப்பப்பட்டது. அதற்கு, இன்னும் பதில் தரப்படவில்லை.

ஜெயலலிதா பதவிக் காலத்தில், பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டு, அதன் விபரங்கள் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டால், அதன் ஆங்கில நகலும் இணைத்து அனுப்பப்படும்.
ஆனால், சசிகலா தரப்பினரோ, வானகரம் பொதுக் குழு தீர்மான புத்தகத்தை, அப்படியே அனுப்பி வைத்துள்ளனர். 'புத்தகத்து புள்ளி விபரங்களை, ஆங்கிலப்படுத்தி அனுப்புங்கள்; அப்போது தான் பொதுக்குழு கூடியதையே எங்களால் அங்கீகரிக்க முடியும்' என, தேர்தல் ஆணையம் தரப்பில் கூறியும், அதற்கு இதுவரை பதில் தரப்படவில்லை.

இந்தப் பிரச்னையால், பொதுக்குழுவில், தற்காலிக பொதுச்செயலராக சசிகலா தேர்வு செய்யப் பட்டதை, அங்கீகரிக்கவோ அல்லது நிராகரிக்கவோ முடியாத நிலையில், தேர்தல் ஆணையம்உள்ளது. அதனால், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு, சசிகலா கையெழுத்திட்ட, பி.பார்ம் கொடுத்தால், அது செல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
 

நோட்டீஸ்


'இடைக்கால பொதுச் செயலர் என்ற அடிப்படையில், நான் பி.பார்ம் வழங்குகிறேன்' என, சசிகலா தரப்பில் கூறப்பட்டாலும், அதை தேர்தல் அதிகாரி ஏற்பாரா என்பது சந்தேகமே. ஏனெனில், சசிகலாவின் பொதுச்

 

செயலர் பதவி, இதுவரை தேர்தல் ஆணையத் தால், அங்கீகரிக்கப்படவில்லை. இதை, பன்னீர்செல்வம் தரப்பினர் முன்கூட்டியே சரியாக கணித்து தான், 'பொதுக்குழுவே அங்கீகரிக்கப்படாத நிலையில், சசிகலாவுக்கு பி.பார்ம் வழங்கும் உரிமையை, எதிர்வரும் தேர்தலின் போது தரக்கூடாது' என, தேர்தல் ஆணையத்திடம், தனியாக நோட்டீஸ் அளித்துள்ளனர்.
 

பிரச்னைக்கு தீர்வு


பன்னீர் தரப்பினர் முதலில் கொடுத்த புகார் தொடர்பாக, தேர்தல் ஆணையம் அனுப்பிய நோட்டீசுக்கு தான், முதலில் தினகரனும், தற்போது, சசிகலாவும் பதில் அளித்துள்ளனர். ஆனால், பொதுக்குழு தீர்மானம் மற்றும் முடிவுகளை ஆங்கிலத்தில் தரும்படி, தேர்தல் ஆணையம் கேட்டதற்கு இன்னும் பதில் தரப்படவில்லை.

இந்தப் பிரச்னையால், ஆர்.கே.நகரில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் வேட்பாள ருக்கு, சசிகலா சுலபமாக பி.பார்ம் அளித்துவிட முடியாது. அப்படியே கொடுத்தாலும், அதை கேள்விக்குள்ளாக்க பன்னீர் அணிக்கு, முழு உரிமை உள்ளது. அப்படி அவர்கள் பிரச்னை எழுப்பினால்,

அ.தி.மு.க.,வில் எந்த அணியினருக்கும், இரட்டை இலை சின்னம் கிடைக்க வாய்ப்பு இல்லை. மேலும், பொதுச்செயலராக சசிகலா தேர்வு செய்யப்பட்டது சரியா, தவறா என்ற கேள்விக்கு பதில் அளிக்க, தேர்தல் ஆணையம் எவ்வளவு நாட்கள் எடுக்கப் போகிறது என்பதும் தெரியவில்லை. அந்தப் பிரச்னைக்கு முடிவு கண்ட பிறகே, சின்னம் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.

- நமது டில்லி நிருபர்-

http://www.dinamalar.com/news_detail.asp?id=1728392

  • கருத்துக்கள உறவுகள்

beter.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.