Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளினால் உருவாக்கப்பட்டுள்ள குழுவினரே உறவினர்கள் கடத்தப்பட்டதாகக்கூறி தொலைக்காட்சிகளில் அழுகின்றனர் - அமைச்சர் கெஹெலிய தெரிவிப்பு; கடத்தல்கள் புதியவிடயமல்ல என்கிறார்

Featured Replies

புலிகளினால் உருவாக்கப்பட்டுள்ள குழுவினரே உறவினர்கள் கடத்தப்பட்டதாகக்கூறி தொலைக்காட்சிகளில் அழுகின்றனர் - அமைச்சர் கெஹெலிய தெரிவிப்பு; கடத்தல்கள் புதியவிடயமல்ல என்கிறார்

கடத்தல்கள் மற்றும் காணாமல் போதல்கள் என்பன எமது நாட்டிற்கு புதிய விடயமல்ல. 1988 ஆம் ஆண்டில் இத்தகைய சம்பவங்கள் தொடர்பில் எமக்கு அனுபவங்கள் உண்டு. இருப்பினும் தற்போது இடம்பெறும் கடத்தல் சம்பவங்கள் கிளிதநொச்சியுடன் தொடர்புபட்டவையாக இருக்கின்றன என்று தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான அரசாங்கத்தின் பேச்சாளரும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் நலன்புரி அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

விடுதலைப்புலிகளினால் உருவாக்கப்பட்டுள்ள குழுவினரே தமது உறவினர்கள் கடத்தப்பட்டதாக கூறி தொலைக்காட்சி முன் அழுகின்றனர். புலிகள் பின்னடைவுகளை சந்திக்கும்போதுஅனுதாபங்களை பெறுவதற்கு இவ்வாறான தந்திரோபாயங்களை கையாள்வது வழமையாகும் என்றும் அவர் கூறினார். நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தில் நேற்றுக்காலை நடைபெற்றது. இங்கு கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் மேற்கண்டவாறு கூறினார். இங்கு அவர் மேலும் கூறியதாவது.

கடந்த காலங்களில் நாட்டில் மனித உரிமைகள் பாரிய அளவில் மீறப்பட்டு வருவதாக கூறப்பட்டு வந்தது. அத்துடன் கடத்தல்கள், காணாமல் போதல், போன்ற சம்பவங்கள் இடம் பெறுவதாகவும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் விசனம் தெரிவிக்கப்பட்டது. நான் நடத்திய ஊடகவியலாளர் மாநாடுகளின்போது கேள்விகள் எழுப்பப்பட்டன. இது தொடர்பாக ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி மஹாநாம திலகரட்ன தலைமையில் மனித உரிமை மீறல் தொடர்பாக ஆராய்வதற்கென ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டது. ஆனால் அந்த ஆணைக்குழு தொடர்பாக சந்தேகம் வெளியிடப்பட்டதுடன் மனித உரிமை மீறல்களை தடுப்பதற்கு அது போதுமான நடவடிக்கை அல்ல என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை செய்ய சர்வதேச கண்காணிப்பாளர்களை இலங்கைக்கு வரவழைக்க நடவடிக்கை எடுத்தார். அந்த வகையில் இந்தியாவின் முன்னாள் நீதியரசர் பகவதி தலைமையில் 16 பேர் கொண்ட சர்வதேச கண்காணிப்புக்குழு கடந்த 12 ஆம் திகதியிலிருந்து இலங்கையில் செயற்படுகின்றது. இந்தக்குழுவில் அமெரிக்கா, இங்கிலாந்து அவுஸ்திரேலியா, மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பிரதிநிதிகள் அங்கம் வகிக்கின்றனர். இந்தக் விசாரணை குழு நாட்டில் இடம் பெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணை நடத்தும்.

முதற்கட்டமாக மூன்று மனித உரிமை மீறல் சம்பவங்களை இந்த சர்வதேச விசாரணைக்குழு பரிசீலனைக்கு எடுத்துள்ளது. முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை மற்றும் மூதூரில் 17 அரச சார்பற்ற பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை போன்ற சம்பவங்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த 12, 13 ஆம் திகதிகளில் இந்த விசாரணைக்குழு கொழும்பில் கூட்டங்களை நடத்தி நிலைமைகளை ஆராய்ந்துள்ளது.

கடத்தல்கள் மற்றும் காணாமல் போதல்கள் என்பன எமது நாட்டிற்கு புதிய விடயமல்ல. 1988 ஆ“ம் ஆண்டில் இந்த சம்பவங்கள் தொடர்பாக எமக்கு நிறைய அனுபவங்கள் இருந்தன. ஆனால் அப்போது இடம் பெற்ற கடத்தல்கள் அரசியல் நோக்கமாகவும் அரசியல் கட்சிகள் தொடர்புடையதாகவும் இருந்தன. இருப்பினும் தற்போது இடம் பெறும் கடத்தல்கள் சம்பவங்களில் 99 சதவீதமானவை கிளிநொச்சி சம்பந்தப்பட்டவையாகவே இருக்கின்றன. புலிகளின் குழுவினரே கதறி அழுகின்றனர் எமது அரசாங்க புலனாய்வுத் தகவல்களின்படி புலிகள் பின்னடைவுகளை சந்திக்கின்ற ஒவ்வொருமுறையும் சர்வதேச மற்றும் உள்நாட்டு மட்டத்தில் அனுதாபங்களைப் பெறுவதற்கு சந்திரோபாயங்களைப் மேற்கொள்வார்கள். அந்த வகையில் புலிகள் தற்போது ஒரு குழுவினரை உருவாக்கியுள்ளனர். அந்தக் குழுவினரே இந்நாட்களில் தொலைக்காட்சிகளுக்கு முன் தமது உறவினர்கள் கடத்தப்பட்டதாக கூறி அழுகின்றனர். இது உணர்வு பூர்வமான விடயமாகும். இதன் உள்நோக்கத்தை நாம் புரிந்து கொள்ளவேண்டும். கடத்தல்கள் தொடர்பாக முறைப்பாடுகளை செய்பவர்கள் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை வெளியிடுகின்றனர். எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் கடத்தல் சம்பவங்கள் தொடர்பாக கடந்தவாரம் பாராளுமன்றத்தில் உரையாற்றியிருந்தார். அதன் போது கடத்தல்கள் தொடர்பாக விசனம் தெரிவித்திருந்ததுடன் அண்மையில் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தமைக்காக கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர் லலித் செனவிரத்ன அப்பாவி ஒருவர் என்றும் தெரிவித்திருந்தார். உண்மையில் 1988 ஆம் ஆண்டு இந்நாட்டில் இடம் பெற்ற கடத்தல் சம்பவங்கள் குறித்து ரணில் விக்கிரமசிங்கவுக்கு அதிக அனுபவம் இருப்பதால் அவர் இவ்வாறு உரையாற்றி உள்ளார் போல் தெரிகிறது.

Thursday February 15 2007 05:34:44 AM GMT [virakesari.lk]

வடக்கில் புலிகளையும் தெற்கில் நாசகார சக்திகளையும் தோற்கடிப்பதே அரசுக்கு எஞ்சியிருக்கும் பிரச்சினை -ஆட்கடத்தல் முறைப்பாடு பொய் என்கிறார் ரம்புக்வெல

- கே.பி. மோகன் -

விடுதலைப் புலிகளுடன் இணைந்து நாசகார வேலைகளில் ஈடுபட்ட அடிப்படைவாத அரசியல் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்புப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். கொழும்பு, கொள்ளுப்பிட்டி கிராமோதய மண்டபத்தில் நேற்றுக் காலை இடம்பெற்ற வாராந்த பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்;

கடந்த காலங்களில் கொழும்பிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் நாசகார வேலைகளில் ஈடுபட்ட ஊடகவியலாளர்களென்ற தீவிரப்போக்குடைய மூவர் ஆயுதங்கள் வெடி பொருட்களுடன் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடமிருந்து பெற்ற தகவல்களின் அடிப்படையில் மேலும் ஏழு பேர் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.