Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தனிக்கட்சி தொடங்குகிறார் தீபாவின் கணவர் மாதவன்!

Featured Replies

தனிக்கட்சி தொடங்குகிறார் தீபாவின் கணவர் மாதவன்!

madhavan

தீபாவின் கணவர் மாதவன் புதியதாக கட்சி தொடங்க இருப்பதாக பேட்டி அளித்துள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியதற்கு பின் செய்தியாளர்களிடம் பேசினார் மாதவன். அப்போது அவர், 'புதிய கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இங்கு வந்துள்ளேன். தீபா பேரவை நடத்துகிறார். நான் கட்சி நடத்த இருக்கிறேன். அது பற்றி விரைவில் அறிவிப்பேன்.

madhavan

 நான் கட்சி தொடங்க இருப்பது பற்றி தீபா கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. தீபா பேரவையில் தீய சக்திகள் புகுந்துள்ளன. எம்ஜிஆர்-அம்மா-தீபா பேரவையில் உள்ள தீய சக்திகள் யார் என்பதை தகுந்த நேரம் வரும்போது மக்களிடம் அறிவிப்பேன். தீபா தன்னிச்சையாக செயல்படவில்லை. ஆர்.கே.நகரில் போட்டியிடுவது தொடர்பாக மக்களிடம் பேசி முடிவு செய்வேன்' என்றார்.

http://www.vikatan.com/news/tamilnadu/83929-jdeepas-husband-madhavan-announced-to-launch-new-party.html

  • கருத்துக்கள உறவுகள்

kalyanam.jpg

நன்றி : சின்னதம்பி திரைபடம்

  • தொடங்கியவர்
தீபா கணவர் மாதவன் காமெடி பேட்டி
 

 

 

 

spaceplay / pause

qunload | stop

ffullscreen

shift + slower / faster

volume

mmute

seek

 . seek to previous

126 seek to 10%, 20% … 60%

 

 
 

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, எம்.ஜி.ஆர்., அம்மா தீபா பேரவை என்று தனியாக பேரவைத் துவங்கி இருக்க, அவரது கணவர் மாதவன், திடீரென, கட்சி ஆரம்பிக்கப் போவதாக கூறியிருக்கிறார்.

 

Tamil_News_large_173240720170318010152_318_219.jpg

இன்று மாலை, சென்னை, மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் சமாதிக்கு வந்து வணங்கிய பின், அவர், விரைவில் தனிக்கட்சி துவங்கப் போவதாக அறிவித்திருப்பது, அரசியலில் காமெடியாகப் பார்க்கப்படுகிறது.
 

அவர் அளித்த பேட்டி:


தீபாவும் நானும் ஒரே வீட்டில்தான் வாழ்கிறோம். அங்கேயேதான் வாழ்வோம்.

அவர், தீபா பேரவை என்ற தனி அமைப்பைத் துவங்கி நடத்தி வருகிறார். அந்த அமைப்புக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. தீபா பேரவையில், சில தீய சக்திகள் புகுந்து, பேரவையை வழி நடத்துகின்றனர். அதை தீபாவிடம் தெரிவித் தேன். அதை அவர் கண்டு கொள்ளவில்லை.

இந்த நிலையில், ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பின், தீபா வீட்டில் திரண்ட ஆயிரக்கணக்கான அ.தி.மு.க., தொண்டர்கள், தனி இயக்கம் தொடங்க வலியுறுத்தினர். அதனால், விரைவில் தனிக்கட்சி தொடங்கப் போகிறேன். இந்த கட்சிக்கும், தீபாவின் பேரவைக்கும் எந்தத் தொடர்பும் இருக்காது. அது வேறு; இது வேறு.

தீபா பேரவையில் இருக்கும் தீய சக்திகள்குறித்து நேரம் வரும்போது அறிவிப்பேன். எனக்குத் தொடர்ந்து தீய சக்திகளிடம் இருந்து, மிரட்டல் கால்கள் வருகின்றன. அதைப் பற்றியெல்லாம் நான் பயப்படவும் இல்லை; கவலைப்படவும் இல்லை.

எனது கட்சி சார்பில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து, கட்சி தொண்டர்களுடன்

 

விவாதித்து முடிவெடுப்பேன். ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்கள் குறித்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்.இவ்வாறு அவர் பேட்டி அளித்தார்.

ஒரே வீட்டில் இருந்து கொண்டும், ஒரு பக்கம் மனைவி பேரவையும்; இன்னொரு பக்கம் கணவர் தனிக் கட்சி நடத்தப் போவதாகவும் அறிவித்திருப்பது, அரசியல் காமெடியாகவே பார்க்கப்படுகிறது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1732407

  • தொடங்கியவர்

தீபா கணவர் கட்சி ஆரம்பிப்பதன் பின்னணி இதுதான்!

தீபா கணவர்

"தடி எடுத்தவன்லாம் தண்டல்காரன்" என்று ஒரு பழமொழி சொல்வதுண்டு. அந்தப் பழமொழிகேற்றாற்போல் சமீபகாலமாக தமிழகத்தின் அரசியல் நிலைமை உருவாகி விட்டது. தமிழகத்தில் இப்போது இருக்கிற அரசியல் கட்சிகள் போதாது என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் கணவர் மாதவன் தனது ஆதரவாளர்களைத் திரட்டி புதிய அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளார். "தீபா தொடங்கியிருப்பது பேரவைதான், ஆனால் நான் தொடங்கப் போவது அரசியல் கட்சி. ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும். எனக்கும் தீபாவுக்கும் கருத்துவேறுபாடு ஏதும் இல்லை. நாங்கள் ஒரே வீட்டில்தான் இருப்போம்" என்று தெரிவித்து பரபரப்பை (?!) மேலும் அதிகப்படுத்தி உள்ளார் அவர்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் தமிழக அரசியல் களம்  நாளொரு பரபரப்பும், பொழுதொரு அறிவிப்புமாகச் சென்று கொண்டிருக்கிறது. செய்தித் தொலைக்காட்சி சேனல்களில் தினந்தோறும் 'பிரேக்கிங் நியூஸ்' இல்லாத நாளே இல்லை என்னும் அளவுக்கு அன்றாடம் நிறைய செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தபோது, ஜல்லிக்கட்டுக்காக அலங்காநல்லூரிலும், சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மக்கள் அறப்போராட்டத்தில் இறங்கியது, இதைத் தொடர்ந்து தமிழக அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்தது, ஜல்லிக்கட்டு அவசர சட்டம் இயற்றிய பிறகும் போராட்டம் நீடித்ததால், அவர்களைக் கலைக்க போலீஸார் சென்னை மெரினாவில் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை தாக்கியது, மீனவ குப்பத்துக்குள் புகுந்து போலீஸார் தாக்குதல், அ.தி.மு.க சட்டமன்றக் கட்சித் தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டது, ஓ.பன்னீர் செல்வம் ராஜினாமா, மெரினாவில் உள்ள ஜெ. சமாதியில் ஓ.பி.எஸ். தியானம் அமர்ந்து சசிகலா தரப்பினருக்கு எதிராக குற்றம்சாட்டியது, சசிகலா ஆதரவாளர்களால் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் கூவத்தூர் தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டது, சசிகலா உள்பட 3 பேருக்கு சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தால் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, பெங்களுரு சிறையில் அடைக்கப்பட்டது, எடப்பாடி பழனிசாமி முதல்வராகப் பொறுப்பேற்றது, சட்டசபை நம்பிக்கை வாக்கெடுப்பில் தி.மு.க உறுப்பினர்கள் ரகளை, எதிர்க்கட்சியினரை வெளியேற்றி விட்டு நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு வெற்றி பெற்றது, நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்துப் போராட்டம், டெல்லி ஜே.என்.யு பல்கலைக்கழகத்தில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் படுகொலை என்று அடுத்தடுத்து சென்சேஷனுடன் கூடிய செய்திகளுக்குப் பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது தமிழக அரசியல் களம்.

இந்தச் சூழ்நிலையில்தான், ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, காலியான சென்னை ஆர்.கே. நகர் தொகுதிக்கான இடைத்தேர்தலை அறிவித்து செய்தியின் பரபரப்பை மேலும் சூடுபிடிக்கச் செய்தது தேர்தல் ஆணையம். ஏப்ரல் 12-ம் தேதி நடைபெறவிருக்கும் ஆர்.கே.நகர் தேர்தலைக் குறிவைத்து பல்வேறு அரசியல் கட்சிகளும், அ.தி.மு.க-வின் இருவேறு அணியினரும் பரபரப்பாக இப்போதே இயங்கத் தொடங்கியுள்ளனர்.

சசிகலாவின் அக்காள் மகனும், அ.தி.மு.க துணைப் பொதுச் செயலாளருமான டி.டி.வி. தினகரன், ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து அரசியல் பரபரப்பு மேலும் அதிகரிக்கத் தொடங்கியது. தி.மு.க சார்பில் வடசென்னை பகுதியைச் சேர்ந்த மருதுகணேஷூம், ஓ.பன்னீர் செல்வம் அணி சார்பில் அ.தி.மு.க அவைத்தலைவர் இ.மதுசூதனனும் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டதால், கோடை வெயிலைக் காட்டிலும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்தசெய்திகள் அனல்பறக்கத் தொடங்கி உள்ளன. ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா இந்தத் தொகுதியில் போட்டியிடப்போவதாக ஏற்கெனவே அறிவித்துள்ளார். பாரதிய ஜனதா மேலிடமோ ஒருபடி மேலேபோய், தமிழக தலைமைக்குத்  தெரிவிக்காமல் ரகசியமாக தகவலை வைத்திருந்து இசையமைப்பாளர் கங்கை அமரனை ஆர்.கே.நகர் தொகுதிக்கான வேட்பாளராக அறிவித்து பரபரப்பை உச்சத்துக்குக் கொண்டு சென்றுள்ளது.

இதுபோன்ற சூழ்நிலையில்தான் தீபாவின் கணவர் மாதவன் புதிய கட்சி தொடங்கப்போவதாகவும், ஆர்.கே. நகரில் போட்டியிடுவது குறித்து ஆதரவாளர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். தீபாவுக்கும், அவரது கணவர் மாதவனுக்கும் என்ன கருத்து வேறுபாடோ தெரியவில்லை. மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதியில் நேற்று அஞ்சலி செலுத்திய மாதவன், தனது ஆதரவாளர்களைத் திரட்டி புதிய கட்சி தொடங்கப்போவதாக அறிவித்தார். "தீபா பேரவையில் தீய சக்தியின் ஆதிக்கம் அதிகரித்து விட்டது. தீய சக்தி யார் என்று பெயரைத் தெரிவிக்க விரும்பவில்லை. நேரம் வரும்போது, நான் அதைத் தெரிவிப்பேன். எனக்கும் தீபாவுக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. நாங்கள் ஒரே வீட்டில்தான் வசிப்போம்" என்று பேட்டி அளித்துள்ளார் அவர்.

அவரது இந்த திடீர் அறிவிப்பால், தீபாவை பின்னணியில் இருந்து சிலர் இயக்குகிறார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதனாலேயே அவரது கணவர், புதிய கட்சி பற்றிய அறிவிப்பை வெளியிட்டிருப்பதாகத் தெரிகிறது. தீபாவின் செயல்பாடுகளால், அவரை ஆதரித்த தொண்டர்கள், ஏற்கெனவே குழம்பியிருந்த நிலையில், அவரது கணவரின் திடீர் அறிவிப்பால், தொண்டர்களுடன் சேர்ந்து பொதுமக்களும்  பெரும் குழப்பம் அடைந்துள்ளனர். 'என்னதான் நடக்கிறது தமிழக அரசியலில்?' என்று மக்களும், அ.தி.மு.க தொண்டர்களும் புருவம் உயர்த்தி உள்ளனர்.

தீபா கணவர்

சசிகலா மீது குற்றச்சாட்டு தெரிவித்த ஓ.பன்னீர் செல்வம், தனி அணியாகச் செயல்படத் தொடங்கியதும், திடீரென்று ஒருநாள் ஜெயலலிதா நினைவிடத்துக்குச் சென்று ஓ.பி.எஸ்ஸைச் சந்தித்த தீபா, அ.தி.மு.க-வின் இரு கரங்களாக தாங்கள் செயல்படப்போவதாகத் தெரிவித்தார். ஓ.பன்னீர் செல்வத்துடன் இணைந்து செயல்படுவார் என அ.தி.மு.க தொண்டர்கள் எதிர்பார்த்த நிலையில், கடந்த மாதம் 24-ம் தேதி ஜெயலலிதா பிறந்த நாளன்று, எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை' என்ற பெயரில் புதிய அமைப்பைத் தொடங்கி, அதன் பொதுச் செயலாளராகவும், பொருளாளராகவும் தன்னை அறிவித்துக் கொண்டார். 'அப்படியானால், அது அரசியல் கட்சியா?' என்று செய்தியாளர்கள் கேட்டபோது, "இல்லை; இது பேரவைதான். அரசியல் கட்சி அல்ல" என்று கூறி மேலும் குழப்பினார் தீபா. இதுபோன்ற சூழ்நிலையில் தற்போது அவருக்கும், கணவருக்கும் இடையே என்ன நடந்தது என்று தெரியவில்லை. தீபாவின் கணவர் தனி ஆவர்த்தனம் செய்யத் தொடங்கி விட்டாரோ என்று நினைக்கும்வகையில், புதிய அரசியல் கட்சியைத் தொடங்கப் போவதாக அறிவித்துள்ளார்.

ஜெயலலிதா மறைந்த உடனேயே தீபாவை ஆஃப் செய்வதற்கு நடராஜன் தரப்பில் இருந்து பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாம். பல கோடி ரூபாய் பேரமும் பேசப்பட்டதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. நடராஜனின் முயற்சியால் தீபாவின் கார் ஓட்டுநர் மூலம் பல்வேறு தகவல்கள் பரிமாறப்பட்டதாகவும், ஆனால் தீபா அதற்கு சம்மதிக்கவில்லை என்றும் அந்தத் தகவல்கள் தெரிவித்தன.

ஓ.பன்னீர் செல்வத்துடன் இணைந்து தீபாவை செயல்பட விடாமல் பார்த்துக் கொண்டதும் நடராஜனின் சூழ்ச்சிதான் என்று தீபாவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 'தீபா எங்கள் வீட்டுப் பெண்' என்று நடராஜன் தெரிவித்ததற்கு பெரிய எதிர்ப்பு எதையும் தீபா தெரிவிக்கவில்லை. மேலும் சசிகலா பற்றியோ அல்லது அவரது உறவினர்கள் குறித்தோ தீபா இதுவரை பெரிய குற்றச்சாட்டுகள் எதையும் முன்வைக்கவில்லை. தீபா தனிக்கட்சி ஆரம்பிக்கப் போவதாக தகவல்கள் வந்து கொண்டிருந்த போதிலும், நடராஜன் தரப்பு தீபாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாக உறுதியான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இடையில் ஓ.பி.எஸ்ஸை தீபா சந்தித்ததன் பின்னணியிலும் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. நடராஜன் தரப்பில் இருந்து தீபாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், இந்த நிகழ்வுகளை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மாதவன், தீபாவுடன் ஆலோசனை நடத்தியதாகவும், இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதாகவும் தெரிகிறது. தனது கருத்தை தீபா ஏற்கவில்லை என்பதாலேயே புதிய அரசியல் கட்சி என்று கிளம்பியிருக்கிறாராம் மாதவன்.

தீபா கணவர்ஜெயலலிதா மறையும் வரை தீபாவை யார் என்றே அ.தி.மு.க தொண்டர்களுக்கோ, மக்களுக்கோ தெரியாது. அப்படி இருக்கும்போது, அவரது கணவரை எப்படி தொண்டர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்பது தெரியவில்லை. தீபாவே அரசியலில் சோபிப்பாரா என்பது, வரவிருக்கும் காலங்களில்தான் தெரியவரும். மக்கள் ஆதரவு, தேர்தலில் போட்டியிட்டால் அவருக்குக் கிடைக்கும் ஓட்டு, தொண்டர்கள் செல்வாக்கு என்று எதையுமே தீபா நிருபிக்காதநிலையில், அவரது கணவர் அரசியல் கட்சி தொடங்கப்போவதாக தெரிவித்திருப்பது தமிழக அரசியலில் கேலிக்கூத்தாகவே பார்க்கப்படுகிறது. தீபாவின் கணவர் என்ற ஒரே அஸ்திரத்தை வைத்துக் கொண்டு அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட்டிருப்பது, தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுபோன்ற சம்பவங்களால், தமிழக அரசியலில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் சாமான்ய அ.தி.மு.க தொண்டர்களும், அரசியலை உற்றுநோக்கிக் கொண்டிருக்கும் பொதுமக்களும் விழிபிதுங்கி நிற்கிறார்கள். குழப்பத்துக்கு மேல் குழப்பம் ஏற்பட்டு வருவது தமிழக அரசியலுக்கு ஆரோக்கியமானதல்ல என்பதே அரசியல்நோக்கர்களின் கருத்தாக உள்ளது. இதனால் நிலைகுலைந்து, செய்வதறியாது திக்கற்று நிற்போர் என்றால், எம்.ஜி.ஆரின் உண்மை விசுவாசிகளும், ஜெயலலிதா தலைமையை ஏற்றுக் கொண்டவர்களும்தான் என்பதை தீபா, அவரது கணவர், ஓ.பி.எஸ், தினகரன் போன்றோர் உணர்வார்களா?

"ஊரு ரெண்டுபட்டா கூத்தாடிக்குக் கொண்டாட்டம்" என்றொரு பழமொழி உண்டு. அ.தி.மு.க-வைப் பொறுத்தவரை, தற்போது இரண்டு அணிகளாகச் செயல்படுகிறது என்று எண்ணியிருந்த நேரத்தில், இன்னும் என்னவெல்லாம் அரங்கேறப்போகிறதோ என்ற பதைபதைப்பில் அ.தி.மு.க-வினர் ஆர்.கே.நகர் தொகுதி முடிவை எதிர்நோக்கி உள்ளனர்.

http://www.vikatan.com/news/coverstory/83965-this-is-the-reason-for-floating-a-new-political-party-by-deepas-husband.html?artfrm=related_article

  • தொடங்கியவர்

தீபாதான் பணம் வாங்கினார்... இல்லை, மாதவன்தான் பணம் வாங்கினார்..! - இது புது கலாட்டா

தீபா

''எவ்வளவு பிரச்னைகள் வந்தாலும் என் மனைவிக்கு பக்கபலமாக இருப்பேன். தீய சக்திகளை என் மனைவியிடமிருந்து விரட்டியடிப்பேன்'' என்றெல்லாம் சொல்லி வந்த ('எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை' பொதுச்செயலாளர்) தீபாவின் கணவர் மாதவன் தற்போது தனியாகப் புதிய கட்சி ஒன்றைத் தொடங்கப்போவதாக அறிவித்துவிட்டார். இதையடுத்து, தீபா பணம் வாங்கிவிட்டதாக மாதவன் தரப்பினரும், மாதவன் பணம் வாங்கி விட்டதாக தீபா தரப்பினரும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா சில தினங்களுக்கு முன் 'எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை'யை ஆரம்பித்தார். கட்சியின் நிர்வாகிகள் பட்டியலையும் தீபாவே அறிவித்தார். ஆனால், 'அந்தப் பட்டியலில் தனக்கு வேண்டியவர்களை மட்டுமே சேர்த்துள்ளார். கட்சிக்காக பணியாற்றியவர்கள் யாருக்கும் பொறுப்புகள் வழங்கப்படவில்லை' என்று தொண்டர்கள் அவர் வீட்டின் முன் போராட்டம் செய்ய ஆரம்பித்தனர். இதையடுத்து தீபாவின் கணவர் மாதவன் வெளியிட்டதாக மற்றொரு நிர்வாகிகள் பட்டியல் வெளிவந்தது. ஆனால், அதிலும் குறிப்பிட்ட சிலரது பெயர்கள் விடுபட்டுப் போனதாகக் கூறி  கொந்தளித்த தொண்டர்களில் பலர், 'எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை'யை விட்டு வெளியேறி மற்றக் கட்சிகளுக்கு சென்றனர். 'கணவன் - மனைவிக்குள் இருக்கும் பிரச்னையில் கட்சித் தொண்டர்களை இருவருமே சேர்ந்து ஏமாற்றி வருகிறார்கள்' என்று கொதித்தனர்.

மாதவன்இந்த நிலையில், சமீபத்தில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த மாதவன் "கட்சி நிர்வாகிகள் குறித்து நான் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. கட்சியை பொறுத்தவரை முடிவு எடுக்கும் அதிகாரம் தீபாவுக்கு மட்டுமே இருக்கிறது. எங்களைச் சுற்றி ஒரு சதிகார கும்பலே இருக்கிறது. அந்த கும்பல் எங்களை எப்போதும் அழிப்பதற்காக காத்துக்கொண்டிருக்கிறது. மேலும் எனக்கும், தீபாவுக்கும் எந்தவிதமான பிரச்னையும் கிடையாது. அவருக்கு ஆலோசனை தேவைப்படும் பட்சத்தில் நான் கண்டிப்பாக ஆலோசனை வழங்குவேன்" என்று கூறினார். மாதவனின் இந்தப் பேட்டி குறித்து விமர்சித்த தொண்டர்கள், ''இவர் சொல்கிற அந்த சதிகார கும்பல்கள் வேறு யாரும் இல்லை... தற்போதும் தீபாவை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கும்பல்தான் அவர்கள். இவர்களாலேயே மாதவன் - தீபா இருவருக்குள்ளும் பெரிய பிரச்னைகள் எழப்போகிறது'' என்று கணித்தார்கள்.

இந்த நிலையில், நேற்று (17-3-2017) இரவு மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கு சென்ற தீபாவின் கணவர் மாதவன், அங்கு அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ''புதிய கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இங்கு வந்துள்ளேன். தீபா பேரவை நடத்துகிறார். நான் கட்சி நடத்த இருக்கிறேன். அது பற்றியான அறிக்கையை விரைவில் வெளியிடுவேன்'' என்று சொல்லி தொண்டர்களின் கணிப்பை நிஜமாக்கினார். மாதவனின் இந்த அதிரடிப் பேட்டியை பார்த்த தீபா தரப்பினர் உச்சக்கட்ட கோபத்துக்கு உள்ளானார்கள். தீபா மற்றும் அவரது கணவர் மாதவன்
இதையடுத்து, தீபாவின் கருத்தை அறிவதற்காக தி.நகரில் உள்ள அவரது வீட்டுக்கு சென்ற பத்திரிகையாளர்களிடம், "மாதவனுக்கும் இந்தக் கட்சிக்கும் எந்த விதமான சம்பந்தமும் கிடையாது. அவர் சிலரிடம் பணம் வாங்கிக்கொண்டு இந்தக் கட்சியை உடைப்பதற்காகத்தான் எங்களோடு இதுவரையிலும் இருந்தார். இப்போது அதற்கான வேலையையும் செய்துவிட்டார். தீபாவின் கட்சி பற்றிப் பேச வேண்டுமானால் மட்டும் இங்கு வாருங்கள். மாதவனைப் பற்றிப் பேச இங்கு யாரும் வராதீர்கள்'' என்று கோபம் கொப்பளிக்கும் வார்த்தைகளில் பேசிமுடித்தனர் தீபாவின் கட்சி அலுவலகத்தில் இருக்கும் கட்சி நிர்வாகிகள்.

தீபா தரப்பினரின் இந்தக் கருத்துக்கு பதில் கேட்க மீண்டும் மாதவனை சந்திக்க சென்றபோது, "கட்சி வேலையாக மாதவன் வெளியே சென்றுவிட்டார்.'' என்று கூறிய மாதவன் தரப்பினர், "தீபாவை சிலர் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். அவர்கள் பிடியிலிருந்து தீபாவால் வெளியே வர முடியவில்லை. இதனால் தீபாவுக்கும், மாதவனுக்கும் பிரச்னை எழுந்துள்ளது. இதனால்தான் மாதவன் தனிக் கட்சி ஆரம்பிக்கப்போவதாக அறிவித்தார். அதனால் உண்மையான தொண்டர்கள் மாதவனுடன் வந்துவிட்டோம். தீபா தரப்பில் உள்ள சிலர்தான் அந்தக் கட்சியை உடைப்பதற்காக பணம் வாங்கிக்கொண்டு செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் 'எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை'யை கூடிய விரைவில் அழித்துவிடுவார்கள்" என்று  சாபம் கொடுத்தனர்.

'தீபா தரப்பினர் பணம் வாங்கிக்கொண்டு செயல்பட்டார்கள்' என்று மாதவன் தரப்பினரும் 'மாதவன் பணம் வாங்கிக்கொண்டு செயல்பட்டதாக' தீபா தரப்பினரும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றனர். 'இவர்களில் யார் சொல்வது உண்மை?' என்பது தெரியாமல், தொண்டர்கள் விழிபிதுங்கி நிற்கிறார்கள்.

http://www.vikatan.com/news/tamilnadu/84009-fight-between-deepa-and-madhavan-supporters-begins.html

  • தொடங்கியவர்

'அரசியலைவிட்டு நான் விலகவே தொல்லை தருகின்றனர்'-ஜெ.தீபா

J.Deepa

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா சில நாட்களுக்கு முன்னர், எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவையைத் தொடங்கினார். பின்னர், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலிலும் போட்டியிடப் போவதாக அறிவித்தார். இந்நிலையில், இரண்டு நாள்களுக்கு முன்னர் தீபாவின் கணவர் மாதவன், ஜெயலலிதாவின் சமாதியில் வந்து மரியாதை செலுத்திவிட்டு, சுமார் 1000 தொண்டர்களுடன் புதுக் கட்சித் தொடங்கப் போவதாக அறிவித்தார். தீபா, பேரவையைத் தொடங்கிய சில நாட்களிலேயே, அவரது கணவர் மாதவன் புதுக் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்தார்.

இதையடுத்து, இன்று தி.நகரில் செய்தியாளர்களைச் சந்தித்த தீபா, 'அரசியலைவிட்டு நான் விலக வேண்டும் என்பதற்காக பல்வேறு வகைகளில் எனக்குத் தொல்லை தருகின்றனர். என் கணவர் புதுக் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்தது அதிர்ச்சி அளிக்கிறது. என் கணவரை பின்னால் இருந்து யாரோ இயக்குகின்றனர். ஆர்.கே.நகரில் போட்டியிடுவேன் என்ற அறிவித்ததால் பல்வேறு வதந்திகளை பரப்புகின்றனர். வதந்திகளுக்கு பின்னால் சசிகலாவின் குடும்பம் இருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை தொடர்பாக வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். பேரவையை கலைத்துவிட்டதாக வரும் வதந்திகளில் உண்மை இல்லை. பேரவையில் அ.தி.மு.க-வின் தொண்டர்கள் இணைந்துவிடுவார்கள் என்ற அச்சத்தில் செயல்படுகிறார்கள்.' என்று கூறியுள்ளார்.

http://www.vikatan.com/news/tamilnadu/84006-i-have-been-pressured-to-withdraw-from-politics-says-deepa.html

  • தொடங்கியவர்
கணவருடன் தீபா மோதல்: காரணம் என்ன
 
 
 

பண விவகாரம் காரணமாகவே, தீபாவுக்கும், அவரது கணவருக்கும் இடையே, கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக, தகவல் வெளியாகி உள்ளது.

 

Tamil_News_large_173308620170318234939_318_219.jpg

ஜெ., மறைவுக்கு பின், அவரது அண்ணன் மகள் தீபா, 'எம்.ஜி.ஆர்., அம்மா தீபா பேரவை' என்ற அமைப்பை துவக்கினார். அதற்கு துணையாக இருந்த, அவரது கணவர் மாதவன் பேட்ரிக், திடீரென புதிய கட்சி துவங்க போவதாக அறிவித்துள்ளார். இது, தீபா ஆதரவாளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

அதுபற்றி, தீபா ஆதரவாளர்கள் கூறியதாவது: பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்படப் போவதாக அறிவித்தார். அதன்பின் பன்னீர்செல்வத்தை, மரியாதை நிமித்தமாக சந்தித்ததாகவும், தனித்து இயங்கப் போவதாக வும், தீபா தெரிவித்தார்.பேரவை துவங்குவதற் காக, உழைத்தவர்களுக்கு, பதவி தரவில்லை

என, குற்றச்சாட்டு எழுந்தது. அதைத் தொடர்ந்து, புதிய நிர்வாகிகள் விரைவில் நியமிக்கப்படுவர் என்றார்.

அவர், தன் செயல்பாடுகளை மாற்றிக் கொண்டே இருந்ததால், அவரை ஆதரித்தவர்கள், பன்னீர்செல்வம் பக்கம் சென்றனர். இந்தசூழலில், அவரது கணவர் மாதவன் பேட்ரிக், பேரவையில் இருந்து விலகுவதாகவும், தனிக்கட்சி துவங்கப் போவதாகவும், நேற்று முன்தினம் அறிவித்தார்.
இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதற்கு, பண விவகாரம் தான் காரணம்.

பேரவையில் பதவி பெறுவதற்காக, சிலர் மாதவனி டம் பணம் கொடுத்துள்ளனர். அவர்களுக்கு பதவி வழங்க, தீபா மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே, கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. மேலும், மாதவன் பின்னணியில், தினகரன் இருப்பதாகவும், குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதை, மாதவன் மறுத்துள்ளார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
 

யாரோ இயக்குகிறாங்க!


''என் கணவர் தனி கட்சி துவக்குவேன் என அறிவித்திருப்பது, அதிர்ச்சி அளிக்கிறது. அவரை யாரோ சிலர் இயக்குகின்றனர்,'' என, தீபா கூறினார்.
அவர் அளித்த பேட்டி:

பேரவை தொடர்பான வதந்திகளை நம்ப

 

வேண்டாம். ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டி யிடுவேன் என அறிவித்ததால், வதந்திகளை பரப்பி வருகின்றனர். பேரவையை கலைத்து விட்டதாக, வதந்திகளை பரப்புகின்றனர். வதந்திகளுக்கு பின்னால், சசிகலா குடும்பம் உள்ளது என்பதில், மாற்றுக் கருத்து இல்லை. பேரவையில், அ.தி.மு.க., தொண்டர்கள் இணைந்து விடுவர் என்ற அச்சத்தில், இவ்வாறு செயல்படுகின்றனர்.

அரசியலை விட்டு நான் ஓட வேண்டும் என்பதற்காக, பல்வேறு வடிவங்களில் தொல்லைகளை தருகின்றனர். ஆர்.கே.நகரில், எந்த சின்னம் கொடுத்தாலும், அதில் போட்டி யிடுவேன். கணவன் - மனைவி என்ற உறவில், எங்களுக்குள் எந்த பிரிவினையும் இல்லை. இவ்வாறு தீபா தெரிவித்தார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1733086

  • தொடங்கியவர்
தீபாவின் கணவர் பணத்துடன் ஓட்டம்?
 
 
 

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா வீட்டிலிருந்து, அவரது கணவர் மாதவன் பேட்ரிக், பணப்பெட்டியுடன் ஓட்டம் பிடித்ததாக, பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

 

Tamil_News_large_173372220170320002805_318_219.jpg

ஜெ., அண்ணன் மகள் தீபா, 'எம்.ஜி.ஆர்., அம்மா தீபா பேரவை'யை துவக்கினார். தீபாவும், அவரது கணவர் மாதவன் பேட்ரிக்கும், பேரவைக்கு தனித்தனியே நிர்வாகிகளை அறிவித்தனர். இது, தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது. இதனால், நம்பிக்கை இழந்த பல நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணிக்கு தாவினர்.

இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதாக, தீபா அறிவித்தார். சமீபத்தில், ஜெயலலிதாவின் சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்திய, அவரின் கணவர் மாதவன்

பேட்ரிக், மனைவி துவக்கியுள்ள பேரவைக்கு மாற்றாக, தனிக்கட்சி துவக்கப்போவதாக தெரிவித்தார்.

இருப்பினும், 'கட்சியும், பேரவையும் இணைந்து செயல்படும். தீபாவும், நானும் ஒரே வீட்டில் வசிப்போம்' என்றார்.ஆனால், மாதவன் திடீரென பணப்பெட்டியுடன் வீட்டிலிருந்து ஓட்டம் பிடித்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
 

இதுகுறித்து, தீபா பேரவை வட்டாரங்கள் கூறியதாவது:


தீபா பேரவை, பல இடங்களில் கலைக்கப்பட்டு விட்டது. பேரவையில் இருந்த, திருச்சி மற்றும்
அரியலுாரை சேர்ந்த முன்னாள், எம்.எல்.ஏ.,க்கள் பன்னீர்செல்வம் அணிக்கு தாவி விட்டனர். பேரவை நிர்வாகிகள் நியமனத்திற்காக, வசூலித்த பணம் தொடர்பாக, தீபாவுக்கும், அவரது கணவருக்கும் இடையே முட்டல், மோதல் ஏற்பட்டுள்ளது.

இதனால், பெட்டி ஒன்றுடன், மாதவன் பேட்ரிக் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். அதில், நிர்வாகிகளிடம் வசூலித்த பணம் மற்றும் ஆவணங்கள் இருந்ததாக தெரிகிறது.

தனிக்கட்சி துவங்குவது குறித்து, சென்னையில் நேற்று, மூன்று இடங்களில் ஆலோசனை நடத்த, மாதவன் பேட்ரிக் திட்டமிட்டிருந்தார். போலீஸ்

 

அனுமதி மறுத்ததால், அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. கணவரின் செயலால், தீபா கடும் அதிருப்தியில் உள்ளார். இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல், முடிவுக்கு வருமா என்பது தெரியவில்லை. இவ்வாறு பேரவை வட்டாரங்கள் கூறின.
 

பின்வாங்க மாட்டேன்


இதற்கிடையில், தன் வீட்டிற்கு வந்த, தொண்டர்கள் முன் நேற்று தீபா பேசுகையில், ''நான் ஆர்.கே.நகரில் போட்டியிடுவதை பலர் தடுக்க முயற்சிக்கின்றனர். எத்தனை தடைகள் வந்தாலும் பின் வாங்க மாட்டேன்; நான் போட்டியிடுவது உறுதி; அனைவரும் ஆதரிக்க வேண்டும்,'' என்றார்.
- நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1733722

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.