Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அ.தி.மு.க.,வில், எதிரும் புதிருமாக உள்ள சசிகலா - பன்னீர் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் இடையே, திடீர் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. சட்டசபை கூட்டத்தில், இரு தரப்பினரும் சகஜமாக பேசி, பழைய நட்பை வெளிப்படுத்தினர்.

Featured Replies

gallerye_00173360_1734508.jpg

அ.தி.மு.க.,வில், எதிரும் புதிருமாக உள்ள சசிகலா - பன்னீர் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் இடையே, திடீர் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. சட்டசபை கூட்டத்தில், இரு தரப்பினரும் சகஜமாக பேசி, பழைய நட்பை வெளிப்படுத்தினர். சசிகலா நியமனம், இரட்டை இலை சின்னம் போன்ற விவகாரங்களில், தேர்தல் கமிஷன் தீர்ப்பு நெருங்குவதால், சசி தரப்பினர், பன்னீர் அணியினர் மீது பாசம் காட்ட துவங்கி உள்ளனர். இதற்கிடையில், ஓ.பன்னீர்செல்வம் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சந்திப்பால், தினகரன் வட்டாரம் கலக்கம் அடைந்துள்ளது.

 

Tamil_News_large_1734508_318_219.jpg

சட்டசபையில், நேற்று பட்ஜெட் மீதான விவாதம் நடந்தது. கேள்வி நேரத்தின் போது, தி.மு.க., - எம்.எல்.ஏ., தங்கம் தென்னரசு, 'சிட்டுக் குருவிகளை பாதுகாக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, வலியுறுத்திய போது, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் சிலர், மேஜையை தட்டி வரவேற்றனர்.
விவாதத்தில், தி.மு.க., - எம்.எல்.ஏ., பழனிவேல் தியாகராஜன் ஆங்கிலத்தில் பேசினார். அவர் பேசியது குறித்து, பன்னீர் அணியில் உள்ள, முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன், நிதி அமைச்சர் ஜெயக்குமாருக்கு, சில ஆலோசனைகள் வழங்கினார்.

 

நெருங்கும் தீர்ப்பு


பன்னீர் அணியில் உள்ள செம்மலையுடன், அமைச்சர்கள் ராஜூ, உதயகுமார் ஆகியோர், நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தனர். முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், சபைக்கு வந்த போது, சில அமைச்சர்கள், அவருக்கு வணக்கம் தெரிவித்தனர். இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்டுள்ள இந்த திடீர்மாற்றத்திற்கு, தேர்தல் கமிஷன் தீர்ப்பு நெருங்குவது தான் காரணம் என, அ.தி.மு.க., வட்டாரத்தில் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஒரே விமானத்தில் பயணித்த, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வமும், அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் சந்தித்து பேசிய தகவல், கட்சியின் துணை பொதுச்செயலர் தினகரனை கலக்கம் அடைய செய்துள்ளது.முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், பெரியகுளம் தொகுதியில், மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் செய்தார். அதை முடித்து, நேற்று முன்தினம், மதுரையிலிருந்து சென்னைக்கு, விமானம் மூலம் திரும்பினார்.
 

ரகசிய தகவல்கள்



மதுரை விமான நிலையத்தில், ராஜேந்திர பாலாஜியை கண்டதும், அங்கு திரளாக கூடியிருந்த பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள், 'சசிகலா ஒழிக, தினகரன் ஒழிக' என, கோஷமிட்டனர். அதை பார்த்த அமைச்சர்,
எந்த எதிர்ப்பும் காட்டாமல், ஒதுங்கி போய் விட்டார்.

 

பின், இருவரும் ஒரே விமானத்தில் பயணித்தனர்.அப்போது, பன்னீர் செல்வத்திடம் ராஜேந்திர பாலாஜி, சில ரகசிய தகவல்களை பகிர்ந்து கொண்டதாக கூறப்படுகிறது.

அதிரடி மாற்றம்


இதுகுறித்து, பன்னீர் அணி வட்டாரங்கள் கூறியதாவது:சசிகலாவின் தம்பி திவாகரன் சிபாரிசில், மாவட்ட செயலர், அமைச்சர் பதவிக்கு உயர்ந்தவர் ராஜேந்திர பாலாஜி. அந்த விசுவாசத்தில், சசிகலா அணியில் உள்ளார். ஆனாலும், பன்னீர்செல்வம் மீது மிகுந்த மரியாதை உள்ளவர்.அதனால், கூவத்துார் சொகுசு விடுதியில், சசிகலா ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த போது, பன்னீர்செல்வம் அணிக்கு வருவதற்கு தயாராக இருந்துள்ளார். இருப்பினும், அவரை, சசிகலா குடும்பத்தினர் தடுத்து விட்டனர்.
விமானத்தில், பன்னீரிடம் பேசிய போது, 'என் கட்டுப்பாட்டில், ஐந்து எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். இரட்டை இலை சின்னம் தொடர்பான விவகாரத்தில், தேர்தல் கமிஷன் தீர்ப்புக்கு பின், உங்கள் அணிக்கு வருவோம்' என, அவர் கூறியதாக தெரிகிறது.
மேலும், பொதுச்செயலராக, சசிகலா நியமிக்கப்பட்ட விவகாரத்திலும், இரட்டை இலை சின்னம் யாருக்கு சொந்தம் என்பதிலும், தேர்தல் கமிஷன் விரைவில் தீர்ப்பு அளிக்க உள்ளது. அந்த தீர்ப்புக்கு பின்னர், அ.தி.மு.க.,வில் அதிரடி மாற்றம் ஏற்படும். அதற்கு அச்சாரம் தான், இந்த சந்திப்புகள்.இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
- நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1734508

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, நவீனன் said:

இரட்டை இலை சின்னம் தொடர்பான விவகாரத்தில், தேர்தல் கமிஷன் தீர்ப்புக்கு பின், உங்கள் அணிக்கு வருவோம்' என, அவர் கூறியதாக தெரிகிறது.
மேலும், பொதுச்செயலராக, சசிகலா நியமிக்கப்பட்ட விவகாரத்திலும், இரட்டை இலை சின்னம் யாருக்கு சொந்தம் என்பதிலும், தேர்தல் கமிஷன் விரைவில் தீர்ப்பு அளிக்க உள்ளது. அந்த தீர்ப்புக்கு பின்னர், அ.தி.மு.க.,வில் அதிரடி மாற்றம் ஏற்படும்.

 

ஆமா அதிரடி மாற்றம் நிகழும்..!

image.jpg


டிஸ்கி :

தமிழருடைய வாழ்வில் என்றும் பிரிக்க முடியாத அங்கமாக இருக்கும் "வாழை இலையை" தேர்தல் கமிசனிடம் கேட்கவும் .!!.நீங்கள் வாழை இலையில் கட்டி கொடுக்கும் புரியாணி பார்சலை தின்று போட்டு நன்றி மறந்து வேறு சின்னத்திற்கு ஓட்டு போடுவானா..? ரெல் மீ!!  :cool:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.