Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோமாளிகளின் அரசியல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கோமாளிகளின் அரசியல்

தென்னிலங்கையின் அரசியல் எவ்வளவு கோமாளித்தனமானது என்பதை மீள ஒரு தடவை நிரூபித்திருக்கின்றார் அனுரா பண்டாரநாயக்கா.

அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதை அடுத்து ""அந்தக் கோமாளிகளின் களியாட்டத் திருவிழாவிலிருந்து (ஞிச்ணூணடிதிச்டூ ணிஞூ ஞிடூணிதீணண்) வெளியே வந்தமைக்காக மிகவும் மகிழ்கிறேன்.'' என்று தெரிவித்திருந்த அனுரா பண்டாரநாயக்கா, திரும்பவும் ஐந்து நாட்களுக்குள் "அந்தர் பல்டி' அடித்து மீண்டும் அதே கோமாளிகளின் களியாட்டத் திருவிழாவுக்குள் போய் விழுந்து விட்டார்.

அனுரா பண்டாரநாயக்காவைப் பொறுத்தவரை இந்தக் குத்துக்கரணங்கள் ஒன்றும் புதியவை அல்ல. அவரது அரசியல் பாதையில் அடிக்கடி நடக்கும் நிகழ்வுதான் அது. என்றாலும் ஐந்து நாள்களுக்குள் இப்படி ஒரு முழுக் குத்துக்கரணத்தை எல்லோராலும் நம்பமுடியாமல்தான் இருக்கின்றது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை ஸ்தாபித்தவர் அனுராவின் தந்தை எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா. கடந்த வருடம் வரை கடந்த சுமார் அரைநூற்றாண்டு காலமாக அக்கட்சியின் தலைமை அவர்களது குடும்பத்தின் சொத்துரிமையாகவே இருந்து வந்தது. முதலில் அனுராவின் தந்தையிடம். அவர் இறக்க, அனுராவின் தாயார் சிறிமாவோ பண்டாரநாயக்காவிடம். பின்னர் அவரிடமிருந்து அனுராவின் அக்கா சந்திரிகா குமாரதுங்கவிடம்.

கடந்த ஆண்டுதான் கட்சியின் தலைமை புதிய நிறைவேற்று அதிகார ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ஷவினால், பண்டாரநாயக்கா குடும்பத்திடமிருந்து கை மாறியது.

அனுரா பண்டாரநாயக்கா இந்த நாட்டின் இரு முன்னாள் பிரதமர்களின் ஒரே மகன். இலங்கையில் முன்னர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக இருந்த சந்திரிகா குமாரதுங்கவின் ஒரே சகோதரர். அது மட்டுமல்ல. இலங்கையின் அரசியல் சரித்திரத்தில் நீண்ட காலம் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருப்போரின் வரிசையில் அனுராவுக்கும் இடம் உண்டு. முப்பது ஆண்டுகளாக அவர் எம். பியாக இருக்கிறார். சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் உட்பட முக்கிய அமைச்சர் பதவிகளை வகித்தவர்.

ஆனாலும் அடிக்கடி கட்சி மாறும் "ஆயாராம் காயாராம்' போக்கு அனுராவின் அரசியல் வாழ்வோடு பின்னிப் பிணைந்தே வந்துள்ளது. ஆனால் இப்படிக் குறுகிய காலத்துக்குள் ஐந்து நாட்களுக்குள் அவர் "பல்டி' அடித்தமைதான், அவரைப் பெரிய கோமாளியாக்கியிருக்கின்றது.

1977இல் நுவரெலியா மஸ்கெலியா தேர்தல் தொகுதியிலிருந்து இரண்டாவது உறுப்பினராக நாடாளுமன்றுக்குத் தெரிவாகியதன் மூலம் பிரியதர்ஷி அனுரா சொலமன் டயஸ் பண்டார நாயக்காவின் அரசியல் பிரவேசம் இலங்கையில் முக்கியத்துவம் பெற்றது. அப்போது முதலே அவரது அரசியல் பாதையின் அடிச்சுவடு பல்வேறு குத்துக்கரணங்களைக் கண்டுவந்துள்ளது என்பதுதான் சரித்திரம்.

1981 இல் தமது தாயார் தலைமையிலான ஸ்ரீ. ல. சு. கட்சியிலிருந்து பிய்த்துக் கொண்டு, மைத்திரிபால சேனநாயக்காவோடு தனி அதிருப்திக்குழு அமைத்த அனுரா அணியினர், தாமே கட்சியின் நிர்வாகிகள் என உரிமை கொண்டாடினர். அதை அடுத்து உண்மையான சுதந்திரக் கட்சியினர் யார் என்பதைத் தீர்மானிப்பதற்கான இழுபறி நீதிமன்றம்வரை சென்றது.

தமது அரசியல் நிலைப்பாட்டை மீண்டும் மாற்றிக் கொண்ட அவர் இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் தாயாரின் தலைமையை ஏற்றுக் கட்சிக்குள் வந்து இணைந்துகொண்டார். அந்தப் பின்னணியில் 1983முதல் 1988 வரை எதிர்க்கட்சித்தலைவர் பதவியையும் வகித்தார்.

1990களின் முற்பகுதியில் கட்சியின் தலைமை தாயார் சிறிமாவோ பண்டாரநாயக்காவுக்குப் பின் யாருக்கு என்ற "குடும்பச் சொத்துரிமை' பிணக்கு எழுந்தது. அனுராவுக்கும் அக்கா சந்திரிகாவுக்கும் இடையில் மோதல் வலுக்க, அதில் பின்னடைவு கண்டு, கட்சியின் அதிகாரத்தை அக்காவிடம் இழந்த நிலையில், தமது குடும்பக் கட்சியை விட்டு விலகி 1993இல் ஐ. தே. கட்சிக்குத் தாவினார் அனுரா.

அதன்மூலம் முதல் தடவையாக அமைச்சர் பதவி ஒன்றை (உயர்கல்வி அமைச்சர் பதவியை) பெற்றுக்கொண்டார்.

2000ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலின்போது ஐ. தே. கட்சியின் எம்.பியாகத் தெரிவான அவர் இரு பிரதான கட்சிகளுக்கும் இடைப்பட்ட ஒருவராகக் கருதப்பட்டு அதன் அடிப்படையில் சபாநாயகரானார்.

2001இல் மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் பிரவேசம். அதன் பின்னர் உல்லாசப் பயணத்துறை அமைச்சர், வெளிவிவகார அமைச்சர் எனப் பல அமைச்சர் பதவிகளை அலங்கரித்தார்.

2005 இறுதியில் தமது சகோதரி சந்திரிகா பண்டாரநாயக்காவைத் தொடர்ந்து அவருக்குப் பின்னர் கட்சிக்குள் முக்கிய அந்தஸ்து நிலையைப் பெறுவதற்காகப் போட்டியிட்ட அனுரா, அப்போட்டியில் மஹிந்த ராஜபக்ஷவிடம் தோல்வியுற்று, கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பதவியைப் பறிகொடுத்தார்.

அதன்பின்பு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தமது கட்சி வேட்பாளர் மஹிந்தவுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்யாமல் ஒதுங்கி நின்றார். மஹிந்த ராஜபக்ஷ அத்தேர்தலில் அனுரா எதிர்பார்த்தமைக்கு மாறாக வெற்றியீட்ட, மீண்டும் அவரது அமைச்சரவையில் ஒட்டிக்கொண்டார்.

இந்த மாதம் முற்பகுதியில் இருவருக்கும் இடையிலான கருத்து முரண்பாடு முற்ற, அவரை அமைச்சுப்பதவியிலிருந்து தூக்கிக்கடாசினார் ஜனாதிபதி ராஜபக்ஷ.

ஜனாதிபதியின் அமைச்சரவையை "கோமாளிகளின் களியாட்டத் திருவிழா' என விமர்சித்து அதிலிருந்து வெளியே வந்தமை தமக்கு மகிழ்ச்சி தருகிறது என்று குறிப்பிட்ட அனுரா, ஐந்து நாட்களுக்குள் மீண்டும் "பல்டி' அடித்து, ஜனாதிபதியிடம் சரணாகதி அடைந்துவிட்டார்.

இவ்வாறு குத்துக்கரணங்களே தமது அரசியல் பாதையாகக் கொண்ட ஒருவரின் நடவடிக்கை இது என்பதால் மக்களுக்கு இந்த "அந்தர் பல்டி' அதிசயமாகப் படவில்லை. என்றாலும், என்ன செய்வது, இதையெல்லாம் "அரசியல்' என்று கருதி பார்த்திருக்க வேண்டிய சகித்துக் கொண்டிருக்க வேண்டிய அவலமும் கட்டாயமும் இலங்கை மக்களுக்கு..........!

http://www.uthayan.com/editor.html

Edited by கறுப்பி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.