Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கரவெட்டியில் ஈ.பி.டி.பி ஒட்டுக்கும்பலினால் ஊடகவியலாளர் கடத்தல்.

Featured Replies

ramachchandiran16020702cc2.jpg

யாழ்ப்பாணம் கரவெட்டியில் ஊடகவியலாளர் ஒருவர் நேற்று இரவு சிறிலங்கா இராணுவத்தினருடன் இணைந்து செயற்படும் ஒட்டுக்கும்பலான ஈ.பி.டி.பியினரால் கடத்தப்பட்டுள்ளார். கடத்தப்பட்டவர் சுப்பரமணியம் இராமச்சந்தரன் (37) என்ற துன்னாலை வாசியாவார். நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி கற்பிக்கும் இவர், கடந்த 5 வருடங்களாக தினக்குரல், வலம்புரி ஆகிய பத்திரிகைகளின் வடமராட்சி செய்தியாளராகவும் கடமையாற்றி வந்துள்ளார்.

கரவெட்டி அரசடியில் தனியார் கல்வி நிலையம் (Talent Institute, Kodikamam Road, Karaveddy) ஒன்றை வைத்திருக்கும் இவர், நேற்றிரவு கற்பித்தலை முடித்து வீடு திரும்பிக்கொண்டிருந்த போது கடத்தப்பட்டுள்ளார். இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர், நேற்றிரவு முதல் காணவில்லை என நெல்லியடி சிங்கள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

கடத்தப்பட்ட இந்த ஊடகவியலாளர் தற்போது நெல்லியடியிலுள்ள ஒட்டுக்குழு ஈ.பி.டி.பியினரின் முகாமில் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுவதாக அறிய முடிகிறது.

கடந்த காலங்களில் யாழில் சிங்கள இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் ஒட்டுக்குழுவான ஈ.பி.டி.பியினரால் பல கல்விமான்கள், ஊடகவியலாளர்கள், வர்த்தகர்கள், பொதுமக்கள் என பலர் கடத்தப்பட்டு கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Web : neruppu.org

Friday, 16 Feb 2007

http://www.neruppu.org/index.php?subaction...amp;ucat=1&

தினக்குரல், வலம்புரி பத்திரிகைகளுக்கான யாழ் ஊடகவியலாளர் இராமச்சந்திரன் கடத்தல்.

தினக்குரல், வலம்புரி பத்திரிகைகளுக்கான யாழ். ஊடகவியலாளராகப் பணியாற்றி வந்த சுப்பிரமணியம் இராமச்சந்திரன் (வயது 37) நேற்று வியாழக்கிழமை மாலை முதல் காணாமல் போய் உள்ளார்.

தனியார் கல்வி நிறுவனமொன்றை வடமராட்சியின் கரவெட்டியிலுள்ள அரசடிப் பகுதியில் நடத்தி வரும் இரண்டு குழந்தைகளின் தந்தையான இவர், தனது கல்வி நிலையத்தை மூடிவிட்டு உந்துருளியில் வீடு திரும்பிக் கொண்டிருக்கையில் வழியில் காணாமல் போயுள்ளார்.

இவரை ஈபிடிபியினர் கடத்தியிருக்கலாம் என நம்பப்படுவதுடன், நெல்லியடி காவல் நிலையத்திலும் இந்த கடத்தல் தொடர்பாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கரவெட்டி, துன்னாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஊடகவியலாளர் இராமச்சந்திரன், யுத்த நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்தானதிலிருந்து கடந்த 5 வருடங்களாக, இரு பத்திரிகைகளுக்கும் யாழ். பிராந்தியத்தின் பிரதான ஊடகவியலாளராகப் பணியாற்றி வந்துள்ளார்

-Puthinam-

  • கருத்துக்கள உறவுகள்

கடத்தப்பட்ட ஊடகவிலாளரை உடன் விடுவிக்கவும் - சுதந்திர ஊடகஇயக்கம்

- பண்டார வன்னியன் Saturday, 17 February 2007 11:43

பெப்வரி 15ஆம் திகதி வியாழக்கிழமை மாலை காணாமல்போனதாக அறிவிக்கப்பட்டுள்ள யாழ் ஊடகவியலாளர் சுப்ரமணியம் இராமச்சந்திரன் உடனடியாக விடுவிக்கப்படவேண்டும் என்று சுதந்திர ஊடக இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக சுதந்திர ஊடக இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விபரம் வருமாறு.

யாழ் தினக்குரல், மற்றும் வலம்புரி ஆகிய பத்திரிகைகளின் வடமராட்சி செய்தியாளராக 2001ஆம் ஆண்டிலிருந்து கடமையாற்றிவந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையாரான சுப்ரமணியம் இராமச்சந்திரன் (37) காணாமல்போயிருப்பதாக சுதந்திர ஊடக இயக்கத்தின் யாழ் தொடர்புகள் மூலம் தெரியவந்திருக்கிறது. யாழ் தினக்குரல், வலம்புரி என்பன, போரினால் பாதிக்கப்பட்டுள்ள யாழ் குடாநாட்டில் வெளியிடப்பட்டுவரும் இரண்டு தினசரிப் பத்திரிகைகளாகும். 2007 பெப்வரி 15ஆம் திகதி முதல் இவர் காணாமல்போயிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ் குடாநாட்டில் அனேகமாக ஒவ்வொரு நாட்களும் பழிவாங்கும் கொலைகள் இடம்பெற்றுவரும் ஒரு சூழ்நிலையில், இவரது உயிருக்கு ஆபத்து ஏதும் ஏற்படலாம் என்று சுதந்திர ஊடக இயக்கம் அச்சமடைந்துள்ளது.

வழமைபோல மாலை 6.30 க்கு, வடமராட்சி பிரதேசத்தின் கரவெட்டி அரசடியிலுள்ள தனியார் வகுப்பிலிருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தூரத்தில் துன்னாலையிலுள்ள தனது வீட்டுக்குப் புறப்பட்ட இவர் வீடு போய்ச் சேரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமராட்சி பிரதேசத்தில் அண்மையில் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரையிலான ஊரடங்குச் சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.

இவரது தகப்பனார் இதுகுறித்து நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இவ்வாறான முறைப்பாடு ஒன்று தமக்குக் கிடைக்கப்பெற்றிருப்பதாகவும

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.