Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதிக்கு மங்கள 10 அம்ச யோசனைகள்

Featured Replies

* `இணங்கினால் ஒத்துழைக்கத் தயார்'

-ப.பன்னீர்செல்வம் -

அரச நிர்வாகத்தில் குடும்ப அதிகாரமே கோலோச்சுவதாகவும் நாட்டின் தலைமைத்துவம் சகோதரர்கள், உறவினர்களினதும் கைதியாக மாறிவிட்டதாகவும் ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கொள்கைகள் குழிதோண்டிப் புதைக்கப்பட்டிருப்பதாகவும் கடுமையான குற்றச்சாட்டுகளை தெரிவித்திருக்கும் அமைச்சர், பதவியிலிருந்து நீக்கப்பட்ட மாத்தறை மாவட்ட எம்.பி.மங்களசமரவீர, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு பத்து யோசனைகளை முன்வைத்திருப்பதாகவும் அவற்றுக்கு அரசின் தலைவர் இணங்கினால் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொள்ளாது பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினராக இருந்து ஆதரவு வழங்கத்தயாரெனவும் அறிவித்திருக்கிறார்.

மங்கள சமரவீரவுடன் அமைச்சரவையிலிருந்தும் நீக்கப்பட்ட கம்பஹா மாவட்ட எம்.பியான ஸ்ரீபதி சூரியாராச்சியும் இதே நிலைப்பாட்டை தெரிவித்திருக்கிறார்.

பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நேற்று வியாழக்கிழமை இடம் பெற்ற சுமார் 3 மணிநேர ஊடகவியலாளர் மாநாட்டிலேயே மங்கள சமரவீரவும் ஸ்ரீபதிசூரியாராச்சியும் இத்தக் கருத்துகளை வெளியிட்டனர்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று சகோதரர்களினதும் உறவினர்களினதும் கைதியாக மாறியுள்ளார். நாட்டிற்கும் மக்களுக்கும் தேவையான தீர்மானங்களை எடுக்கும் உரிமை மக்கள் பிரதிநிதிகளிடமிருந்து பறிக்கப்பட்டு முக்கூட்டு (Triko) அரச நிர்வாகமே முன்னெடுக்கப்படுகிறது.

இதிலிருந்து விடுபடுவதற்கு நாம் ஜனாதிபதிக்கு முன்வைக்கும் பத்து யோசனைகளை ஏற்று நடைமுறைப்படுத்த இணங்கினால் அமைச்சர் பதவிகளை பெற்றுக் கொள்ளாது பின்வரிசை ஆசனங்களில் அமர்ந்து அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கவும் தயாரென்று மங்கள சமரவீர தெரிவித்தார்.

இம் மாநாட்டில் கலந்துகொண்ட ஸ்ரீபதி சூரியாராச்சி தான் மீண்டும் அமைச்சர் பதவியை பெற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்திருப்பதாக வெளிவந்த செய்திகளை மறுத்ததோடு அது தொடர்பாக எதுவிதப் பேச்சுவார்த்தைகளும் நடத்தப்படவில்லையென்றும் கூறினார்.

இம் மாநாட்டில் தொடர்ந்து உரையாற்றிய மங்கள சமரவீர தெரிவித்ததாவது,

குடும்ப ஆதிக்கம் எம்மை வெளியேற்றும் படலம் கடந்த செப்டெம்பர் மாதம் பசில், கோதாபய மற்றும் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது அத்தோடு மகிந்த சிந்தனையிலிருந்து விலகிச் சென்று சுதந்திரக் கட்சியின் கொள்கைகளை கைவிட்டு, அடிப்படைவாத, பாஸிஸ, சர்வாதிகார ஆட்சியே தொடர்கின்றது. எம்மை வெளியேற்ற அனைத்து வழிகளிலும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. நாம் பொறுமை காத்தோம் வெளியேறி நாட்டில் நெருக்கடியை தோற்றுவிக்கக் கூடாதென நினைத்தோம்.

நிறைவேற்று அதிகாரத்தை பெற்றுக்கொடுப்பதற்காக பகலிரவு பாராது அர்ப்பணிப்புடன் செயற்பட்ட எம்மை அதே நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி அமைச்சுப் பதவிகள் பறிக்கப்பட்டன.

புதிய இலங்கையை கட்டியெழுப்புவதற்காக ஜே.வி.பி.யுடன் இணைந்து 2004 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது மக்கள் ஆணையை கோரினோம். கிடைத்தது, ஆனால் தற்போது அனைத்தும் தலை கீழாக மாறி சின்னாபின்னமாகி விட்டன.

அரசியல்வாதிகளை உள்ளடக்காமல் சகோதரர்களை உள்ளடக்கிய "சிறுஅமைச்சரவையே" தீர்மானங்களை எடுக்கின்றது. அனைத்து அமைச்சுக்களினதும் நடவடிக்கைகளில் சகோதரர்களின் தலையீடு உள்ளது. உறவினர்கள் புடை சூழ்ந்துள்ளனர். மொத்தத்தில் ஜனாதிபதி உறவினர்களின் கைதியாக மாறியுள்ளார். இவர்களின் ஆலோசனைகளுக்கமையவே நாம் வெளியேற்றப்பட்டோம் என்பதையும் உள்நாட்டவர்களும் சர்வதேச சமூகமும் நன்கறியும்.

ஆனால் இன்று உண்மையை மறைப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் பொய்ப் பிரசாரத்தை மேற்கொண்டு அதனை ஊடகங்கள் மூலம் பிரசாரம் செய்யப்படுகிறது.இக் கட்சி யாப்பிற்கு முரணான செயலாகும்.

பிழையான பாதையில் போகும் ஜனாதிபதியை சரியான பாதைக்கு கொண்டு வந்து கட்சியை பாதுகாக்கும் நோக்கத்துடனேயே கட்சிக்குள்ளிஅரந்து போராட்டத்தை நாம் ஆரம்பித்துள்ளோம். அதற்காக 10 அம்ச கோரிக்கைகளை 19 பக்கங்களில் ஜனாதிபதிக்கு கையளிக்கின்றோம். இணங்கினால் அமைச்சுப் பதவிகளை பெற்றுக் கொள்ளாது ஆதரவு வழங்குவோம். ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தில் அமைச்சுப் பதவி ஏற்பதில்லை என்ற தீர்மானத்தையும் நான் எடுத்துள்ளேன்.

பத்து அம்ச யோசனைகள்

1. ஜனாதிபதித் தேர்தலின் போது வெற்றிக்காக பாடுபட்டவர்களின் பிரச்சினைகளை தீர்க்க முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

2. அமைச்சரவை எண்ணிக்கை 35 ஆக குறைக்கப்பட வேண்டும். எதுவித தலையீடுமின்றி திட்டங்களை முன்னெடுக்க வழிவகை செய்யப்பட வேண்டும்.

3. தேசத்தை கட்டியெழுப்பும் அமைச்சுடன் இணைக்கப்பட்டுள்ள சமுர்த்தி வறுமை ஒழிப்புத் திட்டத்திற்கு முன்பிருந்தது போல தனி அமைச்சு ஏற்படுத்தப்பட வேண்டும்.

4. மனித உரிமைகள், ஊடகச் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் பயங்கரவாதிகளை படையினர் தாக்கி வெற்றிபெறுகிறார்களென கூறும் ஜனாதிபதி ஆட்கடத்தல்கள், கொலைகள், வெள்ளை வான் கடத்தல்களை தடுப்பதற்கு முன்னுரிமை வழங்குவதில்லை.

கொழும்பில் தமிழ் வர்த்தகர்கள் வகைதொகையின்றி வெள்ளை வான்களில் கடத்தப்படுகின்றனர் வெள்ளை வானை கண்டாலே தமிழ் மக்கள் பயந்து ஓடுகிறார்கள்.

இதனை ஜனாதிபதியிடம் எடுத்துரைத்தேன். மனிதவுரிமை மீறல்களை தடுத்து நிறுத்துமாறு கோரினேன். 1988 களில் மனித உரிமைகளுக்கு எதிராக குரல் கொடுத்தே பாராளுமன்றத்திற்கு வந்தேன். ஆனால், அதனையே மேற்கொள்ளும் அரசாங்கத்தின் கீழ் செயற்படுவதற்கு மனச்சாட்சி எவ்வாறு இடம்கொடுக்கும்.

மனித உரிமை மீறல்களை சுட்டிக்காட்டியதால் தான் எங்கள் மீது புலி லேபில் ஒட்டப்பட்டுள்ளது.

5. இந்தியா உட்பட மேற்குலக நாடுகளுடன் நெருங்கிய நட்புறவுகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதைவிடுத்து அவர்களுடன் மோதல்களை ஏற்படுத்திக் கொள்வது எம்மை தனிமைப்படுத்திவிடும்.

6. தேசியப் பிரச்சினைக்கு அதிகாரப் பகிர்வின் மூலமான அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். அத்தீர்வு இரண்டு மாதங்களுக்குள் முன்வைக்கப்பட வேண்டும்.

7. கொழும்பில் தமிழ் வர்த்தகர்கள் கடத்தப்படுவார்களென்ற அச்சத்துடன் வாழ்கின்றார்கள். அத்தோடு, இறக்குமதி ஏற்றுமதித்துறையில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்களிடம் உயர்மட்டக் குழுவினரால் தரகுப்பணம் கோரப்படுகிறது. அவர்களும் அச்சுறுத்தலுக்கு மத்தியில் வாழ்கின்றனர். இதற்கு தீர்வு காணப்பட வேண்டும்.

8. ஜே.வி.பி.யை மீண்டும் அரசுடன் இணைத்துக்கொள்ள வேண்டும். ஐ.தே. கட்சியுடனான உடன்படிக்கையை முன்னெடுக்க வேண்டும்.

ரணிலின் ஆதரவு ஆக்கபூர்வமானது

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் ஐ.தே. கட்சி தலைவர் ரணில் செய்து கொண்ட உடன்படிக்கையை உளப்பூர்வமாக தொடரப்பட்டிருந்தால் துரித கதியில் பல அபிவிருத்தித் திட்டங்களை பூர்த்தி செய்திருக்கலாம். அதற்கு 62 உறுப்பினர்களது ஆதரவும் கிடைத்தது.

ஆனால், அதைவிடுத்து அரசியல் தெரியாதவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு வயது முதிர்ந்த, ஊழல் மோசடிகளை மேற்கொண்ட 18 பேரை இணைத்துக் கொண்டதன் மூலமே அரசாங்கம் ஸ்திரமில்லா நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் இந்த நடவடிக்கையால் ஐ.தே. கட்சி மோசடிக்காரர்கள் வெளியேறி அக்கட்சி பரிசுத்தப்படுத்தப்பட்டுள்ள

Edited by ஈழவன்85

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.