Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணாமல் போனோரின் உறவினர்களது துயரத்தை கொச்சைப்படுத்துவது நகைப்புக்கிடமானது

Featured Replies

மனோ கணேசன் எம்.பி.

கடத்தப்பட்டு காணாமல் போயுள்ள தமிழர்களின் உறவினர்கள் கண்ணீர் விட்டு அழும் துயரத்தை கொச்சைப்படுத்தும் அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெலவின் கூற்று நகைப்புக்கிடமானது என்று மேல் மாகாண மக்கள் முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு வட,கிழக்கிலே கடத்தப்பட்டு காணாமல் போனவர்களதும், படுகொலை செய்யப்பட்டவர்களதும் பட்டியல்களை வெளியிட்டுள்ளது. இன்னும் பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் விபரங்களை ஊர்ஜிதப்படுத்தியுள்ளன.

அதேபோல் கொழும்பிலும், தெற்கிலும் நடைபெற்றுள்ள சம்பவங்களை எமது மக்கள் கண்காணிப்புக் குழு பட்டியலிட்டுள்ளது. இவற்றை கொழும்பிலிருந்து செயற்படும் இராஜதந்திரிகளும் ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.

அதேபோல் சர்வதேச மன்னிப்புச் சபை, ஆசிய மனித உரிமைகள் குழு, மனித உரிமை அவதான அமைப்பு ஆகிய அமைப்புகளுடன் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவும் இலங்கையிலே கடத்தப்பட்டு காணாமல் போனவர்கள். படுகொலை செய்யப்பட்டவர்கள் பற்றி பாரிய அக்கறைகளுடன் செயற்படத் தொடங்கியுள்ளனர். இவ்வளவு நடந்தபிறகும் அரசாங்கத்தின் பேச்சாளரும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் நலன்புரி அமைச்சருமான ஹெகலிய ரம்புக்வெல, இச்சம்பவங்களுக்கு புலி முத்திரை குத்தி, தங்களது உறவுகளை இழந்து, தவிக்கும் குடும்பத்தவர்களது அழுகை ஓலங்களை தொலைக்காட்சி நாடகங்களாக வர்ணித்து கொச்சைப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

அரசாங்கத்திலே இருந்தபடி கடத்தலையும், கைதுகளையும் எதிர்த்து அறிக்கை, அரசியல் நடத்திவரும் மலையக தமிழ் அமைச்சர்கள் ஹெகலிய ரம்புக்வெலவின் மனிதாபிமானமற்ற கருத்துக்கு என்ன பதில் கூறுகின்றார்கள் என்ற கேள்வியை தமிழ் மக்கள் எழுப்புகின்றார்கள். புலிகளின் ஆதரவாளர்கள், அங்கத்தவர்கள் என்ற அடிப்படையில் எவரையும் கைது செய்வதையும், கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தடுத்து வைக்கப்படுவதையும் நாம் எதிர்க்கவில்லை. ஆனால், சட்டத்துக்கு புறம்பாக அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டு காணாமல்போவதை நாம் எதிர்க்கின்றோம். வர்த்தகர்கள் கடத்தப்பட்டு அவர்களிடமிருந்து கப்பம் அறவிடப்படுவதை நாம் எதிர்க்கின்றோம். சட்டபூர்வமான கைதுக்கும் இனந்தெரியாத முறையில் கடத்தப்படுவதற்கும் இடைப்பட்ட வித்தியாசத்தை அமைச்சர் தெரிந்துகொள்ள வேண்டும்.

இன்று சிங்கள ஊடகவியலாளர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இன்னும் 10 சிங்களவர்களை கைது செய்துள்ளதாக அமைச்சர் கூறுகின்றார். ஆனால், தமிழர்களைப் பொறுத்தவரையில், மிகப் பலர் காணாமல் போயுள்ளார்கள். இவர்களை இழந்து தவிக்கும் அவர்களது குடும்பத்தவர்கள் ஊடகங்களில் தோன்றி தங்களது உறவுகளை விடுவிக்கும்படி கண்ணீர்மல்க கோரிக்கை விடுகின்றார்கள். தங்களது உறவுகள் உயிருடன் இருக்கின்றார்களா? இல்லையா? என்பதை தெரியாமல் பரிதவிக்கும் குடும்பத்தவர்களை தொலைக்காட்சி நாடகத்தை நடத்துகிறவர்கள் என்று கொச்சைப்படுத்தும் அமைச்சர் தனது கருத்தை திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும்.

http://www.thinakkural.com/news/2007/2/16/...s_page21458.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.