Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அச்சுவேலி முக்கொலை; குற்றத்தை ஏற்றார் சந்தேகநபர்

Featured Replies

அச்­சு­வேலி முக்­கொலை; குற்­றத்தை ஏற்­றார் சந்­தே­க­ந­பர்
 
 
அச்­சு­வேலி முக்­கொலை;    குற்­றத்தை  ஏற்­றார் சந்­தே­க­ந­பர்
வைத்­து­விட்­டார்­களோ என்ற சந்­தே­கத்­தில் ஏற்­பட்ட ஆத்­தி­ரத்­தில் கதவை உடைத்­துக்­கொண்டு உள்ளே சென்று மனை­வி­யின் உற­வி­னர் க­ளைத் தானே வெட்­டிக் கொன்­றார் என்­பதை நேற்று நீதி­மன்­றத்­தில் ஏற்­றுக்­கொண்­டார் அச்­சு­வேலி முக்­கொலை வழக்­கின் சந்­தே­க­ந­ப­ரான தனஞ்­செ­யன். 
இந்த வழக்­கின் விசா­ரணை நேற்­றும் தொடர்ந்­தது. கொலைக்­குற்­றஞ்­சாட்­டப்­பட்ட தனஞ்­செ­யன் நீதி­பதி முன்­பாக நடந்த சம்­ப­வத்தை விளக்­கி­னார். அவ­ரது சட்­டத்­த­ரணி அவ­ரது சாட்­சி­யத்தை நெறிப்­ப­டுத்­தி­னார். ஒரு கட்­டத்­தில் அதை மீறி நடந்­தது என்ன என்று தனஞ்­செ­யன் மட­ம­ட­வென்று நீதி­ப­திக்­குக் கதை சொல்ல ஆரம்­பித்­தார். அவர் தெரி­வித்­த­தா­வது:
நான் எனது தாய் தந்­தையை இது­வரை பார்த்­த­தில்லை. அவர்­கள் யார் என்­றும் எனக்­குத் தெரி­யாது. நான் வளர்ப்பு அம்­மா­வு­டன்­தான் வளர்ந்­தேன். எனது மனை­வி­யு­டன் எப்­போ­துமே சண்டை பிடிப்­ப ­தில்லை. சின்­னச்­சின்­னச் சண்­டை­கள் வரும் அவ்­வ­ளவு தான். ஆனா­லும் மனைவி என்­னைப் பிரிந்­து ­போ­னார். அவ­ரது அக்­கா­வான மது­ சா­வுக்கு  திரு­ம­ணம்  முடிந்­த­தும்  திரும்பி வரு­வ­தா­கக் கூறியே சென்­றார். 
அன்­றி­லி­ருந்து எனது பிள்­ளையை எனக்­குக் காட்­டவே இல்லை. ஒரு­முறை இலங்கை வங்­கிக்கு வந்­தி­ருந்­தேன். அப்­பொ­ழு­து­தான் எனது பிள்ளை நடப்­பதை எனது கண்­ணால் கண்­டேன்.  பல தட­வை­கள் பிள்­ளை­யைக் காட்­டச் சொல்லி மனை­வி­யி­டம் கேட்­டி­ருக்­கி­றேன் ஆனால் அவர் காட்­ட­வில்லை. 
சம்­ப­வம் நடை­பெற்ற அன்­றி­ரவு ஆட்­டோ­வில் மனைவி வீட்­டுக்­குச் சென்­றேன். மதி­லால் ஏறிப்­பாய்ந்து உள்ளே சென்­றேன். வீட்­டுச் சுவ­ரி­லுள்ள ஓட்­டைக் கல்­லின் ஊடாக எட்­டிப் பார்த்­தேன். அறைக்­குள் எனது மகன் படுத்­தி­ருந்­தான்.  பக்­கத்­தில் ஒரு பெண்­ணும் ஆணும் படுத்­தி­ருந்­தார்­கள். 
அதைப் பார்த்­த­தும் எனது மனைவி தர்­வி­கா­வுக்­குத்­தான் வேறு திரு­ம­ணம் செய்து வைத்து விட்­டார்­களோ என்று பத­றிப்­போ­னேன்.  ஏற்­க­னவே எனக்கு யாரும் இல்லை, இருந்த ஒரு சொந்­த­மும் இல்­லா­மல் போய்­விட்தோ என்று ஆடிப்­போ­னேன். அப்­ப­டிச் செய்­யப்­போ­வ­தாக மாமி ஏற்­க­னவே எனக்­குத் தொலை­பே­சி­யில் சொல்­லி­யி­ருந்­த­தால், அது உண்மை என்று நம்­பி­விட்­டேன். கோபம் வந்­தது. 
சுவ­ரில் இருந்து குதித்து ஆத்­தி­ரத்­து­டன் கதவை உதைத்­தேன். அது திறந்­த­தும் உள்ளே நுழைந்து அவர் கள் படுத்­தி­ருந்த அறைக் கத­வைப் பல­மா­கத் தட்­டி­னேன். அப்­போது மற்­றோர் அறை­யில் இருந்து சுபாங்­கன் (மனைவி தர்­வி­கா­வின் சகோ­த­ரர்) வெளி­யில் வந்­தார். நான் கதவை மிக­வும் ஆக்­ரோ­ச­மா­கத்­தான் தட்­டிக்­கொண்­டி­ருப்­ப­தைப் பார்த்­து­விட்டு சுபாங்­கன் என்னை நோக்கி எதையோ தூக்கி எறிந்­தார். 
அது கத்தி. அது எனது கையில் பட்டு உரஞ்­சல் காயம் ஏற்­ப­டுத்­தி­விட்­டுக் கீழே விழுந்­தது. (கையில் அடை­யா­ளத்­தைக் காட்­டு­கி­றார்). அந்­தக் கத்­தியை எடுத்­துத்­தான் எனக்­க­ரு­கில் வந்­த­வர்­க­ளைத் தாறு­மா­றாக வெட்­டி­னேன். அப்­பொ­ழு­து­தான் அறை­யைத் திறந்து கொண்டு மது­வும் ஒரு ஆணும் வந்­தார்­கள். அப்­பொ­ழு­தான் என் மக­னு­டன் ஒரே அறை­யில் தூங்­கி­ய­வர்­கள் அவர்­கள்­தான் என்று தெரிந்­தது. 
வீட்­டில் வெளிச்­சத்­தைப் போட்­டார்­கள். எனது மனைவி மற்­றைய அறை­யில் இருந்து வந்­தார். மது­வு­டன் வந்த ஆண் கத­வின் ரீப்­பையை எடுத்­துக்­கொண்டு என்னை அடிக்க வந்­தார். என்னை அவர் ஓங்­கி        அடிக்க முற்­பட்­ட­போது எனது கையில் இருந்த வாளை அவரை நோக்கி வீசி­னேன். அதைப் பார்த்­து­விட்டு அவ­ருக்­குப் பின்­பாக இருந்த மதுசா ஐயோ என்று கத்­தி­ய­படி முன்­னுக்கு வந்­தார். நான் வீசிய வாள் மது­சாவை வெட்­டி­யது. 20 நிமி­டங்­க ­ளுக்­குள் அனைத்­தும் முடிந்­து­ விட்­டது -என்­றார்.
இடை­யில் குறுக்­கிட்ட  அரச சட்­டத்­த­ரணி சந்­தே­ந­ப­ரி­டம் “நீர் மூன்று கொலை­க­ளைப் புரிந்­தீர் என்­பதை ஏற்­றுக்­கொள்­கி­றீரா?’’ என்று கேட்­டார். ‘‘ஆம் ஏற்­றுக்­கொள்­கி­றேன்’’ என்­றார் தனஞ்­செ­யன். ‘‘ஏனைய இரு­வ­ருக்­கும் கடுங்­கா­யங்­களை ஏற்­ப­டுத்­தி­யதை ஏற்­றுக்­கொள்­கி­றீரா?’’ என்று சட்­டத்­த­ரணி மீண்­டும் கேட்­டார் ‘‘ஆம்’’  என்று சந்­தே­கந­பர் பதி­ல­ ளித்­தார்.
இறு­தி­யாகத் தனது பிள்­ளை­யைப் பார்­வை­யிட அனு­ம­தித்­த­மைக்­கா­கச் சந்­தே­க­ந­பர் நீதி­ப­திக்கு நன்றி கூறி­னார். 
நேற்று நீதி­மன்­றத்­துக்கு வந்­தி­ருந்த தர்­விகா தன்னை வெட்­டு­வ­தற்­கா­கத் தனஞ்­செ­யன் பயன்­ப­டுத்தி பொருளை நீதி­மன்­றத்­தில் அடை­யா­ளம் காட்­டி­னார். கடந்த 27ஆம் திகதி அவர் சாட்­சி­யம் அளித்­த­போது தன்னை வெட்­டப் பயன்­ப­டுத்­தப்­பட்­ட­ பொ­ருளை இனங்­காட்ட முடி­யும் என்று கூறி­ய­தன் அடிப்­ப­டை­யில் அவர் அதனை அடை­யா­ளம் காட்­டி­னார். 
சம்­ப­வத்­தில் தர்­வி­கா­வுக்கு 15 வெட்­டுக் காயங்­கள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தன என்று சட்ட மருத்­துவ அதி­காரி கந்­தையா ரத்­ன­சிங்­கம் நீதி­மன்­றில் தெரி­வித்­தார். அவற்­றில் 8 காயங்­கள் கொடூ­ர­மா­னவை என்­றும் தெரி ­வித்­தார். சம்­ப­வத்­தில் உயி­ரி­ழந்­த­வர்­கள் மூவரின் உடல்­க­ளி­லும் ஆழ­மான வெட்­டுக்­கா­யங்­கள் காணப்­பட்­டன என்று உடற்­கூற்­றுப் பரி­சோ­த­னையை நிகழ்த்­தி­யி­ருந்த அப்­போ­தைய பதில் சட்­ட­வைத்­திய அதி­காரி மருத்­து­வர் எஸ்.சிவ­ரூ­பன் தெரி­வித்­தார். அவை உட­ன­டி­யாக மர­ணத்தை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய காயங்­கள் என்­றும் கூறி­னார். (உ–--12)

http://www.onlineuthayan.com/news/25279

  • தொடங்கியவர்

யாழ். முக்கொலை வழக்கின் குற்றவாளிக்கு மரண தண்டனை : யாழ் மேல் நீதிமன்றம் தீர்ப்பு.!

 

 

யாழ், அச்சுவேலியில் 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கின் குற்றவாளிக்கு யாழ் மேல் நீதிமன்றம் மூன்று மரண தண்டனைகளை விதித்து இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

jaffna_court.jpg

http://www.virakesari.lk/article/18474

  • தொடங்கியவர்
முக்கொலைக் குற்றவாளிக்கு 3 மரண தண்டனைகள்
 
30-03-2017 12:22 PM
Comments - 0       Views - 13

article_1490856905-judge.jpg-எம்.றொசாந்த்

யாழ்ப்பாணம், அச்சுவேலி, கதிரிப்பாய் பகுதியில், கடந்த 2014ஆம் ஆண்டு மே மாதம் 4ஆம் திகதியன்று, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரை வெட்டிப் படுகொலை செய்த குற்றவாளிக்கு, மூன்று மரண தண்டனைகள் விதித்து, யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் இன்று வியாழக்கிழமை (30) தீர்ப்பளித்தார்.  

தனஞ்செயன் என்ற மேற்படிக் குற்றவாளி, முக்கொலைகளைப் புரிந்த குற்றச்சாட்டுக்கு மூன்று மரண தண்டனைகளும் இருவரை கொலை செய்யும் நோக்குடன் தாக்கி காயமேற்படுத்திய குற்றத்துக்கு 14 வருட கடூழிய சிறைதண்டனையும், 20 ஆயிரம் ரூபாய் அபராதப் பணமும், 2 இலட்சம் ரூபாய் நட்டஈடும் விதித்தே, நீதிபதி தீர்ப்பளித்தார்.  

குறித்த தீர்ப்பில் மேலும் நீதிபதி தெரிவிக்கையில்,

குறித்த சம்பவமானது, திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 3 கொலைகளும் திட்டமிட்டே செய்யப்பட்டுள்ளன. மற்றைய இருவரையும், கொலை செய்யும் நோக்குடனேயே வெட்டி காயமேற்படுத்தப்பட்டு உள்ளது. அதனால், எதிரியான பொன்னம்பலம் தனஞ்செயனுக்கு, மேற்படி தண்டனைகளை வழங்கித் தீர்ப்பளிக்கிறேன்.

மேல் நீதிமன்றில், மரண தண்டனைத் தீர்ப்பு வழங்கப்படும் போது, மன்றில் இருந்த அனைவரையும் எழுந்து நிற்குமாறும் மின் விளக்குகளை அணைக்குமாறும் பணித்த நீதிபதி, தீர்ப்பினை எழுதிய பின்னர் தீர்ப்பெழுதிய பேனாவை முறித்தார்.

மேற்படி குற்றவாளி, தனது மனைவியின் தாயான நி.அருள்நாயகி, மனைவியின் தம்பியான நி.சுபாங்கன் மற்றும் மனைவியின் அக்காவான யசோதரன் மதுஷா ஆகியோரைப் படுகொலை செய்து, மனைவியான தர்மிகா மற்றும் மனைவியின் அக்காவின் கணவனான யசோதரன் ஆகியோரைப் படுகொலை செய்யும் நோக்குடன் வெட்டிக் காயமேற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

- See more at: http://www.tamilmirror.lk/194033/ம-க-க-ல-க-க-ற-றவ-ள-க-க-மரண-தண-டன-கள-#sthash.xAAt7e3x.dpuf
  • தொடங்கியவர்
கொலை­யா­ளித் தந்தை -– மகன் நீதி­மன்­றில் பாசப் போராட்­டம்
 
 
கொலை­யா­ளித் தந்தை -– மகன் நீதி­மன்­றில் பாசப் போராட்­டம்
மனை­வி­யின் தாய், சகோ­தரி, சகோ­த­ரன் ஆகி­யோரை வெட்­டிக் கொன்­றும் ஏனையேரை வெட்­டிக் காயங்­களை ஏற்­ப­டுத்­தி­யும் பயங்­கர வெறி­யாட்­டம் நடத்­தி­னார் என்று தனஞ்­செ­யன் மீது குற்­றஞ்­சாட்­டப்­பட்­டுள்­ளது. 
இது தொடர்­பான விசா­ரணை யாழ். மேல் நீதி­மன்­றத்­தில் இடம்­பெற்று வரு­கி­றது. கடந்த 27ஆம் திகதி ஆரம்­ப­மான விசா­ரணை தொடர்ந்து இடம்­பெற்று வரு­கின்­றது. 
 
விசா­ரணை ஆரம்­ப­மான நாளி­லேயே சந்­தே­க­ந­பர் நீதி­ப­தி­யி­டம் கோரிக்கை ஒன்றை முன்­வைத்­தி­ருந்­தார். தன்­னு­டைய மக­னைத் தான் பார்ப்­ப­தற்கு நீதி­பதி அனு­ம­திக்­க­வேண்­டும் என்­பதே அவ­ரது கோரிக்கை. கடந்த மூன்­றரை வரு­டங்­க­ளா­கத் தான் தனது மக­னைப் பார்க்­க­வில்லை என்று மன்­றா­டி­னார். 
தனஞ்­செ­ய­னின் இந்­தக் கோரிக்­கையை ஏற்­றுக்­கொள்ள அவ­ரது மனைவி தர்­விகா பிடி­வா­த­மாக மறுத்­தார். எனி­னும் தந்தை என்­கிற அவ­ரது உரி­மை­யின் அடிப்­ப­டை­யில் தூரத்­தில் இருந்து மக­னைக் காட்­டு­மாறு நீதி­பதி அறி­வு­றுத்­தி­யி­ருந்­தார். 
 
அத­ன­டிப்­ப­டை­யில் ஐந்து வய­தான சிறு­வன் நீதி­மன்­றத்­திற்கு நேற்று அழைத்து வரப்­பட்­டி­ருந்­தான். குற்­ற­வா­ளிக் கூண்­டில் நிறுத்­தப்­பட்­டி­ருந்த தனஞ்­செ­யன் அங்­கி­ருந்­த­வாறே 20 அடி தூரத்­தில் நிறுத்­தப்­பட்­டி­ருந்த மகனை நேரில் பார்ப்­ப­தற்கு அனு­ம­திக்­கப்­பட்­டார். 
 
மக­னைக் கண்ட தனஞ்­செ­யன் கண்­ணீர்­விட்­டுக் கதறி அழு­தார். தந்தை மகன் இடை­யி­லான இந்­தப் பாசப் போராட்­டத்­தால் நீதி­மன் றத்­தில் சிறிது நேரம் மயான அமைதி நில­வி­யது. நில­மை­யின் கனத்­தைக் குறைக்க முயன்ற நீதி­பதி, தனஞ்­செ­ய­னின் மக­னி­டம்,குற்­ற­வா­ளிக் கூண்­டில் நிற்­ப­ வ­ரைச் சுட்­டிக்­காட்டி ‘‘இவர் யார், இவ­ரைத் தெரி­யுமா?’’ என்று கேட்­டார். அந்­தச் சிறு­வனோ தனக்­குத் ‘‘தெரி­யாது’’ என்று தெரி­வித்­தான். நீதி­பதி மீண்­டும் மீண்­டும் கேட்­ட­போ­தும் தெரி­யாது என்­பதை உடல்­மொ­ழி­யால் வெளிப்­ப­டுத்­தி­னான். 
 
அதே­நே­ரம் சாட்­சிக் கூண்­டில் நின்­றி­ருந்த தர்­வி­கா­வைக் காட்டி அவர் யார் என்று நீதி­பதி கேட்­ட­போது ‘‘அம்மா’’ என்று பதி­ல­ளித்­தான் சிறு­வன். 
எதி­ரிக்­கூண்­டில் நின்ற தனஞ்­செ­யன் இவற்­றைக் கண்­ணீர் மல்­கப் பார்த்­த­படி நின்­றார்.
 
விசா­ரணை நடை­பெற்­றுக்­கொண்­டி­ருந்­த­போது, கூண்­டில் இருந்­த­ப­டியே தனது மக­னு­டன் சைகை­கள் மூலம் உரை­யா­டு­வ­தற்கு த் தனஞ்­செ­யன் முயன்­று­கொண்­டி­ருந்தார்.  முகம் தெரி­யாத மூன்­றா­வது நப­ரின் வேடிக்­கைச் செயல்­க­ளைப் பார்ப்­பது போல அவ­ரது செய்­கை­க­ளைப் பார்த்­துக்­கொண்­டி­ருந்த சிறு­வன், அவ­ரது சைக­ளைப் பார்த்­துத் தானும் அது போலச் செய்­து­கொண்­டி­ருந்­த­தை­யும் காண­மு­டிந்­தது. 
நேற்­றைய விசா­ர­ணை­யின் போது மூன்று கொலை­க­ளை­யும் தானே செய்­தார் என்­ப­தைத் தனஞ்­செ­யன் நீதி­மன்­றத்­தில் ஒப்­புக்­கொண்­டார்.              

http://www.onlineuthayan.com/news/25282

  • கருத்துக்கள உறவுகள்
அச்சுவேலி முக்கொலை; தீர்ப்பு இன்று நடந்த சம்பவத்தை விபரித்த எதிரி
 
13986.jpg
அச்சுவேலி முக்கொலை  வழக்கின் தொடர் விசாரணை மூன்றாவது நாளாக  நேற்றைய தினம்   யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் நடைபெற்றது.  நேற்றைய தினம் வழக்கின் ஆரம்பத்தில் எதிரியின் பிள்ளையை எதிரியிடம் காண்பிக்கப்பட்டது. 
 
அப்பா செத்திட்டார்
எதிரி தனது பிரதான கோரிக்கையாக
 தனது மகனை காட்டுமாறு நீதிபதியிடம்  கோரியிருந்தார். அதற்கமைய மனிதாபிமான அடிப்படையில் அவருடைய மகனை அவர் கண் முன்  காண்பிக்குமாறு எதிரியின் மனைவிக்கு அறிவித்ததுக்கு அமைய நேற்றைய தினம் எதிரியின் மகனை அவர் கண் முன் காண்பித்தனர். 
 
குறித்த மகனிடம் எதிரிக்கூண்டில் நிற்பவர் யார் என நீதிபதி கேட் டபோது யாரென்று தெரியாது என கூறினான். பின்னர் உனது அப்பா எங்கே என கேட்ட போது அவர் செத்திட்டார் என தெரிவித்தான். 
பின்னர் வழக்கு விசாரணைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நேரத்தில் தந்தை யார் என தெரியாது குறித்த சிறுவன்  எதிரிக்கூண்டில் நிற்கும் தன்து தந்தையுடன் சைகை மூலம் கதைத்துக் கொண் டிருந்ததனை அவதானிக்க முடிந்தது.  
 
சாட்சிகள் வாளை அடையாளம் காட்டினர். 
குறித்த கொலை சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டதாக தெரிவித்து கைப்பற்றப்பட்ட வாள் அடங்கிய சான்றுப் பொருட்கள் அரச பகுப்பாய்வு திணைக்களத்தில் இருந்து  நேற்றைய தினம் மன்றுக்கு எடுத் துவரப்பட்டிருந்தது. குறித்த சான்றுப்பொருளை அடையாளம் காட்டுவதற்கு 4 ஆம்  சாட்சியான தர்மிகா 5 ஆம் சாட்சியான யசோதரன் ஆகியோர் மீண்டும் மன்றுக்கு அழைக்கப்பட்டனர். குறித்த சாட்சிகள் இருவரும் குறித்த வாளை அடையாளம் காட்டியிருந்தனர். இரத்தத்தில் மூழ்கியபடி முனங்கிக்கொண்டு இருந்தார்கள்.
 
10 ஆம் சாட்சியான அச்சுவேலி பொலிஸ் பரிசோதகர் ஜெயசிங்க சாட்சியமளிக்கையில், 
கடந்த 2015.05.04 அன்று நாம் இரவு கடமையில் ஈடுபட்டிருந்த போது அச்சுவேலி கதிரிப்பாய் பகுதியில் ஒருவர் இறந்துள்ளதாக  அதிகாலை 2 மணியளவில் என க்கு தொலைபேசியில் அழைப்பு வந்தது, சம்பவ இடத்துக்கு நான் விரைந்த போது, வீட்டின் விறாந்தையில் இரத்தம் சூழ்ந்து உடலில் இரத்தம் வெளியேறிய நிலையில் பெண் ஒருவர் விழுந்து கிடந்தார். வீட்டின் பின்பக்க அறையில் அனுங்கல் சத்தம் கேட்டது. அங்கு போய் பார்த்த போது ஆண் பெண் இருவர் இரத்தத்தில் மூழ்கியபடி இருந்தார்கள். அந்த அறை முழுவதும் இரத்தம் தேங்கி இருந்தது. அவர்கள் உடனடியாக வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டார்கள். 
 
அடுத்த அறைக்குள் சென்ற போது ஒரு மெத்தை இருந்தது. அதில் ஏறத்தாழ 2 வயது நிரம்பிய ஒரு குழந்தை எந்தவித சலனமும் இன்றி உறங்கிக்கொண்டு இருந்தது. அக்குழந்தையை அணைத்து தூக்கி தடவினேன். அப்போதும் அக் குழந்தை உறங்கிக்கொண்டிருந்தது. காயம் ஏதும் இருக்கிறதா என பார்த்தேன். அவ்வாறு எதுவும் இருக்கவில்லை. அக் குழந்தையையும் வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தேன். 
 
பின்னர் வைத்தியசாலைக்கு சென்றேன். அப்போது 3 பேர் இறந்துவிட்டதாக வைத்தியர் தெரிவித்தார். அதனை தொடர்ந்து கொலை சம்பவம் தொடர்பில்  எனது புலன் விசாரணைகளை  ஆரம்பித்தேன். 
அயலவரின் வாக்கு மூலம் மற்றும் வேறு பல விசாரணைகள் இரகசிய தகவல்கள் மூலமும் சந்தேகம் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர் என பொ. தனஞ்சயன் என்பவரை  2015.05.04 அன்று 5.30 மணியளவில் கோப்பாய் பகுதியில் வைத்து கைது செய தோம். எதிரியின் வாக்கு மூலத்  தின் அடிப்படையில் அவர் சம்பவத்தன்று பயன்படுத்திய முச்சக்கர வண்டி, கத்தி, மற்றும் அவருடைய உடைகள் என்பவற்றை கைப்பற்றிக்கொண்டோம். குறித்த சான்றுப்பொருட்கள் நீதிமன்றில் பாரப்படுத்தப்பட்டன என சாட்சியமளித்தார். அத்துடன் 13 ஆம் 16 ஆம் பொலிஸ் சாட்சிகள் விசாரணை தொடர்பில் சாட்சியமளித்தனர் 
 
கொடூர வெட்டுக்காயங்கள் 
15 ஆம் சாட்சியான யாழ் போதனா வைத்தியசாலையின் உதவி சட்ட வைத்திய அதிகாரி கந்தையா ரட்ணசிங்கம் சாட்சியமளிக்கையில் 
த. தர்மிகா என்பவரை பரிசோதனை செய்து சட்டவைத்திய அறிக்கை தயாரித்தேன். தான் கணவனால் வெட்டப்பட்டதாக தெரிவித்தார். அவரது உடலில் 15 வெட்டுக் காயங்கள் இருந்தது. அதில் 8 கொடூரமான காயங்கள் இருந்தது என சாட்சியமளித்தார். 
 
7 ஆம் சாட்சியான சட்டவைத்தி அதிகாரி சின்னையா சிவரூபன் சாட்சியமளிக்கையில் 
அருள்நாயகி, சுபாங்கன், மதுசா ஆகியோரின் மரணப்பரிசோதனை மேற்கொண்டிருந்தேன். அதில் அருள் நாயகிக்கு கழுத்து மற்றும் தலை உச்சிப்குதியில் மண்டையோட்டு எலும்பு வரை வெட்டப்பட்ட காயங்கள் உட்பட 8 வெட்டு காயங்கள் காணப்பட்டது. யசோதரன் என்பவருக்கு கழுத்து மற்றும் நெஞ்சுப் பகுதி உட்பட 8 வெட்டுக்காயங்கள் காணப்பட்டது. 
 
மதுசா என்பவருக்கு கழுத்து மற்றும் நெத்தி பகுதி உட்பட 8 வெட்டுக்காயங்கள் காணப்பட்டது. இவர்கள் மூவருடைய இறப்பும், மரணத்தை ஏற்படுத்தக் கூடிய கொடூரமான வெட்டுக்காயத்தில் இருந்து வெளியேறிய இரத்தத்தால் ஏற்பட்ட அதிர்ச்சி காரணமாக இடம்பெற்றுள்ளது. யசோதரன் என்பவரை பரிசோதித்த போது அவருக்கு 8 காயங்களும் அதில் 3 காயங்கள் கொடூரமானதாக காணப்பட்டது. 
 
எதிரியை பிரிசோதித்த போது அவருக்கு 6 புதுக்காயங்களும் 1 பழைய காயமும் இருந்தது அவை உராய்வுக்காயங்களாக இருந்தன. எதிரி உள ரீதியான நலமுடன ;இருந்தார் என சாட்சியமளித்தார். 
4 சிவில் சாட்சியங்களும், 5 உத்தியோகபூர்வ சாட்சியங்களும் 2 நிபுணத்துவ சாட்சியங்களுமாக 11 சாட்சிகளின் சாட்சியப்பதிவு இடம் பெற்று அரச தரப்பு  சாட்சியப்பதிவு அனைத்தும் நிறைவு செய்யப்பட் டது. 
 
வாளால் தாறுமாறாக விசுக்கி னேன் 
எதிரி பொ. தனஞ்சயன் சாட்சிய மளிக்கையில்,
 
எனக்கு அம்மா அப்பா யாரும் இல்லை, எனது மனைவி பிள்ளை மற்றும் மனைவியின் குடும்பத்தை எனது குடும்பமாக நினைத்து இருந்தேன். எனக்கும் மனைவிக் கும் இடையில் பிரச்சனை இல்லை, மனைவியின் அக்காவின் திருமணம் தடைப்பட்டதில் இருந்து என்மேல் சந்தேகம் கொண்ட எனது மனைவியின் குடும்பத்தினர் என்னை எதிர்தனர். ஆனால் உண்மையில் நான் அவ்வாறான பிழையை செய்யவில்லை. மனைவியையும் பிள்ளையையும் பிரிந்து மிகவும் விரக்தியில் வாழ்ந்து வந்தேன். 
 
குறித்த சம்பவத்துக்கு முதல் நாள் மனைவியின் வீட்டுக்கு சென்ற போது மனைவியின் தம்பியால் தாக்கப்பட்டு அவமானப்பட்டு திரும்பி வந்தேன். எனது பிள்ளையை பார்ப்பதற்காக ஒவ்வொரு முறையும் முயற்சி செய்தும் அவமானப் பட்டு வந்தேன். களவாக வீட்டுக்கு சென்று  எனது பிள்ளையை பார்த்தேன். 
எனது மாமியர் ஒருமுறை எனக்கு தொலைபேசியில் பேசும் போது, எனது மனைவியிடம் இருந்த விவாகரத்து பத்திரம் வரும் அதை எடுத்து வைத்திரு என தெரிவித்தார். மிகவும் மன உழைச்சலுக் குள்ளானேன். 
 
முன்னர் பிள்ளையை பார்க்க செல்வது போல் சம்பவ தினத்தன்று  இரவு 10.30 மணியளவில் அங்கு சென்றேன். மதிலால் ஏறி வீட்டுக்குள் சென்று வீட்டின் அறையை எட்டிப்பார்த்தேன். முன்பு அந்த அறையில் எனது மனைவி மச்சான் மாமி மற்றும் மகன் ஆகியோர் படுத்துறங்குவார்கள். ஆனால் அன்றைய தினம் எனது பிள்ளைக் கருகில் ஒரு ஆணும் பெண்ணும் இருப்பதை கண்டேன். அன்று மாமி எனக்கு சொன்னது நினைவில் வந்த போது எனது மனைவிக்கு வேறு திருமணம் நடைபெற்று விட்டதா என்ற சந்தேகத்தில் செய்வதறியாது ஆக்ரோசமடைந்து கதவை தட்டிடேன். 
 
அப்போது அடுத்த அறையில் இருந்து மனைவியின் தம்பி வந் தான் அவர் ஒரு கத்தியால் எனக்கு எறிந்தார் அதை நான் கைப்பற்றிக் கொண்டேன். கோபத்தில் தாறுமாறாக வெட்டினேன். இருட்டில் யார் என தெரியவில்லை. அப்போது தான் எனது மனைவி அந்த அறையில் இருந்து கத்திய படி வெளியே ஓடுவதை  கண்டேன்.  சத்தத்தை வைத்து ஏனையவர்கள் யார் என கண்டு பிடித்தேன். அந்த நேரத்தில் தான் குறித்த அறையில் இருந்து  மனைவியின் அக்காவும் அத்தானும் வந்தார்கள். அத்தான் எனக்கு றீப்பையால் அடித்தார் அதை தடுப் பதற்கு நான் கத்தியால் விசுக்கினேன். இடையில் அக்காவும் வந்து அகப்பட்டு கொண்டார். 
 
பின்னர் அவ் இடத்தை விட்டு ஆட்டோவை எடுத்துக்கொண்டு சென்று விட்டேன் நவக்கிரிப்பகுதியில் ஆட்டோ எரிபொருள் தீர்ந்தமையால் அதிலே நிறுத்திவிட்டு வாழைத்தோட்டத்தினால் வரும் போது கத்தியை வீசிவிட்டு  ஊரெழுவில் உள்ள எனது வீட்டுக்கு சென்று விட்டேன். காலையில் தான் எனக்கு தெரியும் 3 பேர் உயிரிழந்து விட்டதாக உடனே கோப்பாய் பொலிஸில் போய் நான் சரணடைந்தேன்.
 
நான் செய்தது மிகப்பெரிய குற்றம், 3 பேர் சாவதற்கு காரணமாக இருந்துள்ளேன். மனைவி கூறியது போல் நான் அவரை தூக்கி வைத்து வெட்டவில்லை. சந்தேகத்தில் கோபம் ஏற்பட்டு அவ்வாறு செய்து விட்டேன். நான் செய்ததை நியாயப்படுத்தவில்லை எனது நிலை அவ்வாறு ஏற்பட்டு விட்டது. என சாட்சியமளித்தார். 
வழக்கின் சாட்சிய பதிவுகள் நிறைவடைந்துள்ள நிலையில் குறித்த வழக்கின் தீர்ப்பை இன்றைய தினம் அறிவிப்பதாக நீதிபதி மன்றில் தெரிவித்து வழக்கை இன்றைய தினத்துக்கு ஒத்திவைத்தார்.    
      

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.