Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழன் தன்மானமுள்ளவன் பணத்துக்கு வாக்களிக்கமாட்டான்

Featured Replies

தமிழன் தன்­மா­ன­முள்­ளவன் பணத்­துக்கு வாக்­க­ளிக்கமாட்டான்

33-c578179d6650dd20a64b986321a315c5e2dcf156.jpg

 

பணம் பத்தும் செய்யும் என்­பார்கள். ஆனால் இன்று பணம் பதி­னொன்­றையும் செய்­கி­றது. அதுதான் 'பணத்தை மக்­க­ளுக்குக் கொடுத்து வாக்கை பெற்­றுக்­கொள்­வ­தாகும்' இது ஜன­நா­யக விரோ­த­மான கேவ­ல­மான நிலை­மை­யாகும்.

ஜன­நா­ய­கத்தை பண­நா­யகம் விழுங்கும் ஆபத்­தாகும். இந்­த­நிலை தேர்தல் காலங்­களில் தமிழ்­நாடு எங்கும் வியா­பித்­துள்­ளது. ஆர்.கே.நகரில் இடைத்­தேர்தல் ஏப்ரல் 12 ஆம் திகதி நடை­பெ­ற­வுள்­ளது. இவ்­வா­றா­ன­தொரு நிலையில் அங்கு வேட்­பா­ளர்­களின் பிர­சா­ரங்கள் சூடு பிடித்­துள்­ளன.  

இதற்­கி­டையில் தமக்கு வாக்­க­ளிக்­கு­மாறு பல வேட்­பா­ளர்கள் மக்­க­ளுக்குப் பணத்தைக் கொடுப்­ப­தா­கவும் முறைப்­பா­டுகள் தேர்­தல்கள் ஆணை­ய­கத்­திடம் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது. ஆர்.கே.நகரில் தேர்தல் நிலை­மை­களை ஆராய இந்­திய தேர்தல் ஆணை­ய­கத்தின் துணை ஆணை­யாளர் நாயகம் நேரில் வந்தார். அதி­கா­ரி­களை, வேட்­பா­ளர்­களைச் சந்­தித்தார்.  

இதன்­போது மக்­க­ளுக்கு சிலர் பணத்தை கொடுத்து வாக்கை பறிக்­கின்­றனர் என்ற குற்­றச்­சாட்டு கடு­மை­யாக முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது. இந்­திய தேர்தல் ஆணை­ய­கத்தின் துணை ஆணை­யாளர் நாயகம் உமேஷ் ஷின்ஹா குற்­றச்­சாட்­டுக்­களை உன்­னிப்­பாக கேட்­ட­றிந்தார்.  

இதன் பின்னர் கருத்துத் தெரி­வித்த உமேஷ் ஷின்ஹா பணம் கொடுப்­பதை கண்­கா­ணிக்க வரு­மா­னத்­துறை அதி­கா­ரிகள் நிய­மிக்­கப்­ப­டு­வார்கள். அதே­போன்று கண்­கா­ணிப்­பா­ளர்கள், பார்­வை­யா­ளர்கள் அதி­க­ளவில் நிய­மிக்­கப்­ப­ட­வுள்­ளனர். சீ.சீ.டி.வி கம­ராக்­களும் பொருத்­தப்­படும். ஆர்.கே.நகர் இடைத்­தேர்தல் சுதந்­தி­ர­மா­கவும் வெளிப்­படைத் தன்­மை­யா­கவும் நடத்­தப்­படும்.

அதே­வேளை, வேட்­பா­ளர்கள் வாக்­கா­ளர்­க­ளுக்கு பணம் வழங்­கு­வது கண்­டு­பி­டிக்­கப்­பட்டால் இடைத்­தேர்தல் ஒத்­தி­வைக்­கப்­படும் என்ற திடீர் குண்­டையும் போட்டார் உமேஷ் ஷின்ஹா.

இவ்­வாறு ஆர்.கே.நகரில் தேர்­தல் சட்­டங்கள் கடு­மை­யாக்­கப்­பட்ட சூழ்­நி­லையில், ரூபா 50 கோடி கறுப்புப் பணத்தை இரண்டு கறுப்பு ஆடுகள் (வேட்­பா­ளர்கள்) ஆர்.கே.நக­ருக்குள் கொண்டு வந்­துள்­ள­தா­கவும், தற்­போது இப்­பணம் மக்­க­ளுக்கு பகிர்ந்­த­ளிப்­ப­தற்­காக ரூபா, 10000,15000,20000 என தரப்­ப­டுத்­தப்­பட்டு வரு­வ­தா­கவும், ஆர்.கே.நகரில் வாழும் கட்­டடத் தொழி­லா­ளர்கள், மீன­வர்கள், கூலித் தொழி­லா­ளர்­களை இலக்கு வைத்து இப்­பணம் வழங்­கப்­ப­ட­வுள்­ள­தா­கவும், இவ்­வாறு பணத்தைக் கொடுத்து வாக்­கு­களை கொள்­ளை­ய­டிக்­க­வுள்­ள­தா­கவும் பர­வ­லான குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன.

இது தொடர்­பாக தேர்­தல்கள் ஆணையம் விசா­ர­ணை­களை முடுக்கி விட வேண்டும். கறுப்புப் பணத்தை மக்­க­ளுக்கு விநி­யோ­கிக்கும் கறுப்பு ஆடுகள் யார் என்­பதை கண்­டு­பி­டிக்க வேண்டும்.

பாரதப் பிர­தமர் நரேந்­திர மோடி கறுப்பு பணத்தை ஒழிக்க 1000, 500 ரூபா நோட்­டுக்­களைத் தடை செய்தார். பயங்­க­ர­வா­திகள் பணப் பரி­மாற்றம் செய்­வதைத் தடுத்தார். பொரு­ளா­தார ரீதியில் பல ஆக்­க­பூர்­வ­மான மாற்­றங்­க­ளையும் வெளிப்­படைத் தன்­மை­யையும் ஏற்­ப­டுத்­தினார்.

 

பணத்தின் வெற்றி  ஆர்.கே. நகரின் பிரச்சினைகளை தீர்க்காது

 

இவ்­வாறு இறுக்­க­மான சூழ்­நி­லையில் ஆர்.கே. நக­ரக்குள் 50 கோடி கறுப்புப் பணம் எவ்­வாறு வந்­தது? பல வேட்­பா­ளர்கள் மக்­க­ளுக்கு பணத்தை வழங்கி தமக்கு வாக்­க­ளிக்­கு­மாறு கேட்­கின்­றனர். ஜன­நா­ய­கத்தை பண­நா­ய­கத்தைப் பயன்­ப­டுத்தி பலாத்­கா­ர­மாக பெற்­றுக்­கொள்ள முயற்­சிக்­கின்­றனர்.  எல்லாம் பதவி ஆசை, சம்­பா­திக்கும் ஆசை. அதை­வி­டுத்து மக்­க­ளுக்குச் சேவை செய்­வ­தற்­காக அல்ல. 

பிர­தமர் மோடி டில்­லிக்கு மட்டும் பிர­த­ம­ரல்ல. முழு இந்­தி­யா­வுக்­குமே பிர­தமர் ஆவார். அந்த இந்­தி­யா­வுக்குள் தமிழ்­நாடும் அடங்கும். எனவே, ஆர்.கே. நகரில் இடம்­பெறும் பணப்­ப­ரி­மாற்­றங்கள், கறுப்பு பணம் தொடர்­பாக எழுந்­துள்ள சர்ச்­சை­க­ளையும் முறைப்­பா­டு­க­ளையும் கண்­கா­ணிக்க வேண்டும். குற்­ற­வா­ளி­களை தண்­டிக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்டும்.

இல்­லா­விட்டால் ஆர்.கே.நகர் இடைத்­தேர்­தலில் ஜன­நா­யகம் தோற்று, பண­நா­யகம் வெளிக்­கி­ளம்பும். பணத்தை வாங்கிக் கொண்டு வாக்­க­ளிக்க முயற்­சிக்கும் போது மக்கள் ஒரு உண்­மையைப் புரிந்து கொள்­ள­வேண்டும்.  பணம்­கொ­டுத்­தவர் தேர்­தலில் வெற்றி பெற்றால்? அவரை சந்­தித்து ஆர்.கே.நகரில் குறை­பா­டு­களை தீர்த்து வைக்­கு­மாறு முறை­யிட முடி­யாது.  

அப்­படி முறை­யிட்டால் என்ன நடக்கும்? நீங்கள் எனக்கு சும்மா வாக்­க­ளிக்­க­வில்லை. பணத்தை பெற்­றுக்­கொண்­டுதான் வாக்­க­ளித்­தீர்கள். எனவே, நான் செல­வ­ழித்த பணத்தை தேடி, பின்னர் தான் மக்­களைப் பற்றி சிந்­திப்பேன், தொகு­தியைப் பற்றி சிந்­திப்பேன்.

இப்­போது மக்­க­ளா­வது, மண்­ணாங்­கட்­டி­யா­வது எனக் கூறி விரட்­டி­வி­டுவார். ஆனால், பணத்தை பெற்­றுக்­கொள்­ளாது ஜன­நா­யக முறையில் வாக்­க­ளித்து ஒருவர் வெற்­றி­பெற்றால் மக்கள் நேர­டி­யாகச் சென்று அடிப்­படை வச­தி­களை ஏற்­ப­டுத்­து­மாறு தைரி­ய­மாக தட்டிக் கேட்­கலாம். ஏனென்றால் பணம் வாங்­காத தைரியம்.  

எனவே, தமிழ் நாட்டுத் தமி­ழர்கள் சிந்­திக்க வேண்டும். தமிழன் தன்­மா­ன­முள்­ளவன். கஞ்சி குடிச்­சாலும் சோரம் போக­மாட்டான் என்­பது முது­மொழி.  ஆனால், இன்­றைய வேக­மான உலகில் பண­மென்றால் பிணமும் வாய்­தி­றக்கும் என்ற நிலை ஏற்­பட்­டுள்­ளது.  

ஆனால் ஆர்.கே. நகர் தமி­ழர்கள் பணத்­துக்­காக சோரம் போய்­வி­டக்­கூ­டாது. பணத்­துக்­காக தன்­மா­னத்தை இழக்­கக்­கூ­டாது. இந்­தியத் தேர்தல் ஆணை­யகம் தெளி­வான தீர்­மா­னத்தை அறி­வித்­துள்­ளது. ஆர்.கே.நகர் இடைத்­தேர்தல் சுதந்­தி­ர­மா­கவும், வெளிப்­படைத் தன்­மை­யா­கவும் நடத்­தப்­படும் என உறு­தி­யாக்­கப்­பட்­டுள்­ளது. இந்த உறுதி நிறை­வேற்­றப்­பட வேண்டும்.  

ஊழல் மோச­டிகள், மக்­க­ளுக்கு பணம் வழங்­கு­தல் போன்ற நட­வ­டிக்கைகள் கண்­டு­பி­டிக்­கப்­பட்டால் தேர்தல் நடத்­து­வதை ஒத்­தி­வைக்க வேண்டும்.

 

ஆர்.கே. நகரில் கறுப்பு ஆடுகளும் கறுப்பு பணமும் கண்டுபிடிக்கப்பட வேண்டும்.

 

ஜன­நா­ய­கத்தை பண­நா­ய­கத்­திற்கு அடகு வைத்­து­வி­டக்­கூ­டாது. ஆர்.கே நகரில் போட்­டி­யிட்ட மறைந்த முன்னாள் முதல்வர் ஜெய­ல­லி­தாவும் பல கோடி ரூபாய்­களை செலவு செய்தார் என்ற குற்­றச்­சாட்டும் உள்­ளது.

ஆர்.கே நகர் தண்­டையார் பேட்­டையில் புகை­யி­ர­தங்கள் செல்­வதால் பாரிய மக்கள் நெரி­சலும் வாகன நெரி­சலும் காணப்­ப­டு­கி­றது. இதனைத் தீர்க்க மேம்­பாலம் அமைக்க வேண்டும் என்­பது மக்­களின் கோரிக்கை. ஆனால், இது­வ­ரையில் அக்­கோ­ரிக்கை நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை.

குப்­பைகள் நிறைந்து காணப்­ப­டு­கின்­றது. அதனை அப்­பு­றப்­ப­டுத்­தவும் மீள் சுழற்சி செய்­யவும் திட்­டங்கள் இல்லை. குடிநீர் பற்­றாக்­குறை நில­வு­கி­றது. சில குழாய்­களில் குடிநீர் வந்­தாலும் மண்­ணெண்ணெய் வாசம் அடிக்­கிறது.

அரச பாட­சா­லை­யொன்று பல மாடிக்­கட்­ட­டங்­க­ளுடன் அமைக்­கப்­பட்­டுள்­ளது. ஆனால், இது­வரை திறக்­கப்­ப­ட­வில்லை. இதனால் மாண­வர்கள் பலர் பணம் கொடுத்து தனியார் பள்­ளி­களில் கல்வி கற்­கின்­றனர். இவ்­வாறு தமிழ்­நாட்டின் முத­ல­மைச்­ச­ரான மறைந்த செல்வி ஜெய­ல­லி­தாவின் தொகு­தி­யான ஆர்.கே.நகரில் ஏரா­ள­மான பிரச்­சி­னைகள்.

முத­ல­மைச்சர் ஒரு­வரின் தொகு­தி­யி­லேயே இவ்­வாறு தீர்க்­கப்­ப­டாத பல்­வேறு பிரச்­சி­னைகள் உள்­ளன. எனவே, முத­ல­மைச்சர் மறை­விற்கு பின்னர் இடைத் தேர்தல் இடம்­பெ­று­கி­றது. அதுவும் அ.தி.மு.க. இரண்­டாகப் பிரிந்­துள்­ளது. இரட்டை இலை முடக்­கப்­பட்­டுள்­ளது.  

பன்னீர் அணியைச் சேர்ந்த வேட்­பாளர் மது சூத­ன­னுக்கு இரட்டை மின்­கம்பச் சின்னம் வழங்­கப்­பட்­டுள்­ளது. சசி­கலா ஆத­ரவு வேட்­பாளர் தின­க­ர­னுக்கு தொப்பி சின்னம் வழங்­கப்­பட்­டுள்­ளது. இரு தரப்­பி­னரும் வாழ்வா சாவா என்ற நிலையில் கௌரவப் போரை இத் தேர்­தலில் நடத்­து­கின்­றனர். எப்­ப­டி­யா­வது வெற்­றி­பெ­று­வதே இவர்­க­ளது நோக்­க­மாக உள்­ளது.  

ஆர்.கே நகர் இடைத் தேர்தல் பன்­னீ­ருக்கும் சசி­க­லா­வுக்கும் இடையில் நடக்கும் கௌரவப் போர் என்றே கூற வேண்டும். எனவே, இவர்கள் தேர்­தலில் கள­மி­றங்­கி­யுள்­ளது கௌர­வத்தை பாதுக்­காக்­கவே தவிர, மக்­க­ளையும் தொகு­தி­யையும் பாது­காப்­ப­தற்கு அல்ல என்­பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஏனைய வேட்­பா­ளர்­களின் நிலை­மையும் இதேதான்.

இவ்­வா­றா­ன­தொரு சூழ்­நி­லையில் பல வேட்­பா­ளர்கள் மக்­க­ளுக்கு பணத்தை கொடுத்து ஏமாற்றி வாக்­கு­களை பெற்­றுக்­கொள்ள முயற்­சிக்­கின்­றார்கள். அதா­வது பணம் என்ற இனிப்பை கொடுத்து ஜன­நா­ய­கத்தை வாங்க முயற்­சிக்­கி­றார்கள்.

இதற்கு மக்கள் ஏமாந்தால் ஆர்.கே. நகரின் பிரச்­சி­னைகள் ஒரு­போதும் தீரப் போவ­தில்லை. வெற்­றி­பெறும் வேட்­பா­ளர்கள் மனதில் தாம் சும்மா வெற்­றி­பெ­ற­வில்லை. பணம் கொடுத்தே தேர்­தலில் வெற்­றி­பெற்றோம் என்ற மமதை குடி­கொள்ளும்.

 

பணத்திற்காக வாக்களிக்கும் கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி தேவை

 

பணம் எத்­த­னை நாளைக்கு கையி­ருப்பில் இருக்கும். சாப்­பிட்டால் பணம் செல­வாகும். பறந்து போய்­விடும். வேட்­பா­ளர்கள் வழங்கும் பணம் முடிந்த பிறகு எங்கே பணத்­திற்கு செல்­வீர்கள்.

பணம் ஒரு பிசாசு. அது கிடைக்க கிடைக்க வேண்டாம் என்று எவரும் சொல்­வ­தில்லை. இறு­தியில் ஒரு மனிதன் பணத்­தி­னா­லேயே சாவான். அப்­போது கொண்டு செல்­வது ஒன்­று­மில்லை. 6 அடி மண் தான் சொந்­த­மாகும்.

மறைந்த ஜெய­ல­லி­தாவை உதா­ர­ண­மாக எடுத்­துக்­கொள்வோம். வரு­மா­னத்தை விட சொத்து சேர்த்தார். நீதி­மன்­றத்தால் குற்­ற­வா­ளி­யாக்­கப்­பட்டார். இறு­தியில் உயிர் துறந்தார். இதன்­போது அவ­ரது சொத்­துக்­களை கொண்டு சென்­றாரா? இல்லை. மாறாக 6 அடி மண்தான் சொந்­த­மா­னது. இன்று அவரின் சொத்­துக்­களை யார் யாரோ அனு­ப­விக்­கின்­றனர்.

ஜெய­ல­லி­தாவின் அண்ணன் மகள் தீபா என்ன கேட்­கிறார். ஜெய­ல­லி­தாவின் வேதா இல்­லத்தை தனக்கு தாருங்கள் என்­கிறார். சசி­கலா என்ன சொல்­கிறார். இரட்டை இலையும் அ.தி.மு.க. வும் மற்றும் போயஸ் கார்­டனும் தனக்­குத்தான் சொந்தம் என்­கிறார். 

இவ்­வாறு ஜெய­ல­லி­தாவின் சொத்­துக்­க­ளுக்கு அனை­வரும் உரிமை கொண்­டா­டு­கின்­றனர். இதில் ஜெய­ல­லி­தாவை புதைத்த ஆறடி நிலம் தனக்குத் தான் சொந்தம் என எவ­ரா­வது கேட்­கின்­ற­னரா? இல்லை. இதுதான் உலகம். இது தான் உலக நியதி.

எனவே, ஆர்.கே. நகர மக்கள் விழிப்­பாக இருக்க வேண்டும். தம்மை யார் ஆள வேண்டும் .தமது தொகு­திக்கு யார் வெற்­றி­பெற்றால் நன்மை கிடைக்கும் என்­பதை சிந்­தித்து ஜன­நா­யக முறையில் வாக்­க­ளிக்க வேண்டும். ஜன­நா­ய­கமே நிலைத்து நிற்கும், பண­நா­யகம் சிறிது காலத்தில் இருந்த இடம் தெரி­யாமல் மறைந்து போய்­விடும் என்­பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

தமிழ்நாடு

இன்று தமிழ் நாட்டு ஆட்சி எப்படியிருக்கிறது தெரியுமா "கட்டாய கல்யாணத்தைப்" போல் உள்ளது. "கட்டாயக் கல்யாணம்" வாழ்க்கையில் நன்மைகளை தராது. எனவே இன்று தமிழ் நாட்டு சட்ட சபை கலைக்கப்பட வேண்டும். தேர்தல் நடத்தப்பட வேண்டும். அப்போது தான் உண்மையான ஜனநாயகம் தமிழ்நாட்டில் மலரும்.  

இன்று தமிழ்நாட்டு அரசுக்கு விவசாயிகள் பிரச்சினை, வரட்சி, குடிநீர் தட்டுப்பாடு என பல்வேறு பிரச்சினைகள் தலை தூக்கியுள்ளன. ஆனால், எந்தவொரு பிரச்சினைக்கும் தமிழ்நாட்டு அரசிடம் தீர்வு கிடையாது. மத்திய அரசுக்கு வளைந்து கொடுத்து தமது ஆட்சியதிகாரத்தை பாதுகாப்பதையே முதல் முயற்சியாகக் கொண்டுள்ளனர்.  

சிறையிலிருந்து சசிகலா ஆட்டுவிக்கும் பொம்மலாட்ட ஆட்சியே தமிழ்நாட்டில் இடம்பெறுகிறது. எனவே, தமிழ்நாட்டுக்கு உடனடியாக தேவை தேர்தல். அதன்மூலமே ஜனநாயகத்தை உறுதிப்படுத்த முடியும். தமிழ்நாட்டுக்கு தேவை ஜனநாயகமா அல்லது பினாமி ஆட்சியா? என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-04-01#page-4

  • கருத்துக்கள உறவுகள்

 

1 hour ago, நவீனன் said:

தமிழன் தன்­மா­ன­முள்­ளவன் பணத்­துக்கு வாக்­க­ளிக்கமாட்டான்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.