Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஒரு லட்சம் ஓட்டு: தினகரன் அணி புது 'ரூட்டு'

Featured Replies

ஒரு லட்சம் ஓட்டு: தினகரன் அணி புது 'ரூட்டு'
 
 
 

தொகுதி முழுவதும், பணத்தை வாரி இறைக்காமல், ஒரு லட்சம் வாக்காளர்களை மட்டும் தேர்வு செய்து, ஓட்டுக்கு, 5,000 ரூபாய் வீதம், 50 கோடி ரூபாய் செலவு செய்து, வெற்றியை வசப்படுத்த, தினகரன் அணியினர் முடிவு செய்துள்ளனர்.
 

 

Tamil_News_large_1744378_318_219.jpg


ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற்றால் தான், கட்சியையும், ஆட்சியையும், தக்கவைத்துக் கொள்ள முடியும் என்ற, இக்கட்டான சூழலில், சசிகலா அக்கா மகன் தினகரன், இடைத்தேர்தலில் களமிறங்கி உள்ளார்.
பொது மக்களிடம் எதிர்ப்பு பலமாக உள்ளதால், வெற்றி பெறுவது கடினம் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. சர்வே அனைத்திலும், தி.மு.க.,வுக்கும், பன்னீர் அணிக்கும் இடையே

போட்டி உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
 

ஓட்டுக்கு ரூ.5000



இது, தினகரன் தரப்பினரிடம், கடும் அதிர்ச்சியைஏற்படுத்தி உள்ளது. எனவே, பண பலத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்ற முடிவுக்கு, தினகரன் அணியினர் வந்துள்ளனர். தொகுதியில் பணம் வினியோகம் செய்ய முடியாத அளவிற்கு, தேர்தல் கமிஷன் கெடுபிடிகளை அதிகரித்துள்ளது.எனவே, ஒரு லட்சம் பேரை மட்டும் தேர்வு செய்து, ஓட்டுக்கு, 5,000 ரூபாய் வீதம், 50 கோடி ரூபாய் செலவு செய்து, வெற்றி பெற, தினகரன் அணியினர் முடிவு செய்துள்ளனர்.

இது குறித்து, தினகரன் ஆதரவாளர்கள் சிலர் கூறியதாவது:

பணம் பெற்றால், நிச்சயம் ஓட்டுபோடுவர் எனக் கருதப்படும், ஒரு லட்சம் பேரை தேர்வு செய்துள்ளோம். அவர்களின் மொபைல் எண், வாக்காளர் அடையாள அட்டை எண், வங்கி கணக்கு புத்தகம் எண்

 

ஆகியவற்றை பெற்று உள்ளோம்.
அவர்களில், ஒவ்வொருவருக்கும், 5,000 ரூபாய் வழங்க முடிவு செய்துள்ளோம். தினமும் குறிப்பிட்ட நபர்களை, தொகுதிக்கு வெளியே, குறிப்பிட்ட இடத்திற்கு வரவழைத்து, 'தினகரனுக்கு ஓட்டுப் போடுவோம்' என, சத்தியம் வாங்கிக் கொண்டு, பணத்தை வினியோகம் செய்ய உள்ளோம்.ஒரு லட்சம் பேரில், 80 ஆயிரம் பேர் ஓட்டளித்தாலும், வெற்றி பெற்று விடுவோம். மக்கள் பணத்தை பெற்று விட்டால், நிச்சயம் வெற்றி உறுதி. அவர்களிடம் பணத்தை கொண்டு சேர்ப்பது தான், சவாலாக உள்ளது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1744378

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் கட்சி .....
புத்திசாலி தனமாக செயட்பட வேண்டும் என்றால் .
தமக்கு ஆதரவானவர்கள் இளையவர்களை 
இந்த பணம் கொடுக்கும் ஆட்களிடம் அனுப்பி 
பணத்தை அவர்களுக்கு பெற்றுக்கொடுத்து 
தாம் வாக்கை பெற்றுக்கொள்ள வேண்டும். 

இதில் இரண்டு மாங்காய் வீழ்த்தலாம். 

தேர்தல் முடிவு ஏற்கனவே மத்திக்கு தெரியும் 
அவர்கள் யாரை முடிவு செய்தார்களோ அவர்களையே 
இறுதியில் அறிவிப்பார்கள்.

சீமானுக்கு சான்ஸே இல்லை ..
இதை புரிந்து கொண்டு 
இருக்கும் ஆதரவை ...
அரசியலில் செயல் படுத்த வேண்டும். 

இரண்டு கட்சியிடமும் .....
பணம் இலவசங்கள் வாங்க 
இவர்களை அனுப்ப வேண்டும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.