Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா சுதந்திரக் கட்சி தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டும்

Featured Replies

சிறி­லங்கா சுதந்­திரக் கட்சி தீர்க்­க­மான முடிவு எடுக்க வேண்டும்

 

புதிய அர­சியல் யாப்பை உரு­வாக்கும் விட­யத்தில் கட்­சிகள் மத்­தியில் இழு­பறி நிலை காணப்­பட்டு வரு­கின்­றது. அர­சியல் யாப்பு சபையின் வழி­ந­டத்தல் கு-ழுவில் அங்கம் வகிக்கும் கட்­சி­களின் பிர­தி­நி­திகள் மத்­தியில் இவ்­வி­ட­யத்தில் முரண்­பா­டான தன்மை நிலவி வரு­கின்­றது. புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­வதா அல்­லது தற்­போ­துள்ள அர­சியல் யாப்பில் திருத்­தங்­களை மேற்­கொள்­வதா என்ற விட­யத்தில் இன்­னமும் பூரண இணக்­கப்­பாடு ஏற்­ப­டாத நிலைமை காணப்­ப­டு­கின்­றது.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் அர­சியல் யாப்பு சபையின் வழி­ந­டத்தல் குழு கடந்த செவ்வாய் மற்-றும் புதன்­கிழமை ­களில் கூடி­யி­ருந்­தது. இந்தக் குழுக் கூட்­டத்­தின்­போது புதிய அர­சியல் யாப்பை உரு­வாக்­காது அதில் திருத்­தங்­களை மேற்­கொள்ள வேண்­டு­மென்று சில கட்­சி­களின் பிர­தி­நி­திகள் வலி­யு­றுத்­தி­யுள்­ளனர். புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்-­கு­வ­தாயின் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு நடத்­தப்­பட வேண்டும். அவ்­வாறு சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு நடத்­தப்­பட்டால் அதில் வெற்­றி­பெற முடி­யாது என்­ப­தனால் அர­சியல் யாப்பில் திருத்­தங்­களை மேற்­கொள்­வதே சிறந்­தது என்று இங்கு கருத்து முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது.

ஆனாலும் கடந்த புதன்­கி­ழமை கூடிய வழி­ந­டத்தல் குழுக்­கூட்­டத்தில் இது­வரை இடம்­பெற்ற கலந்­து­ரை­யா­டல்­களில் அனைத்துத் தரப்­பி­ன­ருக்-­கு­மி­டையில் இணக்கம் ஏற்­பட்ட விட­யங்­களை உள்­ள­டக்கி இடைக்­கால அறிக்­கையை வெளி­யி­டு­வது என்றும் எதிர்­வரும் மே மாதம் 3, 4ஆம் திக­தி­களில் மீண்டும் கூடு­வது என்றும் முடிவு செய்­யப்­பட்­டுள்­ளது.

அர­சியல் யாப்பு சபையின் வழி­ந­டத்தல் குழு­வா­னது 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7ஆம் திக­தி­யி­லி­ருந்து 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21ஆம் திகதி வரையில் 54 அமர்­வு­களை நடத்­தி­யுள்­ளது. இதன்­போது அதி­காரப் பகிர்வு, தேர்தல் முறைமை, மதம், நிறை­வேற்று அதி­காரம், மாகா­ணங்­க­ளுக்­கான அதி­கா­ரங்கள் உட்­பட பல்­வேறு விட­யங்கள் குறித்து ஆராய்ந்­தி­ருந்­தது. இந்த விட­யங்­களில் சில இணக்­கப்­பா­டுகள் காணப்­பட்­டுள்­ள­போ­திலும் பல விட­யங்­களில் இன்­னமும் முரண்­பா­டான நிலைமை நிலவி வரு­கின்­றது.

இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 10ஆம் திகதி புதிய அர­சி­ய­ல­மைப்பு குறித்த இடைக்­கால அறிக்கை வெளி­யி­டப்­ப­டு­மென்று அறி­விக்­கப்­பட்­டி­ருந்­த­போ­திலும் முரண்­பா­டுகள் கார­ண­மாக அந்த அறிக்கை வெளி­யி­டப்­ப­ட­வில்லை. தற்­போது அனைத்துத் தரப்­பினர் மத்­தி­யிலும் இணக்கம் காணப்­பட்ட விட­யங்­களை உள்­ள­டக்கி இடைக்­கால அறிக்­கை­யினை வெளி­யி­டு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுப்­பது என்ற தீர்­மானம் மீண்டும் எடுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

ஆனால், புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­வதா அல்­லது தற்­போ­தைய அர­சி­ய­ல­மைப்பில் திருத்­தங்­களை மேற்­கொள்­வதா என்­பது தொடர்பில் அர­சாங்­கத்தின் பங்­காளிக் கட்­சி­யான சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சி­யா­னது தீர்க்­க­மான ஒரு நிலைப்­பாட்டை இன்­னமும் எடுக்­க­வில்லை என்றே தெரி­கின்­றது. சிறி­லங்கா சுநத்­திரக் கட்­சியின் ஊடகப் பேச்­சா­ளரும் இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான டிலான் பெரேரா இந்த விடயம் தொடர்பில் நேற்று முன்­தினம் கொழும்பில் இடம்­பெற்ற செய்­தி­யாளர் மாநாட்டில் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார்.

புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­வதா அல்­லது திருத்­தங்கள் கொண்­டு­வ­ரு­வதா என்­பது இன்­னமும் உறு­திப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. எனினும் புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு-­வது தொடர்­பி­லேயே அர­சி­ய­ல­மைப்பு நிர்­ண­ய­சபை முழு­மை­யான முயற்­சி­களை மேற்­கொண்டு வரு­கின்­றது. அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில் எந்­த­வித இறுதித் தீர்­மா­னமும் எடுக்­கப்­ப­ட­வில்லை என்று அவர் தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

கடந்த செவ்வாய் மற்றும் புதன்­கி­ழ­மை­களில் அர­சி­ய­ல­மைப்பு சபையின் வழி­நடத்தல் குழுக்­கூட்டம் இடம்­பெற்­ற­தை­ய­டுத்து அதில் கலந்­து­கொண்ட பொது எதி­ர­ணியின் உறுப்­பினர் தினேஷ் குண­வர்­தன மற்றும் அமைச்சர் சம்­பிக ரண­வக்க ஆகியோர் புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­வ­தை­விட திருத்­தங்­களை மேற்­கொள்­வதே சிறந்­தது என்று கருத்து தெரி­வித்­துள்­ளனர். இதேபோல், சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் சார்­பிலும் கருத்­துக்கள் முன்­வைக்­கப்­பட்­ட­தாக செய்­திகள் வெளி­யா­கி­யி­ருந்­தன. ஆனால் இவ்­வாறு வெளி­யி­டப்­பட்ட செய்­திகள் தவ­றா­னவை என்று வழி­ந­டத்தல் குழுவின் செய­லாளர் நீல் தித்­த­வெல அறி­வித்­தி­ருந்தார்.

இது­ கு­றித்து அவர் விடுத்­தி­ருந்த அறிக்­கையில், வழி­ந­டத்தல் குழுவின் செயற்­பாடு­களை குழப்பும் வகையில் பொய்­யான செய்­திகள் பத்­தி­ரி­கை­களில் பிர­சு­ரிக்­கப்­ப­டு­கின்­றன. அத்­துடன் வழி­ந­டத்தல் குழுவின் இடைக்­கால அறிக்கை விரைவில் உறு­தி­செய்­யப்­பட்டு இது தொடர்­பான செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­படும். சிறி­லங்கா சுதந்­திரக் கட்சி புதிய அர­சி­ய­ல­மைப்­புக்கு எதி­ரான நிலைப்­பாட்டை கொண்­டி­ருப்­ப­தாக வெளி­யான செய்தி தவ­றா­னது என்று குறிப்­பி­டப்­பட்­டி­ருக்­கின்­றது.

வழி­ந­டத்தல் குழுவின் செய­லாளர் இவ்­வாறு மறுப்பு தெரி­விக்­கின்­ற­போ­திலும் சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் ஊடகப் பேச்­சா­ளரும் இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான டிலான் பெரேரா அண்மைக் கால­மா­கவே சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு நடத்­தப்­ப­டக்­கூ­டாது என்ற கருத்தை வலி­யு­றுத்தி வரு­கின்றார். சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு நடத்­தப்­பட்டால் அதில் வெற்­றி­பெற முடி­யாது என்ற கருத்­தினை அவர் தெரி­வித்து வரு­கின்றார். புதி­தாக அர­சியல் யாப்பை உரு­வாக்­க­வேண்­டு­மானால் பாரா­ளு­மன்­றத்தில் மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்­மையை பெறு­வ­துடன் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பின் மூலம் மக்­களின் கருத்தை அறி­ய­வேண்­டி­யது அவ­சி­ய­மா­ன­தாகும்.

அண்­மையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் நடை­பெற்ற சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் கூட்­டத்­திலும் இவ்­விடயம் குறித்து வலி­யு­றுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது. அர­சியல் யாப்பில் திருத்­தங்­களை மேற்­கொண்டு சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­புக்கு செல்­லா­தி­ருப்­பது நல்­லது என்று இந்தக் கூட்­டத்தில் சுதந்­தி­ரக்­கட்­சியின் உறுப்­பி­னர்கள் வலி­யு­றுத்­தி­யி­ருக்­கின்­றனர். தற்­போ­து­கூட இரா­ஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­வதா அல்­லது திருத்­தங்கள் கொண்­டு­வ­ருவதா என்­பது தொடர்பில் இன்­னமும் உறு­தி­யான முடிவு எடுக்­கப்­ப­ட­வில்லை என்று தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

இதி­லி­ருந்து நல்­லாட்சி அர­சாங்­கத்தின் பங்­காளிக் கட்­சி­யாக உள்ள சிறி­லங்கா சுதந்­திரக் கட்சி புதிய அர­சியல் யாப்பை உரு­வாக்கும் விட­யத்தில் முரண்­பட்ட நிலைப்­பாட்டை கொண்­டி­ருப்­பது புல­னா­கின்­றது. பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான ஐக்­கிய தேசியக் கட்­சி­யா­னது புதிய அர­சியல் யாப்பை உரு­வாக்­கு­வ­துடன் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­புக்கு செல்­ல­வேண்­டி­யதன் அவ­சி­யத்தை வலி­யு­றுத்தி வரு­கின்­றது. பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பாரா­ளு­மன்­றத்தில் பகி­ரங்­க­மா­கவே தமது கட்­சியின் நிலைப்­பாட்டை தெரி­வித்­தி­ருந்தார். இதே­போன்றே எதிர்க்­கட்சித் தலை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா. சம்­பந்­தனும் அர­சியல் தீர்வை உள்­ள­டக்­கிய புதிய அர­சியல் யாப்பு உரு­வாக்­கப்­ப­டு­வ­துடன் அந்த யாப்­பா­னது சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பின் மூலம் சிங்­கள மக்­க­ளினால் அங்­கீ­க­ரிக்­கப்­பட வேண்டும் என்ற கருத்தை கொண்­டி­ருக்­கின்றார்.

தற்­போ­தைய நிலையில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ தலை­மை­யி­லான பொது எதி­ர­ணி­யா­னது புதிய அர­சியல் யாப்பை உரு­வாக்கக் கூடாது என்றும் சில திருத்­தங்­களை மட்டும் மேற்­கொள்­ளலாம் என்ற நிலைப்­பாட்­டி­லேயே உள்­ளது. அதேபோல் ஜாதிக ஹெல உறு­ம­யவைச் சேர்ந்த அமைச்சர் சம்­பிக்க ரண­வக்­கவும் இத்­த­கைய கருத்­தி­னையே கொண்­டி­ருக்­கின்றார். ஆனால், வழி­நடத்தல் குழுவில் அங்கம் வகிக்கும் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சிறுபான்மைக் கட்சிகளின் பிரதிநிதிகள் புதிய அரசியல் யாப்பு என்ற விடயத்தில் உறுதியாகவே உள்ளனர்.

ஆனால், பொது எதிரணியின் நிலைப்பாட்டுக்கு ஒத்ததாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியானது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வது எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ளத்தக்க நடவடிக்கையல்ல. எனவே கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலின்போது மக்களுக்கு வாக்குறுதி அளித்ததன்படி புதிய அரசியல் யாப்பை உருவாக்குவதற்கு சிறிலங்கா சுதந்திரக். கட்சியானது பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இதனை விடுத்து புதிய அரசியல் யாப்பினை உருவாக்குவதா அல்லது திருத்தங்களை மேற்கொள்வதா என்ற விடயத்தில் தளம்பல் போக்கை சுதந்திரக் கட்சி கொண்டிருப்பது புதிய அரசியல் யாப்புக்கான பயணத்துக்கு தடைக்கல்லாகவே அமையும். எனவே, இந்த விடயம் குறித்து சுதந்திரக்கட்சியின் தலைமை சிந்திக்க வேண்டும் என்று வலியுறுத்த விரும்புகின்றோம். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-04-08#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.