Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கிளிநொச்சியில் ஏற்பட்ட விபத்தில் நான்கு பிள்ளைகளின் தந்தை பலி -இளைஞர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் முறுகல்

Featured Replies

கிளிநொச்சியில் ஏற்பட்ட விபத்தில் நான்கு பிள்ளைகளின் தந்தை பலி -இளைஞர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் முறுகல்

 

IMG_6281.jpg

கிளிநொச்சி புதுமுறிப்பில்  இன்று ஞாயிற்றுக்கிழமை  மதியம் 12.30 மணியளவில் ஏற்பட்ட விபத்தில் நான்கு பிள்ளைகளின் தந்தை பலியாகியுள்ளார். கிளிநொச்சியிலிருந்து முழங்காவில் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான  பேரூந்தும் கிளிநொச்சியிலிருந்து அக்கராயன்குளம் நோக்கி பயணித்த சிறியரக உந்துருளியும் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இலக்கம் ஏழு அக்கராயன்குளம் பகுதியைச்சேர்ந்த இராமச்சந்திரன் ஆறுமுகம் வயது 67 என்பவரே  படுகாயமடைந்து வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில் பலியாகியுள்ளார். இறந்தவரின் உடலின் பகுதிகள் சம்பவ இடத்தில் காணப்படுகிறது.

குறித்த பேரூந்துக்கு போதியளவு பிறேக் இன்மையே விபத்துக்கு காரணம் எனவும் நேற்று சனிக்கிழமை கூட பிறேக் சரியான முறையில் வேலை செய்யாமையினால் மரம் ஒன்றுடன் மோதியதாகவும்,   ஒரு வருடத்திற்கு முன்னரும் ஸ்கந்தபுரம் பகுதியில் இதே பேரூந்து ஒருவரை மோதியதில் அவரும் சம்பவ இடத்தில் பலியானதாகவும் பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில்  இன்றைய தினமும் ஒருவர் பலியானதை தொடர்ந்து ஒன்று திரண்ட  பிரதேச இளைஞர்கள் ,  சாலை முகாமையாளர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து கடிதம் மூலம் குறித்த பேரூந்தை இனி சேவையில் ஈடுபடுத்தமாட்டோம் என உறுதிமொழி வழங்கினால் மாத்திரமே  பேரூந்தை சம்பவ இடத்திலிருந்து எடுத்துச் செல்ல அனுமதிப்போம் எனத் தெரிவித்து எதிர்ப்பில் ஈடுப்பட்டனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு பிற்பகல் 2.20 மணிக்கு வருகைதந்த காவல்துறையினர்  இளைஞர்களுடன் சமரச முயற்சியில் ஈடுப்ட்ட போதும் அதற்கு அவர்கள் இணக்கம் தெரிவிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து  நான்கு  மணியளவில்  சம்பவ இடத்திற்கு கிளிநொச்சி உதவி காவல்துறை அத்தியட்சர் றொசான் ராஜபக்ஸ வருகை தந்து எதிர்ப்பில் ஈடுப்ட்ட இளைஞர்களுடன்  சமரச முயற்சியில் ஈடுப்பட்டு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.

இதன் போது காவல்துறையினர் எதிர்ப்பில் ஈடுப்பட்ட இளைஞர்களை தொலைபேசியில் வீடியோ எடுத்ததோடு, உதவி காவல்துறை அத்தியட்சரால் புங்குடுதீவு மாணவி  கொலை வழக்கில் எதிர்ப்பில் ஈடுப்பட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டமை தொடர்பில் தெரிவித்தும்  இளைஞர்களின் எதிர்ப்பை கட்டுப்பாட்டுக்குள்கொண்டு வந்தனர்.  இதற்கிடையில் கலகம் அடக்கும் மற்றும் ஆயுதம் தாங்கிய காவல்துறையினரும்  சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டிருந்தனர்

IMG_6256.jpgIMG_6290.jpgIMG_6294.jpgIMG_6247.jpgIMG_6256-1.jpg

 

0

https://globaltamilnews.net/archives/23757

  • தொடங்கியவர்

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் நான்கு பிள்ளைகளின் தந்தை பலி : இளைஞர்கள், பொலிஸாருக்கிடையில் முறுகல்! (படங்கள்)

Published by Pradhap on 2017-04-09 19:34:13

 

கிளிநொச்சி புதுமுறிப்பில்  இன்று இடம்பெற்ற விபத்தில் நான்கு பிள்ளைகளின் தந்தை பலியாகியுள்ளார்.

unnamed__1_.jpg

கிளிநொச்சியிலிருந்து முழங்காவில் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பஸ் மற்றும் கிளிநொச்சியிலிருந்து அக்கராயன்குளம் நோக்கி பயணித்த சிறியரக மோட்டார் சைக்கிளும் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதிர் இலக்கம் ஏழு அக்கராயன்குளம் பகுதியைச் சேர்ந்த இராமச்சந்திரன் ஆறுமுகம் வயது 67 என்பவரே  படுகாயமடைந்து வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில் பலியாகியுள்ளார். 

unnamed__2_.jpg

இறந்தவரின் உடல் எலும்பு துண்டுகள் சம்பவ இடத்தில் காணப்படுகிறது.

குறித்த பஸ்ஸில் போதியளவு பிரேக் இன்மையே விபத்துக்கு காரணம் எனவும் நேற்று சனிக்கிழமை குறித்த பஸ் பிரேக் போதியளவு இன்மையால் மரம் ஒன்றுடன் மோதியதாகவும்,   ஒரு வருடத்திற்கு முன்னர் ஸ்கந்தபுரம் பகுதியில் இதே பஸ் ஒருவரை மோதியதில் அவரும் சம்பவ இடத்தில் பலியானதாகவும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே இன்றைய தினமும் ஒருவர் பலியானதை தொடர்ந்து ஒன்று திரண்ட  பிரதேச இளைஞர்கள் சாலை முகாமையாளர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து கடிதம் மூலம் குறித்த பஸ் இனி சேவையில் ஈடுபடுத்தமாட்டோம் என உறுதிமொழி வழங்கிய பின்னரே பஸ்ஸை சம்பவ இடத்திலிருந்து எடுத்துச் செல்ல அனுமதிப்போம் எனத் தெரிவித்து எதிர்ப்பில் ஈடுப்பட்டனர்.

unnamed__3_.jpg

பின்னர் சம்பவ இடத்திற்கு வருகைதந்த பொலிஸார் இளைஞர்களுடன் சமரச முயற்சியில் ஈடுபட்ட போதும் அதற்கு அவர்கள் இணக்கம் தெரிவிக்கவில்லை. பின்னர்   சம்பவ இடத்திற்கு கிளிநொச்சி உதவி பொலிஸ் அத்தியட்சர் ரொசான் ராஜபக்ஷ வருகை தந்து எதிர்ப்பில் ஈடுபட்ட இளைஞர்களுடன்  சாதுரியமாக சமரச முயற்சியில் ஈடுபட்டு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.

unnamed__4_.jpg

இதன் போது பொலிஸார் எதிர்ப்பில் ஈடுப்பட்ட இளைஞர்களை தொலைபேசியில் வீடியோ எடுத்ததோடு, உதவி பொலிஸ் அத்தியட்சரால் வித்தியா கொலை வழக்கில் எதிர்ப்பில் ஈடுப்பட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டமை தொடர்பில் கூறியும்  இளைஞர்களின் எதிர்ப்பை கட்டுப்பாட்டுக்குள்கொண்டு வந்தனர். 

இதற்கிடையில் கலகம் அடக்கும் மற்றும் ஆயுதம் தாங்கிய பொலிஸாரும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

unnamed__5_.jpg

unnamed.jpg

http://www.virakesari.lk/article/18905

  • கருத்துக்கள உறவுகள்

சொறிலன்காவின் கூலிகள் திறமாக அடக்குமுறைகளை மேற்கொள்கின்றனர் என்பதுக்கு இதைவிட வேறு உதாரணம் கிடையாது .இதுவே தமிழ்நாடா இருந்தா கதையே வேறு இதுவரைக்கும் பஸ் எரிந்து முடிந்து ரிம்மில் நிக்கும் .இங்கு இந்த பஸ் இன்னும் எத்தனை தடையமில்லா இனவழிப்புக்கு பயன்படுகிறது யாரவது கனக்க கதைக்கிரவனுக்கு இந்த பஸ் எதிர்காலத்தில் எமன் வேலையை செய்யபோவுது .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.