Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊடக செயலாளரின் பிரத்தியேக கடிதம் எவ்வாறு பொதுவான கடிதமாக மாறியது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஊடக செயலாளரின் பிரத்தியேக கடிதம் எவ்வாறு பொதுவான கடிதமாக மாறியது
 
 
தெரண ஊடக வலையமைப்பு தொடர்பில் ஊடகத்துறை அமைச்சின் செயலாளரினால் பிரத்தியேகமாக அனுப்பி வைக்கப்பட்ட கடிதமொன்று சிரச தொலைக்காட்சியில் நேற்றிரவு 10 மணி பிரதான செய்திகளில் முதன்மை செய்தியாக ஒளிபரப்பப்பட்டமை ஆச்சரியத்திற்குரிய விடயமாகும். 

இந்த பிரத்தியேக கடிதம் ஊடக நெறிமுறைகளை மீறி போட்டி ஊடக நிறுவனமொன்றில் ஒளிபரப்புகின்றமையானது, யாருடைய தேவைக்காக முன்னெடுக்கப்பட்ட செயற்பாடு என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

எல்.எம்.ஆர்.பி தரவுகளின் பிரகாரம், தெரண தொலைக்காட்சி முதலாவது இடத்தை தன்வசப்படுத்திக் கொண்டுள்ள பின்னணியில், பொதுமக்கள் எம்மீது கொண்டுள்ள நன்மதிப்பை சீர்குலைப்பதற்கு போட்டி ஊடக நிறுவனம் முன்னெடுத்துள்ள முயற்சியாக இது கருதப்படுகின்றது. 

இந்த நிலையில், அனைத்து உண்மையாக ஆவணங்களையும், தகவல்களையும் பொது மக்களுக்கு தெரிவிக்க நாம் தீர்மானித்தோம். 

2016ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 12ஆம் திகதி இலங்கை மன்ற கல்லூரியில் ஜனாதிபதியினால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் திரிவுப்படுத்தப்பட்டு ஒளிபரப்பப்பட்டதாக குற்றஞ்சுமத்தி, ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் நிமல் போபகேயினால் முதல் தடவையாக அதே ஆண்டு ஒக்டோபர் மாதம் 25ஆம் திகதி எமக்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. 

இந்த விடயம் குறித்து விசாரணைகளை நடாத்துவதற்காக ஒக்டோபர் மாதம் 12ஆம் திகதி ஒளிபரப்பப்பட்ட அனைத்து செய்தி அறிக்கைகளையும் தனக்கு அனுப்பி வைக்குமாறு அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. 

இந்த செய்தி தவறானது எனவோ அல்லது செய்தியை சரி செய்து மீள ஒளிபரப்பு செய்யுமாறோ ஜனாதிபதி ஊடகப் பிரிவு அல்லது வேறு எந்தவொரு தரப்பினரும் கேட்டுக்கொள்ளாத பின்னணியிலேயே இந்த கடிதம் எமக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. 

இதன்படி, நிமல் போபகேயின் கடிதத்தின் பிரதியுடன், எமது பதிலை நாம் அதற்கு பின்னரான நாளொன்றில் அனுப்பி வைத்திருந்தோம். 

ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் அனுப்பி வைக்கப்பட்டிருந்த ஊடக அறிக்கைக்கு அமையவே, அந்த செய்தி தயாரிக்கப்பட்டு ஒளிபரப்பப்பட்டதாக நாம் அந்த கடிதத்தின் ஊடாக சுட்டிக்காட்டியிருந்தோம். 

2016 ஒக்டோபர் மாதம் 12ஆம் திகதி ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் அனுப்பி வைக்கப்பட்டிருந்த ஊடக அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது. 

´எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பாதுகாப்பு தரப்பை வலுவிழக்க செய்யவோ அல்லது இராணுவத்தின் நற்பெயருக்கு கலங்கத்தை ஏற்படுத்துவதற்கோ தான் செயற்பட போவதில்லை என தெரிவித்த ஜனாதிபதி, கடந்த சில தினங்களுக்கு முன்னர் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மற்றும் முன்னாள் கடற்படை தளபதி மூவரை நீதிமன்றத்திற்கு அழைத்து சென்ற நடவடிக்கை தொடர்பில் பாதுகாப்பு அமைச்சர் என்ற விதத்தில் தான் இணங்கவில்லை எனவும் கூறினார்." 

அதேபோன்று குறித்த விடயம் ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்திலும் அவ்வாறே வெளியிடப்பட்டிருந்தது. 

இதன்படி, நாம் வெளியிட்ட செய்தியின் ஊடாக ஜனாதிபதியின் கருத்துடனான காணொளியும், திரிவுப்படுத்தல் வேண்டுமென்றே முன்னெடுக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டிருந்தோம். 

அத்துடன், சம்பவம் இடம்பெற்ற நாளுக்கு அடுத்த நாள் வெளியான பத்திரிகைகளிலும் இதே அர்த்தத்திற்கு ஒத்ததான விதத்திலேயே செய்திகள் வெளியாகியிருந்ததாகவும் சுட்டிக்காட்டியிருந்தோம். 

அதேபோன்று ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட கருத்துக்கு பின்னர் இந்த விடயம் குறித்து தெளிவூட்டும் வகையில் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன மற்றும் மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவபிரிய ஆகியோரினால் நடாத்தப்பட்ட ஊடக சந்திப்பையும் நாம் அவ்வாறே வெளியிட்டிருந்தோம். 

இதன்படி, இந்த செய்தியின் ஊடாக நாம் நியாயத்தை நிறைவேற்றியிருந்தோம் என தெரண ஊடக வலையமைப்பின் நிறைவேற்று பணிப்பாளரினால் ஊடகத்துறை அமைச்சின் செயலாளருக்கு பதில் கடிதத்தில் நாம் தெளிவூட்டியிருந்தோம். 

இவ்வாறு விடயங்கள் தெளிவூட்டப்பட்டதன் பின்னர் 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11ஆம் திகதி ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் நிமல் போபகேயினால் எமக்கு மற்றுமொரு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. 

தன்னால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் மூலம் ஜனாதிபதியின் கருத்துக்கள் தெரண ஊடக நிறுவனம் திருவுப்படுத்தி செய்தி வெளியிட்டிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார். 

இதன்படி, இந்த சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு முன்னர் எமது தரப்பிலிருந்து முன்வைக்க காரணங்கள் இருக்குமாயின், அதனை குறித்த கடிதம் கிடைத்த 7 நாட்களுக்குள் அனுப்பி வைக்குமாறு கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. 

செயலாளரினால் அனுப்பி வைக்கப்பட்டிருந்த கடிதத்தில் சர்ச்சையை ஏற்படுத்தும் விதத்திலான ஐந்து விடயங்களை சுட்டிக்காட்டி மீண்டும் தெரண ஊடக வலையமைப்பினால் 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21ஆம் திகதி ஊடகத்துறை அமைச்சின் செயலாளருக்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டது. 

செய்தி திரிவுப்படுத்தி வெளியிடப்பட்டிருக்குமாயின், ஊடகம் குறித்து நிபுணத்துவம் பெற்ற ஒருவரோ அல்லது குழுவொன்றினாலோ அனைத்து விடயங்களும் ஒழுங்கு முறைக்கு அமைய விசாரணைகளை முன்னெடுத்து இறுதி முடிவுக்கு வர வேண்டும் என நாம் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியிருந்தோம். 

அதேபோன்று இந்த விசாரணை தொடர்பில் விடயங்களை தெளிவூட்ட தெரண ஊடக வலையமைப்பிற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என்பதுடன், ஒரு தரப்பினரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளினால் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளமையை சுட்டிக்காட்டி நாம் கடிதம் அனுப்பியிருந்தோம். 

எம்மால் வெளியிடப்பட்ட செய்தி திரிவுப்படுத்தப்பட்டுள்ளதாக குற்றஞ்சுமத்தப்பட்ட போதிலும், குறித்த செய்தி எவ்வாறு திரிவுப்படுத்தப்பட்டது என்பது தொடர்பில் தெளிவில்லாது காணப்படுகின்றது எனவும் நாம் அந்த கடிதத்தின் ஊடாக குறிப்பிட்டிருந்தோம். 

இதன்படி, மீண்டும் விசாரணைகளை நடாத்த தீர்மானித்துள்ளதாக 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதலாம் திகதி ஊடகத்துறை அமைச்சின் செயலாளரினால் எமக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

அத்துடன், விசாரணை குழுவுக்கு எமது நிறுவனத்திலிருந்து ஒருவரின் பெயரை குறிப்பிட்டு ஒரு வார காலத்திற்குள் அனுப்புமாறும் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. 

அதனைத் தொடர்ந்து, தெரண ஊடக வலையமைப்பின் சட்டத்தரணி சமன் சேனாதீரவினால் ஊடகத்துறை அமைச்சின் செயலாளருக்கு பதில் கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. 

2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதலாம் திகதி மற்றும் 14ஆம் திகதியில் தமது தரப்பு நிறுவனத்;திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த கடிதம் தொடர்பில் ஊடத்துறை அமைச்சின் செயலாளரினால் முன்னெடுக்க தயாராகும் விசாரணைக்கும் செயலாளருக்கு காணப்படுகின்ற சட்ட விதிமுறைகள் தொடர்பிலும் தெளிவூட்டுமாறு அவர் கேட்டுக்கொண்டிருந்தார். 

இந்த விடயங்கள் தெளிவூட்டப்படாத பட்சத்தில், தமது தரப்பு நிறுவனம் அதற்கான பதிலை வழங்குகின்றமை கடினமான விடயம் என தெரண ஊடக வலையமைப்பின் சட்டத்தரணி சமன் சேனாதீர கடிதத்தின் ஊடாக தெளிவூட்டியிருந்;தார். 

எவ்வாறாயினும், சட்டத்தரணி சமன் சேனாதீரவினால் அனுப்பி வைக்கப்பட்டிருந்த கடிதத்திற்கு ஊடகத்துறை அமைச்சின் செயலாளரினால் பதிலளிப்பதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டிருக்கவில்லை. 

அவ்வாறான பின்னணியில் கடந்த ஏப்ரல் மாதம் ஐந்தாம் திகதி ஊடகத்துறை அமைச்சின் செயலாளரினால் மற்றுமொரு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. 

சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டு தொடர்பில் முவர் அடங்கிய குழுவொன்றினால் குறித்த ஐந்து விடயங்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளிலிருந்து தெரண ஊடக வலையமைப்பு தவறிழைத்துள்ளதாக தீர்மானிக்கப்பட்டுள்ளதென அந்த கடித்தில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. 

இந்த சம்பவம் தொடர்பில் ஏதேனும் விடயங்கள் கூற வேண்டுமாக இருந்தால், கடிதம் கிடைக்கப் பெற்று 14 நாட்களுக்குள் அதற்கான பதிலை அனுப்புமாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதன்படி, சட்ட ஆலோசனைகளின் பிரகாரம் 14 நாட்களுக்குள் ஊடகத்துறை அமைச்சின் செயலாளருக்கு பதிலளிப்பதற்கு தெரண ஊடக வலையமைப்பு தயாராகியிருந்த பின்னணியில் நல்லாட்சி அரசாங்கம் ஊடக சுதந்திரத்தை வழங்கியுள்ளமையினால் ஊடகத்துறை அமைச்சருடனும் கலந்துரையாடல்களை நடாத்திருந்தோம். 

இந்த கலந்துரையாடலின் பிரகாரம், அமைச்சரின் தலையீட்டுடன் ஜனாதிபதியை எதிர்வரும் சில தினங்களில் சந்திக்க நாம் தயாராகிய நிலையிலேயே, ஊடகத்துறை அமைச்சின் செயலாளரினால் பிரத்தியேகமாக அனுப்பப்பட்ட கடிதம் சிரச தொலைக்காட்சியில் முதன்மை செய்தியாக ஒளிபரப்பப்பட்டமை யாருடைய தேவைக்காக என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

இதனூடாக குறித்த கடிதத்தை ஊடகங்களுக்கு வெளியிட்டு தெரண ஊடக வலையமைப்பின் நற்பெயருக்கு கலங்கத்தை ஏற்படுத்தியமைக்காக, உத்தியோகப்பூர்வமாகவோ அல்லது தனிப்பட்ட ரீதியிலோ பொறுப்பு கூற வேண்டும் என்பதுடன், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் நாம் எதிர்பார்த்துள்ளோம். 

12 வருடங்களாக எந்தவித அழுத்தங்களும் இன்றி சுதந்திரமாக செய்திகளை வெளியிட்டமை மாத்திரமன்றி, தனிப்பட்ட நிகழ்;ச்சி நிரலுக்கு அப்பாற் சென்று உண்மையான செய்திகளை வெளியிட்டமை எந்தளவு நியாயமானது என மக்கள் தீர்மானிக்கட்டும். 

இன்று மாத்திரமன்றி எதிர்வரும் காலங்களிலும் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உண்மையான தகவல்களை வெளியிடும் தெரண, தொடர்ந்தும் மக்களின் தேவைக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட எதிர்பார்த்துள்ளது.
 
 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.