Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மக்களிடமிருந்து அந்நியப்படுகிறதா கூட்டமைப்பு?

Featured Replies

தமிழ் மக்களிடமிருந்து அந்நியப்படுகிறதா கூட்டமைப்பு?

132446006684043633100544695485044192394345n-2e9c9c80eceb488f29eb5e6a05b29675d2222f42.jpg

 

தமிழ் மக்­க­ளிடம் இருந்து தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை அந்­நி­யப்­ப­டுத்­து­கின்ற இர­க­சியச் சதித் திட்டம் ஒன்றை அர­சாங்கம் அரங்­கேற்­று­கி­றதா? கடந்த 7ஆம் திகதி பாரா­ளு­மன்­றத்தில் உரை­யாற்­றிய தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிவ­சக்தி ஆனந்தன், இந்தக் கேள்­வியை எழுப்­பி­யி­ருந்தார்.

வடக்கு, கிழக்கில் தமிழ் மக்­களால் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்ற ஜன­நா­யக ரீதி­யான போராட்­டங்­களை அர­சாங்கம் கண்­டு­கொள்­ளாமல் இருப்­பதைச் சுட்­டிக்­காட்­டியே அவர் இந்தக் கேள்­வியை அர­சாங்­கத்தை நோக்கி எழுப்­பினார்.

காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் உற­வி­னர்கள், ஐம்­பது நாட்­க­ளுக்கும் மேலாக, கிளி­நொச்சி, வவு­னி­யாவில் கொதிக்கும் வெயி­லுக்கு மத்­தி­யிலும் கவ­ன­யீர்ப்பு போராட்­டங்­களில் ஈடு­பட்டு வரு­கின்ற நிலை­யிலும், அதற்குச் சமாந்­த­ர­மாக முல்­லைத்­தீவு, மரு­தங்­கேணி, திரு­கோ­ண­ம­லை­யிலும் போராட்­டங்கள் இடம்­பெற்று வரு­கின்ற நிலை­யிலும், அர­சாங்கம் அவர்­களைக் கண்டு கொள்­ள­வில்லை.

கேப்­பாப்­பு­ல­விலும், முள்­ளிக்­கு­ளத்­திலும் தமது பூர்­வீகக் காணி­களை விடு­விக்கக் கோரி போராட்டம் நடத்தும் மக்­களின் பிரச்­சி­னை­க­ளையும் அர­சாங்கம் தீர்த்து வைக்­க­வில்லை.

யாழ்ப்­பா­ணத்­திலும், மட்­டக்­க­ளப்­பிலும் பட்­ட­தா­ரிகள் வேலை­வாய்ப்பைப் பெற்றுத் தரக் கோரி நடத்தும் போராட்­டங்­க­ளுக்கும் உரிய தீர்வு இல்லை.

இவ்­வா­றாக, போராட்டம் நடத்தும் மக்கள் வீதி­யிலும், காணி­க­ளிலும் இர­வு­ப­க­லாக தங்­கி­யி­ருக்­கின்ற நிலை­யிலும் அர­சாங்கம் கண்டும் காணாமல் இருக்­கி­றது. போராட்டம் நடத்தும் மக்கள், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பையும் விரோ­தி­க­ளாகத் தான் பார்க்க முனை­கி­றார்கள்.

அர­சாங்­கத்­துடன் இணைந்து செயற்­ப­டு­கின்ற தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தமது பிரச்­சி­னை­களைத் தீர்க்க முனை­ய­வில்லை. அதற்கு அக்­கறை காட்­ட­வில்லை என்றே நினைக்­கி­றார்கள். இதனால், மக்­க­ளிடம் இருந்து தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு அந்­நி­யப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கி­றது என்­பதே சிவ­சக்தி ஆனந்தன் போன்ற கூட்­ட­மைப்பு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் ஆதங்­க­மாக உள்­ளது.

அர­சாங்­கத்­துக்கு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு ஆத­ரவு வழங்­கு­கின்ற போதிலும், தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­களை தீர்ப்­ப­தற்கு அவர்­களால் முடி­யா­தி­ருக்­கி­றது. இந்த விட­யத்தில் பல முட்­டுக்­கட்­டைகள் இருப்­பது போல அர­சாங்கம் காட்டிக் கொள்­கி­றது.

மஹிந்த ராஜபக் ஷ அணி­யி­ன­ரையும், இரா­ணு­வத்­தையும், பொரு­ளா­தார நெருக்­க­டி­க­ளையும் காரணம் காட்டி அர­சாங்கம் தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­களைத் தீர்ப்­பதில் இருந்து தப்­பித்து வந்­தி­ருக்­கி­றது.

எந்­த­வொரு அர­சாங்­கத்­துக்கும் ஆயிரம் பிரச்­சி­னைகள் இருக்கத் தான் செய்யும். பிரச்­சி­னைகள் இல்­லாத அர­சாங்கம் ஒன்று இருந்தால், அங்கு அர­சாங்­கத்­துக்கு வேலையே இருக்­காது. ஏனென்றால் மக்கள் தம்மைத் தாமே பார்த்துக் கொள்­வார்கள். அப்­ப­டி­யொரு கட்­டத்தில் அர­சாங்­கத்தை மக்­களே மறந்து போவார்கள். அவ்­வாறு மறந்து போனால், அர­சாங்­கத்தின் தேவையோ அவ­சி­யமோ அவர்­க­ளுக்குத் தெரி­யாமல் போகும்.

எனவே, ஓர் அர­சாங்கம் தன்னைச் சுற்றிப் பிரச்­சி­னைகள் இருப்­ப­தையே விரும்பும். இலங்­கையில் மைத்­திரி- ரணில் கூட்டு அர­சாங்கம் பத­விக்கு வந்த காலத்தில் இருந்து பிரச்­சி­னை­க­ளுக்குள் தான் இருக்­கி­றது.

ஆரம்­பத்தில் 100 நாள் செயற்­திட்டம் ஒன்று வகுக்­கப்­பட்­டது. அது மஹிந்த ஆட்­சியில் படு­கு­ழியில் தள்­ளப்­பட்­டி­ருந்த நாட்டை மீட்கும் காலப்­ப­குதி என்றும், அந்தக் கால­கட்­டத்தில் மிக அவ­சி­ய­மான பொரு­ளா­தார மற்றும் நிர்­வாக பிரச்­சி­னை­களை சீர­மைக்­கவே பயன்­ப­டுத்தப் போவ­தா­கவும் அறி­விக்­கப்­பட்­டது.

இதன் மூலம், தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­களைத் தீர்ப்­ப­தற்­கான முயற்­சிகள் இந்தக் காலத்தில் நடக்­காது என்று அதி­கா­ர­பூர்­வ­மாக அறி­விக்­கப்­பட்­டது. அதன்­ப­டியே அந்தக் கால­கட்டம் இழுத்­த­டிக்­கப்­பட்­டது.

அதற்குப் பின்னர், புதிய பாரா­ளு­மன்றம் தெரி­வாக, புதிய கூட்டு அர­சாங்கம் பத­விக்கு வந்­தது அதன் பின்­னரும் அதே பிரச்­சி­னை­களும், அவற்றைத் தீர்க்கும் நட­வ­டிக்­கை­களும் தான் தொடர்­கின்ற­ன­றவே தவிர, தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­களைத் தீர்ப்­ப­தற்­காக, அவர்­க­ளுக்கு அளிக்­கப்­பட்ட வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­று­வ­தற்­கான முயற்­சி­களை அர­சாங்கம் எடுக்­க­வே­யில்லை.

ஒவ்­வொரு சந்­தர்ப்­பத்­திலும், மஹிந்­தவைக் காட்­டியோ, இரா­ணு­வத்தைக் காட்­டியோ, அல்­லது பொரு­ளா­தார நெருக்­க­டியைக் காரணம் காட்­டியோ, தமிழ் மக்­களின் பிரச்­சினை யை இழுத்­த­டித்து வந்­தி­ருக்­கி­றது அர­சாங்கம்.

ஆக பல தசாப்­தங்­க­ளாக இழுத்­த­டிக்­கப்­ப­டு­கின்ற தமிழ் மக்­களின் பிரச்­சி­னைகள், அர­சாங்­கத்­துக்கு பெரிய விட­ய­மா­கவே தெரி­ய­வில்லை. அதனை விட சுல­ப­மாகத் தீர்த்து விடக் கூடிய குறு­கிய காலப் பிரச்­சி­னை­களைத் தான் முக்­கி­ய­மா­ன­தாகப் பார்க்­கி­றது.

இது அர­சாங்­கத்தின் அலட்­சியப் போக்கின் வெளிப்­பாடு. தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­களைத் தீர்க்கும் முயற்­சி­களை இழுத்­த­டிப்­பதில், இருந்து தமிழ் மக்­க­ளுக்­கான உரி­மை­களை வழங்­காமல் விடு­வ­தற்கு அர­சாங்கம் முயற்­சித்துக் கொண்டு தான் இருக்­கி­றது எனலாம்.

அண்­மையில் வடக்கில் நடந்த ஒரு கூட்­டத்தில் உரை­யாற்­றிய தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுமந்­திரன், இதனைக் கூறி­யி­ருக்­கிறார். தமிழ் மக்­களின் உரி­மை­களை வழங்­காமல் விடு­வது - இழுத்­த­டிப்­பது பற்­றிய சிந்­த­னைகள், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வி­டமும், பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வி­டமும் கூட இருப்­ப­தாக அவர் கூறி­யி­ருந்தார்.

அர­சாங்­கத்­துடன் இணக்கப் போக்­குடன் செயற்­ப­டு­பவர் என்று கூட்­ட­மைப்­புக்குள் ஒரு தரப்­பி­னரால் குற்­றம்­சாட்­டப்­படும்

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுமந்­திரன் தான் இதனைக் கூறி­யி­ருக்­கிறார் என்­பது இங்கு கவ­னிக்­கத்­தக்­கது.

அதை­விட அர­சாங்­கத்­துடன் பேச்­சுக்­களில் தொடர்ச்­சி­யாகப் பங்­கெ­டுத்து வரு­பவர் என்ற வகையில், அர­சாங்­கத்தின் முக்­கிய தலை­வர்­களின் சிந்­த­னையில் மாற்றம் ஏற்­ப­ட­வில்லை என்ற அவ­ரது இந்தக் கருத்து முக்­கி­ய­மா­னது.

இத்­த­கைய நிலையில் இருந்து பார்க்கும் போது, நிச்­ச­ய­மாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை அர­சாங்கம் தமிழ் மக்­க­ளிடம் இருந்து அந்­நி­யப்­ப­டுத்தும் நிகழ்ச்சி நிரல் ஒன்றைச் செயற்­ப­டுத்­து­கி­றதா என்ற சந்­தேகம் எவ­ருக்­கேனும் வரு­வது இயல்பு தான்.

விடு­தலைப் புலி­களின் கால­கட்­டத்­திலும் சரி, அதற்குப் பின்­னரும் சரி தமிழ் மக்­களின் ஒரு­மித்த செல்­வாக்குப் பெற்ற தரப்­பாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பே இருந்து வரு­கி­றது. ஜன­நா­யக தேர்­தல்­களின் மூலம் கூட்­ட­மைப்பு தனது நிலையை அர­சாங்­கத்­துக்கும் சர்­வ­தேச சமூ­கத்­துக்கும் உறு­திப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

தமிழ் மக்­க­ளுக்கு இவ்­வா­றா­ன­தொரு பல­மான தலை­மைத்­துவ சக்தி இருப்­பதை எந்­த­வொரு அர­சாங்­கமும் விரும்­பாது. தமிழ் மக்­க­ளுடன் அதி­கா­ரங்­க­ளையோ உரி­மை­க­ளையோ பகிர்ந்து கொள்ள விரும்­பாத அர­சாங்கம், தமிழ் மக்­க­ளுக்கு பலம்­வாய்ந்த தலை­மைத்­துவம் இருப்­பதை சாத­க­மான விட­ய­மாக ஒரு­போதும் பார்க்­காது.

அத்­த­கைய நிலையில் இருந்து பார்த்தால், அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­களின் மீது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு ஏற்­பட்­டி­ருக்­கின்ற சந்­தே­கத்தில் நியாயம் இருக்­கவே செய்யும்.

அண்­மைக்­கா­ல­மாக வடக்­கிலும், கிழக்­கிலும் போராட்­டங்கள் நடக்­கின்ற இடங்­க­ளுக்கு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற, மாகா­ண­சபை உறுப்­பி­னர்­களால் செல்ல முடி­யாத நிலையே சில கட்­டங்­களில் இருந்­தது. காரணம் மக்கள் அவர்­களின் மீதும் கொந்­த­ளித்துக் கொண்­டி­ருந்­தனர். 

அடுத்த தேர்­த­லுக்கு எப்­படி வரு­வீர்கள், எப்­படி வாக்கு கேட்­பீர்கள் என்­றெல்லாம் கூட போராடும் மக்கள் கேள்­வி­களை எழுப்பிக் கொண்­டி­ருந்­தனர்.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கும் தமிழ் மக்­க­ளுக்கும் இடையில் தெளி­வா­ன­தொரு இடை­வெ­ளியை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு அர­சாங்­கத்தின் இறுக்­க­மான போக்கு கார­ண­மா­கி­யி­ருக்­கி­றது.

இந்தக் கட்­டத்தில் ஒன்றில் அர­சாங்கம் தனது நிலையை மாற்றிக் கொண்டு, தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­களைத் தீர்ப்­ப­தற்கு முன்­வர வேண்டும்.அல்­லது அர­சாங்­கத்­துடன் இணக்­கப்­போக்­குடன், செயற்­படும் நிலைப்­பாட்டில் இருந்து தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு விலக வேண்டும். இந்த இரண்­டுமே நடப்­ப­தாகத் தெரி­ய­வில்லை.

அர­சாங்கம் தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­களைத் தீர்ப்­பதில் அக்­க­றை­யற்­றி­ருக்­கி­றது. அதற்­காக, கிடைத்­துள்ள சந்­தர்ப்­பத்தை நழுவ விட்டு விடக் கூடாது, தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­களைத் தீர்ப்­ப­தற்­கான வர­லாற்று வாய்ப்பை கூட்­ட­மைப்பு நாசப்­ப­டுத்தி விட்­டது என்ற பழிச்சொல் தம்­மீது வந்து விடக் கூடாது என்­ப­தற்­காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைமையும், அரசாங்கத்துடன் முரண் அரசியல் நடத்தத் தயாராக இல்லை.

இந்த நிலையானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்

பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. அவ்வாறான அதிருப்தியில் உள்ளவர்களில் ஒருவர் தான் சிவசக்தி ஆனந்தன்.

ஆனாலும், தமிழ் மக்களிடம் இருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிரிக்க அரசாங்கம் சதி செய்கிறதா என்ற அவரது கேள்வியில் நியாயங்கள் இருக்கின்றன.

அரசாங்கம் தமிழ் மக்களின் போராட்டங்களைக் கண்டுகொள்ளாமலும், அவர்களின் பிரச்சினைகளை தீர்க்காமல் தொடர்ந்து இழுத்தடித்துக் கொண்டும் இருந்தால், நிச்சயமாக தமிழ் மக்களின் வெறுப்பு கூட்டமைப்பு மீதே திரும்பும். அப்படியொரு நிலை வந்து விட்டால் தமிழ் மக்கள் மத்தியில் கூட்டமைப்பினால் அரசியல் செய்வது கடினமான காரியமாகத் தான் இருக்கும்.

அப்படியொரு நிலையை நோக்கித் தான் இப்போதைய அரசியல் நகர்வுகள் செல்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மை.

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-04-16#page-2

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.