Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் : ஜனநாயகத்துக்கு தலைகுனிவு

Featured Replies

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் : ஜனநாயகத்துக்கு தலைகுனிவு

evm56566767-11-1491886090-46e113e219d205bfcb606a354da37182120e549a.jpg

 

என்ன நடக்­கு­மென்று எதிர்­பார்க்­கப்­பட்­டதோ அதுவே தற்­போது தமி­ழ­கத்தில் நடந்­தி­ருக்­கி­றது. சென்னை ஆர்.கே.நகர் சட்­டப்­பே­ரவைத் தொகு­திக்கு நடை­பெ­ற­வி­ருந்த இடைத்­தேர்தல் இரத்துச் செய்­யப்­பட்­டு­விட்­டது. வாக்­கா­ளர்­க­ளுக்கு அதி­க­ள­வி­லான பணம் விநி­யோகம் செய்­யப்­பட்­டமை கண்­டு­பி­டிக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து, இறுதி நேரத்தில் தேர்தல் ஆணையம் தேர்­தலை இரத்துச் செய்­து­விட்­டது. இந்த விட­யத்தைப் பற்றி கடந்த வாரம் இந்தப் பந்­தியில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

ஆர்.கே. (ராதா­கி­ருஷ்ணன்) நகர் தொகு­திக்­கான இடைத்­தேர்தல் வாக்­க­ளிப்பு கடந்த 12 ஆம் திகதி (புத­னன்று) நடை­பெற இருந்­தது. வாக்­க­ளிப்பின் பின்னர் வாக்­குகள் எண்­ணப்­பட்டு முடி­வுகள் 15 ஆம் திகதி (நேற்று) அறி­விக்­கப்­ப­டு­மென தேர்தல் ஆணையம் அறி­வித்து, அதற்­கான நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டி­ருந்­தது.

 இந்த இடைத்­தேர்­தலில் பல்­வேறு கட்­சிகள் போட்­டி­யிட்­டன என்­றாலும் பிர­தான போட்டி அ.தி.மு.க.துணைப் பொதுச் செய­லாளர் டி.டி.வி.தின­கரன் மற்றும் முன்னாள் முத­ல­மைச்சர் ஓ.பன்­னீர்­செல்வம் அணியைச் சேர்ந்த கே.மது­சூ­தனன் ஆகி­யோ­ருக்­கி­டை­யி­லேயே இருந்­தது. இரு தரப்­பி­ன­ருக்கும் இந்­தத்­தேர்­தலில் வெற்­றி­பெ­ற­வேண்­டிய அவ­சியம் ஏற்­பட்­டது.

அதிலும் சசி­கலா அணியைச் சேர்ந்­த­வரும், சசி­க­லாவின் அக்கா மக­னு­மான டி.டி.வி. தின­க­ர­னுக்கு இடைத்­தேர்­தலில் கட்­டாயம் வெற்­றி­பெ­ற­வேண்­டிய அவ­சியம் இருந்­தது. தேர்­தலில் வெற்றி பெற்று அதன் மூலம் அ.தி.மு.க.வை முழு­மை­யாக கைப்­பற்­று­வதும், தமி­ழக முத­ல­மைச்சர் பத­வியைப் பிடிப்­பதும் தின­க­ரனின் திட்­ட­மாக இருந்­தது.

அதற்­காக என்ன விலை­கொ­டுத்­தா­வது ஆர்.கே.நகர் தொகுதி இடைத்­தேர்­தலில் வெற்­றி­பெற வேண்டும் என்ற நோக்­கத்­துடன் டி.டி.வி.தின­கரன் காய்­களை நகர்த்­தினார். அதற்­கான நட­வ­டிக்­கையில் அ.தி.மு.க.கட்சி உறுப்­பி­னர்­களும் செயற்­பட்­டனர்.

இந்த நிலையில் இடைத்­தேர்­தலில் போட்­டி­யிட்ட கட்­சி­களின் வேட்­பா­ளர்கள், வாக்­கா­ளர்­க­ளி­ட­மி­ருந்து வாக்­கு­களைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­காக அவர்­க­ளுக்கு இலஞ்­ச­மாக பணமும், பரிசுப் பொருட்­களும் வழங்­கினர். ஆனால், ஆளுங்­கட்சி சார்பில் ஒரு வாக்­குக்­காக வாக்­காளர் ஒரு­வ­ருக்கு 4 ஆயிரம் ரூபா­வீதம் பணம் விநி­யோ­கிக்­கப்­பட்­ட­தாக பல்­வேறு செய்­திகள் வெளி­யா­கின.

மட்­டு­மின்றி பணம் வழங்­கு­வது பற்­றிய படங்கள், செய்­திகள் என்­ப­னவும் வெளி­யா­கின. இது­பற்றி பல்­வேறு அர­சியல் கட்­சி­களும் முறைப்­பா­டுகள் தெரி­வித்­து­வந்­தன. இதனைத் தொடர்ந்து வரு­மான வரித்­துறை அதி­கா­ரிகள், சுகா­தார அமைச்சர், விஜ­ய­பாஸ்கர் வீட்டில் சோதனை நடத்­தினர். அது மட்­டு­மின்றி, சமத்­துவ மக்கள் கட்சித் தலை­வரும், நடி­க­ரு­மான சரத்­குமார், முன்னாள் அ.தி.மு.க. எம்.பி. சிட்­ல­பாக்கம் ராஜேந்­திரன், எம்.ஜி.ஆர்.மருத்­துவ பல்­க­லைக்­க­ழக துணை­வேந்தர் கீதா­லட்­சுமி ஆகி­யோ­ரு­டைய வீடு­க­ளிலும் சோத­னைகள் நடத்­தப்­பட்­டன.

இந்தச் சோத­னை­களின் போது பல முக்­கிய ஆவ­ணங்கள் சிக்­கன. வாக்­கா­ளர்­க­ளுக்கு பணம் வழங்­கி­ய­தற்­கான ஆவ­ணங்கள் சிக்­கி­ய­தா­கவும் அதி­கா­ரிகள் தெரி­வித்­தனர். அத்­துடன், இது தொடர்­பாக தேர்தல் ஆணை­யத்­துக்கு அறிக்கை ஒன்­றையும் வரு­மான வரித்­துறை அதி­கா­ரிகள் சமர்ப்­பித்­தனர். தேர்தல் ஆணையம் தமி­ழக தேர்தல் அதி­காரி ராஜேஸ் லக்­கா­னி­யிடம் இது தொடர்­பாக அறிக்கை கேட்­டது.

இறு­தியில் தேர்தல் ஆணையம் உயர் அதி­கா­ரி­க­ளுடன் கலந்­தா­லோ­சித்த பின்னர் ஞாயிறு இரவு அறிக்கை ஒன்றை வெளி­யிட்டு, ஆர்.கே.நகர் இடைத்­தேர்­தலை இரத்துச் செய்­வ­தாக அறி­வித்­தது.

அந்த அறிக்­கையில் சென்­னையில் 21 இடங்­க­ளிலும், சென்­னைக்கு வெளியே 11 இடங்­க­ளிலும் வரு­மான வரித்­துறை நடத்­திய சோத­னை­களில் தமி­ழக சுகா­தார அமைச்சர் விஜ­ய­பாஸ்கர் மற்றும் மூவரின் வீடுகள் சோத­னைக்­குட்­ப­டுத்­தப்­பட்ட போது வாக்­கா­ளர்­க­ளுக்கு பண விநி­யோகம் விஜ­ய­பாஸ்கர் மூலம் நடக்­கி­றது என்ற தகவல் வெளி­யா­ன­தாக குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

அத்­துடன் பண விநி­யோகம் பற்­றிய தகவல், பட்­டியல் என்­ப­னவும் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டன. பரிசுப் பொருட்களும் வழங்­கப்­பட்­டுள்­ளன. தேர்தல் சட்­டத்தின் கீழ் வாக்­கா­ளர்­க­ளுக்கு பணம், பரி­சுப்­பொ­ருட்கள் என்­பன விநி­யோ­கிக்­கப்­படுவது குற்றமாகும். இவ்­வா­றான குற்­றச்­சாட்­டுக்­களின் அடிப்­ப­டையில் ஆர்.கே. நகர் தேர்தல் இரத்துச் செய்­யப்­ப­டு­கி­றது என்று தேர்தல் ஆணையம் குறிப்­பிட்­டி­ருந்­தது.

தேர்தல் இரத்துச் செய்­யப்­பட்­டமை குறித்து பெரும்­பா­லான சமூக ஆர்­வ­லர்­களும், ஜன­நா­ய­கத்தை மதிப்­ப­வர்­களும், பல அர­சியல் கட்­சி­களும் மகிழ்ச்சி வெளி­யிட்­டுள்­ளன. அதே­வேளை இது தமி­ழ­கத்தின் அர­சியல் நாக­ரி­கத்­துக்கு ஏற்­பட்ட தலை­கு­னிவு என்று அவர்கள் சுட்­டிக்­காட்­டு­கின்­றனர். ஜன­நா­ய­கத்தை மதிக்கும் மக்கள் வாழும் நாட்டில் வாக்­கு­களைப் பெறு­வ­தற்­காக பணமும், பரி­சுப்­பொ­ருளும் இலஞ்­ச­மாக வழங்­கு­வது ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. அதனைக் கொடுப்­ப­வர்­கள் மட்­டு­மன்றி, பெற்­றுக்­கொள்­ப­வர்­களும் கூட குற்­ற­வா­ளிகள் தான்.

டி.டி.வி.தின­க­ரனை வெற்­றி­பெறச் செய்ய வேண்டும் என்­ப­தற்­காக சுகா­தார அமைச்சர் விஜ­ய­பாஸ்கர் முழு­மை­யாக செயற்­பட்­ட­வ­ராகக் கரு­தப்­ப­டு­கிறார். இவ­ரது வீட்­டிலும், எம்.ஜி.ஆர்.மருத்­துவ பல்­க­லைக்­க­ழக துணை­வேந்தர் மற்றும் பலரின் வீட்டில் கண்­டெ­டுக்­கப்­பட்ட ஆவ­ணங்கள் மூலம் பணப்­ப­ரி­மாற்றம் இடம்­பெற்­ற­மைக்­கான ஆதா­ரங்கள் கிடைக்­கப்­பெற்­றுள்­ளன. இதனால் இவர்கள் அனை­வ­ருமே தொடர்ந்து விசா­ர­ணை­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றனர்.

அமைச்சர் விஜ­ய­பாஸ்கர் மற்றும் அவ­ருக்கு நெருக்­க­மா­ன­வர்கள் தேர்­தலுக்குப் பணம் வழங்­கி­யமை தொடர்­பான தக­வல்­களை வழங்­கி­யது யாரென்ற குழப்பம் பல்­வேறு தரப்­பி­ன­ரி­டமும் எழுந்­தது. டி.டி.வி.தின­க­ர­னுக்கு எதி­ரான சக்­தி­களா? ஓ.பன்னீர் செல்வம் அணி­யி­னரா? தி.மு.க. வினரா? அல்­லது வேறு கட்­சி­களா என்ற சந்­தேகம் எழுந்­தது.

ஆனால், இறு­தியில் இதற்கு சேகர் ரெட்டி வழங்­கிய தக­வலே காரணம் என்று தெரிய வந்­தது. அமைச்சர் விஜ­ய­பாஸ்­க­ருடன் சேகர் ரெட்­டிக்கு தொழில்­ரீ­தி­யாக நெருங்­கிய தொடர்பு இருப்­ப­தா­கவும், அவ­ரிடம் மேற்­கொண்ட தீவிர விசா­ர­ணை­களைத் தொடர்ந்தே விஷயம் வெளி­யா­னது என தமி­ழகத் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

இந்த சேகர் ரெட்­டியைப் பற்றி அறி­யா­த­வர்கள் இருக்க முடி­யாது. மணல் குவா­ரி­களை நடத்தும் உரிமை பெற்­றி­ருந்த இவ­ரு­டைய வீட்டில் கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் நடத்­தப்­பட்ட சோத­னை­களின் போது 132 கோடி ரூபா பணமும் 177 கிலோ தங்­கமும் பிடி­பட்­டது. இவர் கைது செய்­யப்­பட்டு, விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­ட­போது, தமி­ழக அரசின் தலைமைச் செய­லாளர் ராம்­மோகன் ராவ் வீட்­டிலும் சோதனை நடத்­தப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.

சேகர் ரெட்டி வழங்­கிய தக­வ­லுக்­க­மை­யவே அமைச்சர் விஜ­ய­பாஸ்கர் வீட்டில் சோத­னை­யி­டப்­பட்­டுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. எவ்­வா­றெ­னினும் தேர்­தலில் வாக்­கு­களைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­காக 89 கோடி ரூபா­வரை விநி­யோகம் செய்­யப்­பட்­டுள்­ள­தாக அதி­கா­ரி­களால் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ள­தென்ற விபரம் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

ஆர்.கே.நகர் தொகு­தியில் வாக்­கா­ளர்­க­ளுக்கு பணம் விநி­யோ­கித்த குற்­றச்­சாட்டின் பேரில் 74 பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். 32 வழக்­குகள் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன. பரிசுப் பொருட்கள் வழங்­கி­ய­தற்­கான ஆதா­ரங்­களும் கிடைத்­துள்­ளன.

 பண விநி­யோ­கத்தைத் தடுப்­ப­தற்கு தேர்தல் அதி­கா­ரி­களும் பல்­வேறு முயற்­சி­களை மேற்­கொண்­டனர். எனினும் அது முடி­யாமல் போய்­விட்­டது. காரணம் பல்­வேறு சூட்­சு­ம­மான முறை­களைக் கையாண்டு பணம் விநி­யோகம் செய்­யப்­பட்­ட­மை­யாகும்.

இந்த நிலை­மை­யி­லேயே இடைத்­தேர்­தலை நிறுத்த வேண்­டிய கட்­டாயம் தேர்தல் ஆணை­யத்­துக்கு ஏற்­பட்­டது. இதற்கு தகுந்த ஆதா­ரங்­க­ளையும் தேர்தல் ஆணையம் சேக­ரித்­தது.

அத­ன­டிப்­ப­டை­யி­லேயே பணம் வழங்­கிய அமைச்சர், அதி­கா­ரிகள், நட்­புக்கள் என அனை­வ­ரது வீடு­க­ளிலும் சோத­னை­யி­டப்­பட்டு ஆதா­ரங்கள் சேக­ரிக்­கப்­பட்­டன.  

தற்­போது இரத்துச் செய்­யப்­பட்­டுள்ள ஆர்.கே.நகர் இடைத்­தேர்தல் மீண்டும் எப்­போது நடை­பெறும் என்று தேர்தல் ஆணையம் அறி­விக்­க­வில்லை. ஏற்­க­னவே இது­போன்று தஞ்­சாவூர், அற­வக்­கு­றிச்சி ஆகிய தொகு­தி­க­ளுக்­கான தேர்­தல்­களும் இது­போன்றே ஒத்­தி­வைக்­கப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.

இந்­தி­யா­வி­லுள்ள மாநி­லங்­க­ளி­லேயே தேர்­தலின் போது வாக்­கா­ளர்­க­ளுக்கு அதி­க­ளவு பணமும், பரிசுப் பொருளும் இலஞ்­ச­மாக வழங்கும் மாநிலம் தமிழ்­நாடு என்ற பெயரை தமிழ்­நாடு பெற்­றுள்­ள­தாகக் கூறப்­ப­டு­கி­றது.

 அதற்கு சான்று வழங்­கு­வதைப் போன்று தஞ்­சாவூர், அற­வக்­கு­றிச்சி மட்­டு­மன்றி தற்­போது ஆர்.கே.நகர் தொகுதி தேர்­தலும் அமைந்­துள்­ளது. இது தமிழ் நாட்­டுக்கு பெரும் அவப்­பெ­யரை ஏற்­ப­டுத்திக் கொடுத்­துள்­ளது. இந்த அவப்­பெ­யரை இல்­லாமல் செய்­வ­தற்கு தமி­ழக மக்கள் உணர்ந்து செயற்­பட வேண்டும். வாக்­குக்கு பணத்­தையும், பரிசுப் பொருட்­க­ளையும் வாங்­கு­வதை நிரா­க­ரிக்க வேண்டும்.

இது இவ்­வா­றி­ருக்க ஆர்.கே. நகர் இடைத்­தேர்தல் நிறுத்­தப்­பட்­டதால் சிறை­யி­லி­ருக்கும் சகி­கலா சந்­தோ­ஷ­ம­டைந்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. சசிகலாவின் விருப்பத்திற்கு எதிராக தேர்தலில் போட்டியிட்டு, அ.தி.மு.க. தலைமையை கைப்பற்றுவதற்கு டி.டி.வி.தினகரன் முற்படுவதாக சசிகலா நினைப்பதே இதற்குக் காரணமாகும். அந்த வகையில் தேர்தல் நிறுத்தப்பட்டதில் சசிகலாவுக்கு மிகவும் சந்தோஷமானதாகும்.

அதேவேளை, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பும் மகிழ்ச்சியடைந்துள்ளது. டி.டி.வி.தினகரன் இடைத்தேர்தலில் வெற்றிபெற்று சட்டப்பேரவைக்கும் தெரிவு செய்யப்பட்டால் அடுத்ததாக முதலமைச்சர் பதவியைக் கைப்பற்ற முற்படுவார். அதனால் தனது பதவிக்கு ஆபத்து ஏற்படுமென்பது எடப்பாடி பழனிச்சாமியின் கருத்தாகும்.

தற்போது ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் இரத்துச் செய்யப்பட்டதால் டி.டி.வி.தினகரன் சட்டப்பேரவைக்கு வரமுடியாது. அதனால், தமது பதவி தப்பித்தது என்று எடப்பாடி பழனிச்சாமி மகிழ்ச்சியில் இருக்கிறார்.

இந்த இடைத்தேர்தல் நிறுத்தப்பட்டமை சிலருக்கு துயரத்தைக் கொடுத்தாலும் பலருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. ஆனால், ஜனநாயகப் பண்புக்கு இழுக்கும், அவமரியாதையும் ஏற்பட்டுள்ளது என்பது மறுக்க முடியாததாகும்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-04-16#page-2

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.