Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமைச்சர்கள் பதவி நீக்க விவகாரம் இற்றுப் போகிற அளவுக்கு சு.க.வுக்குள் முறுகிப் போயுள்ள உறவு

Featured Replies

பீஷ்மர்-

சென்ற வாரம் முழுவதும் நேற்று முன்தினம் மாலை வரை தென்னிலங்கையின் அரசியலை உலுக்கிக் கொண்டிருப்பது ஜனாதிபதி ராஜபக்‌ஷ மேற்கொண்ட அதிரடி `அமைச்சர்கள் பதவி நீக்கங்களாகும்.

கிழக்கில் கிடைத்த வெற்றிகளை தளமாகக் கொண்டு தனது ஜனரஞ்சகத் தன்மையையும் அதற்கு மேலாக தனது மேலாண்மையையும் நிலை நிறுத்திக் கொண்ட ஜனாதிபதி அவர்கள் வாகரை விஜயத்துடன் இந்த வெற்றிகளுக்கொரு மேலுமொரு கட்ட முத்தாய்ப்பினை ஏற்படுத்திக் கொண்டார். அதற்கு முதல் வாரம் 18 யு.என்.பி. அதிருப்தியாளர்கள் யு.என்.பி.யுடன் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு மாறான முறையில் அமைச்சர்களாக சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.

வந்த அந்த வெள்ளத்தோடு வெள்ளமாக முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து கொண்டது. ஏற்கனவே, ஆறுமுகம் தொண்டமான், சந்திரசேகரன் ஒரு புறமாகவும் இப்பொழுது வந்தவர்கள் இன்னொரு புறமாகவும் அதிகார வலுப்படுத்தலுக்கு உதவ ஹெல உறுமயவும் அமைச்சரவையில் சேர்ந்து கொண்டது. ஜனாதிபதி 2 ஆம் பேச்சுக்கு இடமின்றி ஏகாதிபதியாக (ஏக அதிபதியாக) மேற்கிளம்பியிருந்தார். உலகிலேயே மிகப் பெரிய மந்திரிசபை என்ற கிண்டலுக்கு ஆளாகியிருந்தால் கூட சிங்கள மக்கள் மத்தியில் அவரது ஏற்புடமை உயர் மட்டத்திலேயே இருந்தது.

இப்படியாக `ஒப்பாரும் மிக்காரும்' இல்லாத அதிகார நிலையில் இருக்கும் போது தான் திடீரென்று மூன்று அமைச்சர்களின் பதவி நீக்கம் நடைபெற்றது. அநுரா பண்டாரநாயக்க, மங்கள சமரவீர, ஸ்ரீபதி சூரியாராச்சி ஆகிய மூவரையும் பதவிநீக்குமுன்னரே ஜனாதிபதி நான் ஒரு சேனநாயக்காவும் அல்ல, பண்டார நாயக்காவுமல்ல. நானொரு ராஜபக்‌ஷ என்று கூறியதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்தன.

ஜனாதிபதியின் அதிகார நிலை நிறுத்தத்தில் இது மேலுமொரு கட்டமாக அமைந்து விடப் போகின்றது என்று பலர் நினைத்தனர். இந்தக் கட்டத்திலே தான் நிலைமை எதிர்பாராத விதமாக மாறிற்று. ஜனாதிபதி தனது அதிகாரத்துக்கு பூரணமாக அடிபணிகிறார்களென்று கண்டு இவர்களை பதவி நீக்கம் செய்தார். பதவி நீக்கம் செய்த முதல் 12 மணி நேரங்களுக்குள்ளேயே ஜனாதிபதியின் பலவீனம் வெளியே தெரியத் தொடங்கிற்று. அலவி மௌலானா தலையிட்டு அநுரா விடயத்தில் நிலைமையை மாற்றுவித்துக் கொண்டார். அநுராவின் பிறந்தநாள் விருந்துக்கு ஜனாதிபதி நேராகச் சென்றமை பற்றி அரசியற் கிசுகிசுக்கள் பேசத் தொடங்கிவிட்டன. மங்கள சமரவீரவும் காய்களை வெகு நிதானமாகவே நகர்த்தினார்.

தனது பத்திரிகை மகா நாட்டில் பிந்திப் போட்டது மாத்திரமல்லாமல் தலையீடுகள் எதுவும் இருக்க முடியாத பாராளுமன்ற கட்டிடத் தொகுதியினுள்ளேயே அதனை நடத்தினார்.

நீண்ட நாட்களாக அமைச்சரவைக்குள் புகைந்து கொண்டிருந்த நெருப்பு வெள்ளிக்கிழமைப் பத்திரிகைகளிலே வெளிக்கு கொண்டு வரப்பட்டது.நடந்தது இது தான். ஜனாதிபதி ராஜபக்ஷ தனது ஆட்சிப் பொறுப்புகளை தமது சகோதரர்களான திருவாளர்கள் பஷில் ராஜபக்ஷ, கேணல் கோத்தாபாய ராஜபக்ஷ ஆகிய இருவரிடமும் வழங்கியிருந்தார். திரு பஷில் ராஜபக்ஷ அமைச்சரவைக்கு சமாந்தரமான அதிகாரமுடையவராய் உண்மையில் சொல்லப் போனால், நிர்வாகப் பொறுப்புகள் யாவற்றுக்கும் அச்சாணியாக இருப்பவராக மாறினார். பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்ட மற்றைய சகோதரர் ஏற்கனவே, உயர் இராணுவ உத்தியோகத்தராக இருந்தவர், இராணுவத் தளபதியான சரத் பொன்சேகாவும் அவரும் இணைந்தே கிழக்கில் வெற்றியை ஈட்டினர். திருமலை பிய்த்தெடுக்கப்பட்டு அம்பாறை முக்கியப்படுத்தப்பட்டு மட்டக்களப்பு ஆற்றில் கரைத்த புளியாக்கப்பட்டது.

இந்த வெற்றியை வடக்குக்கும் கொண்டு செல்வதற்கான முயற்சிகள் வெற்றியுடன் நடைபெற்றன. வவுனியா தலைநகரமாக்கப்பட்டமை, ஏ-9 மூடப்பட்டமை, யாழ்ப்பாண மாவட்ட கடத்தல்கள் ஆகியன வடக்கையும் கிழக்குப் போலாக்குவதற்கான முதல் முயற்சிகளாக காணப்பட்டன. ஆனால், இன்னொரு புறத்தில் ஜனாதிபதி கட்சி அரசியற் தளமற்றவராக காணப்பட்டார். சந்திரிகா குமாரதுங்கவை அகற்றி சு.க. தலைவரானாலும் அதனை ஒரு கட்டத்துக்கு மேல் பலப்படுத்த முடியவில்லை. சு.க. பலப்படுத்தப்படுவது, தங்களுக்கு எதிராக ஜனாதிபதி மேற்கொள்ளும் முயற்சி என்று கருதிற்று பேசிற்று.

பண்டாரநாயக்காக்கள் இல்லாத சுதந்திரக் கட்சி சாதாரண சிங்கள மக்கள் மத்தியில் சுதந்திரக் கட்சியே அல்ல. ஆனால், ராஜபக்‌ஷ சகோதரர்களுடைய அதிகார வலு படிப்படியாக அதிகரிக்க தொடங்கிற்று. இரட்ணசிறி விக்ரம நாயக்காவிடமிருந்து உதவிப் பாதுகாப்பு அமைச்சு பறிக்கப்பட்டு அதற்குரிய அதிகாரங்கள் அனைத்தும் அமைச்சின் செயலாளரிடத்தே கொடுக்கப்பட்டதாக பேசிக் கொண்டார்கள். அது மாத்திரமன்றி 100, 150 அமைச்சர்கள் இருந்தும் காணி, நிலம் போன்ற துறைகள் எந்த அமைச்சரிடத்தும் வராமல் சகோதரர்களிடத்தே கவனிக்கப்பட்டது. ஜனாதிபதி அவர்கள் செய்ய முயன்றது இதுதான். அதாவது அமைச்சரவையை பெயரளவில் வைத்துக் கொண்டு தனது அதிகார மையமாகவும் இயக்க நிலையாகவும் தனது சகோதரர்களையே கொண்டிருந்தார். சுருக்கமாக சொன்னால், இதுவொரு புதிய தளம் அரசாங்க கட்சி அதிகாரம் எதுவுமில்லாதது போன்ற நிலைமையே ஏற்பட்டது.

பாராளுமன்றத்தில் தனது கொள்கைகளை ஆதரிப்பவர்களையே ஜனாதிபதி பெரும்பான்மையினர் ஆக்க விரும்பினார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையின் கீழ் அமைச்சரவைக்கும் பாராளுமன்றத்துக்குமிருந்த ஆட்சியாப்பு நிலை முக்கியத்துவம் படிப்படியாக போகத் தொடங்கிற்று. மேலும் தெளிவாக சொன்னால், ஜனாதிபதி அரசாங்கக் கட்சிக்கு அப்பால் தனது சகோதரர்களைக் கொண்ட தொரு அதிகாரத் தளத்தை நிறுவினார். மிகவும் துரதிர்ஷ்டவசமான விடயம் என்னவெனில் சகோதரர்களுக்கு அரசியல் அனுபவமென்று எதுவுமே கிடையாது. இரண்டு பேருமே வெளிநாட்டில் இருந்தவர்கள்.

அண்ணா ஜனாதிபதியானதும் இவர்கள் பொறுப்புகளைப் பெற்றனர். இலங்கையின் கட்சி அரசியல் வரலாற்றில் இதுவொரு புதிய நிலை. அமைச்சர் பதவிகளுக்காக ஒருவரையொருவர் தள்ளிக் கொண்டு உள்ளே செல்ல அரசாங்க கட்சியினரோ கட்சியென்ற வகையில் தங்களுக்கு அதிகாரமில்லாதிருப்பதை உணர்ந்தனர். புதிய மந்திரி சபை பற்றி சு.க.வின் செயலாளரே கிண்டலாக பேசினார்.

மங்கள சமரவீர இந்த மாற்றங்கள் காரணமாக அதிகம் பாதிக்கப்பட்டார். மகிந்த ராஜபக்‌ஷ ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு வேண்டிய பூர்வாங்க அரசியல் காய் நகர்த்தல்களை செய்தது மாத்திரமல்லாமல் தேர்தலுக்கான ஒருங்கமைப்பாளராகவும் விளங்கியவர். அதனை உணர்த்தும் வகையில் அவரிடத்து மூன்று முக்கிய அமைச்சுகள் கொடுக்கப்பட்டன. வெளிநாடு, துறைமுகம், விமானத் தளங்கள் ஆகியவற்றை அவர் நிர்வகித்தார். அது மாத்திரமல்லாமல் மங்களவின் தளம் மாத்தறையாகும். ராஜபக்ஷ குடும்பத்துக்கு அம்பாந்தோட்டையில் உள்ளதொரு இடத்தைப் போல சமரவீரவுக்கு மாத்தறையிலுண்டு. இவர் மகாநாம சமரவீரவின் மகன்.

இந்த முக்கோண அதிகார போட்டியிலேயே வெடிப்பு ஏற்பட்டது. இதற்குள் ஜனாதிபதி 10 ஆண்டுத் திட்டத்தை வலியுறுத்த இப்பொழுதே தொடங்கி விட்டார். அதாவது தனது 2 ஆவது பதவிக்காலத்துக்கான கோரிக்கையையும் முன் வைத்துவிட்டார். குறித்த நிலையில் அதற்கான பிரசாரமும் தொடங்கியாகிவிட்டது. இப்படி மேற் கட்டுமானங்களையே பார்த்துக் கொண்டு சென்றவர் தனக்குரிய ஒரு கட்சித் தளம் வேண்டுமென்ற நிலைமையை உணரவில்லை.

சிங்களத்துவ நிலையில் இவருக்கு ஆதரவு வழங்கிய ஜே.வி.பி. இப்பொழுது தயக்கம் காட்டத் தொடங்கிவிட்டது. ஜனாதிபதி அவர்கள் தனது சுதந்திரக் கட்சித் தளத்தை வலுப்படுத்த வேண்டியுள்ளது. விரும்பியோ விரும்பாமலோ அதற்கு அநுரா பண்டாரநாயக்காவின் பெயரீறு (பண்டாரநாயக்கா) அவசியமாகின்றது.

உண்மையில் ஜனாதிபதி இப்பொழுது தற்காப்பு முயற்சிகளையே மேற்கொண்டுள்ளார். ஆனால், மங்கள - மகிந்த பிரச் சினையில் இன்னுமொரு பரிமாணமுண்டு. மங்களவும் ஒரு றுகுணு குமார தான்.

பிற்குறிப்பு: வார இறுதி நிகழ்ச்சிகளை பார்க்கும் பொழுது, நோர்வே என்ன சொன்னாலும் யுத்த நிறுத்த ஒப்பந்தம் 22 ஆம் திகதிக்கு முதலே கைவிடப்பட வேண்டிய ஒரு பலமான அரசியல் நிர்ப்பந்தமுண்டு. ஏற்கனவே, சிக்கலில் உள்ள ஜனாதிபதி இதில் நெகிழ்ந்து போகலாமென்ற வாய்ப்புண்டு. எல்லாவற்றுக்கும் மேலாக மீதியாகவுள்ள வடக்குப் பிரச்சினையையும்

யுத்தம் கொண்டே தீர்த்துவிடலாமென்ற நம்பிக்கை சிங்கள மக்களிடையே வலுவாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.

http://www.thinakkural.com/news/2007/2/18/...s_page21652.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.