Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இவர்கள் இலக்கு வைக்கப்பட்டது ஏன்?

Featured Replies

p-s.jpg

கனகரவி-

போர் பல முனைகளினாலும் மக்களுக்கு பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகின்றது. தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் நாளாந்தம் துன்ப துயரங்களையே அனுபவித்து வருகின்றனர்.

05-01-2007 அன்று வவுனியா மாவட்டத்தில் நெடுங்கேணி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியான புளியங்குளம் முள்ளியவளை வீதியின் நெடுங்கேணிக்கு தெற்குப் புறமாக சிவா நகரை அண்மித்த இடத்தில் உள்ள ஐயனார் கோவில் பகுதியில் வவுனியா மாவட்ட விவசாய திணைக்கள உத்தியோகஸ்தர்களின் பிக்கப் வாகனம் மீதான கிளைமோர் தாக்குலினால் இரண்டு உத்தியோகஸ்தர்கள் உயிரிழந்தனர்.

இவர்கள் இருவரின் உயிரிழப்பும் வெறுமனமே அவர்களின் குடும்பத்தினரிற்கும், உறவினர்களிற்குமான இழப்பாக நோக்க முடியவில்லை. காரணம் மனிதன் உயிர் வாழ்வதற்கு உணவு தேவை. உணவை விவசாய உற்பத்தி மூலமே பெறுகின்றோம். உயிர்வாழ உணவுதரும் தொழிலை மேம்படுத்த ஊக்கமளித்தவர்களின் இழப்பு அவர்களுடன் பணிபுரிந்தவர்களைத் தவிர வேறு தரப்பினரிற்கு விளங்கிக் கொள்ள வேண்டுமெனின், அவர்களைப் பற்றி சில விடயங்களை அறியத்தருவதன் மூலமே சாத்தியமாகுமென கருத முடிகின்றது.

21-07-1947 ஆம் ஆண்டு வவுனியா குடியிருப்பில் பிறந்த தர்மலிங்கம் கணேசலிங்கம் வவுனியா பூந்தோட்டத்தில் வசித்து வந்தார். சிறு வயது தொடக்கம் விவசாயத்திலேயே ஈடுபாடுடையவர். அரச சேவையில் இருபது வயதில் இணைந்து புலமைபரிசில் பெற்று விவசாய டிப்ளோமா பட்டம் பெற்று விவசாய உத்தியோகஸ்தராக சேவை செய்தார்.

விவசாய போதனாசிரியராக மட்டக்களப்பு, மன்னார், திருகோணமலை, வவுனியா என பல மாவட்டங்களிலும் பணியாற்றி கணேசலிங்கம் வவுனியா அரச விதை உற்பத்தி பண்ணையின் முகாமையாளராக பணியாற்றியபோது இலங்கையிலேயே இலாபம் ஈட்டும் பண்ணையாக வவுனியா பண்ணையை தரமுயர்த்தியவர்.

வாழ்க்கை துணையாகவும் விவசாய போதனாசிரியரான வனஜாவை மணம் முடித்து மூன்று பெண்பிள்ளைகள். அதில் ஒருவர் யாழ்பல்கலைக்கழக மருத்துவ பீட நான்காமாண்டு மாணவி. தற்போது ஒருவர் தேர்வாகியுள்ளார்.

குடும்பத்தையும் நல்ல நிலையில் உயர்த்தி சமூக சேவையிலும் இயலுமானவரை பணிபுரிந்துள்ளார்.

பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய பரிபாலன சபை, பூந்தோட்டம் கிராம அபிவிருத்தி சங்கம், பூந்தோட்டம் சனசமூக நிலையம் , வவுனியா குள கமக்காரர் அமைப்பு ஆகியவைற்றில் தலைவராகவும் இருந்த சேவை செய்தவர்.சுமார் நாற்பதாண்டுகள் விவசாயத்துடன் இரண்டறக் கலந்து தொழில் செய்த போதும் அவரது இறுதிக்கால பணி மிகவும் மெச்சத்தக்கதாகும். நெடுங்கேணி பிரதேச செயலகத்திற்கு உட்பட மக்களின் பிரதான தொழில் விவசாயம். அந்த விவசாய மக்களுக்கு இருக்கும் வளத்தை பயன்படுத்தி விவசாயத்துறையை மேம்படுத்த தேவையான ஆலோசனைகளையும், ஒத்துழைப்பையும் வழங்கியவர். நெடுங்கேணியில் வசித்து வந்த முத்துக்குமாரு என்பவர் (தாய்லாந்து இளவரசியிடம் இருந்து முதன்மை விவசாயி எனப் பட்டம் பெற்றவர்) விவசாயத்துறையில் ஊக்கமுடன் செயற்படுவதையும் இரசாயனப் பசளை இன்றி அதிக நெல் உற்பத்தியை செய்தவர் என்ற வகையிலும் அவருக்கு ஊக்கம் கொடுத்தும் வந்தவர். விவசாயத்துறையில் விருப்பம் கொண்டவராகவும் அதனுடன் தொடர்புடைய விடயங்களைக் கற்றதுடன் மும்மொழிகளிலும் நன்கு விளக்கமளிக்கக் கூடிய கணேசலிங்கத்தின் இழப்பு விவசாயத்துறை சார்ந்தவர்களுக்கு பேரிழப்புதான்.

10.12.1953 ஆம் ஆண்டு வவுனியா ஓமந்தையை பிறப்பிடமாகக் கொண்ட வெற்றிவேல் மகேந்திரன் ஆரம்பக் கல்வியை யாழ். மத்திய கல்லூரியிலும், பின் ஓமந்தை மத்திய கல்லூரியிலும் கற்று விவசாய டிப்ளோமா பட்டம் பெற்றவர். 1980 ஆம் ஆண்டு விவசாய போதனாசிரியராக அரச சேவையில் இணைந்து மட்டக்களப்பு கரடியனாறு விவசாய பயிற்சி நிலையத்தில் உதவி பண்ணை முகாமையாளராக சேவையை ஆரம்பித்தவர். வவுனியா, மன்னார் போன்ற மாவட்டங்களிலும் விவசாய போதானசிரியராக பணி புரிந்துள்ளார்.

இவரது துணைவியார் சகுந்தலாதேவி சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர். இரு பிள்ளைகள். அதில் ஒருவர் மருத்துவபீட மூன்றாமாண்டு மாணவர். மற்றையவர் விவசாய விஞ்ஞான பட்டப்படிப்புக்கு தேர்வாகியுள்ளார்.

அமைதியாக பழகக் கூடிய இவர் மூலம் பல விவசாய பெருமக்கள் இவர் கற்றதை தாமறிந்து செயலுருவாக்கினோம் எனவும் விவசாயம் தொடர்பான சந்தேகங்களை கேட்கும் போது முரண்பாடுகளின்றி அமைதியாக விளக்குவதன் மூலம் பயன்பெற்றோம் எனக் கூறுகின்றனர்.

இவர் பிறந்த இடமும் பணியாற்றிய இடமும் விவசாயிகள் வாழும் இடம். சிறுவயது தொடக்கமே விவசாயம் சம்பந்தமான விடயங்களையே தெரிந்து கொண்டு அது சம்பந்தமான துறை கல்வியையும் கற்று பணியாற்றியவரின் இழப்பும் பேரிழப்பு தான். போர் நிறுத்தம் எழுத்தில் இருந்தாலும் சம்பவங்கள் நாளாந்தம் துயரமானதாகவே உள்ளதை எல்லோரும் அறிவோம்.

கிளேமோர் பறித்தெடுத்த இந்த இரு உயிர்களின் பெறுமதியையும் நெடுங்கேணி விவசாய மக்கள் நன்கறிவர். வவுனியாவின் வடக்கு பகுதி கிளேமோர் வெடிப்புகளால் அதிர்ந்து கொண்டிருந்த காலத்திலும் தமது பணி தேவைப்படுவோருக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் அந்தப் பிரதேசத்தில் நெருக்கடியான காலத்திலும் பணியாற்ற சென்றிருந்தனர். சம்பவம் நடந்த அன்றும் நெடுங்கேணியில் இருந்து கனகராயன்குளம் சென்று தமது பணி செய்து அடுத்த நாள் தான் வவுனியாவிற்கு வருவதாக இருந்தவர்கள். உறவினர்கள் போன்றே பழகும் அந்தப் பிரதேச விவசாயிகளிடம், பணம் கொடுத்து மாம்பழம், மரக்கறிகள் எடுத்து வையுங்கள்.

கனகராயன்குளம் போய் எமது வேலை முடிந்ததும் நெடுங்கேணி வந்துதான் வவுனியா போவோம். அப்போது வீட்டிற்குக் கொண்டுபோக ஆயத்தமாக எடுத்து வையுங்கள் எனக் கூறிச் சென்றவர்கள், சில நிமிடங்களில் இவர்கள் சென்ற பிக்கப் மீது கிளேமோர் இலக்கு வைத்து வெடித்ததினால் உயிர் இழந்தனர். இவர்கள் மீது ஏன் இலக்கு வைக்கப்பட்டது என்பது கிளேமோரை வெடிக்கச் செய்தவர்களுக்கே வெளிச்சம். உறவினர்களுக்கு உடனில்லை என்ற துயரும், இனி இதுபோன்ற சேவை செய்வோரை அச்சமடையச் செய்வதுடன் அந்தப் பிரதேச விவசாயிகளை கலங்க வைக்கக் கூடியதுமான கிளேமோர் வெடிப்பு வேறு எதனை இந்த இலக்கால் எட்ட முடிந்தது.

http://www.thinakkural.com/news/2007/2/18/...s_page21638.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.