Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு காணி விவகாரம்: இருநாள் கள விஜயம்

Featured Replies


வடக்கு காணி விவகாரம்: இருநாள் கள விஜயம்
 

article_1492443717-aa.jpgபேரின்பராஜா திபான் 

வடக்கு காணி விவகாரம் தொடர்பில் ஆராய்வதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு, கள விஜயத்தை மேற்கொள்ளவுள்ளது.  

அந்தக் கள விஜயத்தின் பின்னரே, காணிப்பிரச்சினைக்கு உரிய தீர்வைப் பெற்றுக்கொடுக்கமுடியும் என்றும் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. அதன்பிரகாரம், நாளை 19ஆம் திகதி முல்லைத்தீவுக்கும் மறுநாள் 20 ஆம் திகதி காலையில் யாழ்ப்பாணத்துக்கும், மாலையில் கிளிநொச்சிக்கும் சென்று  காணிப் பிரச்சினைகளை அக்குழு ஆராயவுள்ளது. 

இந்த தகவலை, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.  

வடக்கு, காணி விவகாரம் தொடர்பில், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தலைமையிலான குழுவினருக்கும், இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினருக்கும் இடையில், பாதுகாப்பு அமைச்சில், முக்கிய பேச்சுவார்த்தையொன்று நேற்று (17)  இடம்பெற்றது.  

இந்த பேச்சுவார்த்தையை அடுத்து, கொழும்பு-7 இலுள்ள, எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்றுப் பிற்பகல் (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட இரா.சம்பந்தன் மேலும் தெரிவித்தாவது, 

“தங்களுடைய காணிகளில் வாழ்வதற்கு, அந்த மக்கள் உரித்துடையவர்கள். அவற்றைப் பெற்றுக்கொடுக்க வேண்டியது எங்களுடைய கடமை. அந்த உரிமையை மறுப்பது தவறு. அதனால், அவற்றை மக்களுக்குத் திருப்பிக் கொடுக்கவேண்டும் என்பதை இன்றைய(நேற்றைய) சந்திப்பில் வலியுறுத்தினோம். 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, சனிக்கிழமை சந்தித்துக் கலந்துரையாடினோம். அவரின் வேண்டுகோளுக்கு இணங்கவே, இன்றைய (நேற்றைய) சந்திப்பு நடத்தப்பட்டது. இந்தச் சந்திப்புத் தொடர்பில், ஜனாதிபதிக்கு அறிவிப்போம். அவருடைய ஒத்துழைப்பையும் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுப்போம். 

யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில், இராணுவத் தளங்களைத் தாக்ககூடிய ஆயுங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்தன. அந்தக் காரணத்தின் நிமிர்த்தம், அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் ஆரம்பிக்கப்பட்டன. தற்போது யுத்தம் முடிவடைந்து விட்டது. புலிகளும் இல்லை. அவர்களுடைய ஆயுதங்களும் இல்லை. 

யுத்தக் காலத்தில் பல்வேறு காரணங்களுக்காக காணிகளைக் கைப்பற்றியுள்ளீர்கள். புலிகள் வசமிருந்த காணிகள் கைப்பற்றப்பட்டு, இன்னும் உங்களிடம் இருக்கிறது. சில காணிகள், பரம்பரை பரம்பரையாக மக்கள் வாழ்ந்தவை. சில காணிகள் அரசாங்கத்தின் காணிப்பத்திரத்தின் ஊடாக மக்களுக்கு வழங்கப்பட்டவையாகும். 

அந்தக் காணிகளில் வாழ, அந்த மக்கள் உரித்துடையவர்கள். அவற்றைப் பெற்றுக்கொடுக்க வேண்டியது எங்களுடைய கடமையாகும். அந்த உரிமையை மறுப்பது தவறு. அதனால், அவற்றை மக்களுக்குத் திருப்பிக் கொடுக்கவேண்டும் என்பதை வலியுறுத்தினோம். 

அதற்குப் பதிலளித்த இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிருஷாந்த டி சில்வா, ஜனாதிபதியும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் பணித்தால், காணிகளை விடுவிக்கவேண்டியது தங்களது கடமை என்றும், காணிகளைச் சட்டவிரோதமாக தங்களால் வைத்திருக்கமுடியாது என்றும் கூறினார். 

முல்லைத்தீவு, கேப்பாப்புலவில் இராணுவத்தளம் அமைந்திருக்கின்ற பிரதேசத்தில் தாங்கள் குடியேற வேண்டும் என்றும் அவை தங்களுடை பரம்பரையான காணிகள் என்றும் மக்கள் கோரியுள்ளனர். 

அந்தக் காணியில் சிறுபகுதி தேவை என்றும் ஏனையவற்றை விடுவிக்கத் தயார் என்றும், தளபாடங்களை அகற்றி வேறு இடங்களுக்குச் செல்வதற்கு கால அவகாசம் வேண்டும் என்றும் இராணுவத்தினர் கோரியுள்ளனர். 

இந்நிலையில், எம்.பிக்களான சிவமோகன், சாந்தி ஸ்ரீஸ்கந்த ராஜா ஆகியோருடன், சுமந்திரன் எம்.பியும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களின் அரசாங்க அதிபர்கள், இராணுவ அதிகாரிகள், மக்களுடைய பிரதிநிதிகளுடன் சென்று, எதிர்வரும் 19ஆம் மற்றும் 20ஆம் திகதிகளில் இடத்தைப் பார்வையிட்டு, முடிவுகளை எடுக்கவுள்ளனர்.  

வலிகாமத்தைப் பொறுத்தவரை, தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவுக்குள் 4,500 ஏக்கர் காணி இன்னுமும் அரசாங்கத்திடம் இருக்கிறது. 750 ஏக்கர் காணி யாழ். மாவட்டத்தில் ஏனைய பகுதிகளில் உள்ளது. 

வலிகாமத்தில் 2,800 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தில் மாவை சேனாதிராசா எம்.பி, சுமந்திரன் எம்.பி ஆகியோர், அரசாங்க அதிபர் மற்றும் இராணுவ அதிகாரிகளுடன் சென்று இடங்களைப் பார்வையிடுவர். 

கிளிநொச்சியில், 20ஆம் திகதி மாலை சிறிதரன் எம்.பி மற்றும் ஏனைய எம்.பிக்களுடன் அரசாங்க அதிபரையும் உள்ளடக்கி கூட்டம் நடைபெறும். 

இந்த முடிவுகள் எடுக்கப்பட்ட பின்னர், காணிப் பிரச்சினைகள் தொடர்பில் பட்டியலைத் தயாரித்து, அரசாங்க அதிபர்களையும் இராணுவ அதிகாரிகளைம் அழைத்து, பாதுகாப்புச் செயலாளரின் அலுவலகத்தில் மீண்டும் கூடி, அவை தொடர்பில் முடிவு எடுக்கப்படும்.  

எங்களுடைய காணிகள், எங்களுக்குத் திருப்பித் தரப்பட வேண்டும். அவற்றை விட்டுக்கொடுக்கத் தயாரில்லை. சில பாதுகாப்பு ஒழுங்குகளுக்கு, உதாரணமாக, வலிகாமத்தில், விமான நிலையம் அமைக்க காணி தேவைப்பட்டால் அதை விடலாம். அந்தக் காரணத்துக்காக ஏனைய காணிகளை விடுபடுவது தாமதிக்கப்படவேண்டியதில்லை.  

கடந்த 25-30 வருடங்களாக, தங்களுடை காணிகளுக்குச் செல்ல முடியாமல் மக்கள் தவிக்கின்றனர். இந்த நிலைமை தொடர முடியாது. இதற்கொரு முற்றுப் புள்ளி வைக்கப்பட வேண்டும் என்பதைத் தெளிவாகக் கூறியுள்ளோம். சில காணிகள் தேவையாக உள்ளதால், ஏனைய காணிகளைக் கொடுப்பதை தாமதிக்க முடியாது என்பதை வலியுறுத்தியுள்ளோம். இன்று ஆரம்பித்துள்ள இந்த முயற்சி தொடரும். இதற்கொரு முடிவு கட்டுவோம்” என்றார்.  

- See more at: http://www.tamilmirror.lk/194945/வடக-க-க-ண-வ-வக-ரம-இர-ந-ள-கள-வ-ஜயம-#sthash.QjKFLH8B.dpuf
  • தொடங்கியவர்

காணி விடுவிப்பு குறித்து ஆராய நேரடி விஜயம்

 

 

(ஆர்.ராம்)

Image result for காணி விடுவிப்பு virakesari

வடக்கில் படைத்­த­ரப்­பி­னரால் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட காணி­களை விடு­விப்­ப­தற்­காக மாவட்ட ரீதி­யாக மக்கள் பிர­தி­நி­திகள், இரா­ணுவ அதி­கா­ரிகள், அந்­தந்த மாவட்ட அர­சாங்க அதி­பர்கள் கூட்­டாக அப்­ப­கு­தி­க­ளுக்கு நேரில் விஜயம் செய்து அவற்றை விடு­விப்­பது குறித்து கலந்­து­ரை­யா­டல்­களை நடத்­து­வ­தென தமிழ்த் தேசியக் கூட­ட­மைப்­பிற்கும் பாது­காப்­புத்­த­ரப்­பிற்கும் இடையில் நடை­பெற்ற கூட்­டத்தில் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

அதன்­பி­ர­காரம் எதிர்­வரும் 19ஆம் திகதி முல்­லைத்­தீ­விலும், 20ஆம் திகதி காலை யாழ்ப்­பா­ணத்­திலும், மலையில் கிளி­நொச்­சி­யிலும் இச்­செ­யற்­பாடு நடை­பெ­ற­வுள்­ளது.

கேப்­பா­பு­லவில் மக்­க­ளின காணி­களை மீள கைய­ளிப்­ப­தற்கு படைத்­த­ரப்பு தயா­ரக இருக்­கின்ற அதே­நேரம் மாற்று இடத்­திற்கு செல்­வ­தற்­காக சிறிது கால அவ­கா­சத்தை வழங்­கு­மாறும் அத்­த­ரப்­பி­னரால் கோரப்­பட்­டுள்­ளது.

அதே­நேரம் பாலாலி விமான நிலைய விஸ்­த­ரிப்­புக்­காக காணிகள் தேவைப்­ப­டு­மாயின் அக்­கோ­ரிக்­கையை பரி­சீ­லனை செய்ய தயா­ராக இருப்­ப­தாக அறி­வித்­துள்ள கூட்­ட­மைப்பு ஆக்­கி­ர­மிக்­கப்­பட்­டுள்ள காணி விவ­கா­ரத்­திற்கு விரைவில் முடிவு கட்­டப்­படும் எனவும் திட்­ட­வட்­ட­மாக அறி­வித்­துள்­ளது. 

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பிற்கும் பாது­காப்புத் தரப்பின் உயர்­மட்­டக ்குழுவி­ன­ருக்கும் இடையில் வடக்கு கிழக்கில் படை­யினர் ஆக்­கி­ர­மித்­துள்ள காணிகளை பொது­மக்­க­ளி­டத்தில் மீளக்­கை­ய­ளித்தல் தொடர்பிலான முக்­கிய சந்­திப்­பொன்று நேற்று திங்­கட்­கி­ழமை முற்­பகல் 11மணிக்கு பாது­காப்புச் செய­லா­ள­ரு­டைய அலு­வ­ல­கத்தில் இடம்­பெற்­றி­ருந்­தது.

இச்­சந்­திப்பில் எதிர்க்­கட்­சித்­த­லை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் தலை­மையில் இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தலை­வரும் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை.சோ.சேனா­தி­ராஜா, யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான சி.சிறி­தரன், எம்.ஏ.சுமந்­திரன், ஈ.சர­வ­ண­பவன் ஆகி­யோரும்  வன்னி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான சிவ­சக்தி ஆனந்தன், சிவ­மோகன், சார்ள்ஸ் நிர்­ம­ல­நாதன் ஆகி­யோரும் தேசி­யப்­பட்டில் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான திரு­மதி சாந்தி ஸ்ரீஸ்­கந்­த­ரா­ஜாவும் பங்­கேற்­றி­ருந்­தனர். 

பாது­காப்பு தரப்பில் பாது­காப்புச் செய­லாளர் கரு­ணா­சேன ஹெட்­டி­யா­ராச்சி, இரா­ணு­வத்­த­ள­பதி கிஷாந்த டி சில்வா உட்­பட இரா­ணுவ, கடற்­படை, விமா­னப்­ப­டை­களின் உயர்­மட்ட அதி­க­ரிகள் கலந்­து­கொண்­டி­ருந்­தனர். 

இச்­சந்­திப்பு குறித்து எதிர்க்­கட்சித் தலைவர் அலு­வ­ல­கத்தில் நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து வௌியிட்ட எதிர்க்­கட்­சித்­த­லை­வரும்  கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன்  கருத்துத் தெரிவிக்கையில்

ஜனா­தி­ப­தி­யு­ட­னான சந்­திப்பு

நானும், பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுமந்­தி­ரனும் கடந்த சனிக்­கி­ழமை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவைச் சந்­தித்து வடக்கில் நீடித்­துக்­கொண்­டி­ருக்கும் காணிப்­பி­ரச்­சி­னைகள் சம்­பந்­த­மாக பேச்­சு­வார்த்தை நடத்­தி­யி­ருந்தோம். 

அத்­தோடு காணி­களை விடு­விக்க கோரி மக்கள் தொடர்ச்­சி­யாக நடத்தி வரும் போராட்­டங்கள் , காணி­களை விரைவில் விடுக்­க­வேண்­டிய தேவை குறித்தும் பேச்­சு­வார்த்­தை­களை நடத்­தி­யி­ருந்தோம். 

காணி­களை வைத்­தி­ருக்க தற்­போது என்ன தேவை­யுள்­ளது

அதன் தொடர்ச்­சி­யாக இன்­றைய தினம்(நேற்று) பாது­காப்புச் செய­வாளர் இரா­ணு­வத்­த­ள­பதி மற்றும் முப்­ப­டை­களின் உயர்­அ­தி­கா­ரிகள் ஆகி­யோ­ருடன் சந்­திப்பை நடத்­தி­யி­ருந்தோம். இதன்­போதும் அதே விட­யங்­களை நாம் வலி­யு­றுத்­தினோம். குறிப்­பாக யுத்தம் ஆரம்­பிக்­கப்­பட்ட காலத்தில் தமி­ழீழ விடு­த­லைப்­பு­லி­க­ளி­டத்தில் ஆய­தங்கள் இருந்­தன. அவற்றைப் பயன்­ப­டுத்தி இரா­ணு­வ­த­ளங்கள் தாக்­கப்­ப­டலாம் என்­பதன் நிமித்தம் அதி­உயர் பாது­காப்பு வல­யங்கள் அமைக்­கப்­பட்­டன. 

தற்­போது யுத்தம் நிறை­வுக்கு வந்து விட்­டது. தமி­ழீழ விடு­த­லைப்­பு­லி­களும் இல்லை. அவர்­களின் ஆயு­தங்­களும் இல்லை. அதே­நேரம் யுத்தம் நடை­பெற்ற போது விடு­த­லைப்­பு­லிகள் வச­மி­ருந்த காணிகள் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளன. அவற்றை விடவும் மேலும் காணிகள் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளன. அவ்­வா­றான காணிகள் மக்கள் பரம்­ப­ரை­யாக வாழ்ந்த காணிகள். மக்­க­ளுக்குச் சொந்­த­மான காணிகள். சில காணிகள் அர­சாங்­கத்தின் காணிப்­பத்­திரம் ஊடாக மக்­க­ளுக்கு வழங்­கப்­பட்ட காணிகள். அவற்றை மக்­க­ளி­டத்தில் மீளவும் கைய­ளிப்­பது உங்­களின் கடமை.  

அந்த காணி­களில் அவர்கள் வாழ்­வ­தற்கு உரித்­து­டை­ய­வர்கள். அந்த உரி­மையை மறுப்­பது தவ­றா­னது. ஆகவே அக்­க­ணி­களை மீளவும் மக்­க­ளுக்கு வழங்க வேண்டும் என பாது­காப்புத் தரப்­பி­ன­ரி­டத்தில் வலி­யு­றுத்­தினோம். 

முடி­வெ­டுக்கும் அதி­காரம் எம்­மி­டத்தில் இல்லை

அதற்­குப்­ப­தி­ல­ளித்த இரா­ணு­வத்­த­ள­பதி, நாங்கள் பலத்­கா­ர­மாக எந்­த­வி­த­மான காணி­க­ளையும் வைத்­தி­ருக்க கூடிய அதி­காரம் இல்லை. காணிகள் விடு­விப்பு குறித்து முடி­வெ­டுக்க வேண்­டி­யது சிவில் அதி­கா­ரத்­தினை கொண்­டி­ருப்­ப­வர்­க­ளாவர். 

ஜனா­தி­ப­தியும் , பாது­காப்புச் செய­லா­ளரும் காணி­களை விடு­விக்கச் சொன்னால் அதனை விடு­விக்க வேண்­டி­யது எமது கட­மை­யாகும். அத­னை­மீறி நாம காணி­களை வைத்­தி­ருப்­ப­தற்கு அதி­கா­ர­மில்லை. அவர்கள் கட்­ட­ளை­யிட்டால் காணி­களை விடு­விப்­ப­தற்கு தயா­ரா­க­வுள்ளோம் என்றார்.

மக்கள் பிர­தி­நி­தி­களின் வலி­யு­றுத்து

அதற்குப் பின்னர் தற்­போது வடக்கில் முல்­லைத்­தீவில் கேப்­பா­பு­லவு, மன்­னாரில் முள்­ளிக்­குளம், கிளி­நொச்­சியில் நடை­பெற்று வரும் போராட்­டங்கள் மற்றும் வலி­காமம் வடக்கு ஆகிய பகு­தி­களில் காணப்­படும் காணி விவ­கா­ரங்கள் தொடர்­பா­கவும் மக்­களின் கோரிக்­கைகள் தொடர்­பா­கவும் விரி­வாக அதி­கா­ரி­க­ளி­டத்திர் குறிப்­பிட்டோம்.  எமது பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் மக்­களின் கோரிக்­கை­களை வெளிப்­ப­டுத்­தி­னார்கள். 

கேப்­பா­பு­லவு விவ­கா­ரமும் கால அவ­கா­சமும்

கேப்­பா­பு­லவில் ஒரு தொகுதி காணி­களை கைய­ளிப்­ப­தற்கு இரா­ணு­வத்­தினர் தயா­ரா­க­வி­ருப்­ப­தாக தெரி­கின்­றது. ஆனால் முக்­கி­ய­மாக இரா­ணுவ தளம்  அமைந்­தி­ருக்­கின்ற பிர­தே­சத்தில் அவர்­க­ளுக்­கான முகாம் மற்றும் ஏனைய வச­திகள் அவர்­க­ளுக்கு உள்­ள­தாக அறி­கின்றோம். இருப்­பினும் அந்தக் காணிகள் தமக்கு சொந்­த­மான காணிகள். தனிப்­பட்ட முறையில் பரம்­ப­ரை­யாக வாழ்ந்த காணிகள். ஆகவே அவற்றில் மீண்டும் குடி­யேற வேண்டும் என்ற கோரிக்­கையை மக்கள் முன்­வைக்­கின்­றார்கள். 

இவ்­வா­றான நிலையில் இரா­ணு­வத்­தினர் அக்­கா­ணியில் இருந்து வில­கு­வ­தற்கு தயா­ரா­க­வுள்­ளனர். இருப்­பினும் தமக்கு கால அவ­காசம் தேவை­யா­க­வுள்­ளது. தமது இரா­ணுவ தளத்தை மாற்­றி­ய­மைப்­ப­தற்கு தேவை­யான பணத்தைப் பெற்று மாற்­றி­டத்­திற்குச் செல்­வ­தற்கு காலம் அவ­சி­ய­மா­க­வுள்­ள­தாக கூறி­யுள்­ளார்கள். 

மாவட்ட ரீதி­யாக கூட்­டங்கள்

இந்த விடயம் சம்­பந்­த­மாக அங்­குள்ள இரா­ணுவ அதி­கா­ரி­க­ளுடன் கலந்­து­ரை­யா­டு­வ­தற்­காக  எமது பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான சிவ­மோகன், சாந்­தி ஸ்ரீஸ்­கந்­த­ராஜா, எம்,ஏ.சுமந்­திரன் ஆகிய மூவரும் எதிர்­வரும் 19ஆம் திகதி அங்கே பிரச்­சன்­ன­மா­க­வுள்­ளனர். 

அத்­துடன்  முல்­லை­தீவு அர­சாங்க அதிபர். இரா­ணுவ அதி­க­ரிகள், மக்கள் பிர­தி­நி­திகள் ஆகியோர் இரா­ணு­வத்­தளம் உள்ள பகு­திக்குள் சென்று அந்த பகு­தியை பார்­வை­யிட்டு அவற்றை எவ்­வாறு மீள விடு­விக்­கலாம் என்­பது குறித்து முடி­வுகள் எடுக்­க­வுள்­ளனர். 

வலி­காமம் வடக்­கினைப் பொறுத்­த­வ­ரையில் தெல்­லிப்­பழை பிர­தேச செய­லாளர் பிரி­வுக்குள் ஏறத்­தாழ 4500ஏக்கர் காணிகள் விடு­விக்­கப்­ப­டாது இருக்­கின்­றது. அத­னைத்­த­விர 750ஏக்கர் காணிகள் யாழ்­மா­வட்­டத்தில் ஏனை­ய­ப­கு­திகளில் விடு­விக்­கப்­ப­டா­துள்­ளன. அவற்­றையும் விடு­விக்க வேண்­டு­மென நாம் வலி­யு­றுத்­தினோம். 

அதன்­போது கணி­ச­மான காணி­களை விடு­வித்­தி­ருக்­கின்றோம். ஏறத்­தாள வலி­கா­மத்தில் மாத்­திரம் 2800ஏக்­க­ருக்கும் அதி­க­மான காணி­களை விடு­வித்­தி­ருக்­கின்றோம். மேலும் காணி­களை விடு­விப்­ப­தற்கு முயற்­சிகள் நடை­பெற்று வரு­கின்­றன. 

அதன் பிர­காரம் அச்­செ­யற்­பா­டு­களை விரை­வு­ப­டுத்­து­வ­தற்­காக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மாவை.சோ.சேனா­தி­ராஜா தலை­மையில் எம்,ஏ.சுமந்­திரன் உள்­ளிட்ட ஏனைய பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மற்றும் இரா­ணுவ அதி­கா­ரிகள், யாழ்­மா­வட்ட அர­சாங்க அதிபர் ஆகி­யோ­ர் எதிர்­வரும் 20ஆம் திகதி காலை குறித்த பகு­தி­களை நேர­டி­யாக பார்­வை­யி­டு­வ­தோடு எந்­தெந்த காணி­களை விடு­விப்­பது என்­பது குறித்த கலந்­து­ரை­யா­டப்­பட்டு தீர்­மா­னிக்­கப்­ப­ட­வுள்­ளது. 

அவ்­வி­த­மா­கவே கிளி­நொச்­சி­யிலும் காணி­களை மீளவும் விடு­விப்­பது குறித்து கிளி­நொச்சி மாவட்ட அர­சாங்க அதிபர், பாரர்­ளு­மன்ற உறுப்­பினர் சி.சிறி­தரன், எம்.ஏ.சுமந்­திரன் உள்­ளிட்ட ஏனைய உறுப்­பி­னர்கள், இரா­ணுவ அதி­கா­ரிகள் ஆகி­யோரை உள்­ள­டக்கி 20ஆம் திகதி மாலை கூட்டம் நடை­பெற்ற தீர்­மா­னங்கள் எடுக்­கப்­ப­ட­வுள்­ளன. 

மன்னார் முள்­ளிக்­குளம் காணி விவ­காரம் குறித்து இவ்­வி­த­மாக அர­சாங்க அதிபர், மக்கள் பிர­தி­நி­திகள் மற்றும் இரா­ணுவ அதி­கா­ரி­க­ளுடன் கூட்டம் நடை­பெற்று முடி­வுகள் எடுக்­கப்­ப­ட­வுள்­ளன. வுவ­னி­யா­விலும் இவ்­வி­த­மாக காணப்­படும் பிரச்­சி­னைகள் குறித்து கூட்­ட­மொன்­று­ந­டை­பெற்று தீர்­மா­னிக்­கப்­ப­ட­வுள்­ளது.  குறித்த இரண்டு மாவட்­டங்­களில் நடை­பெறும் கூட்­டங்­க­ளுக்­கான திக­திகள் இன்­னமும் தீர்­மா­னிக்­கப்­ப­ட­வில்லை. 

மீண்டும் கலந்­து­ரை­யாடல்

இவ்­வி­த­மான கூட்­டங்கள் நடை­பெற்று தீர்­மா­னங்கள் எடுக்­கப்­பட்­டதன் பின்னர் நாங்கள் மீண்டும் பாது­காப்புச் செய­லாளர் அலு­வ­ல­கத்தில் கூட­வுள்ளோம். அதன்­போது வடக்கு கிழக்கில் உள்ள எட்டு மாவட்­டங்­களில் காணப்­படும் காணிப்­பி­ரச்­சி­னைகள் தொடர்­பான முழ­மை­யான பட்­டி­யலைத் தயா­ரிக்­க­வுள்ளோம். குறித்த கூட்­டத்­திற்கு அர­சாங்க அதி­பர்­க­ளையும் அழைத்து நாம் கலந்­தா­லே­சித்து அடுத்த கட்ட நட­வ­டிக்­கைகள் குறித்து தீர்­மா­னங்­களை மேற்­கொள்ள முடியும் என தீர்­மா­னித்­தி­ருக்­கின்றோம். 

ஜனா­தி­பதி மீதான எதிர்­பார்ப்பு

ஜனா­தி­ப­தியின் பணிப்­பு­ரைக்­க­மை­யவே இன்றை(நேற்று) சந்­திப்பு நடை­பெற்­றி­ருந்­தது. ஆகவே காணி­வி­வ­காரம் தொடர்பில் அவரின் முழுமை­யான ஒத்­து­ழைப்­புக்கள் எமக்கு கிடைக்கும் எனவும் எதிர்­பார்க்­கின்றோம்.

பலாலி விமான நிலைய காணித்­தேவை சாத­க­மாக பரி­சீ­லிப்­ப­தற்கு தயார்

காணிப்­பி­ரச்­சினை என்­பது மிகவும் சிக்­க­லா­ன­தொன்­றாகும். ஏமது மக்கள் இரு­பத்­தைந்து முப்­பது வரு­டங்­க­ளாக தமது காணி­க­ளுக்குச் செல்­ல­மு­டி­யாது தவிக்­கின்­றார்கள். இந்த நிலைமை தொட­ர­மு­டி­யாது. உதாரணமாக தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் விமானநிலையத்தை அமைப்பதற்கு காணிகள் தேவைப்படுமாகவிருந்தால் அதனை பரிசீலிப்பதற்கு தயாரக இருக்கின்றோம். 

அக்காரணத்தின் நிமித்தம் ஏனைய காணிகள் விடுவிக்கப்படுவது தமாதப்பட வேண்டிய அவசியமில்லை அதனை நாம் வலியுறுத்தியுள்ளோம். இன்று இந்த விடயத்தை ஆரம்பித்திருக்கின்றோம். விரைவில் இவ்விடயத்திற்கு ஒரு முடிவு கட்டுவோம். 

அடுத்த தடவை கிழக்கு காணி பிரச்சினைகள்

கிழக்கு மாகாணத்திலும் இவ்விதமான காணிப்பிரச்சினைகள் காணப்படுகின்றன. அவை தொடர்பாக அடுத்த தடவை சந்திப்பு நடைபெறுகின்ற போது அதிக கவனம் செலுத்தவுள்ளோம் அம்மாகாண பாராளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்து அவ்விடயங்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடவுள்ளோம்.

வர்த்தமானி அறிவித்தல்கள் குறித்தும் விரைவில் பேச்சு 

சமீபத்தில் நாங்கள் அறிந்த வரையில் மக்கள் குடிபெயர்ந்த காணிகள் மாத்திரம் அல்ல  பல்வேறு காணிகளும் வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வன பகுதியாக பிரகடனம் செய்யும் நிலைமைகள் காணப்படுகின்றன. அது சற்று வேறுபட்ட பிரச்சினையொன்றாகும். வனஇலக்கா மட்டுமல்ல தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களத்தினாலும் அவ்விதமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றமையை நாம் அறிந்து கொண்டுள்ளோம்.  அவ்விடயம் சம்பந்தமாக நிச்சமாக நாம் பேச்சுவார்த்தையை நடத்துவோம் என்றார். 

http://www.virakesari.lk/article/19112

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.