Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்தின் மனித அவலமும் அரச செயலக அதிகாரிகளின் தரவுகளும்

Featured Replies

யாழ்ப்பாணத்துக்கான தரைவழிப்பாதை மூடப்பட்டு ஆறு மாதங்களைக் கடந்தும், குடாநாட்டுக்கான எந்தவிதமான ஒரு பொருளையும் யாழ். வர்த்தகர்கள் குடாநாட்டுக்கு எடுத்து வராத நிலையில், யாழ். செயலகம், யாழ் மாவட்டத்துக்கான பொருட்களின் உச்ச விலைப்பட்டியல் ஒன்றை வெளியிட்டு "பொதுமக்களை" கோமாளிகளாக மாற்றியுள்ளது. கொழும்பில் நிலை கொண்டுள்ள இரு வர்த்தகர்கள் ஒரு தடவைக்கு பத்துக் கோடி ரூபா இலாபம் என்ற நியதியில், பொருட்களைக் கொண்டு வந்து, அங்காடி வியாபாரிகள் மூலம் பொருட்களை விற்பனை செய்து வருவதும் உண்மையாகும். இந்த நிலையில் அத்தியாவசிய சேவைகள் நாயகத்தின் யாழ். விஜயம் என்ன மாற்றத்தை ஏற்படுத்தப் போகின்றது.

யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கான ஒரேயொரு தரை வழிப்பாதையை இராணுவத்தினர் தம்மிஷ்டப்படி மூடி ஆறுமாதங்கள் கடந்து விட்டன. தரை வழிப்பாதை மூடப்பட்டதால் குடாநாட்டில் வாழும் ஆறு இலட்சம் மக்களுக்கான உணவும் கடல்வழியாகவே எடுத்து வரப்படுகின்றன. இம் மக்களுக்கான உணவுப் பொருட்களை தாராளமாக அனுப்பி வைத்து வருவதாக தினமும், அரசு கூறி வருகின்றது. உண்மையில் யாழ். குடாநாட்டுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் என்ன வருகின்றன, எவ்வாறு பகிர்ந்தளிக்கப்படுகின்றன என்பது பற்றி சிவில் அதிகாரிகள் பலருக்கு எதுவும் தெரிவதில்லை.

அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் திணைக்களத்துக்கு யாழ். செயலக அதிகாரிகள் அனுப்பி வைக்கும் தரவுகளை பார்க்கின்ற பொழுது, யாழ்ப்பாணத்துக்கு தாராளமாக உணவுப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன என அரசு கூறி வருவதில் எந்த வித தவறுகளும் கிடையாது.

கடந்த காலங்களில், யாழ் மாவட்ட மக்களுக்கான உணவுப் பொருட்களை 5,000க்கும் அதிகமான தனியார் வர்த்தக நிலையங்களே வழங்கி வந்துள்ளன. இன்று அப்பணியை 530 பல நோக்குக் கூட்டறவுச் சங்கக் கிளைகள் மூலமே பகிர்ந்தளிக்கப்பட்டு வருகின்றன. பல நோக்குக் கூட்டுறவுச் சங்கங்களின் முகாமையாளர்கள் எல்லோரும் நம்பகத்தன்மை உடையவர்களாக இருக்க முடியாது. ஆனால், சிலர் மூலமாக உணவுப் பொருட்கள் ஐந்து மடங்கு விலைக்கு விற்பனையாகின்றன. அதிகாரிகள் முகம் பார்த்து "பேர்மிட்" வழங்குவதும், அதைப் பெறுபவர்கள் பணம் சம்பாதிப்பதும் விலை அதிகரிப்புக்கு காரணமாகும்.

அண்மைக்காலமாக யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு இரு கொழும்பு வியாபாரிகள் இந்தியாவில் இருந்தும் கொழும்பிலிருந்தும் பொருட்களை எடுத்து வருகின்றார்கள். ஒரே தடவையில் பத்துக்கோடி ரூபா இலாபத்தை எவ்வாறு வசூலிக்கலாமென எண்ணும் இவர்கள் யாழ்ப்பாணத்தில் எந்தப் பொருட்களை ஐந்து மடங்கு விலைக்கு விற்பனை செய்யலாமோ அவற்றையே எடுத்து வருகின்றனர். சுருங்கச் சொன்னால், திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என நினைத்துச் செயல்பட்டு வருகின்றனர்.

இவர்களுக்கு எதிராக யாழ். செயலக அதிகாரிகள் இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல், அதிக விலை கொடுத்து பொருட்களை வாங்கி விற்கும் வியாபாரிகள் சிலரை பாவனையாளர் பாதுகாப்புச் சட்டத்தில் வழக்குத் தாக்கல் செய்து அபராதம் விதித்து வருகின்றனர். இவை பக்கச்சார்பாக அரசுக்கு காட்டும் நடவடிக்கையாகும்.

யாழ். மாவட்டத்துக்கு குறைந்த பட்சம் இருபதினாயிரம் மெற்றிக் தொன் அரிசி, சீனி, கோதுமை மா, பருப்பு வந்தால் மட்டுமே மக்கள் தமது அன்றாட தேவைக்கான உணவுப் பொருட்களை நியாய விலையில் வாங்க முடியும், ஆனால், அப்படியான தொகை இதுவரை சாதாரண மக்களுக்கு கிடைக்கக் கூடியளவு வந்து சேரவில்லை.

அகதிகளுக்கான இலவச நிவாரணம், சமுர்த்தி நிவாரணம் இவைகளையெல்லாம் கணக்கிட்டு சேர்த்து அரசு உணவுப் பொருளை அனுப்பி வைப்பதால் உணவுப் பொருள் பற்றாக்குறையினால் விலைகள் அதிகரிப்புக்கு காரணமாகவுள்ளது. சுருங்கச் சொன்னால் இன்றைக்கு ஆறுமாத காலமாக பேக்கரிகளுக்குக் கூட தாராளமாக கோதுமை மா வழங்கப்படவில்லை. சாதாரண மனிதர் கிடைப்பதை விட தேவைக்கு அதிகமாக வாங்கி வருகின்றனர்.பால்மா உட்பட நானாவித பொருட்களும் மாதத்தில் அமாவாசை பௌர்ணமி வருவது போல் மாதத்துக்கு ஒரு தடவை மட்டும் வழங்கப்பட்டு வருகின்றது. இந் நிலையில் ஒவ்வொரு குடும்பமும் சலிக்காமல் கள்ள விலைக்கே பொருட்களை வாங்கி வருகின்றது. ஆறு மாத காலமாக தீராத "பேரிடி" எப்ப தீரப் போகின்றது என குடும்பத் தலைவர்கள் அரசைத் திட்டி தீர்ப்பதைத் தவிர எந்த மாற்றமும் நிகழப் போவதில்லை.

இதைத் தெளிவுப்படுத்துவதற்காக யாழ். அரசாங்க அதிபர் கணேஷ் சில தினங்களுக்கு முன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், யாழ்.மாவட்ட மக்களுக்கான உணவுப் பொருள் விநியோகம் பங்கீட்டு அடிப்படையில் தொடர்ந்து வழங்கப்படும் என அறிவித்துள்ளார். அதனை விட கேலியான செய்தியாக பல நோக்குக் கூட்டுறவுச் சங்கங்களால் விநியோகிக்கப்படும் சகல பொருட்களினதும் விலைகளை யாழ்.மாவட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட விலைகள் என அறிவித்துள்ளார்.இதில் வேடிக்கை என்னவென்றால் பங்கீட்டுக்கு வழங்கப்படும் சீனி போன்ற பொருட்கள் போடப்பட்ட விலைகளில் சற்று அதிகமாகவே மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. யாழ்ப்பாண ஊடகங்களில் சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்ட செய்தியில் யாழ். மாவட்ட மக்களுக்கான உணவுப் பொருட்கள் சாதாரண சந்தைக்கு மாற்றப்படும் என்ற கூற்றையும் தவறான செய்தியென கூறிவருகின்றார். சில வியாபாரிகள் யாழ் மாவட்ட அரசாங்க அதிபரைச் சந்தித்து கேட்ட போது, "அது கணேஷ் போட்டிருந்தால் கணேஷைக் கேளுங்கள் " என தமாஷாக கூறிவருவது வேடிக்கையிலும் வேடிக்கை.

இந்நிலையிலேயே யாழ்ப்பாணத்துக்கான உண்மை நிலைமைகளை கண்டறியும் முகமாக மனித உரிமைகள் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மகிந்த சமரசிங்க, அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் திவாரட்ண உட்பட உயர் அதிகாரிகளைக் கொண்ட உயர் மட்ட குழு யாழ்ப்பாணம் வந்து திரும்பியுள்ளது. கடந்த ஆறு மாதங்களில் இக்குழு மூன்றாவது தடவையாக யாழ்ப்பாணம் வந்து போயுள்ளது. கடந்த இருமுறையும் பலாலி படைத் தலைமையகத்தில் யாழ். மாவட்ட அரச நிர்வாக அதிகாரிகளுடன் கலந்து பேசிவிட்டு திரும்பிவிட்டது.

இம்முறை சற்று வித்தியாசமாக மதத் தலைவர்கள் சர்வதேச தொண்டர் நிறுவனப் பிரதிநிதிகள், உள்ளூர் அரச சார்பற்ற தொண்டர் நிறுவனப் பிரதிநிதிகளையும் அழைத்திருந்தால் தங்களைப் பாராட்டுவார்கள் என்ற நிலை மாறி ஏன் அழைத்தோம் என்ற நிலையிலே கலந்துரையாடல் இடம் பெற்றிருந்தது.

கலந்துரையாடலில் முக்கிய கருத்துரையாளராக விளங்கிய யாழ்மறை மாவட்ட பேராயர் தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகை யாழ். மாவட்டத்தின் ஆறு மாத அவலங்களை பட்டியல் இட்டுக் காட்டினார். குடாநாட்டில் என்றுமில்லாதளவு படுகொலைகள், கடத்தல்கள், கொள்ளைகள் இடம்பெற்று வருகின்றன. வரலாறு காணாத மனித அவலங்கள் தொடர்கின்றன. போதியளவு உணவுப் பொருட்கள் அனுப்பப்படவில்லை. பாதுகாப்பு நடவடிக்கைகளால் மக்கள் அச்சம் கொண்டுள்ளனர். ஊரடங்கு நேரம் அதிகரிக்கப்பட்டிருப்பதால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. கடற்றொழிலாளர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். பயண அவலம் தொடர்கின்றது. இதற்கு ஒரே வழி ஏ-9 பாதையைத் திறந்து இயல்பு நிலையை ஏற்படுத்துங்கள் என்றார்.

ஆயரின் கூற்றுக்களை செவிமடுத்த அமைச்சரும் மற்றைய அதிகாரிகளும் தங்களால் முடிந்தவரை நடவடிக்கை எடுப்பதாக உறுதி மொழி வழங்கினர். குடா நட்டில் நிலவும் அச்ச நிலை நீங்கும் வரை இயல்பு நிலை ஏற்படுத்த முடியாதென கலந்துரையாடலில் ஆணித்தரமாக எடுத்து விளக்கப்பட்டது. யாழ். மாவட்டத்துக்கு எவ்வளவு பொருட்களையும் அரசாங்கம் அனுப்பத்தயாராக இருப்பதாக கூறினார். இந்த வாசகம் பல தடவை கூறப்பட்டதாகும். யாழ்ப்பாணத்தில் செய்திப் பத்திரிகைகளுக்கு அச்சுத்தாள்கள் எடுத்துவரப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்ட போதும், அதுகுறித்து மௌனமே சாதிக்கப்பட்டது.

யாழ். மாவட்டத்தின் இன்றைய மனித அவலங்கள் ஆறுமாத காலமாக தொடர்கதையாகவேயுள்ளன. யாழ்ப்பாணத்துக்கு அடிக்கடி வரும் அமைச்சர்கள் தங்கள் சுயநலத்திற்காக இவற்றை தெரிந்திருந்தும் பாராமுகமாகவே இருந்து வருகின்றனர். இப்பிரச்சினை அரசியல் பிரச்சினையாக மாறி வருவதால், இப்பிரச்சினை இன்றோ நாளையோ தீரப்போவதில்லை. யாழ்ப்பாண மக்களைப் பிடித்த `சனி'யன் விலகும் வரை காத்திருப்போம்.

யாழ்ப்பாண செயலகம் வெளியிட்டுள்ள விலைப்பட்டியலில் சில:

அரிசி கிலோ -48.00 , சந்தை விலை 90.00

சன்லைட்- 23.00, சந்தை விலை 80.00

சீனி கிலோ -68.75 , சந்தை விலை 180.00

லக்ஸ்- 26.00 , சந்தை விலை80.00

மாவு கிலோ -43.00, சந்தை விலை110.00

ரயர் - 400.00 , சந்தை விலை1000.00

பருப்பு கிலோ - 79.00 , சந்தை விலை 90.00

ரியூப் - 150.00, சந்தை விலை 450.00

உள்ளி கிலோ-100.00 ,சந்தை விலை 450.00

எள்ளு- 100.00, சந்தை விலை 600.00

தேயிலை -308.00, சந்தை விலை 1,200

பிளம்ஸ்- 186.00, 500.00

தே.எண்ணெய் - 186.00 , சந்தை விலை 290.00

செ.மிளகாய் -252.00 , சந்தை விலை 350.00

முட்டை -13.00, சந்தை விலை 20.00

http://www.thinakkural.com/news/2007/2/18/...s_page21645.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.