Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

காணிகளை விடுவிக்கும் நோக்கோடு இராணுவம் செயற்படுவதாக தெரிகிறது – சுமந்திரன்

Featured Replies

காணிகளை விடுவிக்கும் நோக்கோடு இராணுவம் செயற்படுவதாக தெரிகிறது – சுமந்திரன்

 

sumanthiran2.jpg

இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகள் தொடர்பான கூட்டம் சாதகமான கூட்டமாக சுமூகமான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றது இராணுவத்தினரும்  காணிகளை விடுவிக்கும் நோக்கதோடு செயற்படுகிறதாக தெரிகிறது.ஆகவே இப்படியான கலந்துரையாடல்கள் மூலம் நாங்கள் முன்நகரலாம் எனவும்  படிப்படியாகவேனும் காணிகள் விடுவிக்கப்படும் என்று தென்படுகிறது எனவும் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளருமான எம்ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில்  முப்படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பொது மக்கள் மற்றும் திணைக்களங்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவித்தல் தொடர்பிலான மாவட்ட உயர்மட்ட கலந்துரையாடல் இன்று வியாழக்கிழமை கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.  கூட்டத்தின் நிறைவில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்; அவர் மேலும் தெரிவிக்கையில்

இராணுவத்தினர் தனியார் காணிகளை விடுப்பதுதான் தங்களது முதல் நோக்கம் என தீர்மானித்து அறிவித்திருக்கின்றார்கள். கிளிநொச்சி மாவட்;டத்திலே இருக்கின்ற ஒரேயொரு பிரச்சினை என்று அடையாளம் கண்டிருப்பது என்னவென்றால் அரச அதிகாரிகள்  , தனியார் காணிகள் என்று அடையாளப்படுத்திய பல காணிகளை இராணுவத்தினர் அரச காணிகள் என்று நினைத்திருக்கின்றார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

காணி சுவீகரிப்பு நடவடிக்கை ஆரம்பமாகியிருக்கிறது ஆனால் முடிவுக்கு கொண்டுவரப்படவில்லை.ஆரம்பமாகியவுடனே அது அரச காணி என்று அவர்கள் நினைத்துவிட்டார்கள். அது பற்றி கலந்துரையாடல்களுக்கு பின் நாங்கள் விளக்கம் கொடுத்த பின் அந்தக் காணிகள்  தொடர்பில் அவர்கள்  குறித்தச் செல்கின்றார்கள். அந்தக் காணிகளும் தனியார் காணிகள் என்று உறுதிப்படுத்தினால் அவற்றையும் விடுவிப்பதான நடவடிக்கையை எடுப்பதாக சொல்லியிருக்கின்றார்கள் எனத் தெரிவித்தார்.

அதைவிட அரச காணிகளிலும் கூட பொது மக்களின் தேவைக்காக இருக்கின்ற பல பிரதேசங்கள் அடையப்படுத்தப்பட்டமை தொடர்பில்  பதில் சொன்ன அவர்கள் தனியார் காணிகளில் மக்களின் மீள்குடியேற்றத்திற்கு கருத்தில் எடுத்ததாகவும் ஒரு விண்ணம் கொடுக்கப்படுமாக இருந்தால் அதனையும் நிரற்படுத்தி முன்னுரிமை அடிப்படையில் விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்திருக்கின்றாhகள்.

மற்றொரு விடயம் அவர்கள் ஒரு இடத்தில் கட்டடங்கள் அமைத்து இருக்கின்ற நிலையில் இன்னொரு இடத்திற்கு மாறுகின்ற போது  கட்டடங்கள் அமைத்த செலவுகள்  உண்டு எனவும்  அரசாங்கம் அந்த செலவுகளை  வழங்குகின்ற பட்சத்தில் தாங்கள் உடனடியாக அந்த இடங்களை விட்டு செல்லலாம் எனவும் ராணுவத்தினர் தெரிவித்ததாக சுமந்திரன் தெரிவித்தார்.

நேற்றைக்கும்(19)  இன்றைக்கும்(20) அதற்கு முன்னரும் நடத்திய கலந்துரையாடலில் இருந்து இது இப்போது புலனாகிறது எனவும்  இராணுவம் ஓரிடத்தில் இருந்த இன்னோர் இடத்திற்கு மாறுகின்ற போது அதன் செலவு பெரியதொரு தடையாக இருக்கிறது  எனவும் ஆகவே நாங்கள் இது குறித்தும் அரசாங்கத்தோடு பேசி ஏதோ ஒரு விதமாக நல்லிணகத்தின் ஒரு படிமுறையாக எங்கையாவது இருந்து பணத்தை இதற்காக விசேடமாக பெற்றுகொடுத்தால் கூட இராணுவம் இடங்களை விடுவதற்கு தயாராக இருக்க்pறார்கள் எனவும் எனவே அந்த நடவடிக்கைளையும் நாங்கள் தொடர்ச்சியாக எடுப்பம் எனவும் தெரிவித்தார்.

நாங்கள் கேட்காத ஒரு விடயத்தை இராணுவத்தினர் சொன்னார்கள்  ஆதாவது இரணைமடுவை சுற்றியுள்ள 2439 ஏக்கர் நிலத்தை விடுப்பதாக சொன்னார்கள். அது முல்லைத்தீவு மாவட்டம் என்பதால் கிளிநொச்சி கூட்டத்தில் எடுக்கவில்லை. ஆனால் அந்தக் காணிகள் அவர்களுடைய கட்டுப்பாட்டில் இருப்பதாக அறிவித்தார்கள். அதனை தவிர உறுதியாக இப்போது எனக்கு சரியான தகவல்கள் சொல்ல முடியாது எகத் தெரிவித்தார்.

மேலும் ; தங்களின் கட்டுப்பாட்டில் 24 ஆயிரம் ஏக்கர் இருந்ததாகவும் ஆனால் தற்போது 783 எக்கர்தான்  தற்போது தங்களின் கட்டுப்பாட்டில் இருப்பாகவும் அதை படிப்படியாக தாங்கள் விடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டார்;கள் அன்னளவாக நூறு ஏக்கர் உடனடியாக விடுவிக்கப்படக் கூடிய நிலையில் இருக்கிறது எனவும் தெரிவித்தார்.

.
இந்த கூடட்த்தில் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, எம்ஏ சுமந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்களான சரவணபவன், சிறிதரன். மாகாண சபை உறுப்பினர் பசுபதிபிள்ளை மாவட்ட அரச அதிபர்  சுந்தரம் அருமைநாயகம், பாதுகாப்பு அமைச்சின் சிரேஸ்ட உதவிச் செயலாளர் சமந்தி வீரசிங்க பிரதேச செயலாளர்கள் மற்றும் காணி உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்

https://globaltamilnews.net/archives/24603

  • தொடங்கியவர்

காணிகளை விடுவிக்கும் நோக்கிலேயே இராணுவம் உள்ளது

 

காணிகளை விடுவிக்கும் நோக்கிலேயே இராணுவம் உள்ளது

 

தமது கட்டுப்பாட்டிலுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்கும் நோக்கிலேயே இராணுவம் தற்போது செயற்பட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவிக்கின்றது.

காணி விடுவிப்பு தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற விசேட கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கலந்துரையாடலின் பிரகாரம் படிபடியேனும் காணிகள் விடுவிக்கப்படும் என அவர் நம்பிக்கை வௌியிட்டுள்ளார்.

தனியார் காணிகளை விடுவிப்பதே தமது முதலாவது நோக்கம் என இராணுவம் தெரிவித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

காணி விடுவிப்பு தொடர்பில் கிடைக்கப்படுகின்ற விண்ணப்பங்களுக்கு தாம் முன்னுரிமை வழங்கவுள்ளதமாகவும் இராணுவம் தெரிவித்ததாக அவர் கூறினார்.

தமக்கான கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கு பாரிய செலவீனம் காணப்படுவதாகவும், அரசாங்கம் அந்த செலவீனங்களை ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் தாம் உடனடியாக அந்த காணிகளை விட்டு வௌியேற தயாராகவுள்ளதாகவும் இராணுவத்தினர் இன்று குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் இரணைமடுவை அண்மித்து கையகப்படுத்தப்பட்டுள்ள 2439 ஏக்கர் நிலப்பரப்பை வெகுவிரைவில் படிபடியாக விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக இராணுவம் இன்று உறுதியளித்துள்ளது.

கிளிநொச்சி பிரதேசத்திலுள்ள காணி விடுவிப்பு தொடர்பான பேச்சுவார்த்தையில் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், சரவணபவன், சிறிதரன் உள்ளிட்ட மேலும் பலர் கலந்துக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://tamil.adaderana.lk/news.php?nid=90669

  • தொடங்கியவர்

நிதியை வழங்­கினால் காணி­களை இரா­ணுவம் விடு­விக்கத் தயார்

p9-30e65c70d6a03c6dc636f755c0c210d57b32bd64.jpg

 

கிளி­நொச்சி கலந்­து­ரை­யா­டலின் பின்னர் சுமந்­திரன் அறி­விப்பு  

(கரைச்சி நிருபர்)

இரா­ணு­வத்தின் கட்­டுப்­பாட்டில் உள்ள காணிகள் தொடர்­பான கூட்டம் சாத­க­மாக சுமுக­மான முறையில் இடம்­பெற்­றது. இரா­ணு­வத்­தி­னரும் மக்­களின் காணி­களை படிப்­ப­டி­யாக விடு­விக்கும் நோக்­க­த்தோடு செயற்­ப­டு­வ­தாக தெரி­கி­றது.

ஆகவே இப்­ப­டி­யான கலந்­து­ரை­யா­டல்கள் மூலம் நாங்கள் முன்­ந­க­ரும்­போது படிப்­ப­டி­யாக காணிகள் விடு­விக்­கப்­படும் என்றும் தென்­ப­டு­கி­றது என பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் ஊடகப் பேச்­சா­ள­ரு­மான எம்ஏ. சுமந்­திரன் தெரி­வித்­துள்ளார்.

 கிளி­நொச்சி மாவட்­டத்தில் முப்­ப­டை­களின் கட்­டுப்­பாட்டில் உள்ள பொது மக்கள் மற்றும் திணைக்­க­ளங்­க­ளுக்குச் சொந்­த­மான காணி­களை விடு­வித்தல் தொடர்­பி­லான உயர்­மட்ட கலந்­து­ரை­யாடல் நேற்று வியா­ழக்­கி­ழமை கிளி­நொச்சி மாவட்டச் செய­ல­கத்தில் இடம்­பெற்­றது. கூட்­டத்தின் நிறைவில் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் இதனை தெரி­வித்தார்.

 அவர் மேலும் தெரி­விக்­கையில்,  இரா­ணு­வ­னத்­தினர் தனியார் காணி­களை விடுப்­ப­துதான் தங்­க­ளது முதல் நோக்கம் என தீர்­மா­னித்து அறி­வித்­தி­ருக்­கின்­றார்கள். கிளி­நொச்சி மாவட்­டத்­திலே இருக்­கின்ற ஒரே­யொரு பிரச்­சினை அடை­யாளம் காணப்­பட்­டி­ருக்­கின்­றது. அதா­வது பல காணி­களை அரச அதி­கா­ரிகள் தனியார் காணிகள் என்று அடை­யா­ளப்­ப­டுத்­தி­யதை இரா­ணு­வத்­தினர் அரச காணிகள் என்று நினைத்­தி­ருக்­கின்­றார்கள்.  

 காரணம் காணி சுவீ­க­ரிப்பு நட­வ­டிக்கை ஆரம்­ப­மா­கி­யி­ருக்­கி­றது. ஆனால் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­ப­ட­வில்லை. ஆரம்­ப­மா­கி­ய­வு­டனே அது அரச காணி என்று அவர்கள் நினைத்­து­விட்­டார்கள். அது பற்றி கலந்­து­ரை­யா­டல்­க­ளின்­போது நாங்கள் விளக்கம் கொடுத்த பின்னர் அந்தக் காணி­களை தனியார் காணிகள் என்று உறு­திப்­ப­டுத்­தினால் அவற்றை விடு­விப்­ப­தா­கவும் நட­வ­டிக்­கையை எடுப்­ப­தா­கவும் கூறி­யுள்­ளனர்.

 அதை­விட அரச காணி­க­ளிலும் கூட பொது மக்­களின் தேவைக்­காக இருக்­கின்ற பல பிர­தே­சங்கள் அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டன. அவர்கள் ஒரு இடத்தில் கட்­ட­டங்கள் அமைத்து இருக்­கின்ற நிலையில் இன்­னொரு இடத்­திற்கு மாறு­கின்ற போது கட்­ட­டங்கள் அமைத்த செல­வுகள் உண்டு. அர­சாங்கம் அந்த செல­வு­களை வழங்­கு­கின்ற பட்­சத்தில் தாங்கள் உட­ன­டி­யாக அந்த இடங்­களை விட்டு செல்­லலாம் என்று கூறு­கின்­றனர்.

 கடந்த தினங்­க­ளிலும் அதற்கு முன்­னரும் நடத்­திய கலந்­து­ரை­யா­டலில் இருந்து இது இப்­போது புல­னா­கி­றது. இரா­ணுவம் ஓரி­டத்தில் இருந்­தது. இன்னோர் இடத்­திற்கு மாறு­கின்ற போது அதன் செலவு பெரி­ய­தொரு தடை­யாக இருக்­கி­றது. ஆகவே நாங்கள் இது குறித்தும் அர­சாங்­கத்­தோடு பேசி ஏதோ ஒரு வித­மாக நல்­லி­ணக்­கத்தின் ஒரு படி­மு­றை­யாக எங்­கே­யா­வது இருந்து பணத்தை பெற்­று­கொ­டுத்தால் கூட இரா­ணுவம் இடங்­களை விடு­வ­தற்கு தயா­ராக இருக்­கி­றார்கள் எனவே அந்த நட­வ­டிக்­கை­ளையும் நாங்கள் தொடர்ச்­சி­யாக எடுப்போம்.

 இர­ணை­ம­டுவை சுற்­றி­யுள்ள 2ஆயி­ரத்து 439 ஏக்கர் நிலத்தை விடு­விப்­ப­தாக சொன்­னார்கள். அது முல்­லைத்­தீவு மாவட்டம் என்­பதால் கிளி­நொச்சி கூட்­டத்தில் அதனை பேச­வில்லை. ஆனால் அந்தக் காணிகள் அவர்­க­ளு­டைய கட்­டுப்­பாட்டில் இருப்­ப­தாக அறி­வித்­தார்கள். அதனை தவிர உறு­தி­யாக இப்­போது எனக்கு சரி­யான தக­வல்கள் சொல்ல முடி­யாது. இரா­ணு­வத்தின் கட்­டுப்­பாட்டில் 24 ஆயிரம் ஏக்கர் காணிகள் இருந்­த­தா­கவும் ஆனால் தற்­போது 783 ஏக்­கர்தான் தங்­களின் கட்­டுப்­பாட்டில் இருப்­பா­கவும் அதை படி­ப­டி­யாக தாங்கள் விடுப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுப்­ப­தா­கவும் குறிப்­பிட்­டார்கள்.அண்­ண­ள­வாக நூறு ஏக்கர் உட­ன­டி­யாக விடு­விக்­கப்­படக் கூடிய நிலையில் இருக்கிறது என்றார்.

 இந்த கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, எம்.ஏ. சுமந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்களான சரவணபவன், சிறிதரன். மாகாண சபை உறுப்பினர் பசுபதிபிள்ளை மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், பாதுகாப்பு அமைச்சின் சிரேஸ்ட உதவிச் செயலாளர் சமந்தி வீரசிங்க பிரதேச செயலாளர்கள் மற்றும் காணி உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-04-21#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.