Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ்ப்பாணம் குறித்து இந்தியத் துணைத் தூதுவர் கூறுவது இது தான்!

Featured Replies

தமிழ்நாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்கள் தொடர்பில் பேசினால் அதிக பட்சம் அது யாழ்ப்பாணத் தமிழர்கள் பற்றியதாகவேயிருக்கும் என யாழ்.இந்தியத் துணைத் தூதுவர் ஆ. நடராஜன் தெரிவித்துள்ளார்.

பகவான் ஸ்ரீ சத்திய சாயி பாபா சமாதியடைந்த தினமான நேற்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு முன்பாக அமைந்துள்ள யாழ்ப்பாணம் பகவான் ஸ்ரீசத்திய சாயி சேவா நிலையத்தில் ஸ்ரீ சத்தியசாயி ஆராதனா மஹோற்சவம் இடம்பெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணத்திலுள்ள சத்திய சாயி பாபா நிலையங்களில் நான் வாகனத்தில் செல்லும் போது அவதானித்த போது அவருக்குப் பூஜை இடம்பெறாத நாட்களே கிடையாது. எங்கு பார்த்தாலும் மக்கள் கூடி அவரைத் தொழுது பஜனைகள் பாடி வழிபடுகின்ற காட்சிகளைக் காண முடிகிறது.

இங்குள்ள சாயி பாபா நிலையங்களில் பல்வேறு சேவைகள் இடம்பெறுகின்றன. இவ்வாறான சேவைகள் காலத்தின் தேவை. நாம் இவ்வாறான வழிபாடுகளை மேற்கொள்வதால் எமக்கு மன அமைதி பெருகும்.

வடக்கு மாகாணத்தை நாங்கள் பிரித்துப் பார்ப்பதே கிடையாது. அந்த வகையில் பகவான் ஸ்ரீ சத்திய சாயி பாபாவிற்கு யாழ்ப்பாணத்தில் விழா இடம்பெறுவதைப் பார்த்து நான் ஆச்சரியப்படவில்லை. எப்பொழுதும் இவ்வாறான விழாக்கள் இங்கு இடம்பெற்றுக் கொண்டுதானிருக்கின்றன.

நாங்கள் வாழ்க்கையில் நிம்மதியாகவிருக்க வேண்டுமானால் சந்தோசமாகவுமிருக்க வேண்டும். சிலர் எப்போதும் கவலையுடனும், சிலர் எப்போதும் சந்தோஷத்துடனும் காணப்படுவார்கள். சந்தோஷத்தை நாம் விலை கொடுத்து வாங்க முடியாது. சந்தோஷம் எமது மனதுக்குள் தானிருக்கிறது.

ஓர் ஊரிலே ஒரு பெரிய பணக்காரர் இருந்தார். அவரிடமில்லாத பொருட்களே கிடையாது. ஆனால்,சந்தோஷம் மட்டும் கிடையாது. சந்தோஷமில்லாத காரணத்தால் தன்னிடமுள்ள அனைத்துப் பொருட்களையும் யாரிடமாவது வழங்கி விட்டுத் துறவியாக மாறுவதற்கு எண்ணினார்.

வீட்டிலுள்ள தங்கம், பணம் அனைத்தையும் மூட்டையிலே கட்டிக் கொண்டு தெருவிலே போய்க் கொண்டிருந்தார். இவ்வாறு சென்று கொண்டிருக்கும் போது எதிர்ப்புறமாக ஊரிலுள்ள பூசாரி வந்து கொண்டிருந்தார். அப்போது அந்தப் பூசாரியார் பணக்காரனை நோக்கி ஐயா, நீங்கள் இவ்வளவு மூட்டைகளையும் சுமந்து கொண்டு எங்கே செல்கிறீர்கள்? எனக் கேட்டார். அதற்கு அந்தப் பணக்காரர் சுவாமிகள் இந்த ஊரிலேயே நான் தான் பணக்காரர் என்பது உங்களுக்குத் தெரியும்.

என்னிடம் பணம், பொருளெல்லாம் இருக்கிறது. ஆனால்,இரவானால் நிம்மதியாக உறங்க முடியவில்லை என்று கூறுகிறார். இதனால் நான் துறவியாக ஆகலாம் என யோசிக்கிறேன் எனக் கூறிக் கொண்டிருக்கும் போதே அவரது வேட்டி அவிழ்கிறது.

அப்போது பணக்காரன் பூசாரியைப் பார்த்து ஐயா, இந்த மூட்டையை வைத்திருங்கள். நான் வேட்டியை இறுகக் கட்டிக் கொள்கிறேன் என்று கூறுகிறார். அந்த மூட்டையைப் பெற்றுக் கொண்டவுடனேயே அதனை எடுத்துக் கொண்டு ஊர்ப் பூசாரி ஓடத் தொடங்குகிறார். அவ்வாறு அவர் ஓடுவதைக் கண்ணுற்ற பணக்காரருக்கு கோபமும், பயமும் ஒரு சேர உருவாகிறது.

நாங்கள் எப்படியெல்லாம் அவனை நம்பினோம். என்னை ஏமாற்றி விட்டானே! என நினைத்தவாறு விரட்டிச் செல்கிறார். அது ஒரு சிறிய கிராமம் என்பதால் எங்கே விரட்ட ஆரம்பித்தாரோ அதேயிடத்தில் மீண்டும் இருவரும் வந்து நிற்கிறார்கள். இருவரும் பெரு மூச்சு விடுகிறார்கள்.

இந்தச் சமயத்தில் பூசாரி பணக்காரனிடம் மீண்டும் மூட்டையைக் கொடுக்கிறார். மூட்டையைத் திருப்பிக் கொடுத்த பின்னர் பணக்காரனிற்குச் சந்தோசம். அப்போது ஐயா, இப்போது நீங்கள் சந்தோசமாகவிருக்கிறீர்களா? எனப் பணக்காரனை நோக்கிப் பூசாரி வினாவினார்.

அப்போது அந்தப் பணக்காரன் ஆம். நான் இப்போது சந்தோசமாகவிருக்கிறேன். ஒரு வேளை நீ என்னை ஏமாற்றி விட்டு இந்த மூட்டையையும் கொண்டு செல்வாய் என நினைத்தேன் என்று கூறுகிறார். அதற்கு அந்தப் பூசாரி முதலிலேயே இது உங்கள் செல்வம் தான். ஆனால், சந்தோசமாகவில்லை எனக் கூறினீர்கள்.

ஆனால், தற்போதும் இது உங்கள் செல்வம் தான். இப்போது மாத்திரம் உங்களால் எவ்வாறு சந்தோசமாகவிருக்க முடிகிறது? எனக் கேட்டார்.

இது ஒரு சிறிய சம்பவமாகவிருந்த போதும் இவ்வாறான கதைகளுக்குள் எவ்வளவு அர்த்தமிருக்கிறது.

எனது சட்டைப் பையில் ஆயிரம் ரூபா பணமிருந்தால் எனக்கு நிம்மதியிருக்காது. அதனை எப்போது தான் செலவழிப்போம் எனத் தான் சிந்திப்பேன்.

அந்தப் பணம் ஊடாக யாருக்காவது உதவி புரிய வேண்டும் அல்லது செலவு செய்திட வேண்டும் என்று தான் சிந்திப்பேன். அடுத்தவருக்கு உதவி புரிவது எமக்குச் சந்தோஷத்தையும், நிம்மதியையும் தருகிறது என்றார்.

இதேவேளை, இலங்கையில் தமிழர்கள் அனைத்து இடங்களிலுமிருக்கிறார்கள். கிழக்கு மாகாணம், வடக்கு மாகாணம், மலையகம் மாத்திரமல்லாமல் கொழும்பிலும் பல தமிழர்கள் வசிக்கிறார்கள்.

தமிழ்நாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்கள் தொடர்பில் பேசினால் அதிக பட்சம் அது யாழ்ப்பாணத் தமிழர்கள் பற்றியதாகவேயிருக்கும். இந்த மண்ணிற்கு வருகை தந்த பின்னர் தான் தமிழ்நாட்டு மக்களுக்கு ஏன் அவ்வாறான பற்று, பாசம், அக்கறை காணப்படுகிறது என்பது புலப்படுகிறது என்றும் குறிப்பிட்டார்.

 

http://www.tamilwin.com/community/01/143790?ref=home-yesterday-popular

Yes speaking, சிரிப்பு (Vadivelu) .. என்னுடைய முரட்டுத்தனத்தையும் போர்க்குனத்தையும் பார்த்து எதிர்காலத்தில அந்தபிஞ்சுகள் பூரா வன்முறையில் இறங்கீடக்கூடது என்பதற்காக, ஓ தூய தமிழு ...

 

 

https://www.facebook.com/permalink.php?story_fbid=1476207945752398&id=1161445707228625

சொல்லுங்கள் இதில் யார் உண்மையான மகாத்மா?

மண்ணின் விடுதலைக்காக போராடி உயிர் துறந்த தியாக தீபம் திலீபனா?

இல்லை இந்திய விடுதலை போராட்ட சக்திகளை காட்டி கொடுத்த காந்தியா?

எங்கள் மண்ணில் காந்தி சிலை வைக்க முதலில் காந்தி ஈழத்திற்கு என்ன செய்தார்?

எங்கள் மண்ணின் விடுதலைக்காக போராடிய மண்ணின் வீரர்களின் கல்லறைகள் தகர்க்கப்பட்ட மண்ணில் காந்திக்கு என்ன வேலை?

வெள்ளையரை எதிர்த்து நீராகாரம் அருந்தி போராடிய காந்தி அகிம்சைக்கு பெயர் கூறும் மகாத்மா என்றால் இந்திய கொள்ளையரை எதிர்த்து நீராகாரம் கூட அருந்தாமல் 12 நாட்கள் நல்லை நகர் வீதியில் அணு அணுவாக உயிர் அள்ளி கொடுத்தானே எங்கள் தியாக தீபம் திலீபன் அவனை என்ன என்று கூறி அழைப்பீர்கள்?

எமக்கு தெரிந்து அகிம்சை மொழி பாரத தேசத்திற்கு புரியாது என்ற உண்மையை உலகுக்கு எடுத்து சொல்ல தமது இனிய உயிர் கொடுத்த திலீபன், அன்னை பூபதி போன்றோரே உண்மையான மகாத்மாக்கள்.

அவர்களுக்கு எங்கள் மண்ணில் சிலை வைக்க வேண்டிய இடத்தில், மண்ணுக்காக விடுதலையான ஆயிரம் ஆயிரம் போராளிகளுக்கு வைத்த கல்லறைகளை கட்டி எழுப்பாத இடத்தில் புத்தருக்கும் இடம் இல்லை. காந்திக்கும் இடம் இல்லை.

முடிந்தால் எங்கள் போராளிகளுக்கு முதலில் சிலை வைக்கட்டும். அதை விடுத்து இந்திய விடுதலை போராட்டத்தில் புரட்சிகர சக்திகளை காட்டி கொடுத்தவர் என்ற குற்றச்ச்ச்சாட்டை கொண்ட காந்தி சிலை எங்கள் மண்ணில் நிறுவுவதும் இந்திய துணை தூதரகம் அமைத்து கொட்டமடிப்பதும் இந்திய ஆக்கிரமிப்புகள் செய்து எம் நிலங்களை அபகரிப்பதும் உடன் நிறுத்த பட வேண்டும்.

Edited by Knowthyself

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.