Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யார் இந்த கனகராஜ்? ஜெயலலிதா டிரைவரின் அதிரவைக்கும் பக்கம்

Featured Replies

யார் இந்த கனகராஜ்? ஜெயலலிதா டிரைவரின் அதிரவைக்கும் பக்கம்

 
 

Kodanadu_Estate_1_12298.jpg

கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த ஜெயலலிதாவின் கார் டிரைவர் பற்றி அதிரவைக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமாக நீலகிரி மாவட்டத்தில் 900 ஏக்கரில் கொடநாடு எஸ்டேட் உள்ளது. இந்த எஸ்டேட்டின் நடுவில் மிகப் பிரமாண்ட அளவில் கொடநாடு பங்களா அமைந்துள்ளது. இந்த பங்களா ஜெயலலிதா அவ்வபோது ஓய்வெடுக்கும் இடமாக இருந்து வந்தது. ஜெயலலிதா இறந்த பிறகு இந்த பங்களாவை இனி யாருக்கு சேர போகிறது. என்று மக்களின் அங்கலாய்ப்பாக இருந்து வந்த நிலையில் திடீரென கடந்த 24ம் தேதி கொடநாடு பங்களாவில் பணிபுரிந்து கொண்டிருந்த காவலாளி ஓம்பகதூர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். மற்றொரு காவலாளி கிருஷ்ணபகதூரை தாக்கிவிட்டு எஸ்டேட்டில் உள்ள பங்களாவுக்குள் புகுந்த மர்ம நபர்கள் தங்கம், வைர நகைகள், பணம் மற்றும் ஆவணங்களை கொள்ளையடித்து சென்றார்கள். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

இதையடுத்து, நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முரளிரம்பா தலைமையிலான போலீஸார் கொடநாடு பங்களாவுக்கு சென்று விசாரணை நடத்தினர். பிறகு இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. பல இடங்களில் ஆய்வுகளை மேற்கொண்டனர். இந்த ஆய்வின் கொடநாடு பங்களாவின் காவலாளி ஓம்பகதூர் கொலை வழக்கில் முக்கிய நபராக தனிப்படை போலீஸாரால் சந்தேகிக்கப்பட்டவர் போயஸ்கார்டன் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ். இந்நிலையில் இந்த கார் டிரைவர் கனகராஜ் நேற்றிரவு 8.30 மணிக்கு ஆத்தூரை அடுத்த சந்தனகிரி தேசிய நெடுஞ்சாலையில் எதிரே வந்த இனோவா கார் மோதி உயிரிழந்தார்.

யார் இந்த கனகராஜ்

கனகராஜின் சொந்த ஊர் எடப்பாடி அருகே உள்ள சித்திரம்பாளையம். இவரது அண்ணன் தனபால் அ.தி.மு.க.வில் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைதலைவராக இருந்தவர். பிறகு பதவி நீக்கம் செய்யப்பட்டார். இவர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பங்காளி முறையை சேர்ந்த நெருங்கிய உறவினர்கள். முதல்வர் எடப்பாடி பழனிசாமி மூலமாக கனகராஜ் போயஸ்கார்டனில் டிரைவர் வேலைக்கு சென்றார். போயஸ்கார்டனில் மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு சசிகலாவின் தனிப்பட்ட கார் டிரைவராக ஐந்தாண்டுகள் பணியாற்றினார். பிறகு போயஸ்கார்டனில் இருந்து வெளியே வந்துவிட்டார். இந்நிலையில் தன் சித்தி வீடு ஆத்தூரை அடுத்த சந்தனகிரி சக்திநகரில் இருக்கிறது. அந்த வீட்டில் மூன்று நாள்களாக தங்கியிருந்தார். நேற்றிரவு இருசக்கர வாகனத்தில் எடுத்துக்கொண்டு வெளியே செல்லும்போது விபத்து ஏற்பட்டது. உடனே 108 ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். தற்போது கனகராஜின் உடல் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

Kodanadu_Estate_aquested_12037.jpg

இதனிடையே, கொடநாடு காவலாளி கொலை வழக்கில் நேற்று கேரள பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் கைது செய்யப்டட்ட நிலையில் இன்று ஊட்டி துணை கண்காணிப்பாளர் முரளி ரம்பா தலைமையில் தனிப்படை கேரளா விரைந்தது. கடந்த இரண்டு நாளாக  கேரளா மாவட்டம் திருச்சூர் மற்றும் மலப்புரம் பகுதியில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதில் திருச்சூரை சேர்ந்த சதிஷ், சந்தோஷ், தீபக் என்பவர்களிடமும் மற்றும் மலப்புரத்தை சேர்ந்த நான்கு பேரிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடைபெற்று வருகிறது.

http://www.vikatan.com/news/tamilnadu/87920-shocking-facts-about-jayalalithaas-car-driver-kanagaraj.html

  • தொடங்கியவர்

 

  • தொடங்கியவர்

அடுத்தடுத்து பலி..! கொடநாடு காவலாளி கொலையில் திடீர் திருப்பங்கள்!

 

Kodanadu_Estate_14417.jpg

கொடநாடு காவலாளி கொலையில் தேடப்பட்டுவந்த சசிகலாவின் கார் டிரைவர் சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில், தப்பிச்சென்ற மற்றொரு முக்கிய நபர் சயான், கேரளாவில் விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் சயானின் மனைவி, குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட் உள்ளது. இந்த எஸ்டேட்டில் காவலாளியாகப் பணியாற்றிவந்த ஓம்பகதூர், கடந்த 24-ம் தேதி மர்ம நபர்களால் கொலைசெய்யப்பட்டார். மற்றொரு காவலாளி கிருஷ்ணபகதூர், பலமாகத் தாக்கப்பட்டார். இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. கேரளாவைச் சேர்ந்த ஒருவரைப் பிடித்து காவல்துறையினர் நேற்று விசாரணை நடத்தியுள்ளனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் தனிப்படையினர் கேரளா விரைந்தனர். திருச்சூர், மலப்புரம் பகுதியில் தனிப்படையினர் நடத்திய இரண்டு நாள் விசாரணைக்குப் பின்னர், திருச்சூரைச் சேர்ந்த சதிஷ், சந்தோஷ், தீபக் மற்றும் மலப்புரத்தைச் சேர்ந்த நான்கு பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது.

இதனிடையே, கொலை வழக்கில் தேடப்பட்டுவந்த சசிகலாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ், நேற்றிரவு இருசக்கர வாகனத்தில் சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்த சந்தனகிரி தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்த கார் மீது இருசக்கர வாகனம் மோதி கனகராஜ் உயிரிழந்தார்.

இந்த நிலையில், காவலாளி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி என சந்தேகிக்கப்பட்ட, கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த சயான் தன் குடும்பத்தினருடன் காரில் தப்பிச்செல்வதாக தனிப்படையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, சயானைப் பிடிக்க தனிப்படையினர் காரில் விரைந்தனர். அப்போது, சாலையோரத்தில் நின்றுகொண்டிருந்த லாரிமீது சயானின் கார் பயங்கரமாக மோதியது. இதில், சயானின் மனைவி வினுப்பிரியா, 5 வயதுக் குழந்தை நீத்து ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சயான் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அவர் கோவை கொண்டுசெல்லப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையைச் சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சயான், கனகராஜின் நண்பர் என்று கூறப்படுகிறது.

காவலாளி கொலை வழக்கில் தொடர்புடையவர்கள், அடுத்தடுத்து சாலை விபத்துகளைச் சந்தித்துவருவது இந்த வழக்கில் மீண்டும் திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளது.

http://www.vikatan.com/news/tamilnadu/87932-a-twist-in-kodanadu-security-guard-murder.html

  • தொடங்கியவர்

கொடநாடு எஸ்டேட் கொலை வழக்கில் 4 பேர் கைது

ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில், 4 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

kodanadu

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 24-ம் தேதி, காவலாளி ஓம்பகதூர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், முக்கிய குற்றவாளியாகக் கருதப்பட்ட கனகராஜ் விபத்தில் உயிரிழந்தார்.  மேலும், அவரின் நண்பர் சயான், மற்றொரு விபத்தில் காயமடைந்தார். இதில், அவரது மனைவி மற்றும் மகள் உயிரிழந்தனர்.

இந்த நிலையில், கொலை வழக்கில் தொடர்புடைய நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதுகுறித்து நீலகிரி எஸ்பி முரளிரம்பா கூறுகையில், 'கொலைவழக்கில் சம்பந்தப்பட்ட தீபு, சதீஷன், சந்தோஷ், உதயகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் ஜெயலலிதா, சசிகலா அவரிகளின் அறைகளை உடைத்து ஐந்து கைக் கடிகாரங்கள், ஒரு கிறிஸ்டல் பொருளைத்  திருடிச்சென்றதாகக் கூறியுள்ளனர். மேலும், ஐந்து பேர் தலைமறைவாக உள்ளனர்' எனக் கூறியுள்ளார். இதனிடையே விபத்தில் மரணமடைந்த சயானின்  மனைவி, மகளின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக திருச்சூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளது.

http://www.vikatan.com/news/tamilnadu/87985-4-arrested-over-watchmen-murder-at-kodanadu.html

  • தொடங்கியவர்
கோடநாடு கொலை வழக்கு சி.பி.ஐ., விசாரணைக்கு...மாற்றப்படுமா?

 

கோவை:கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை; ஜெ., பங்களாவில் கொள்ளை; இவ்வழக்கில் தேடப்பட்ட, மறைந்த முன்னாள் முதல்வர், ஜெ.,யின் கார் டிரைவர் சேலத்தில் மர்மச்சாவு; மற்றொரு குற்றவாளி பாலக்காட்டில் விபத்தில் சிக்கி உயிருக்கு போராட்டம் என, அடுத்தடுத்த திருப்பங்களால் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர் உயர் அதிகாரிகள்.

எனவே, மர்மங்கள் நிறைந்த இவ்வழக்கை, சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்ற, முதல்வர் பழனிசாமி உத்தரவிட வேண்டும் என, பல்வேறு தரப்பினரும் வலியுறுத்துகின்றனர்.நீலகிரி மாவட்டம், கோத்தகிரி, கோடநாடு எஸ்டேட் காவலாளி ஓம்பகதுார், 51, ஏப்., 23ம் தேதி அதிகாலை, இரு வாகனங்களில் வந்த மர்ம கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார்.

உடனிருந்த மற்றொரு காவலாளி, கிருஷ்ண பகதுாரை தாக்கி, கை, கால்களை கட்டிப்போட்டு,
எஸ்டேட்டிற்குள் நுழைந்த கும்பல், மறைந்த முன்னாள் முதல்வர், ஜெயலலிதா பயன்படுத்தி
வந்த அறைகளின் கதவுகளை உடைத்து, ஏதோ பொருட்களைக் கொள்ளை அடித்துச் சென்றது.
 

 

டிரைவர் மர்மச்சாவு


முக்கிய ஆவணங்களை தேடியே இக்கும்பல் கொடூர கொலையை நிகழ்த்தியது, போலீசார் விசாரணையில் தெரியவந்தது.குற்றவாளிகள் தப்பிய வாகனங்களின் விபரங்களை, முக்கிய சாலைகளில் பொருத்தப்பட்டு இருந்த, 'சி.சி.டி.வி.,' கேமராக்களில் பதிவான காட்சிகள் மூலம்
திரட்டிய போலீசார், கேரள மாநிலம், திருச்சூர் பகுதியைச் சேர்ந்த, சதீஷன், ஷிபு மற்றும் சந்தோஷ் ஆகியோரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

விசாரணையில், கோடநாடு எஸ்டேட் பங்களாவில், ஜெயலலிதாவின் கார் டிரைவராக சில காலம் பணியாற்றிய சேலம், இடைப்பாடியைச் சேர்ந்த கனகராஜ், 36, என்பவருக்கும், கொள்ளை
கும்பலுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.தனிப்படை போலீசார் அவரை தேடி வந்த நிலையில், சேலம், ஆத்துார் அருகே, உளுந்துார்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் பலத்த காயங்களுடன் சடலமாக அவர் கிடந்தார். இரு சக்கர வாகனத்தில் சென்ற போது, கார் மோதி உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
 

 

மற்றொருவர் குடும்பம் பலி


அதேநேரத்தில், கோடநாடு எஸ்டேட் கொலை வழக்கில், போலீசாரால் தேடப்பட்டு வந்த மற்றொரு முக்கிய குற்றவாளி, கோவையிலிருந்து பாலக்காடு செல்லும் வழியில் நடந்த சாலை விபத்தில் படுகாயமடைந்து உயிருக்கு போராடி வருகிறார். இவர், கேரள மாநிலம், திருச்சூரிலுள்ள, இரிஞ்ஞாலக்குடா பகுதியைச் சேர்ந்த, சயான், 35; கோவை, குனியமுத்துாரில்
உள்ள பேக்கரியில் பணியாற்றி வருகிறார். இவர் தன் மனைவி வினுப்பிரியா, 30, மகள் நீலு, 5,
ஆகியோருடன், கோவை யில் இருந்து நேற்று காலை, 6:00 மணி அளவில் காரில் கேரளாவுக்குச் சென்றார்.

பாலக்காடு மாவட்டம், கண்ணாடி என்ற இடத்தை கடக்க முயன்ற போது, சரக்கு லாரி மீது மோதி விபத்தில் சிக்கினார். மனைவி வினுப்பிரியா, மகள் நீலு, சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், சயான் மீட்கப்பட்டு கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

போலீசார் தன்னை தேடுவதை அறிந்து தப்ப முயன்ற போது, விபத்தில் சிக்கியிருக்கலாம் என, அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், இந்த சம்பவத்திலும் மர்மம் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை, கொள்ளை வழக்கில் தேடப்பட்டவர்களில், இரு முக்கிய நபர்கள், ஒரே நாளில் சாலை விபத்தில் சிக்கியுள்ளனர். ஒருவர் உயிரிழந்த நிலையில், மற்றொருவர் உயிருக்கு போராடுகிறார். இவரது மனைவி, மகள் பலியாகியுள்ளனர்.

இது, இவ்வழக்கை விசாரிக்கும் நீலகிரி மாவட்ட போலீசாரை அதிர்ச்சியில் தள்ளியுள்ளது. இக்கொலை வழக்கை விசாரித்தால், இன்னும் என்னென்ன நடக்குமோ என்ற அச்சத்தில் உள்ளனர் அதிகாரிகள்.
 

 

சி.பி.ஐ.,க்கு மாற்றப்படுமா?


மறைந்த முதல்வர், ஜெ.,வின் பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்களை கைப்பற்றும் முயற்சியாகவே, கோடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளை நடந்திருப்பது ஏறத்தாழ உறுதியாகி விட்டது. தற்போது, முக்கிய குற்றவாளிகள் என, சந்தேகிக்கப்படும் இரு நபர்கள் அடுத்தடுத்து விபத்தில் சிக்கியுள்ளனர்.

மருத்துவமனையில், ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த போது, சென்னையைச் சேர்ந்த கார்டனுக்கு நெருக்கமான முக்கிய நபர் ஒருவர், கோடநாடு எஸ்டேட்டிற்கு வந்து, முக்கிய ஆவணங்களை கைப்பற்றிச் சென்று விட்டதாகவும் இப்போது தகவல் வெளியாகியுள்ளது. கோடநாடு எஸ்டேட் மர்மங்களை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் எனில், கொலை, கொள்ளை வழக்கின் விசாரணையை, கோத்தகிரி போலீசாரிடம் இருந்து, சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும் என, பலரும் வலியுறுத்துகின்றனர்.

நேர்மையான நிர்வாகத்தை நடத்துவதாக கூறும் முதல்வர், பழனிசாமிக்கு, மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீது உண்மையான விசுவாசம் இருக்குமானால், இதற்கான உத்தரவை உடனடியாக பிறப்பிக்க வேண்டும் என்கின்றனர், பன்னீர்செல்வம் தரப்பினர்; இதை முதலில் செய்வாரா பழனிசாமி?
 

 

மாஜிஸ்திரேட்டிடம் 'மரண வாக்குமூலம்'


பாலக்காட்டில் நடந்த கார் விபத்தில் படுகாயமடைந்த சயான், கோவை குப்புசாமி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு தலை மற்றும் மார்பில் பலத்த காயம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. நரம்பியல் அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இவரது உயிருக்கு எந்த நேரத்திலும் ஆபத்து நேரிடலாம் என்பதால், கோடநாடு கொலை வழக்கு தொடர்பாக, மரண வாக்குமூலம் பெற போலீஸ் உயரதிகாரிகள் முடிவு செய்தனர்.இதன்படி, கோவை, ஜே.எம்.எண்.5 மாஜிஸ்திரேட் செல்வக்குமார் நேற்று காலை, மருத்துவமனைக்கு நேரில் வந்து, சயானிடம், ரகசிய வாக்குமூலம் பெற்று, பதிவு செய்தார். கோடநாடு கொலை வழக்கில் சயானின் வாக்குமூலம், முக்கிய ஆதாரமாக கருதப்படுகிறது. இதனால், கொலையில் தொடர்புடைய புள்ளிகள் கலக்கத்தில் உள்ளனர்.
 

 

மனைவி கொலையா? டாக்டர்கள் கருத்து


கோடநாடு எஸ்டேட் கொலையைத் தொடர்ந்து நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் மர்மம் நிறைந்ததாகவே உள்ளன. இவ்வழக்கில் தேடப்பட்ட, கேரளாவைச் சேர்ந்த சயான் என்பவர், பாலக்காடு மாவட்டம், கண்ணாடி என்ற இடத்தில் நடந்த கார் விபத்தில் படுகாயமடைந்து, கோவையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.இவரது மனைவி வினுப்பிரியா, ஐந்து வயது மகள் நீலு ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இருவரது உடல்களும் பிரேத பரிசோதனைக்காக திருச்சூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளன. வினுப்பிரியாவின் கழுத்தில் ஆழமான கத்திக்குத்து போன்ற காயம் உள்ளது.

விபத்தின்போது, இடிபாடுகளில் சிக்கியதால் இந்த காயம் ஏற்பட்டதா அல்லது வேறு காரணங்களால் இறந்தாரா என்பதும், பிரேத பரிசோதனையின் முடிவில்தான் தெரியவரும் என, டாக்டர்கள் தெரிவித்தனர்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1761461

  • தொடங்கியவர்
ஜெ., டிரைவர் மரணம் விபத்தா, கொலையா
விசாரணையில் திரை விலகுமா
 
 
 

முன்னாள் முதல்வர் ஜெ.,யின் கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலையில், தேடப்பட்டு வந்த எஸ்டேட் டிரைவர் நேற்று, ஆத்துாரில் நடந்த விபத்தில் இறந்தார். இது, பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. அவர் விபத்தில் இறந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tamil_News_large_176147920170430003712_318_219.jpg

சேலம் மாவட்டம், இடைப்பாடி அருகே, சமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் கனகராஜ், 36. இவர், 2009ல், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு கார் டிரைவராக கொடாநாடு எஸ்டேட்டில் பணி யாற்றி வந்தார்.கடந்த, 2012ல், அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். 2014ல், வட பழனியை சேர்ந்த, கலைவாணி, 23, என்பவரை காதல் திருமணம் செய்தார். இதில், ஒன்றை வயதில் பெண் குழந்தை உள்ளது.

அதன் பிறகு சொந்தமாக கார் வாங்கிய இவர், வாடகைக்கு கார் ஓட்டி வந்துள்ளார்.இரு தினங்களுக்கு முன், இடைப்பாடிக்கு மனைவி, குழந்தைகளுடன் வந்தார். நேற்று முன்தினம், மதியம், 2:00 மணிக்கு, 'இண்டிகா' காரில், ஆத்துாருக்கு, சித்தப்பா மகளுக்கு பிறந்த

குழந்தையை பார்க்க வந்தார். மாலை, 6:00 மணிக்கு, நண்பர் ரமேஷ் என்பவருடன், காரில் காட்டுக்கோட்டை தாபா ஓட்டலில் சாப்பிட்டுள்ள னர். இரவு, 9:00 மணியளவில், ரமேஷின் நண்பர் விஜி என்பவர் வைத்திருந்த, 'ஹீரோ' பைக்கில், ஆத்துார் புறவழிச்சாலை வழியாக சென்றார்.

ஆத்துார், சந்தனகிரி புறவழிச்சாலை பிரிவு சாலையை கடக்க முயன்றபோது, பெங்களூருவில் இருந்து, பெரம்பலுார் நோக்கி வந்த, 'போர்டு - பிகோ' கார், பைக் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்த கனகராஜை, ஆத்துார் அரசுமருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இறந்த கனகராஜ், ஜெயலலிதா தோட்டத்தில் கார் டிரைவராக இருந்தது தெரியவந்ததால், 'மேலிடத்துக்கு' போலீசார் தகவல் அளித்தனர். விபத்து குறித்து, ஆத்துார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.இவரது சாவில் மர்மம் ஏதும் இருக்குமோ என்ற கோணத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இறந்து, 17 மணி நேரத்துக்கு மேலாகியும், போலீசார் பிரேத பரிசோதனை செய்வதற்கு, மருத்துவமனைக்கு கடிதம் வழங்காததால், தாமதம் செய்வதற்கான காரணம் கேட்டு, கனகராஜியின் சகோதரர் தனபால் உள்ளிட்ட உறவினர்கள் போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர்.
 

கார் டிரைவர் கைது:


பெரம்பலுாரை சேர்ந்த பிச்சைமணியின் மனைவி மல்லிகா, 40, மாமியார், இரு குழந்தைகளுடன், பெங்களூருவில் இருந்து, 'போர்டு - பிகோ' காரில் பெரம்பலுாருக்கு வந்தனர். கார் ஓட்டி வந்த,

 

தம்மம்பட்டி டிரைவர் ரபீக், 27, பைக் மீது மோதியதும் காரினுள் இருந்த ஏர்பேக் வெளி யேறியதால், காரில் வந்தவர்கள் உயிர் தப்பினர். விபத்து வழக்கில், கார் டிரைவர் ரபீக் என்பவரை, போலீசார் கைது செய்து, விசாரணை நடத்துகின்றனர்.

கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கை விசாரிக்கும் தனிப்படை போலீசார், விபத்தில் இறந்த கனகராஜ், தேடப்படும் குற்றவாளியா என உறுதிப்படுத்த வந்தனர்.
அவர்கள், இறந்த கனகராஜின் உடலில், ரத்த காயம் விபத்தில் ஏற்பட்டதுதானா அல்லது வேறு ஏதாவது காயம் உள்ளதா என ஆய்வு செய்தனர்.

கோடநாடு எஸ்டேட்டில் வேலை செய்த கனகராஜின் நண்பர் சயான் என்பவரும், நேற்று கேரள மாநிலம், பாலக்காடு அருகே, நடந்த விபத்தில் காயமடைந்தார். இதனால், ஆத் துாரில் தனிப்படை போலீசார்கள் முகாமிட்டு, தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
 

மர்ம கும்பல் விரட்டியதா


கோடநாடு காவலாளி கொலை வழக்கில் தொடர்புடைய கனகராஜ், நேற்று, நீதிமன்றத் தில் சரணடைய இருந்ததாக கூறப்படுகிறது. அதற்காக அவர் பைக்கில் புறப்பட்டு சென்று
கொண்டிருந்த போது, அதையறிந்த மர்ம கும்பல், கனகராஜியின் பைக்கை விரட்டிச்
சென்றுள்ளது. அப்போது அவர் விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே மற்றொரு தகவலும், காட்டு தீ போல் பரவி வருகிறது... கனகராஜை கொலை செய்த மர்ம கும்பல், அவரது உடலை காரில் கொண்டு வந்து, வீசி விட்டு, விபத்து ஏற்படுத்தி யது போல் நாடகம் ஆடுவதாக கூறப்படுகிறது.

- நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1761479

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு உண்மையை/கொலையை மறைக்க ஆயிரம் கொலைகளும் செய்வார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.