Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அத்துமீறி உள்நுழைந்த வெளிநாட்டு படகை கைப்பற்றியது கடற்படை

Featured Replies

அத்துமீறி உள்நுழைந்த வெளிநாட்டு படகை கைப்பற்றியது கடற்படை

 

 

காங்கேசன்துறை கடற்பகுதியில் அத்துமீறி உள்நுழைந்த வெளிநாட்டு படகொன்றை இன்று காலை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த படகு காங்கேசன்துறையிலிருந்து 12 கடல் மைல் தூரத்தில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளது.

 

மேலும்,குறித்த படகில் இந்தியவைச் சேர்ந்த 2 பேர், மியன்மாரைச் சேர்ந்த 14 பேர் மற்றும் 16 சிறுவர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

download.jpg

 

Tags

http://www.virakesari.lk/article/19576

  • தொடங்கியவர்

மியான்மர் அகதிகள் உள்பட 30 வெளிநாட்டவர்களுடன் சென்ற இந்திய படகை பறிமுதல் செய்த இலங்கை கடற்படை

மியான்மர் அகதிகள் உள்பட 30 வெளிநாட்டவர்களுடன் சென்ற இந்திய படகை இலங்கை கடற்படை வீரர்கள் வழிமறித்து பறிமுதல் செய்தனர்.

 
மியான்மர் அகதிகள் உள்பட 30 வெளிநாட்டவர்களுடன் சென்ற இந்திய படகை பறிமுதல் செய்த இலங்கை கடற்படை
 
கொழும்பு:

இலங்கை கடற்படை வீரர்கள் வடக்கு ஜாஃப்னா பெனின்சுலாவில் உள்ள காங்கேசந்துரை கடற்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சர்வதேச கடல் எல்லைப்பகுதியில் இந்தியாவைச் சேர்ந்த படகு ஒன்று சென்று கொண்டிருப்பதாக தெரியவந்தது.

அந்த படகில் ஏராளமானோர் பயணம் செய்வது தெரியவந்தது. உடனே இலங்கை கடற்படையினர் அந்த படகை பறிமுதல் செய்தனர். அப்போது மியான்மர் நாட்டைச் சேர்ந்த 30 பேர் உள்பட 32 வெளிநாட்டவர்கள் இருந்ததை கண்டு பிடித்தனர். அவர்களை கைது செய்ததுடன், படகையும் பறிமுதல் செய்தனர்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மியான்மரில் நடைபெற்ற மோதல் காரணமாக இந்தியாவிற்குள் அகதிகளாக வந்தவர்களை, படகில் ஏற்றிச் சென்றதாக கூறப்படுகிறது.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/04/30203225/1082873/Sri-Lanka-nabs-Indian-fishing-vessel-with-Myanmar.vpf

  • தொடங்கியவர்

சட்டவிரோதமாக இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசித்த 32 வெளிநாட்டவர்களுக்கு விளக்கமறியல்!

 

 

சட்டவிரோதமாக இலங்கைக் கடற்பரப்பிற்குள் பிரவேசித்த வெளிநாட்டவர்களை நாளைய (02) தினம் வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்ற பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளதாக போலிஸார் தெரிவித்துள்ளனர்.

unnamed__1_.jpg

காங்கேசன்துறை கடற்பரப்பில்  நேற்று (30) மதியம்  சட்டவிரோதமாக நுழைந்த 32 வெளிநாட்டுப் பிரஜைகளில், மியன்மார் பிரஜைகள் 30 பேரும் 2 இந்தியர்களும் உள்ளடங்குவதாக கடற்படையினர் அறிவித்துள்ளனர்.

குறித்த படகு காங்கேசன்துறையிலிருந்து 12 கடல் மைல் தூரத்தில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளது. சிறிய படகில் மிகவும் ஆபத்தான முறையில் இவர்கள் பயணித்துள்ளதாகவும் கைது செய்யப்பட்டவர்களில் 9 சிறுவர்கள் காணப்படுவதாகவும் கடற்படையினர் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

unnamed__3_.jpg

இவர்கள் இலங்கைக் கடற்பரப்பினூடாக வேறுநாடுகளுக்கு சட்டவிரோதமாகத் தப்பிச் செல்ல முயற்சித்திருக்கலாம் எனவும் இவர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இலங்கைக் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

unnamed__4_.jpg

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் தெல்லிப்பளை வைத்தியாசலையில் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். வைத்தியசாலைக்கு விஜயம் செய்து பார்வையிட்ட மல்லாகம் பதில் நீதவான் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் நாளையதினம் வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக போலிஸார் தெரிவித்துள்ளனர்.

unnamed__5_.jpg

unnamed__6_.jpg

unnamed__7_.jpg

unnamed.jpg

 

Tags

http://www.virakesari.lk/article/19593

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.