Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஓட்டுக்கு பணம் கொடுத்தால் 5 ஆண்டு போட்டியிட தடை கமிஷன் அதிரடி பரிந்துரை

Featured Replies

ஓட்டுக்கு பணம் கொடுத்தால் 5 ஆண்டு
போட்டியிட தடை கமிஷன் அதிரடி பரிந்துரை
 
 
 

புதுடில்லி: 'சென்னை, ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் அனுபவத்தின் அடிப்படையில், 'ஓட்டு போடுவதற்காக, வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் வேட்பாளர், ஐந்து ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும்' என, மத்திய அரசுக்கு, தேர்தல் கமிஷன் பரிந்துரை செய்துள்ளது.

 

Tamil_News_large_176191620170501001507_318_219.jpg

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து, ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு, ஏப்., 12ல் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது.
 

வாக்காளர்களுக்கு பணம்


அ.தி.மு.க., இரண்டாக பிரிந்துள்ள நிலையில், இரட்டை இலை சின்னமும் கிடைக்காததால், சசிகலாவின் அக்கா மகன் தினகரனும், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணி யின் சார்பில் மதுசூதனனும் போட்டி யிட்டனர். இந்த தேர்தலில், தினகரன் அணி சார்பில்,

வாக்காளர்களுக்கு, 4,000 ரூபாய் வரை வழங்கப் பட்டதாக புகார்கள் எழுந்தன.
 

ஒத்திவைப்பு:


மேலும், பல்வேறு புதிய வழிகளிலும், வாக்காளர் களுக்கு பணம் கொடுத்தனர். அதைத் தொடர்ந்து, இடைத் தேர்தலை, தேர்தல் கமிஷன் ஒத்திவைத் துள்ளது.இந்த நிலையில், இது போல் ஓட்டுக்கு பணம் தருவதை தடுப்பது குறித்து, மத்திய சட்ட அமைச்சகத்துக்கு, தேர்தல் கமிஷன் சார்பில் கடிதம் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து, தேர்தல் கமிஷன் அதிகாரிகள் கூறியதாவது:

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலின்போது, வாக்காளர் களுக்கு பல்வேறு வழிகளில் பணம் கொடுத்துள்ள னர். சில இடங்களில், 'மொபைல் ரீசார்ஜ்' செய்வது, டோக்கன் வழங்குவது என, ரொக்கமாகவும், பரிசு பொருளாகவும் வழங்கியுள்ளனர்.மக்கள் பிரதி நிதித்துவ சட்டத்தின் கீழ், வன்முறைகள் நடந்தால், குறிப்பிட்ட தொகுதியில் தேர்தலை நிறுத்தும் அதிகாரம், தேர்தல் கமிஷனுக்கு உள்ளது.

அதே நேரத்தில், வாக்காளர்களுக்கு பணம்கொடுக் கப்பட்டால் அங்கு, தேர்தலை நிறுத்த அதிகாரம் இல்லை. அரசியலமைப்பு சட்டப் பிரிவுகளை பயன்படுத்தியே தேர்தலை நிறுத்த முடியும். இந்த சட்டப் பிரிவை அதிகம் பயன்படுத்த தேர்தல் கமிஷன் விரும்பவில்லை.ஓட்டு போட பணம் கொடுக்கப்பட்டது நிரூபிக்கப்பட்டால், உடனே தேர்தலை நிறுத்த, மக்கள் பிரதிநிதித்துவச்

 

சட்டத்தில் திருத்தம்செய்யப்பட வேண்டும் என, மத்திய அரசை ஏற்கனவே வலியுறுத்தி உள்ளோம்.

தற்போது, ஆர்.கே.நகர் தொகுதி அனுபவத்தின் அடிப்படையில், இவ்வாறு பணம் கொடுக்கும் ஒரு சிலரால், மற்ற வேட்பாளர்கள் பாதிக்கப் படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அதன்படி, பணம் கொடுக்கும் வேட்பாளர் மீது, கோர்ட்டில் வழக்கு பதிவு செய்த உடனேயே, குறைந்தபட்சம், ஐந்து ஆண்டுகள் அவர் எந்தத் தேர்தலிலும் போட்டியிட தடை விதிக்க வேண்டும்.

இதற்காக சட்டத் திருத்தம் செய்யபட வேண்டு மென வலியுறுத்தி, மத்திய சட்ட அமைச்சகத் துக்கு,தேர்தல் கமிஷன் சார்பில் கடிதம் அனுப்ப உள்ளோம்.என அதிகாரிகள் தெரிவித்தனர்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1761916

  • கருத்துக்கள உறவுகள்

எப்படியாவது பிஜேபி தமிழ்நாட்டில் வந்து விடனும் என்று ஒத்தைக்காலில் நிக்குது அப்படியே ஜாதி அடிப்படையாக கொண்ட கட்சிகளையும் தடை பண்ணனும் அப்பத்தான் தமிழன் தமிழ் நாட்டை ஆளுவான் ஆனால் அதை செய்ய மாட்டங்கள் தமிழர்களை பல பிரிவுகளா பிரித்து வைக்கணும் என்பதிலே குறியா இருக்கிறாங்கள்எல்லாரும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.