Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளிடம் ஆயுதப் பயிற்சி பெற்ற சிங்கள இளைஞர்கள் கைது

Featured Replies

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள் எனச் சந்தேகிக்கப்பட்ட இரண்டு சிங்கள இளைஞர்களை இரத்தினபுரி பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்துள்ளனர். புலிகள் இயக்கத்துடன் தொடர்புகளை உடையவர்கள் எனவும் கிளிநொச்சியில் புலிகள் இயக்கத்தின் யுத்தப் பயிற்சி முகாமில் தங்கியிருந்து ஆயுதப் பயிற்சிகளைப் பெற்றவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்ட சந்தேக நபர்களின் பேரிலேயே மேற்படி இரண்டு சிங்கள இளைஞர்களையும் இரத்தினபுரி பிரதேசத்தில் உடகறவிற்ற பகுதியில் வைத்து இரத்தினபுரி பொலிஸார் பிடித்துள்ளனர்.

அவர்கள் இருவரும் உடகறவிற்ற பகுதியில் ஒரு வீட்டில் ஒளிந்திருந்ததாகவும் பொலிஸாரின் தேடுதலின் போது அகப்பட்டுக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட இந்த இரண்டு சிங்கள இளைஞர்களிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளிலிருந்து அவர்கள் பயங்கரவாதச் செயல்களையும் மேற்கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

மேலும் இவர்கள் குறித்த உடகறவிற்ற பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல எனவும் வேறு பகுதியிலிருந்து வந்தே அங்கு ஒளிந்திருப்பதாகவும் விசாரணைகளின் போது தகவல் வெளியாகியது.

இவ்வாறே அண்மையில் திவுலப்பிட்டிய பிரதேசத்தில் வைத்து புலிகள் இயக்கத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் என்ற தவகல்களின் பேரில் சில சிங்கள இளைஞர்கள் கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் அவர்களின் கோஷ்டியைச் சேர்ந்த இரண்டு சிங்கள இளைஞர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டதாகவும் அவர்களே பொலிஸாரிடமிருந்து தப்பவதற்காக அந்த பிரதேசத்தை விட்டு உடகறவிற்ற பகுதிக்கு வந்து ஒளிந்து கொண்டிருந்த போது இவ்வாறு அகப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு இருந்த சிங்கள இளைஞர்கள் ஒளிந்திருப்பது பற்றிய தகவல் இரத்தினபுரி பொலிஸ் பொதுஜனத் தொடர்பு உத்தியோகத்தர் கொலின் ஆரியரத்னவுக்கு கிடைத்ததைத் தொடர்ந்தே அவர்களைக் கைது செய்ய முடிந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இவர்கள் இருவரும் தாம் உடகளவிற்ற பிரதேச மக்களிடமிருந்து நாட்டியம், நாடகக்கலை சம்பந்தமான தகவல்களைப் பெறவும் பிரதிகளைத் தயார் செய்யவுமே கொழும்பிலிருந்து அந்தப் பிரதேசத்துக்கு வந்ததாகத் தெரிவித்துள்ளனர்.

ஆயினும், உரிய விசாரணைகளின் பின்னர் அவர்கள் கிளிநொச்சியில் புலிகள் இயக்க முகாம் ஒன்றில் குண்டுகளை வெடிக்க வைத்தல், செயலிழக்கச் செய்தல், தயாரித்தல் சம்பந்தப்பட்ட அனைத்து யுத்தப் பயிற்சிகளையும் பெற்றுள்ளதாகத் தகவல் தெரிவித்துள்ளதுடன் கொழும்பு நகரில் நடத்தப்பட்ட சில பயங்கரவாதக் குண்டு வெடிப்புத் தாக்குதல்களுடனும் தொடர்புடையவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

மேலும், புலிகள் இயக்கத்துடன் சம்பந்தப்பட்ட அரசியல் சார்ந்த விடுதலை இயக்கம் ஒன்றை அமைக்கவும் மேற்படி இரண்டு சிங்கள இளைஞர்களும் இரகசியமான முறையில் செயற்பட்டுள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறான புலிகளுடன் சம்பந்தப்பட்ட முக்கிய பல தகவல்கள் பெறப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக கொழும்பு பயங்கரவாத தடுப்புப் பிரிவு உத்தியோகத்தர்களிடம் மேற்படி இரண்டு சிங்கள இளைஞர்களையும் ஒப்படைத்துள்ளதாக இரத்தினபுரி சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஜயந்த குலதிலக தெரிவித்துள்ளார்.

-திவயின: 16.02.2007

http://www.thinakkural.com/news/2007/2/20/...s_page21741.htm

புலிகள் இயக்கத்துடன் சம்பந்தப்பட்ட அரசியல் சார்ந்த விடுதலை இயக்கம் ஒன்றை அமைக்கவும் மேற்படி இரண்டு சிங்கள இளைஞர்களும் இரகசியமான முறையில் செயற்பட்டுள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

-திவயின: 16.02.2007

அட நல்ல விசயங்கள் எல்லாம் சொல்லப்படுகிது. செய்தியை ஒட்டிய ஈழவன் வாய்க்குள் சர்க்கரையைக் கரைச்சு ஊத்தவேணும்!

யாழ் கள பெண்கள் வந்து ஈழவனுக்கு திருஷ்டி கழித்து ஆரார்த்தி எடுத்து விடுங்கோ!

உளுளூளூளூளூளூளூளூளூளூளூளூ..!!!

Edited by மாப்பிளை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.