Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒப்பந்தத்தை ஏற்கவும் தயக்கம் கிழித்தெறியவும் தயக்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக் கும் இடையில் யுத்த நிறுத்தத்துக்கு வழி செய்த புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு நாளையுடன் ஐந்து வருடங்கள் பூர்த்தியாகின்றன. தென்னிலங்கையில் இந்த உடன்படிக்கை பெரும் சர்ச்சைக்குரிய விடயமாக மாற்றப்பட்டிருக்கின்றது. உடன்படிக்கைக்கு ஐந்து ஆண்டுகள் பூர்த்தியாகு வதற்கு முன்னர் அதைக் கிழித்தெறிந்து விட்டு அதி லிருந்து அரசு எப்படியேனும் விலகிக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை தெற்கில் வலுத்து வருகின்றது.

பௌத்த சிங்களப் பேரினவாதப் போக்குடைய ஜாதிக ஹெல உறுமய, ஜே .வி .பி., தேசிய பிக்குகள் முன்னணி போன்றவை இந்தக் கோரிக்கையை முன்வைத்து பல போராட்டங்களை ஏற்கனவே முழு மூச்சில் ஆரம்பித்துவிட்டன. அவற்றுக்குத் தலை சாய்ப்பது போல நாட்டின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியும் கருத்துக்களைப் பிரதிபலிக்கத் தொடங்கிவிட்டார்.

புலிகளோடு இலங்கை அரசு இத்தகைய யுத்த நிறுத்த உடன்படிக்கை ஒன்றைச் செய்துகொண்டமை வரலாற்றுத்தவறு என்ற சாரப்பட அவர் கருத்து வெளியிட்டு வருகின்றார்.

போர் ஓய்வுக்கு வழிசெய்த இந்தப் புரிந்துணர்வு உடன்படிக்கை தொடர்பாக விநோதமான ஒரு விட யம் கவனிக்கத்தக்கது.

இந்த ஒப்பந்தத்தில் ஒரு தரப்பில் தமிழர் பக் கத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் கைச்சாத்திட்டுள்ளார். மறுதரப்பில் ஒப்பந்த வேளையில் 2002 முற்பகுதியில் பிரதம ராகவிருந்த ரணில் விக்கிரமசிங்க ஒப்பமிட்டார்.

இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு ஐந்து ஆண்டுகள் பூர்த்தியான நிலையில் முழு அள வில் யுத்த நிறுத்தம் ஏற்படவில்லையாயினும், பெரும் போருக்குத் தற்காலிகமாகவேனும் முடிவுகட்டப் பட்ட நிலையில் இன்றோ, நாளையோ முற்றாக முறியலாம் என்ற ஆபத்து ஏது நிலையோடு "நித்திய கண்டம்; பூரண ஆயுசு! என்ற தடுமாற்ற ஸ்திர மின்மையோடு அது இன்றுவரை பெயருக்கேனும் நின்று நீடிக்கின்றது.

இந்த ஒப்பந்தம் தவறானது என்று எந்தச் சந் தர்ப்பத்திலும் தமிழர் தரப்பிலிருந்து கருத்து வரவில்லை. ஒப்பந்தம் முழு அளவில் நடைமுறைப்படுத்தப் படவில்லை என்ற அதிருப்தியே விசனமே ஆதங் கமே தமிழர் தரப்பினால் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு, சுட்டிக்காட்டப்பட்டு வந்திருக்கின்றது.

ஆனால் சிங்களத் தரப்பில் தென்னிலங் கைப் பக்கத்தில் அதுவல்ல நிலைமை. இந்த ஒப் பந்தத்தில் அச்சமயம் கையெழுத்திட்டவர் இலங்கை நாட்டின் பிரதமர் என்றாலும், போர் மற்றும் சமாதானம் பற்றிய விடயங்களையும் படை நடவடிக்கைகள், இராணுவச் செயற்பாடுகள் போன்ற பாதுகாப்பு அம் சங்களையும் கையாளும் பொறுப்பும் அதிகாரமும் இலங்கையின் அரசமைப் பின் கீழ் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியிடமே இருந்து வருகின்றன. இலங்கை யைப் பொறுத்தவரை இந்த நிறைவேற்று அதிகாரத்தோடு கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த உடன்படிக்கைக் காலத்தில் பதவியில் இருந்தவர்கள், இருப்பவர்கள் இந்த உடன்பாட்டை முழு அளவில் எதிர்த்து வருகின்றனர் என்பது கண்கூடு.

இந்த உடன்படிக்கை கைச்சாத்தான கையுடன் அப்போது ஜனாதிபதியாக இருந்த சந்திரிகா குமார துங்க இந்த உடன்பாட்டை மோசமாக விமர்சிக்க வும் தவறவில்லை.

நிரந்தரப் போர்நிறுத்தத்துக்கு வழிகாட்டக்கூடிய இந்த உடன்படிக்கையை அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகள் உடனடியாகவே பாராட்டி வரவேற்றன.

ஆனால், ஜனாதிபதி சந்திரிகாவோ இந்த உடன் பாட்டினால் தாம் அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந் திருக்கிறார் என அறிவித்தார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதியான தன்னிடம் முன் அனுமதியைப் பெறாமல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டமை பெரும் ஜனநாயக விரோதச் செயல் என அவர் கண்டித்தார். உடன்படிக்கையில் உள்ள சில பகுதிகள் நாட்டின் இறையாண்மையை யும் தேசியப் பாதுகாப்பையும் விட்டுக்கொடுத்து பங்கப்படுத்திவிட்டன என அவர் சீறினார். "முன் னணிப்பாதுகாப்பு நிலைகள், "எல்லைக் கோடுகள், "கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள், "கட்டுப்பாட்டுப் பிரதே சத்திலுள்ள சோதனைச்சாவடிகள் என்றெல்லாம் உடன்பாட்டில் பிரயோகிக்கப்பட்ட பதங்கள் பிராந் தியத்தின் கட்டுக்கோப்பான உறுதிநிலையை சீர் குலைத்து விடும் என்று குற்றம் சுமத்திய ஜனாதிபதி சந்திரிகா, இந்த உடன்படிக்கை இலங்கை நிலையை காஷ்மீர் சிக்கல் அளவுக்கு மோசமாக்கி விட்டது என்றும் கண்டித்தார்.

தமிழர் தாயகப் பிரதேசத்தில் விடுதலைப் புலி கள் மற்றும் அரசுப் படைகள் என்ற இரு மரபு வழி இரா ணுவங்கள் ஒன்றை ஒன்று எதிர்கொண்டு நிற்கும் கள யதார்த்த மெய்யுண்மைகளைப் பிரதிபலித்து உருவாக்கப்பட்ட யுத்த நிறுத்த உடன்படிக்கையை அதில் புதைந்துள்ள கருத்தாக்கங்கள், சொற்பதங்கள் போன்ற வற்றை உடன்பாட்டில் ஒப்பமிடப்பட்ட கணத்திலிருந்தே இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் முழு அளவில் எதிர்த்து வந்திருக்கின்றது.

இந்த உடன்பாட்டை மோசமாக விமர்சிப்பதன் மூலம் தற்போதைய ஜனாதிபதி மஹிந்தவும் அதே நிலைப்பாட்டையே கைக்கொண்டு வருகிறார். அவரது பௌத்த சிங்கள மேலாண்மைவாதத் தோழர் களும் அதே போக்கையே பின்பற்றுகின்றார்கள். இந்த உடன்பாட்டை செல்லுபடியற்றது என அறிவிக் கக்கோரி அவர்கள் நீதிமன்றம் சென்றுள்ளனர். உயர்நீதிமன்றத்தில் அந்த வழக்கு விசாரணையை எதிர்நோக்கியிருக்கின்றது.

இவ்வாறு தெற்கில் ஆட்சியில் அதிகாரத்தில் செல்வாக்கில் உள்ளவர்கள் இந்த உடன்பாட்டை முழு அளவில் எதிர்க்கின்ற போதிலும் அந்த உடன் பாட்டைக் கிழித்தெறியும் அதிகாரம் அவர்கள் வசம் இருக்கின்றபோதும் அவர்கள் அதைச் செய்யாம லும், செய்ய முடியாமலும் இருப்பது விநோதமானது.

அதற்கு அர்த்தங்கள் காரணங்கள் பலவுண்டு. அவற்றை நாளை இப்பத்தியில் ஆராய்வோம்.

source:www.tamilwin.com

ஒப்பந்தத்தை ஏற்கவும் தயக்கம் கிழித்தெறியவும் தயக்கம் என்றால் இதற்கு மாற்றீடாக ஒரு வழி உள்ளது.

அதாவது ஒப்பந்தத்தை மறத்தல்!

ஒப்பந்தம் என்று ஒன்று இருப்பதை சிங்கிளவர் எல்லோரும் மறந்துவிட்டால் ஒரு பிரச்சனையும் இல்லையே?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.