Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கொல்கத்தா ஐகோர்ட் நீதிபதி கர்ணனுக்கு 6 மாதம் சிறைத்தண்டனை: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

Featured Replies

கொல்கத்தா ஐகோர்ட் நீதிபதி கர்ணனுக்கு 6 மாதம் சிறைத்தண்டனை: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

 

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கு ஆறுமாத சிறைத்தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

 
 
கொல்கத்தா ஐகோர்ட் நீதிபதி கர்ணனுக்கு 6 மாதம் சிறைத்தண்டனை: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு
 
புதுடெல்லி:

சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக இருந்த சி.எஸ்.கர்ணன், சக நீதிபதிகள் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளுக்கு எதிராக ஊழல் புகார்கள் கூறியதையடுத்து, கொல்கத்தா ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டார்.

அவர் மீது சுப்ரீம் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. அதன் விசாரணைக்கு அவர் ஆஜராகாததால், அவர் நீதிபதி பணியை செய்யக்கூடாது என்று கடந்த பிப்ரவரி 8–ந்தேதி உத்தரவிட்டது. மேலும், கடந்த 4–ந்தேதி அவருக்கு மனநல பரிசோதனை நடத்த உத்தரவிட்டது. ஆனால், நீதிபதி கர்ணன் அதற்கு மறுத்து விட்டார்.

இந்நிலையில், நீதிபதி கர்ணன் நேற்று ஓர் அதிரடி உத்தரவு பிறப்பித்தார். தனக்கு எதிரான அவமதிப்பு வழக்கை விசாரித்து வரும் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பி.லோகுர், பி.சி.கோஸ், குரியன் ஜோசப் ஆகியோருக்கும், தன்னை நீதிபதி பணியாற்ற தடை விதித்த நீதிபதி பானுமதிக்கும் தலா 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

தன் வீட்டில் அமைக்கப்பட்ட தற்காலிக கோர்ட்டில் இந்த உத்தரவை அவர் பிறப்பித்தார். எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் தண்டிக்கத்தக்க குற்றங்களை அவர்கள் செய்துள்ளதால், இந்த தண்டனைக்கான உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
 
201705091225303521_Supreme-court._L_styv

மேலும், தண்டனைக்குள்ளான நீதிபதிகள் ஒரு வாரத்துக்குள் தலா ரூ.1 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என்றும், அபராதம் செலுத்தாவிட்டால், கூடுதலாக 6 மாதம் ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

நீதிபதி கர்ணனின் இந்த உத்தரவு இந்திய நீதித்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நீதிமன்ற அவமதிப்பில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால் நீதிபதி கர்ணனுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் இன்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

மேலும், நீதிபதி என்பதால் சிறைதண்டனையில் இருந்து கர்ணன் தப்பிக்க முடியாது எனவும் உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது. மாநில உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு உச்ச நீதிமன்றத்தால் சிறை தண்டனை விதிக்கப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/05/09122526/1084345/SC-sends-Justice-C-S-Karnan-to-6-month-imprisonment.vpf

  • தொடங்கியவர்
gallerye_002008602_1767630.jpg

புதுடில்லி:கோர்ட் அவமதிப்பு குற்றத்துக்காக, கோல்கட்டா ஐகோர்ட் நீதிபதி, சி.எஸ்.கர்ண னுக்கு, ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித் துள்ளது. ஐகோர்ட் நீதிபதிக்கு, கோர்ட் அவ மதிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப் படுவது இதுவே முதல் முறை.

 

Tamil_News_large_1767630_318_219.jpg

தமிழகத்தைச் சேர்ந்தவரும், கோல்கட்டா ஐகோர்ட் நீதிபதியுமான கர்ணன், 61, சென்னை ஐகோர்ட் நீதிபதியாக இருந்தபோது, தலைமை நீதிபதி உட்பட, 20 நீதிபதிகள் மீது பல்வேறு
குற்றச்சாட்டுகளை கூறினார். இது குறித்து, பிரதமர், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி உள்ளிட்டோருக்கு, அவர் கடிதம் எழுதி இருந்தார்.

இதை கோர்ட் அவமதிப்பு செயலாக எடுத்துக் கொண்டு, சுப்ரீம் கோர்ட், சுயமாக வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை, தலைமை நீதிபதி, ஜே.எஸ்.கேஹர் தலைமை யிலான, ஏழு நீதிபதிகள் அடங்கிய சுப்ரீம் கோர்ட் அமர்வு

விசாரித்து வந்தது.
மனநல பரிசோதனை:
இதனிடையில், கோல்கட்டா ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்ட, நீதிபதி கர்ணன், நீதித்துறை மற்றும் நிர்வாக நடவடிக்கைகளில் ஈடுபடு வதற்கு, சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது. மேலும், அவரது மனநலம் குறித்த மருத்துவப் பரிசோதனையும் மேற்கொள்ள, உத்தரவிட்டி ருந்தது.

நீதிபதி கர்ணன் மீதான கோர்ட் அவ மதிப்பு வழக்கு, சுப்ரீம் கோர்ட்அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அவர் மீதான குற்றச்சாட்டுகள் உறுதிபடுத்தப் பட்டுள்ளதாக, அமர்வு கூறியது. 'அவருக்கு என்ன தண்டனை அளிக்கலாம்' என, மூத்த வழக்கறிஞர்களிடம், அமர்வு கேட்டது.

சென்னை ஐகோர்ட் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், கே.கே.வேணுகோபால், ''நீதிபதி கர்ணன், வரும், ஜூன், 11ல் ஓய்வு பெறுகிறார். அதன்பின்பே, தண்டனை அளிக்க வேண்டும். ஒரு நீதிபதிக்கு தண்டனை அளித்தால், அது நீதித்துறைக்கு களங்கம் ஏற்படுத்திவிடும்,'' என, கூறினார்.

இந்த வாதத்தை ஏற்க மறுத்த, சுப்ரீம் கோர்ட் அமர்வு, தன் உத்தரவில் கூறியுள்ளதாவது:
நீதிபதியாக இருப்பதை காரணமாக வைத்து, கோர்ட் அவமதிப்பு வழக்கில், கர்ணன் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால்தான், நீதித்

 

துறைக்கு களங்கம் ஏற்படும். இந்த வழக்கில், அவரை நாங்கள் நீதிபதியாக பார்க்கவில்லை. நீதிக்கு முன்னாள் அனைவரும் சமமே.
 

சிக்கல் இல்லை


அதனால், கோர்ட்டை அவமதித்தது, நீதித் துறையை அவமதித்தது போன்ற குற்றங்களை செய்துள்ள நீதிபதி கர்ணனுக்கு, ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கப்படு கிறது. அவரை உடனே கைது செய்ய, மேற்குவங்க டி.ஜி.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும்.தன்னிடம் மனநலப் பரிசோதனை நடத்த வந்த மருத்துவர் குழுவிடம், தான் நல்ல உடல்நலம் மற்றும் மன நலத்துடன் இருப்பதாக கர்ணன் கூறியுள்ளார்;

அதை மருத்துவர் குழுவும் மறுக்கவில்லை. அதனால், அவருக்கு தண்டனை விதிப்பதில் எந்த சிக்கலும் இல்லை.மேலும், நீதிபதி கர்ணன் கூறும் எந்தக் கருத்துகளையோ, உத்தர வுகளையோ, இனி பத்திரிகை, 'டிவி' போன்ற ஊடகங்கள் வெளியிடக் கூடாது. இவ்வாறு சுப்ரீம் கோர்ட் அமர்வு, தீர்ப்பில் கூறியுள்ளது.

இதற்கிடையே, கோல்கட்டாவில் இருந்து நேற்று முன்தினம் இரவு சென்னைக்கு திரும்பி உள்ளார் நீதிபதி கர்ணன். அடுத்த மாதம் ஓய்வு பெற உள்ள நிலையில், முதல்முறை யாக, ஒரு ஐகோர்ட் நீதிபதிக்கு சிறை தண்டனை விதிக்கப் பட்டுள்ளது, நீதித் துறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1767630

  • தொடங்கியவர்

நீதிபதி கர்ணனை தேடும் கொல்கத்தா போலீஸ்

 
 

உச்ச நீதிமன்றத்தால் நீதிமன்ற அவமதிப்பிற்காக ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்ட கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனைக் கைதுசெய்வதற்காக கொல்கத்தாவைச் சேர்ந்த காவலர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

 
 

கர்ணனுக்கு ஆறு மாத சிறை தண்டனை வழங்கிய நீதிமன்றம், அவரை உடனடியாகக் கைது செய்யும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டது.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமையன்று சென்னை வந்த கர்ணன், அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தார். செய்தியாளர்களையும் சந்தித்து பேட்டி அளித்தார். ஆனால், உச்ச நீதிமன்ற உத்தரவின் காரணமாக, அவர் கொடுத்த பேட்டிகள், அறிக்கைகள் வெளியிடப்படவில்லை.

இந்த நிலையில், புதன்கிழமையன்று காலை கர்ணனைக் கைது செய்து அழைத்துச் செல்வதற்காக கொல்கத்தாவைச் சேர்ந்த டிஜிபி சுரஜித் கர் புர்கயஸ்தா தலைமையில் காவல் துறையினர் சென்னைக்கு வந்தனர். பிறகு மாநகரக் காவல்துறை ஆணையரைச் சந்தித்து அவர்கள் ஆலோசனை நடத்தினார்.

இதற்கிடையில் மாநில அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த கர்ணன், காலையில் புறப்பட்டு ஆந்திர மாநிலத்தில் உள்ள காளகஸ்தி கோயிலுக்கு சென்றதாகச் சொல்லப்பட்டது.

இதையடுத்து, பிற்பகலில் கொல்கத்தாவைச் சேர்ந்த காவல்துறையினர், தமிழக காவல்துறையினர் சாலை மூலமாக காளகஸ்திக்குப் புறப்பட்டனர். ஆந்திர மாநில எல்லையில் ஆந்திர காவல்துறையினரும் அவர்களுடன் இணைந்து கொண்டனர்.

இருந்தபோதும் கர்ணன் இருக்கும் இடம் தெரியாததால், கொல்கத்தா காவல்துறையினர் சென்னை திரும்பியுள்ளனர்.

http://www.bbc.com/tamil/india-39876813

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.