Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

5 போராளிகள்- 1 போர் உதவிப் படை வீரர் ஆகியோரின் வீரச்சாவு அறிவித்தல்கள்

Featured Replies

5 போராளிகள்- 1 போர் உதவிப் படை வீரர் ஆகியோரின் வீரச்சாவு அறிவித்தல்கள்

[புதன்கிழமை, 21 பெப்ரவரி 2007, 18:18 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]

தமிழீழ விடுதலைக்காக களப்பலியாகிய 5 போராளிகளினதும் போர் உதவிப் படை வீரர் ஒருவரினது வீரச்சாவு அறிவித்தல்களை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ளனர்.

விவரம் வருமாறு:

வவுனியா புளியங்குளத்தில் சிறிலங்கா இராணுவத்தினருடன் இடம்பெற்ற நேரடி மோதலின் போது போராளி ஒருவரும் போர் உதவிப் படை வீரர் ஒருவரும் வீரச்சாவடைந்துள்ளனர்.

மேஜர் இசையரசன் அல்லது காவியன் என்று அழைக்கப்படும் யாழ். மாவட்டத்தை சொந்த முகவரியாகவும் முல்லைத்தீவு கள்ளப்பாட்டை தற்காலிக முகவரியாகவும் கொண்ட ஜேசுநாயகம் அன்ரனி திலக் என்ற போராளியே வீரச்சாவடைந்தவர் ஆவார்.

தனராசன் என்று அழைக்கப்படும் புதிய கொலனி மாங்குளம் முல்லைத்தீவை சேர்ந்த குணரட்ணம் குணராசா என்ற போர் உதவிப் படை வீரரே வீரச்சாவடைந்தவர் ஆவார்.

கடந்த 02.08.2006 இல் திருகோணமலை சம்பூர் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் நடத்திய வலிந்த தாக்குதலுக்கு எதிரான எதிர்த்தாக்குதலின் போது போராளி ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார்.

கப்டன் மலரவன் என்றழைக்கப்படும் 1 ஆம் வட்டாரம் கடற்கரைச்சேனை திருமலையை சொந்த முகவரியாகவும் கணேஸ் குடியிருப்புத்திட்டம் வள்ளிபுனம் முல்லைத்தீவை தற்காலிக முகவரியாகவும் கொண்ட தெய்வேந்திரன் நகுலேந்திரன் என்ற போராளியே வீரச்சாவடைந்தவர் ஆவார்.

கடந்த 12.07.2006 இல் திருகோணமலை தம்பலகாமம் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் நடத்திய பதுங்கித்தாக்குதலின் போது போராளி ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார்.

லெப். கேணல் ஈகன் என்றழைக்கப்படும் திருகோணமலை ஈச்சந்தீவு கிண்ணியாவை சொந்த முகவரியாகவும் கணேஸ் வீட்டுத்திட்டம் வள்ளிபுனம் முல்லைத்தீவை தற்காலிக முகவரியாகவும் கொண்ட முத்துலிங்கம் கலையரசன் என்ற போராளி வீரச்சாவடைந்தவர் ஆவார்.

கடந்த 25.09.2006 இல் மட்டக்களப்பு வாகரை, கட்டுமுறிப்புப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினருடன் இடம்பெற்ற ஏற்பட்ட நேரடி மோதலின் போது போராளி ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார்.

லெப். திலகன் என்றழைக்கப்படும் பெரியகுளம் நிலாவெளி 06 ஆம் கட்டையை சொந்த முகவரியாகவும் பிரமந்தனாறு 17 ஆம் வாய்க்கால் விசுவமடுவை தற்காலிக முகவரியாகவும் கொண்ட கந்தசாமி சாந்தகுமார் என்ற போராளியே வீரச்சாவடைந்தவர் ஆவார்.

கடந்த 27.11.2006 இல் வவுனியா நெடுங்கேணிப்பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினருடன் இடம்பெற்ற நேரடி மோதலின் போது போராளி ஒருவர் வீரச்சாசவடைந்துள்ளார்.

லெப். அமரன் என்றழைக்கப்படும் திருகோணமலையை சொந்த முகவரியாகவும் வட்டுவாகல் முல்லைத்தீவை தற்காலிக முகவரியாகவும் கொண்ட துரைராசசிங்கம் நடேந்திரன் என்ற போராளியே வீரச்சாவடைந்தவர் ஆவார்.

இம் மாவீரர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் தமது வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றனர்.

Puthinam

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.