Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புதிய திருப்பம்: அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு குறித்து விசாரிக்க நேர்மைக்கு பெயர் பெற்ற அதிகாரி நியமனம்

Featured Replies

புதிய திருப்பம்: அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு குறித்து விசாரிக்க நேர்மைக்கு பெயர் பெற்ற அதிகாரி நியமனம்

 
ராபர்ட் முல்லர் எஃப் பி ஐ-ன் தலைவராக 2001 லிருந்து 2013 வரை பதவி வகித்தார்.படத்தின் காப்புரிமைREUTERS Image captionராபர்ட் முல்லர் எஃப் பி ஐ-ன் தலைவராக 2001 லிருந்து 2013 வரை பதவி வகித்தார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் மற்றும் டிரம்பின் பிரசார உறவுகளில் ரஷ்யாவின் குறுக்கீடு இருந்ததாக சொல்லப்படும் குற்றச்சாட்டு விசாரணைக்கு எஃப் பி ஐ அமைப்பின் முன்னாள் தலைவர் ராபர்ட் முல்லர் தலைமை வகிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ராபர்ட் முல்லரின் பெயரை அறிவித்த துணை அட்டார்னி ஜெனரல், பொது நலன் கருதி வெளிநபர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

முல்லரின் நியமனம் இருதரப்பை சேர்ந்த அரசியல்வாதிகளாலும் பரவலாக பாராட்டப்படுகிறது.

கடந்த வாரம், எஃப் பி ஐ இயக்குநர் ஜேம்ஸ் கோமியை பதவியிலிருந்து நீக்கினார் அதிபர் டிரம்ப். அதிலிருந்து, சிறப்பு வழக்கறிஞர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுக்கத்தொடங்கின.

டொனால்ட் டிரம்பின் பிரசார குழு மற்றும் ரஷ்யா இடையே சாத்தியமான தொடர்புகள் இருந்தனவா என்பது குறித்து எஃப் பி ஐ மற்றும் நாடாளுமன்றம் ஆராய்ந்து வருகிறது.

குடியரசுக் கட்சிக்கு ஆதரவாக தேர்தலை முடுக்கிவிட ரஷ்யா முயற்சித்ததாக அமெரிக்க புலனாய்வு முகமை நம்புகிறது.

டிரம்ப்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஎனது பிரசார அணிக்கும் எந்த ஒரு வெளிநாட்டு அமைப்புக்கும் தொடர்பு இல்லை என்று எங்களுக்குத் தெரிந்த தகவலை முழுமையான விசாரணை உறுதிப்படுத்தும் : டிரம்ப்

டிரம்ப் கருத்து

இந்தப் புதிய நியமனம் குறித்து கருத்துத் தெரிவித்த அதிபர் டிரம்ப், தன்னையும் தனது அணியினரையும் இந்த புதிய விசாரணை, குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். முன்னதாக, விசாரணைக்கு வெளி நபர் ஒருவர் தலைமை வகிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று வெள்ளை மாளிகை கருத்துத் தெரிவித்திருந்தது.

"எனது பிரசார அணிக்கும் எந்த ஒரு வெளிநாட்டு அமைப்புக்கும் தொடர்பு இல்லை என்று எங்களுக்குத் தெரிந்த தகவலை முழுமையான விசாரணை உறுதிப்படுத்தும்" என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஜனநாயகக் கட்சியின் முக்கிய செனட் உறுப்பினரான சக் சூமர், முல்லர் இந்தப் பணிக்குப் பொருத்தமான நபர் என்று பாராட்டியுள்ளார்.

புதிய பொறுப்பை ஏற்றுக் கொள்வதாகவும், தன்னால் இயன்றவரை சிறப்பாக செயல்படப்போவதாகவும் முல்லர் தனது நியமனம் குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.

புதிய திருப்பம்: அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு குறித்து விசாரிக்க நேர்மைக்கு பெயர் பெற்ற அதிகாரி நியமனம்படத்தின் காப்புரிமைALEX WONG

திருப்புமுனை

இந்த மாற்றங்கள் எல்லாமே அமெரிக்க நிர்வாக வரலாற்றில் ஒரு பெரிய திருப்புமுனை என்கிறார் வாஷிங்டனில் உள்ள பிபிசி செய்தியாளர் ஏண்டனி சூர்செர்.

ராபர்ட் முல்லர் ஏற்கனவே, பதவி நீக்கப்பட்ட கோமி ஜார்ஜ் புஷ் நிர்வாகத்தில் துணை அட்டார்னி ஜெனரலாக பணியாற்றியபோது, அவருடன் பணியாற்றியவர். அரசியல்வாதிகளின் நெருக்குதல் நிர்வாகத்தை நன்கு தெரிந்து வைத்திருப்பவர். நேர்மைக்குப் பெயர் பெற்றவர்.

தற்போது நீதித்துறையில் இருக்கும் முல்லர், நிர்வாக ரீதியாகப் பார்த்தால் டிரம்பின் கீழ்தான் செயல்படுகிறார். ஆனால், அதிபரின் நெருக்குதலுக்குப் பணியக்கூடியவர் அல்ல என்ற நற்பெயர் அவருக்கு இருக்கிறது.

சுயாதீன விசாரணை, பல நேரங்களில் அதற்கு உத்தரவிட்டவர்களுக்கு எதிராகவே முடியக்கூடிய எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தும் நிலையில், முல்லர் நியமனம் அதற்கான வாய்ப்புக்களை அதிகரிக்கவே செய்திருக்கின்றன.

http://www.bbc.com/tamil/global-39958323

  • தொடங்கியவர்

டிரம்புக்கே தெரியாமல் நடந்த சிறப்பு வழக்கறிஞர் நியமனம்: வியப்பில் வெள்ளை மாளிகை

 
 

அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு இருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க சிறப்பு வழக்கறிஞரை நியமிக்கும் முடிவை அதிபர் டொனால்டு டிரம்ப் விமர்சித்துள்ளார்.

அமெரிக்க வரலாற்றில் அரசியல்வாதி ஒருவருக்கு எதிராக மிகப்பெரிய சூனிய வேட்டை நடைபெறுவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க வரலாற்றில் 'சூனிய வேட்டை' நடத்துவதாக கூறும் டிரம்ப்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

இந்தப் பிரச்சினை குறித்த விசாரணை விரைவில் முடிவுக்கு வருமென்று தான் எதிர்பார்ப்பதாக டிரம்ப் கருத்துத் தெரிவித்திருப்பதாக வெள்ளை மாளிகை ஏற்கெனவே அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், டிரம்ப் அதற்கு எதிர்மறையான கருத்தை வெளியிட்டிருக்கிறார்.

ரஷ்ய தலையீடு குற்றச்சாட்டு குறித்த விசாரணைக்கு எஃப்.பி.ஐ எனப்படும் மத்திய புலனாய்வுத்துறையின் முன்னாள் இயக்குநர் ராபர்ட் முல்லர் நியமிக்கப்பட்டுள்ளார்.

பொதுநலனைக் கருத்தில் கொண்டு வெளிநபர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க துணை அட்டார்னி ஜெனரல் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கையை அரசியல்வாதிகள் வரவேற்றுள்னர்.

ஒபாமாவின் நிர்வாகத்தின் போதும், ஹிலரி கிளிண்டனின் தேர்தல் பிரசாரத்தின் போதும், நடைபெற்ற "சட்டரீதியற்ற செயல்" என்று டிரம்பால் விவரிக்கப்படும் செயலை விசாரிக்க சிறப்பு குழு அமைக்கப்படவில்லை என டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.

கடந்த வாரம் எஃப்பிஐ இயக்குநராக இருந்த ஜேம்ஸ் கோமி அதிபர் டிரம்பால் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

வியப்பில் வெள்ளை மாளிகை!

ராபர்ட் முல்லரின் நியமனம், வெள்ளை மாளிகையை வியப்பில் ஆழ்த்தியது. ராபர்ட்ட முல்லர் நியமனம் குறித்து துணை அட்டார்னி ஜெனரல் கையெழுத்திட்ட பிறகுதான் டிரம்புக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

டிரம்பின் பிரசார குழுவுக்கும் ரஷ்யாவுக்கும் உள்ள சாத்தியமான தொடர்புகள் குறித்து எஃப்.பி.ஐ. மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விசாரணை நடத்தி வருகின்றநர்.

கடந்த நவம்பரில் நடந்த அதிபர் தேர்தலில், டிரம்புக்கு ஆதரவாக ரஷ்யா ரகசியமாக செயல்பட்டதாக அமெரிக்க உளவு அமைப்புக்கள் நம்புகின்றன.

http://www.bbc.com/tamil/global-39965650

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.